Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சங்கரி – சுமந்திரன் கைகலப்பை இடைமறித்த பரந்தன் ராஜன், மாவை சேனாதிராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி – சுமந்திரன் கைகலப்பை இடைமறித்த பரந்தன் ராஜன், மாவை சேனாதிராஜா!

Published on August 29, 2011-7:52 pm

தமிழ்க்கட்சிகளின் ஒன்று கூடல் இந்தியத்தலைநகரில் நடைபெற்ற போதிலும் அங்கு சென்றிருந்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அங்கு ஒருவருடன் ஒருவர் கைகலப்பிற்குச் செல்லும் வரையில் முரண்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இரண்டு நாட்களாக நடைபெற்ற அமர்வில் இரண்டாம் நாள் அமர்வும் நிறைவு பெற்றதன் பின்னர் பரந்தன் ராஜனின் ஏற்பாட்டில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்களுக்கான விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது.

விருந்துபசாரத்தின் பின்னர் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத போதிலும் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றைத் தருமாறு ஈஎன்டிஎல்எப் பரந்தன் ராஜன் வலியுறுத்தியிருக்கின்றார்.

எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் அறிக்கையினை எவ்வாறு தயாரிப்பது? என்ற தயக்கத்தினை கூட்டமைப்புத் தரப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது. மீண்டும் மீண்டும் ராஜன் வலியுறுத்தியதை அடுத்து “கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்களை மட்டும் எழுதிக் கொடுங்கள்” என்று தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி கேட்டிருக்கின்றார்.

உடனடியாகவே கையில் இருந்த நோட்புக்கை எடுத்த சுமந்திரன் நான்கு வார்த்தைகளில் பேச்சுகளில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் மீண்டும் சந்தித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற சாரப்பட எழுதிவிட்டு நோட்புக்கை மேசையில் வீசியிருக்கின்றார்.

உடனடியாவே ஆத்திரமடைந்த சங்கரி நீ ஒரு சட்டத்தரணியா? (Are you a lawyer?)என்று சுமந்திரனைப் பார்த்துக் கேட்டிருக்கின்றார். உடனடியாக சங்கரியைப் பார்த்த சுமந்திரன் “ஓம் நான் சட்டத்தரணிதான், ஆனால் நீர் பதிவாளர் தானே? (Yes, I am a Lawyer but you are a Registrar. Isn’t it?) என்று கேட்டிருக்கின்றார்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த சங்கரி தனது இருக்கையில் இருந்து எழுந்து சுமந்திரனை நோக்கி தாக்குவதற்காகப் பாய்ந்திருக்கின்றார்.

இடை நடுவில் நின்றிருந்த பரந்தன் ராஜன் சங்கரியை இடைமறித்த அதேவேளை சங்கரி தன்னை நோக்கி தாக்க வருவதை கண்ணுற்ற சுமந்திரன் கையில் இருந்த கோட் உடையை மேசையில் போட்டுவிட்டு சங்கரியை நோக்கி பாய்ந்திருக்கின்றார் அவரை மாவை சேனாதிராசா மறித்திருக்கின்றார்.

இவர்கள் இருவரும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்ட சம்பவத்தின் பின்னணி அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பனிப் போர் என்று தெரியவந்திருக்கின்றது.

தமிழர் விடுதலைக்கூட்டணியில் இருந்து தமிழரசுக்கட்சியினர் பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எதிரான வழக்கு ஒன்று இடம்பெற்றது.

இந்த வழக்கில் தமிழரசுக்கட்சி சார்பில் வாதிட்டவர் சட்டத்தரணி சுமந்திரன் என்றும் ஆனந்தசங்கரியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி சுமந்திரன் கேள்வி கேட்டதன் பின்னர் இருவருக்கும் இடையிலான முறுகல் நிலை தற்போது வரையில் தொடர்கின்றது என்று தெரியவருகின்றது.

http://www.saritham.com/?p=32453

இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்த் தரப்புகளிடம் தெளிவு உண்டா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசிக் கொள்ளும் நாம், பிரச்சினைக்கான தீர்வு எது என்பது பற்றி இன்னமும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு, சுதந்திரமாக வாழவேண்டும் என்பது பொதுவானது. தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமை.இருந்தும் தமிழ் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்போடு சேவையாற்றத் தயாரில்லை. அவர்களுக்கு சொந்த வேலைகள் ஏராளம். எனவே சொந்த வேலைகளில் ஈடுபடும்போது குந்தியிருந்து இப்படித்தான் தீர்வுத்திட்டம் இருக்க வேண்டும் என ஆராய்ந்து அதனை எழுத்து வடிவிற்கு கொண்டு வருவது முடியாத காரியம்.

அண்மையில் கூட இந்தியாவிற்குச் சென்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என அங்கிருந்து அவசர அவசரமாகத் தயாரித்ததாகத் தகவல். தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்த அதேவேளை, தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் இந்தியப் பிரதிநிதியின் தனிப்பட்ட ஆதிக்கமும் இருந்ததாகக் கேள்வி.எப்படியிருக்கிறது எங்கள் நிலைமை? இனப்பிரச்சினை என்பது இன்று, நேற்று ஆரம்பமானதல்ல. அதன் தொடக்கம் இலங்கையின் சுதந்திரத்தோடு ஆரம்பிக்கின்றது.

இருந்தும் எங்களால் இனப் பிரச்சினைக்கான தீர்வு இதுதான் என்று அறுதியிட்டு அச்சிடப்பட்ட பிரதிகளை வழங்கி அடித்துக் கூறும் திராணியில்லை. ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும்- சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றனர். இந் நிலைமையானது தமிழ் அரசியல் தலைமைகளின் அறிவுப் பஞ்சத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டும். எனவே இனிமேலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதை சகல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சேர்ந்து தயாரிக்க வேண்டும். அரசுடன் அல்லது வெளிநாடுகளுடன் யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது பற்றிக் கவலையில்லை. எவர் பேசினாலும் முன்வைக்கப்படும் தீர்வு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தயாரித்து அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கவேண்டும்.

இப்படியான ஒரு திட்டமிடல் எங்களிடம் இருக்குமாயின் மாநாடுகளில் பிடுங்குப்பட வேண்டிய சூழ்நிலையும் மற்றவர்களின் தலையீடுகளும் ஏற்படமாட்டாதல்லவா?

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22242

இவர்கள் அடித்துக்கொள்வது பழய கோவமா அல்லது தோன்றவிருக்கும் பதவிவெற்றிடத்திற்கு புதிய போட்டியா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.