Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இந்திய தேசியம்’ தமிழர்களுக்கு நீதி வழங்காது – பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தொடர் கூட்டங்களில் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Published By பெரியார்தளம் On Saturday, October 8th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள்

இந்தியா – தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை ஒருபோதும் மதிக்காது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய ஆட்சி, இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து, காங்கிர° தலைமையில் நடக்கும் இந்திய ஆட்சி, தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழர்களாகிய நமது இறையாண்மையை நாமே தான் முடிவு செய்தாக வேண்டும். தமிழக அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவை தூக்குத் தண்டனையை ரத்து செடீநுது ஆளுநருக்கு pdk-flag-300x200.gifபரிந்துரைக்க வேண்டும்; அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுத்தான் தீர வேண்டும்; குடியரசுத் தலைவர் ஆனாலும், ஆளுநர் ஆனாலும், அமைச்சரவைக்கு உட்பட்டவர்கள்தான் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஜோலார் பேட்டையில் நடந்த மரண தண்டனை ஒழிப்புத்தொடர் கூட்டங்களின் நிறைவு நிகடிநச்சியில் தமிழக அரசை வலியுறுத்தினார். நிகடிநவில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்: “3 தமிழர்களை தூக்கில் போட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து நடத்திய மாநாட்டில், அறிவிக்கப்பட்ட வேலூர் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு விட வில்லை; அந்தப் போராட்ட அறிவிப்பு அப்படியே நீடிக்கிறது;தூக்குத் தண்டனையை இந்திய அரசு ரத்து செடீநுயாவிட்டால், வேலூரில் 10 லட்சம் தமிழர்கள் திரண்டு, முற்றுகையிட்டு 3 தமிழர்களை மீட்டு வருவோம்; இதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராவோம் என்று அறைகூவல் விடுத்தார்.

பெரியார் திராவிடர் கழகம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னையில் பரப்புரைக் கூட்டத்தைத் தொடங்கியது. தொடர்ந்து செப். 22 ஆம் தேதி விழுப்புரத்திலும், செப். 23 ஆம் தேதி புதுச்சேரியிலும், 25 ஆம் தேதி திருச்சியிலும், 26ஆம் தேதி மதுரையிலும், 28 ஆம் தேதி உடுமலைப் பேட்டையிலும், 29 ஆம் தேதி பழனியிலும், 30 ஆம் தேதி ஈரோட்டிலும், அக்டோபர் முதல் தேதி கரூரிலும், 2 ஆம் தேதிசேலத்திலும், 3 ஆம் தேதி ஜோலார் பேட்டையிலும்

கூட்டங்கள் நடந்தன. கழகத் தலைவர் கொளத்தூர்

மணி அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்றார்.

பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன்,

உடுமலை, ஈரோடு, ஜோலார்பேட்டை கூட்டங்

களிலும், பொதுச் செயலாளர் விடுதலை இரா

சேந்திரன், திருச்சி, மதுரை கூட்டங்களைத் தவிர

மற்ற அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்றனர்.

சென்னை கூட்டத்தில் வைகோ, உடுமலையில்

நடந்த கூட்டத்தில் இயக்குனர் மணிவண்ணன்,

சேலத்தில் நடந்த கூட்டத்தில் கொங்கு இளைஞர்

பேரவை அமைப்பாளரும், சட்டமன்ற

உறுப்பினருமான தனி அரசு, ஈரோட்டில் நடந்த

கூட்டத்தில் ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்

கணேசமூர்த்தி, வழக்கறிஞர் ப.பா. மோகன், கரூர்

கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவை மாநில

பொறுப்பாளர்கள் நாகராசு, இளங்கோவன்,

விழுப்புரம் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்

கட்சியைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், ஜோலார்

பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்

தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.

திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள்

கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் சிறப்பு

பேச்சாளர்களாக பங்கேற்றனர். ஜோலார்

பேட்டையில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின்

கலை நிகடிநச்சிகள் பறையாட்டத்துடன் நடந்தன.

மூன்று தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு

மொத்தமாக தூக்குத் தண்டனையை ஒழிக்க

வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இழந்த உயிரை

மீட்க முடியாத இந்தத் தண்டனையை

நிறைவேற்றுவதில் அப்பாவிகள் பலியாவதையும்,

தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில்

நடந்த குழப்பங்களையும் தூக்குத் தண்டனையால்

குற்றங்கள் குறைந்துவிடவில்லை என்பதற்கான

காரணங்களையும், ராஜீவ் கொலையிலும், காந்தி,

இந்திரா காந்தி கெலையிலும், உண்மைக்

குற்றவாளிகளை மறைத்ததோடு, இந்தக்

கொலைக்கு உடந்தையாக செயல்பட்டவர்களே

காங்கிரசார்தான் என்பதையும் வரலாற்று

தகவல்களோடு, விளக்கிப் பேசப்பட்டன. “மரண

தண்டனையை ஒழிப்போம்”, “காந்தி

படுகொலையில் பார்ப்பனப் பின்னணி” என்ற கழக

வெளியீடுகளும் ஏராளமாக விற்பனையாயின.

தூக்குத் தண்டனைக்கு எதிராக கழகம் வெளியிட்ட

துண்டறிக்கைகள் கூட்டங்களில் வழங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்களிடம் தூக்குத்

தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி,

பெரியார் திராவிடர் கழகம் முதல்கட்ட

பரப்புரையை நிறைவு செடீநுதுள்ளது.

- நமது செடீநுதியாளர்

http://www.periyarthalam.com/2011/10/08/india-nation-dont-give-justice-to-tamil/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.