Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச படைகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தினை நம்பமுடியாது: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

அரசாங்க படை அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு உத்தரவாதத்தினை நாம் நம்ப தயாராக இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. எமது மாணவ சமூகம் அச்சமின்றி கல்வியைத் தொடர முடியும் என்ற உத்தரவாதத்தினை அரசாங்க படைத்தரப்பு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்ழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் நாம் அதனை நம்பமாட்டோம்.

.

எமது மூன்று அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாளை திங்கள் தொடக்கம் தொடர் வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பரமணியம் தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் வாய்மூல பாதுகாப்பு உறுதி மொழிகள் வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் எமுத்துமுல உறுதி மொழிகள் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலசிங்கம் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அச்சம் காரணமாக மாணவர்கள் மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புக்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

.

இந்த மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்புத் தொடர்பாகவும் மாணவர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக நிர்வாகம், சிரேஷ்ட்ட மாணவ ஆலோசகர்கள் தலமையில், பீடாதிபதிகள், மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

.

இதன் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகம், யாழ்.பாதுகாப்புக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோரை நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

.

இந்தச் சந்திப்பின்போது பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது எனவும் கோரப்பட்டதுடன், மாணவர்களினது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் சமர்ப்பித்தனர்.

.

நடந்த சம்பவத்தையும், மாணவர்களின் கோரிக்கைகளையும் அறிந்து கொண்ட படைத்தரப்பு அதிகாரிகள், மாணவர்கள் அச்சம் இன்றி பல்கலைக்கழகம் சென்று தமது கல்வியினைத் தொடர முடியும் என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், மாணவர் தலைவர் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

.

ஆனால் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கிய உறுதி மொழிகளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை என இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.