Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக சமூக அழுத்தத்தில் இருந்து சிறிலங்காவை பாதுகாக்கும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக சமூக அழுத்தத்தில் இருந்து சிறிலங்காவை பாதுகாக்கும் இந்தியா

india%20emplem.jpg

பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப் புறக்கணிப்பது தொடர்பான கனேடிய நாட்டின் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் விடயத்தில் இந்தியா உதவி புரிந்த விடயத்தை சிறிலங்கா ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன.

இவ்வாறு Express News Service நிறுவனத்திற்காக கொழும்பிலிருந்து அதன் சிறப்பு செய்தியாளர் P K Balachandran எழுதியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் சரியான பதில் கூறாததால் 2013ல் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதைப் புறக்கணிப்பது தொடர்பான கனேடிய நாட்டின் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் விடயத்தில் இந்தியா உதவி புரிந்த விடயத்தை சிறிலங்கா ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன.

இந்திய வெளிவிவகாரச் செயலர் றஞ்சன் மத்தாய், பேர்த்தில் சிறிலங்கா சார்பாக வழங்கிய அறிக்கை தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் மொழி மூல செய்தித்தாள்கள், சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்றன அதிமுக்கியத்துவம் வழங்கி செய்தி வெளியிட்டுள்ளன.

2009ல் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவில் 2013ல் இவ்வமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டமையால், இதற்கான பிறிதொரு நாட்டைத் தெரிவு செய்வதற்கான நகர்வை இந்தியா எதிர்த்துள்ளதாக மாத்தேய் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பிற்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான தீர்மானத்தை மத்தாய் எதிர்த்தமை தொடர்பான செய்தியையும் சிறிலங்கா ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தியுள்ளன. பேர்த்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்தாய் வழங்கிய அறிக்கை முழுமையையும் சிறிலங்கா அரசிற்குச் சொந்தமான Daily News இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

"எப்போதும் போலவே இந்தியா எமக்கு ஆதரவாக இருக்கும்" என சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் புதன்கிழமை வழங்கப்பட்ட செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"இடமாற்ற விடயத்தில் இந்தியா ஆதரவு வழங்கமாட்டாது" என்பதே வியாழக்கிழமை வெளியாகிய The Island நாளேட்டின் தலைப்புச் செய்தியாக அமைந்திருந்தது.

"பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு தொடர்பாக இந்தியா, சிறிலங்காவிற்கு ஆதரவாக இருக்கும்" என்பது Daily Mirror இன் தலைப்புச் செய்தியாக இருந்தது.

2103ல் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடானது திட்டமிட்டபடி சிறிலங்காவில் இடம்பெறும் என அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலார்ட் அறிவிப்பை மேற்கொண்டதன் பின்னணியில், இது தொடர்பான கனேடியப் பிரதமரின் புறக்கணிப்பு மற்றும் மேற்குலக அமைப்பிற்கிடையில் பிளவு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கதே.

அவுஸ்திரேலியாவிற்குச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அந்நாட்டில் எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாதெனவும், ஏனெனில் இராஜதந்திர ரீதியான பாதுகாப்பை ராஜபக்ச கொண்டுள்ளார் என அவுஸ்திரேலியப் பிரதமர் அறிவித்தலை மேற்கொண்ட போதே அவர் மேற்படி தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் பிறந்த அவுஸ்திரேலியத் தமிழரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மெல்பேர்ன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தபோது அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பாதுகாப்பு மிக்க பதுங்குகுழிகளை அமைத்துக் கொடுத்த ஒரு சிவில் பொறியியலாளரே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற தமிழ் இளைஞன் என சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிலார்ட்டின் ஆதரவு தொடர்பாக சிறிலங்கா அதிபர் ராஜபக்ச நன்றி பாராட்டிய அதேவேளையில், பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் சிறிலங்காவில் நிலவும் மனித உரிமைகள் மற்றும் இனங்களிற்கிடையிலான நல்லிணக்கப்பாட்டு முயற்சிகள் போன்றவை தொடர்பாக சிறப்பு கருத்துக்களை வழங்கவேண்டும் என்ற கில்லார்ட்டின் வேண்டுகோனை ராஜபக்ச ஏற்க மறுத்துவிட்டார்.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா மீதான மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தமது சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்பும் அரசாங்கத் தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்வதாக ராஜபக்ச வாக்குறுதி வழங்கியிருந்ததாக The Island தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடர்பான விடயங்களை விவாதிப்பதை விடுத்து மீள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவை தொடர்பாகக் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.