Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசின் பெயரைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் மாஜி உறுப்பினர்.

Featured Replies

குறிப்பு:

ஈசன் என்பவரை கனடா உலகத்தமிழர் இயக்கமே நியமனம் செய்து கொண்டது. அது மாத்திரமின்றி உலகத்தமிழர் பத்திரிகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர்களுக்கு முதலிடமும் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியல் யார் உள்ளனர்? இவர் ஒரு புளோட் உறுப்பினர் என்பதும், சித்தாத்தனின் நெருங்கிள சினேகிதனும் ஆவர், இவரின் கடந்தகால செயற்பாட்டின் காரணமகா விடுதலைப்புலிகள் அமைப்பால் தண்டனை பெற இருந்தவர் என்றும், அதில் இருந்து தப்பியவரும் ஆவார். இவர் தற்போது கனடாவில் புலத்தில் என்னும் பத்திரியையை நடாத்தி வருவதும். உலகத்தமிழர் இயக்கத்தின்; ஆதரவுடன் புலிதோல் போத்த சிங்கம் இன்று தமிழ் தேசியத்தை சிதறடித்து வருகின்றது என்பது உண்மை.

தேசியத்தலைமையின் நம்பிக்கையிலும், மாவீரரின் தியாகத்திற்கும் மக்களால் கொடுக்கப்பட்ட ஆதரவில் உருவான கனடா உலகத்தமிழர் இயக்கமும், உலகத்தமிழர் பத்திரிகையும் இன்று புலித்தோல் போத்து சிங்கம் வலம் வருகின்றது என்பது பலரது கருத்தும். இவர்கள் முள்ளிவாய்க்காலின் பின் இவர்களை கேட்பதற்கு தலைமையில்லாத காரணத்தால் நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, TVI, CMR,, CTC........... போன்ற அமைப்புக்களை சிதைத்ததே இவர்களின் முதற்பணியாக நடந்தேறியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கும், CTCக்கும் எதிராக மக்களவை என்று உருவாக்கி தமிழ் மக்களின் ஒன்று கூடும் சக்தியை சிதைத்து ம் உள்ளனர். இதன் காரணமாக உலகத்தமிழர் இயக்கமும், உலகத்தமிழர் பத்திரிகையும் இன்று மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.

சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்ததன் காரணமாகத் தாமாகவே பதவி இழந்தனர் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த ஈசன் குலசேகரம் என்பவர்இ நாடு கடந்த தமிழீழ அரசின் பெயரைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இவரது அறிக்கை தமிழ் இணையத்தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது பற்றிப் பொது மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிக் கருத்துரைத்த கனடிய தமிழ்க் கலவிமான்களில் ஒருவர்இ இந்த நபர் போன்றவர்களால் தான் சர்வதேச மட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் மதிப்புக் குறைவதுடன்இ ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டமும் கோமளிகள் கூத்தாகக் கணிக்கப்படுகிறது என்று விசனப்பட்டுள்ளார்.

எவ்வளவுதான் நாடு கடந்த தமிழீழ அரசையும்இ திரு. உருத்திர குமாரனையும் தூற்றிப் பேசினாலும்இ எழுதினாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் பெயரைப் பயன்படுத்தாவிடில் தம்மையும் தமது கருத்துக்களையும் ஊடகங்கள் மட்டுமல்ல ஒருவருமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை இவர் முறைகேடாக விடுத்துள்ள அறிக்கை காட்டி நிற்கிறது என்று பிரபல தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

http://thaynilam.com/?p=2673

Copyright www.sankathi.com - contacts: sankathinews@yahoo.com / sankathireaders@yahoo.com

பிற்குறிப்பு திரு நடேசன் அவர்களின் மின் அஞ்சல் திருட்டு மற்றும் புலத்தில்,ஈழமுரசு பத்திரிக்கைகளின் வெளியீட்டுக்கு பிரதான பங்காளியும் ஆவார்

Edited by BLUE BIRD

ஐயகோ, யாருக்கு சொல்லி அழுகிறது, இச்செய்தியை??????????

... மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு!!!, பல பல வேலைத்திட்டங்கள் செய்து தள்ளிக் கொண்டு மக்கள் மத்தியில் பெயரெடுத்திருப்பவர்கள்!!! பலமான கட்டமைப்பு!!! ... இப்படி இருந்த ஒன்றினது பெயரை பாவித்திருந்தால் பறவாயில்லை!!!

.. இது சேடம் இழுக்கத்தொடங்கி, எப்ப முடியப்போகிறதோ என்று நினைக்கத்தோன்றியதுகளின் பெயரை, இந்த மாங்காய் பாவித்திருக்கிறது!!!!!!!

குறிப்பிட்ட இவரது அறிக்கை தமிழ் இணையத்தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது பற்றிப் பொது மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிக் கருத்துரைத்த கனடிய தமிழ்க் கலவிமான்களில் ஒருவர்இ இந்த நபர் போன்றவர்களால் தான் சர்வதேச மட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் மதிப்புக் குறைவதுடன்இ ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டமும் கோமளிகள் கூத்தாகக் கணிக்கப்படுகிறது என்று விசனப்பட்டுள்ளார்.

பெயரை சட்ட விரோதமாக பாவிப்பது குற்றம், எனவே அதற்கு கனடாவில் உள்ள காவல்துறையை நாடுவது தான் பிரச்னையை அணுகும்முறை அதனையே அவர்கள் செய்தும் இருப்பார்கள். அதைவிடுத்து இந்த அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றார்கள் என்பது இவர்கள் மேலேயே, இந்த கட்டுரையை வரைந்தவர்கள் மீது, கூடுதல் சந்தேகத்தை தருகின்றது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.