Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சியாளர் தீர்வு தரமாட்டார்; தமிழரின் நம்பிக்கை இதுவே ---கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

Featured Replies

வரவுசெலவுத் திட்ட யோசனைகள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளன. முன்பு பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக அரசாங்கத் தலைவர்களின் விளக்கத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தமக்கு பெயரளவு விமோசனம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வரவு செலவுத்திட்ட யோசனைகள் அமைந்துள்ளன. தற்போது பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. உயர்ந்து கொண்டே போகின்றன என்றே கூறவேண்டும். நாட்டில் சாதாரண மக்களின் வாழ்வியல் மோசமான நிலைக்குச் செல்கின்ற அதேநேரம், உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரிய வசதிகளை அரசாங்கம் மென்மேலும் விரிவுபடுத்தி வருகின்றது.

நாடுமுழுவதும் ஆடம்பரப் பொருட்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. சொகுசு வாகனங்கள், தினம் தினம் இறக்குமதியாகின்றன. உல்லாசப் பயணங்களை மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் துரித கெதியில் மேற்கொள்ளப்படுகின்றன. கடல் விமானச் சேவைகள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள், தொழில் மையங்கள் யாவும் சீரழிவுக்கு உள்ளாகி உள்ளன.

நீர்கொழும்பு, புத்தளம் பகுதிகளில் இந்தப் பிரச்சினை மக்கள் போராட்டங்களுக்கு வழிசமைத்துள்ளது. சாதாரண மக்கள் உண்ண முடியாத நிலைக்கு வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. ஆனால், செல்வந்தர்களின் பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக நவீனவகை உணவுகளை உண்பதனால் அவர்களுக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. சிறிய வயதில் வரமுடியாத பல நோய்களுக்கு இவர்களின் பிள்ளைகள் ஆளாகி உள்ளனர்.

வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளில் பெறப்பட்ட தகவல்கள் இந்த உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்களினால் பெரிதும் நேசிக்கப்பட்டவராக மறைந்த தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் விளங்கினார்.

இவரின் சிலை திருகோணமலை நகர மையப் பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ளது. ஜனசந்தடி மிக்க பகுதியில் பாதுகாப்பு பிரிவினன் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இந்த நாசகாரச் செயலைப் புரிந்துள்ளனர். எனவே, இது பாதுகாப்புப் பிரிவினருக்குத் தெரியாமல் நடைபெற வாய்ப்பு இல்லை. இந்த ஈனச்செயல் மூலம் தலைவர் செல்வநாயகத்தின் புகழை இவர்கள் மீண்டும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்தத் தொடர்பாக போதிக்கப்பட்டுள்ளது. மூளையற்றவர்களின் இத்தகைய மோசமான செயற்பாடு மீண்டும் தமிழ் மக்களைப் போராட்டப் பாதையில் பயணிக்கவே வழி சமைக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் அமெரிக்க விஜயம் தொடர்பாக பேரினவாதிகள் பக்கம் இருந்து கடும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. நவ சமசமாஜக் கட்சி அவர்களின் விஜயத்தை ஆதரிக்கின்றது.

ஆனால், நாம் கூறுகின்றோம். இத்தகைய விஜயத்தின் மூலம் அமெரிக்கத் தலைவர்களை நம்பாதீர்கள். அமெரிக்க மக்களை நம்புங்கள். அங்குள்ள தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்குங்கள் என்றே கூறுகின்றோம். மேலும், ஐக்கிய தேசியக் கட்சி கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தை வரவேற்றுள்ளது. இது ஆளும் தரப்புக்குமிகப்பெரிய கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாகவே தலைவர் செல்வநாயகத்தின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனை அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடாகவே கருத முடியும். தமிழ் மக்களை தொடர்ந்தும் பயப்பீதியில் வைத்திருக்கும் செயற்பாடாகவே இந்தச் சிலை உடைப்பு செயற்பாடு காணப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தம் நடைபெற்ற பின்பு எல்லாம் முடிந்துவிட்டது என்றே ஆட்சித்தரப்பு கணக்குப் போட்டது. எனவே, காணிகளை அபகரிக்க முயன்றனர். குடியேற்றங்களை மேற்கொள்ளவும் தொடங்கினர்.

ஆனால், தமிழ் தலைமைகள் சரணடையாமல் போராட்ட நிலையை நோக்கி நகர்ந்ததால் பழிவாங்கும் செயலைத்தவிர இவர்களுக்கு வேறு மார்க்கம் எதுவும் இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இன்று அவர்களின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்க விதமாகக் காணப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக அவர்கள் தாக்கமான விபரங்களை காட்டியுள்ளனர். இதுவே ஆட்சியாளர்களது கோபத்துக்கு அடிப்படையாகியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அன்று பெரிய முகாம்களில் கைதிகள் போல் அடைத்து வைத்திருந்தனர். ஆனால், இன்று சிறிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வு அளிக்கவில்லை. மாறாக, நிர்க்கதி ஆக்கியே வருகின்றனர். மக்களின் காணிகளை அபகரித்தனர். உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான மக்களை இன்றும் தமது இருப்பிடங்களுக்கு செல்லவிடாமல் வெளியே வாழவைத்துள்ளனர்.

இம் மக்களின் வளங்கள் யாவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. என்னென்ன வழிகளில் இம்மக்களுக்கு துன்பங்களை புரிய முடியுமோ அவை அனைத்தையும் இவர்கள் புரிந்துவருகின்றனர். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக அவர்களை வதைத்தே வருகின்றனர்.

எனவே, தெற்கில் தோன்றியுள்ள வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான போராட்டம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் கைகோர்க்கும் நிலை தோன்றியுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது. தங்களுக்கு வரப்பிரசாதங்களை அள்ளித்தருவார்கள் என்று எதிர்பார்த்த உழைக்கும் மக்கள் பொறுமையிழந்த நிலைக்குச் சென்றுள்ளனர்.

எந்த விதத்திலும் இன்றைய ஆட்சியாளர்கள் தமக்கு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாகவே உள்ளனர். வடக்கின் தேர்தல் முடிவுகளும், கொழும்பின் தேர்தல் முடிவுகளும் அதை தெளிவாக படம் போட்டுக் காட்டியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் ஜனநாயக அணியின் தேவைப்பாடு அத்தியாவசியமாகியுள்ளது. இதில் எமது பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் இறுதி ஆயுதத்தை மஹிந்த அரசு தற்போது புரிந்து வருகின்றது. இதற்குப் பின்னர் அதனிடம் எதுவும் இல்லாத நிலையே ஏற்படப் போகின்றது. ஆட்சியாளர்கள் முகாமில் விசல்கள் தற்போது வேகமாக ஏற்பட்டு வருகின்றது. எனவே, நாம் மக்கள் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.

முன்னைய காலங்களில் நடைபெற்றதைப் போன்று இத்தகைய சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாக்கிப் பின்னர் மக்களுக்கு அதே ஒடுக்குமுறைகளைப் புரிவதற்கு இடமளிக்காமல், மக்கள் போராட்டத்தைச் சரியான பாதையில் பயணிக்க வைத்து அதற்கான பலன்களையும் பெற்றுக் கொள்வோம்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.