Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளினால் தமிழர்களின் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகிறது – யோகராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளினால் தமிழர்களின் அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகிறது – யோகராஜன்

yogarajan-140x140.jpg

தமிழர்களுடைய அரசியல் உரிமை பற்றி தெரியாத இனவாதிகளினால் இனப் பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தூதுக் குழுவினர் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக அமைச்சரும் ஜாதிகஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெவித்தே மேற்படி கருத்தினை யோகராஜன் தெவித்துள்ளார்.

அவர் மேலும் கேருத்து தெரிவிக்கும் போது,

அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் வெளிநாடுகளுக்குச் சென்று இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து சொல்வதற்கு உமை இருப்பதைப் போல தமிழ் தலைவர்களுக்கும் தங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கு உள்ள உமையை “பந்தம் பிடிப்பதாக கருதுவது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவாத கூற்றாகும்.

வட கிழக்கு தமிழ் மக்களும் மலையக தமிழ் மக்களும் இனவாதிகளின் பேச்சுக்களாலும் செயல்பாடுகளினாலும் இம்சிக்கப்படுவதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தமிழ் தலைவர்கள் செயல்படுவது பந்தம் பிடிக்கும் செயலாகாது.

சுதந்திர இலங்கையில் ஜனநாயக சுதந்திர உமைகளை தமிழர்களிடம் இருந்து சிறிது சிறிதாக பறித்துக் கொண்டிருக்கும் இனவாத சக்திகளின் செல்வாக்கு அரசாங்கத்திடம் தேவைக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.

தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் வன்றைகளுக்கும் காணி பறிப்புகளுக்கும் அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கமோ எண்ணமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறுவதை எவரும் தவறாக எண்ணக்கூடாது.

தமிழர்களின் மீது சர்வதேச சகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை சிங்கள மக்களுக்கு எதிரான செயலாக சித்திப்பதில் இணைந்த சக்திகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக முழு அக்கறையாக இருக்கின்றார்கள்.

தமிழர்களின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் இன்று தமிழன் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள். இலங்கையில் நிலவும் இனவாதத்தை பழி வாங்கல்களை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் முயற்சிப்பது அரசியல் கபடத்தனமாகும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி பேசும் உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. தமிழன் இந்த நாட்டில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தமது சமூகத்திற்காக குரல் கொடுப்பதை கொச்சைப்படுத்தக் கூடாது.

அமெக்காவுக்கு சென்றுள்ள தமிழ் தலைவர்கள் லண்டனுக்கு மட்டுமல்ல மேலும் அவுஸ்திரேலியா, ஜேர்மன், பிரா ன்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

யுத்தத்தை முடித்து விட்டதாக கூறும் அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தயங்குவதேன்.

சிங்கள சகத்தவரையும் இலங்கை தமிழ ரையும் ஏமாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிப்பது பெரும் சிக்கலையே உருவாக்கும்.

தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவது அவசியமாகும். உள்நாட்டில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதற்கு இனவாத சக்திகள் இடமளிக்காத பட்சத்தில் தொடர்ந்தும் தமிழர்கள் அடிமைகளாகவும் உமைகளை இழந்தவர்களாகவும் வாழ முடியாது.

இலங்கையின் இந்த செயல்பாடுகளுக்கு ஆதரவாக பேசும் நாடுகளை பாராட்டுபவர்கள், இந்த செயல் பாடுகளையும், இனப் படுகொலைகளையும், மனித உமை மீறல்களையும் கண்டிக்கும் நாடுகள் மீது கோபப்படுவது அரசியல் அறியாமையே ஆகும்.

சர்வதேச நாடுகளை பகைத்துக் கொள்வதால் இலங்கைக்கு பாதிப்பே ஏற்படும் என்பதை தெந்து கொண்டே அரசாங்கம் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சிறு பிள்ளைத்தனமாக பேவதிலும் செயல்படுவ திலும் அதீத அக்கறை காட்டுகிறார்கள்.

இலங்கை தமிழர்களின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் ஜன நாயக உமைக்கு தடை விதிக்க எவருக்கும் முடியாது. உண்மையான தகவல்களை வெளியிடுவது இனவாதம் அல்ல துரோகம் அல்ல என்பதை அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் புரிந்து கொள்வது நல்லது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.vanakkamnet.com/yogarajan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.