Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் நோயைவிட அதன் வைத்தியம் கடுமையானதாக இருக்கும்.

மார்பக அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் வரும் Pathology அறிக்கையைக் கொண்டுதான் அடுத்து செய்ய வேண்டிய வைத்தியம் குறித்து தீர்மானிக்க முடியும்.

கீமோதெரபி என்பது வேண்டாத செல்களை அழிக்கக்கூடிய திறன் படைத்த மருந்துகளாகும். இதனைப் பொதுவாக இரத்த ஓட்டத்தில் கலக்குமாறு, டிரிப்பின் மூலம் இரத்தக்குழாயினுள் செலுத்துவார்கள். வியாதி திரும்பவும் வருவதை தடுக்கவும், அதற்கான வாய்ப்பைக் குறைக்கவும் கீமோதெரபி உதவுகிறது. நோயாளியின் உயரம், எடை மற்றும் வியாதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எவ்வளவு மருந்து, எத்தனை ஊசி என்பதெல்லாம் தீர்மானிக்கப்படும். எல்லா வயது நிலையில் இருக்கும் பெண்களுக்கும் கீமோதெரபி பயன்படும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் இந்த சிகிச்சை நல்ல பலனைத் தரும். ஆனால், வேறு சிலருக்கு இது அவ்வளவாகப் பலன் தருவ தில்லை. எனவே, ஒருவருக்கு இந்த சிகிச்சை தரவேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பது சற்று சிரமம்தான். இப்படியான சூழ்நிலைகளில் இந்த சிகிச் சையைக் கொடுத்தால் என்ன பின் விளைவுகள் வரும்? என்ன ஆதாயம் கிடைக்கும் என்பவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.நோயாளியின் முன்னுரிமைகள், குடும்பச் சூழல் மற்றும் வேலை நிர்பந்தங்கள் ஆகியவையும் இந்த சிகிச்சை தரவேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்.

நோயாளியின் எந்த நிலையில் கீமோ தெரபி அவசியமாகிறது?

1. 40 வயதிற்குள்ளாக அல்லது மாதவிடாய் நிற்பதற்கு முன் வந்த புற்றுநோயாக இருந்தால்;

2. கட்டியின் அளவு 2 செ.மீ. மேல் இருந்தால்;

3. நெறிகளுக்குப் பரவியிருந்தால்;

4. ஹார்மோனைச் சார்ந்து வளராத கட்டி என்றால்;

5. கிரேட் 3 வகைச் சார்ந்ததாக இருந்தால்;

மேலே கூறப்பட்டுள்ள அம்சங்களில் ஏதாவது ஒன்றினைச் சார்ந்து இருப்பினும் கீமோதெரபி சிகிச்சை தரப்பட வேண்டும்.

ஆனால் இதனையும் நோயாளியின் வயது, உடல்நிலை, சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு செய்யப்பட வேண்டும்.

கீமோதெரபி சிகிச்சையின் பின்விளைவுகள் என்னென்ன,

அவற்றின் மூலம் நோயாளி எவ்விதத்தில் பயன் பெறுவார் என்பதையெல்லாம் சீர்தூக்கி பார்த்த பின்புதான் ஒரு

முடிவிற்கு வரவேண்டும்.

பெரும்பாலான புற்று நோய் மருத்துவர்கள் இதற்காகவே உருவாக்கப் பட்ட (Software) கணினி மென்பொருளை (Adjuvant online) பயன்படுத்துவார்கள். அதில் இதற்குமுன் கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்களின் வைத்திய விவரங்கள் மற்றும் பலன்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அதனை நோயாளியிடம் எடுத்துக்காட்டி, அவர் கீமோதெரபியின் மூலம் அடையக்கூடிய நிவர்த்திகள் மற்றும் பக்கவிளைவுகள் ஆகியவற்றை ஒரு வழிகாட்டுதல் முறையில் அறிவுறுத்திவிட்டு, இதன் பின்னரே சம்பந்தப்பட்ட நோயாளிக்கு கீமோதெரபி சிகிச்சை தொடங்கப்படும்.

புற்றுநோய் மரபணுக்களின் தனித்தன்மை அடிப்படையில் விஞ்ஞானிகள் அபாயத்தை எடுத்துக்காட்டும் அட்டவணை (ஆன்கோடைப் டி.எக்ஸ் மற்றும் மோமோபிரிண்ட்) ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 வில் இருக்கும் நோயாளிகள், நிண நீர்சுரப்பி பாதிக்கப்படாத நோயாளிகள் ஆகியோருக்கு கீமோதெரபி சிகிச்சை தேவையா இல்லையா என்ற முடிவை எடுக்க மருத்துவர்களுக்கு இந்தப் பரிசோதனை பெரிதும் உதவும். இந்தப் பரிசோதனைகளுக்கு எக்கச்சக்க செலவாகும். ஆனால், பண வசதி இருந்தால், தேவைப்பட்டால் பேதாலஜி ஸ்லைட்களை வைத்தே இந்த பரிசோதனையைச் செய்துவிட முடியும்.

கீமோதெரபி எப்போது தரப்படும்?

மார்பகப் புற்று நோயைக் குணப்படுத்த உதவும் கீமோதெரபி சிகிச்சையில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்ப மருந்துகள் மாறுபடும்.

நோயாளியின் உயரம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதியை ஒப்பிட்டுப் பார்த்து எவ்வளவு டோஸ் மருந்து கொடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தற்காப்பு நடவடிக்கையாக இந்த சிகிச்சை தரப்படும். அது, அட்ஜுவெண்ட் கீமோதெரபி (துணை சிகிச்சை) என்று அழைக்கப்படும். இது ஒவ்வொரு நபருக்கு அவருக்குத் தகுந்தாற்போல் தரப்படும்.

அஜ்டுவெண்ட் கீமோதெரபி பொதுவாக அறுவை சிகிச்சை முடிந்து 34 வாரங்கள் கழத்துத் தரப்படும். அறுவை சிகிச்சையில் இருந்து உங்கள் உடல் குணமாக போதிய அவகாசம் தரப்படும்.

சில நேரங்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே கூட இந்த சிகிச்சை தரப்படும் அதற்கு நியூஅட்ஜுவெண்ட் கீமோதெரபி என்று பெயர்.

இது பெரிதாக இருக்கும் கட்டியை சுருங்க வைப்பதற்காக மேற்கொள்ளப் படும். அப்படிச் செய்தால்தான் அறுவை சிகிச் சையே செய்ய முடியும் அல்லது மார்பகத்தை எடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை இருக்கும். அப்போது இந்த சிகிச்சை தரப்படும்.

கீமோதெரபி சிகிச்சை எப்படித் தரப்படுகிறது?

இந்தச் சிகிச்சைகள் பல வழிகளில் தரப் படுகின்றன. நரம்புகளில் ஊசி ஏற்றி அல்லது இன்ஃபியூஷன் மூலமாக தரப்படும். சில நேரங்களில் மாத்திரையாகவும் கொடுக்கப்படலாம்.

மார்பகப் புற்று நோய்க்கான நரம்பு வழியான சிகிச்சை பொதுவாக அறுவை சிகிச்சை முடிந்த 3 வாரம் கழித்துத் தரப்படும். அறுவை சிகிச்சையில் இருந்து உங்கள் உடம்பு தேறி வருவதற்காக இந்தக் கால அவகாசம் தரப்படும். உங்கள் உடல் நிலை, புற்று நோய் கட்டியின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப என்ன மருந்து, எவ்வளவு, என்ன விகிதத்தில் தரவேண்டும் போன்றவை தீர்மானிக்கப்படும்.

நரம்பு வழியிலான சிகிச்சையில் ஒரு பிளாஸ்டிக் டியூப் உடலில் செருகப்படும். அதன் வழியாக டிரிப் ஏற்றப்படும். இரண்டு மணி நேரம் டிரிப் ஏற்றப்படும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்காது. அறுவை சிகிச்சை எந்தப் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறதோ அந்தப் பக்கத்து கையில் டிரிப் ஏற்றக்கூடாது. மறு கையில்தான் டிரிப் ஏற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் டியூபை உடலில் செருகும்போது நர்ஸ் அதை கவனமாகச் செய்ய வேண்டும். டிரிப் திரவம் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி மருந்துகள் வெளியே கசிந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த மருந்துகள் மிகவும் அதிக டாக்ஸிக் தன்மை (விஷத்தன்மை) கொண்டவை. நோய் தாக்காத திசுக்களில் இவை பட்டால் நெக்ரோசிஸ் நோய் ஏற்பட்டுவிடும். நோயைக் குணப்படுத்துவதும் சிரமமாகிவிடும்.

சில நேரங்களில் போர்ட் எனும் சிறப்பு கருவி பயன்படுத்தப்படும். போர்ட் என்பது சின்ன பெட்டி (சேம்பர்) போன்றது. அது தோல் பகுதிக்குக் கீழே செருகப்படும். இதனுடன் ஒரு டியூப் இணைக்கப்பட்டிருக்கும். அது பெரிய நரம்பில் செருகப்படும். கீமோதெரபி மருந்துகளை நேரடியாக இந்த சேம்பருக்குள் செலுத்த வேண்டும். இதற்கு விசேஷ ஊசிகள் பயன்படுத்தப்படும். உடல் பாகத்தை மரத்துப் போகவைத்து அல்லது மயக்க மருந்து கொடுத்து இந்த சேம்பரைப் பொருத்துவார்கள்.

கீமோதெரபிக்கு நரம்பைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் நேரங்களில் இந்த வழிமுறை பின்பற்றப்படும்.

கீமோபோர்ட்கள் விலை அதிகமானவை. மிகவும் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே உடலில் சரியாகச் செருக முடியும். எனவே இது எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.

www.thedipaar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.