Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்

வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள்.

பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள்

இவர்களில் பலருக்கு உறவினர்கள் சென்று பார்ப்பது கூட இல்லை. காரணம் உறவுகளை போரில் இழந்துவிட்டுத் தனியனாக சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிற இந்த தமிழ் அரசியல் கைதிகளை மறந்துவிட்டதா உலகத் தமிழினம் ? என வேதனையோடு தங்களுக்கான அடிப்படை உதவிகளை எதிர்பார்க்கிற பெண்கைதிகள் 6பேர் தமக்கான உதவியைச் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளனர்.

இவர்கள் செஞ்சோலையில் வாழ்ந்து இன்று வெலிக்கடையில் இவர்களைச் சென்று பார்க்க உறவினர்களோ உதவிகளோ இல்லாமல் வேதனையோடு எழுதிய கடிதம்…., வருமாறு:-

velikadaipenkal.jpg

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்பு கொள்ள :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஊர்ப்புதினம் பகுதியில்

"செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்"

என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன்.

அதன் இணைப்பு வருமாறு :-

http://www.yarl.com/...showtopic=94340

சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள்.

ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக பூர்வமாக தங்களைத் தேடி வந்த கடிதம் போன்று போட்டுள்ளார்கள்.

பதிவு போட்ட செய்தி இணைப்பு :-http://www.pathivu.c...ticle_full.aspx

சங்கதி போட்ட செய்தி இணைப்பு:- http://www.sangathie.../d,fullart.aspx

ஊடகத்திற்குரிய அடிப்படை பண்பு எதுவுமற்ற இம்முறையை பதிவு சங்கதி ஆகிய இரு தளங்களும் தொடர்ந்து வருகின்றன. இதனை வாசகர்களுக்கு தெரிவிக்கவே இத்தகவலை இங்கு இணைக்கிறேன்.

உதவி வேண்டுகிற ஒரு செய்தியை நீங்கள் வியாபார விளம்பரம் அல்லது ஊடகத்தகவலாக வெளியிடுதல் ஏன் ? 960கைதிகள் உதவிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கான உதவிகளைச் செய்ய விரும்புகிறவர்களை இணைக்கும் பாலமாக இத்தகைய செய்திகளை வெளியிடுவதே இத்தகைய செய்திகளுக்கான பலன் கிடைக்க வழிவகுக்கும்.

ஏற்கனவே தமிழ்த்தேசியத்தை தாத்தா வீட்டுச்சொத்தாக சொந்தம் கொண்டாடி எல்லாம் எல்லாரும் பதிவுக்குளிக்காலும் சங்கதி வெளிக்காலும் வரவேண்டுமென்ற விதியால் என்னத்தைக் கண்டீர்கள் ?

செய்திகள் எடுக்கப்படுகிற அல்லது கிடைக்கிற வழி மூலத்தை இணைப்பதில் கெளரவத்தை இழந்துவிடுவீர்களாயின் உங்களுக்கு எதற்கு ஊடகம் ? இதுவே வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் செய்தியை இத்தகைய வெட்டு கத்தரிப்பு வேலைகள் செய்தால் அவர்கள் எடுக்கிற நடவடிக்கை என்னவாக இருக்கும் ?

இது தமிழர்கள் செய்கிற பணிதானே ஆக தாத்தாவீட்டுச் சொத்தை தாதாக்கள் எப்படியும் ஆழலாம் என்பதா உங்கள் விதி ?

மேற்படி பிள்ளைகள் பற்றிய தனித்த விபரங்கள் தகவல்களை தமக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் மேலும் செஞ்சோலைப் பிள்ளைகள் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களின் விபரங்களையெல்லாம் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுப்போம் என்றும் சில அறிவுறுத்தல்களை விட்டுள்ளார்கள் சில தேசியப்பூச்சாண்டிகள்.

இதுவரை காலம் இரண்டரை வருடம் தாண்டிய நிலமையில் இந்தப்பிள்ளைகள் பற்றி ஏன் உங்களுக்கு அக்கறை இல்லாமல் போனது ?

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் தான்தோன்றிகளே சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களோடு சண்டைபிடிக்க மல்யுத்தம் செய்ய என்னிடம் பலமுமில்லை பணமுமில்லை. முடிந்தால் கைதாருங்கள் அல்லது விட்டுவிடுங்கள்.

பி.கு:-

ஏற்கனவே இந்த இரு தளங்களைச் சேர்ந்த கும்பல் பல விபரங்களை பெற்றுவிட்டு புதினத்தைக் கேட்டு உச்சுக்கொட்டிவிட்டு ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

அரசியல் வேண்டாம் முரண்பாடு வேண்டாமென ஒதுங்கினாலும் துரத்துகிற இந்த அட்டமத்தான்களின் தொல்லைகளைச் சிலவேளைகளில் சொல்ல வேண்டி வந்துவிடுகிறது. கள உறவுகள் மன்னியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.