Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதி முயற்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை

Featured Replies

அமைதி முயற்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவில் நோர்வே மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை நோர்வேயை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான நோராட் (NORAD) அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நோர்வே அரசு மேற்கொண்ட அனுசரணை முயற்சிகள் தொடர்பான ஆய்வாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

அறிக்கையை வெளியிட்டுள்ள நோராட் நிறுவனத்திற்கு நோர்வே அரசே நிதியை வழங்கியுள்ளது. ஒய்வுபெற்ற அல்லது அரசியல் அனுபவம் உள்ள அதிகாரிகள் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்களை அமைப்பதும், அதன் மூலம் வெளிநாடுகளிடம் இருந்து பணத்தை பெறுவதும், பின்னர் பணம் கொடுக்கும் நாடுகளுக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிடுவதும் ஒன்றும் புதிது அல்ல.

உலகில் உள்ள பல ஆயிரம் அரச சார்பற்ற நிறுவனங்களில் பெரும்பாலனவற்றின் செயற்பாடுகள் இவ்வாறு தான் அமைந்துள்ளன. சிறீலங்காவிலும் 1200 இற்கு மேற்பட்ட இவ்வாறான அமைப்புக்கள் உள்ளன. சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமரச முயற்சிகளை நோர்வே அரசு மேற்கொள்ள ஆரம்பித்த பின்னரே விடுதலைப் புலிகள் மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் அதிகரித்திருந்தன.

1997 ஆம் ஆண்டே நோர்வே தனது முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக நோராட் அமைப்பு தனது ஆய்வை ஆரம்பித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை 1997 ஆம் ஆண்டே அமெரிக்கா தடை செய்தது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கூட தனது தடையை தளர்த்துவதற்கு அமெரிக்கா விரும்பவில்லை.

Arush.jpg

மாறாக ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகள் உட்பட பெருமளவான நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான தடையை கொண்டுவந்து அதன் மூலம் அழுத்தங்களை அதிகரித்தே வந்திருந்தன. அமைதி முயற்சியில் ஈடுபட்ட இரு தரப்பினரில் ஒரு தரப்பின் மீதே அதிக அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் சிறீலங்கா அரசு மீது எந்த அழுத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது விடுதலைப் புலிகளின் கையை முறுக்கி அவர்களை தம்மால் திணிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மேடையில் அமர்த்திவைக்கவே மேற்குலகம் விரும்பியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும் இது தெரியும் என்றபோதும், மேற்குலகத்தினதும், சிறீலங்கா அரசினதும் இந்த தந்திரங்களை முறியடிப்பதற்காகவே அமைதி முயற்சிக்கு சம்மதித்தனர். அதன் மூலம் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை அனைத்துலக அரங்கிற்கு கொண்டுவர அவர்கள் முனைந்திருந்தனர். எனினும் தமது படைக்கட்டமைப்புக்களை பலப்படுத்துவதை அவர்கள் நிறுத்தவில்லை. அதற்கான காரணமும் உண்டு. மேற்குலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதறடிப்பதையே நோக்கமாக கொண்டிருந்தன. அதேசயம் அவர்கள் சிறீலங்கா அரசின் படை பலத்தை பலவீனப்படுத்த முயலவில்லை.

மறுவளமாக சிறீலங்கா அரசின் படைபலத்தை அவர்கள் மறைமுகமாக பலப்படுத்தியே வந்தனர். 2006 ஆம் ஆண்டு போர் உக்கிரமடையும் ஆபத்துக்கள் அதிகரித்தபோது கூட சிறீலங்காவுக்கான அன்றைய அமெரிக்கத்து துவர் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார். அதாவது போர் ஆரம்பித்தால் விடுதலைப் புலிகள் மிகவும் பலமான சிறீலங்கா இராணுவத்தை சந்திக்க நேரும் என தெரிவித்திருந்தார்.

இந்த அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சி நடுங்கினால் விடுதலைப்போரை தமிழர்கள் ஆரம்பித்திருந்க முடியாது. அமெரிக்கத் து£துவரின் இந்த அச்சுறுத்தலுக்கு விடுதலைப் புலிகள் மௌனத்தையே பதிலாக கொடுத்திருந்தனர். போருக்கான ஆயத்தங்களை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டது. போர்நிறுத்த காலத்தில் சிறீலங்கா வான்படை 100 விகித அதிகரிப்பை கண்டது. தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்யுமாறு மேற்குலகமும், இந்தியாவும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கி கை காண்பித்திருந்தன.

போரின் போது கடனாக கொள்வனவு செய்த ஆயுதங்களுக்கான பணத்தை சிறீலங்கா அரசு தற்போதும் செலுத்தி வருகின்றது. சிறீலங்கா அரசின் போரில் தாம் நேரிடையாக பங்கு

கொள்ளவில்லை என காண்பிப்பதற்காகவே மேற்குலகமும், இந்தியாவும் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. ஆனால் மறுபுறம் விடுதலைப் புலிகளின் வழங்கள் வழிகளை முடக்குவதற்கும், ஈழத்தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கிவரும் தமிழர் அமைப்புக்களை முடக்குவதிலும் அமெரிக்கா அதிக அக்கறை காண்பித்திருந்தது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அதிக நிதி உதவிகளை வழங்கிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ச் செல்வந்தர் ராஜரட்னம் மீதான கண்காணிப்புக்களை மேற்கொண்டு அவரை மடக்குவதையும் அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக மேற்கொண்டிருந்தது. ராஜரட்னம் மீதான கண்காணிப்புக்கு அமொரிக்க செலவிட்ட வலு மிக அதிகமானது எனவும், மிகவும் தீவிரமான போதைப்பொருள் கடத்தும் அமைப்புக்களை கண்காணிப்பதற்கே அமெரிக்க அரசு இவ்வாறான வலுவை முன்னர் பயன்படுத்தியிருந்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த நாளேடு ஒன்று தெரிவித்திருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரையே அமெரிக்காவின் உளவுத்துறை இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் வர்த்தகத்துறையின் உள்ளக நடவடிக்கைகளை உளவுபார்த்து தமது வர்த்தகத்தை மேற்கொள்ளும் பலர் தற்போதும் அமெரிக்காவின் உள்ளனர். அவர்களை எல்லாம் கண்டறிவதற்கு அமெரிக்கா முயலுமா? பதில் இல்லை என்பதே, ஏனெனில் அவர்களின் நோக்கம் ஈழத்தமிழர்களை படைத்துறையாகவும், பொருளாதார ரீதியாகவும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே. அதனைத் தான் அவர்கள் மேற்கொண்டனர்.

எனவே நோர்வே ஊடாக மேற்குலகம் மேற்கொண்ட அமைதி முயற்சிகளின் பலாபலனாக மிகப்பெரும் இன அழிப்பு ஒன்று அரங்கேற்றப்பட்டது என்பதே யதார்த்தமானது. நோராட் அமைப்பு மேற்கொண்ட ஆய்வானது மிகவும் தவறானது. நோர்வேயின் அமைதி முயற்சிகள் எவ்வாறு தோற்றுப்போனது என்பது தொடர்பில் ஆய்வு செய்வதை விடுத்து, அதனை தோற்கடித்தவர்கள் யார் என ஆய்வு செய்திருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். பணம் கொடுப்பவர்கள் சொல்வதைத்தானே செய்ய முடியும். இந்த அமைப்பு 84 பேரை நேர்காணல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. அவர்களில் சிறீலங்காவில் பேசப்பட்ட 34 பேர்களின் விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. வெளியிடப்பட்ட பெயர் விபரங்களில் அதிகமானவர்கள் தமிழினத்திற்கு எதிராக போக்கைக் கொண்டவர்கள், இந்து ராம், இந்திய அமைதிப்படையின் முன்னாள் அதிகாரிகள் ராமன், ஹரிகரன், சுப்பிரமணிய சுவாமி, சிறீலங்கா அரசுக்கு ஆதரவான ஆய்வாளர் மூர்த்தி உட்பட பலரை இங்கு குறிப்பிடமுடியும்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களையோ அல்லது அந்த அமைப்பின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரிகளையோ தம்மால் நேர்காணல் முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தியாவையும், மேற்குலகத்தையும் நியாயப்படுத்தி ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் இருந்து நோர்வேயை தப்பிக்க வைக்கும் நோராட் இன் அறிக்கை தொடர்பில் நாம் அதிகம் அக்கறை கொள்ளத்தேவையில்லை.

நன்றி: ஈழமுரசு / புலத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.