Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணயமா, அதிகாரப்பகிர்வா தமிழ் மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பது? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

சுயநிர்ணயமாஇ அதிகாரப்பகிர்வா தமிழ் மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பது? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாம் நடந்து கொண்டால் எமது சுயநிர்ணய உரிமையினை நாமே புறந்தள்ளும் செயற்பாடாக அது அமையும்.

சுயநிர்ணய உரிமைக்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கியுள்ள நிலையில் அதனை வலியுறுத்துவதை விடுத்து பின்னர் ஒரு சந்தர்பத்தில் மீண்டும் வலியுறுத்தலாம் என்பது சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் முடியாத காரியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:

இனப் பிரச்சினைத் தீர்வில் அதிகாரப்பகிர்வுக்கு சிங்கள தேசம் தயாரில்லை என்ற யதார்த்தத்தினை கடந்த வார பத்தியில் விளக்கியிருந்தேன். அதிகாரப் பகிர்வுக்குத் தயாரில்லாத சிங்கள தேசம் அதற்கு நேர் எதிரான பாதையிலேயே பயணிக்கின்றது என்பதனால் சிங்கள பௌத்த நிலைப்பாடுகளுக்கு மத்தியில் அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமற்றது என்பதனை ஆதாரங்களுடன் கடந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியிருந்தேன். அக் கட்டுரையின் நோக்கம் இன்றும் அதிகாரப் பகிர்வு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியம் என கற்பனைகொள்வோர் தெளிவடைய வேண்டும் என்பற்காகவேயாகும்.

தமிழ்த் தேசம் தேர்தல்கள் வாயிலாக காலங்காலமாக அளித்துவரும் சுயநிர்ணயம் தேசம் என்ற தீர்ப்புக்கு அதிகாரப் பகிர்வு என்ற விடயம் பொருத்தமானதா என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அதிகாரப் பகிர்வு என நாம் எமது பிரச்சினைக்கான தீர்வை அணுகுவோமாயின் அதிகாரத்தின் உறைவிடம் இலங்கை (சிங்கள பௌத்த அரசிடமே) இருப்பதை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும். சிங்கள பௌத்த தேசியத்திடம் (அரசிடம்) இருக்கும் இறைமையில் பங்கு கேட்பதாக கருத்துப்படும். இது எமக்கு சுயமாக இறைமை இருக்கிறது - சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை மழுங்கடிப்பதாக அமையும்.

ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல. அதிகாரப் பகிர்வு அணுகுமுறைக்கும் சுயநிர்ணய உரிமை அணுகுமுறைக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் இது தான். இதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு அணுகுமுறையின் கீழ் அவர்கள் (சிங்கள பௌத்த அரசு பகிர்ந்து தருவதை) மீள எடுத்துக்கொள்ள உரிமை உடையவர்கள். ஆகவே அது எமக்கு ஒரு போதும் நிலையான தீர்வைத் தரப்போவதில்லை.

தேர்தல்கள் வாயிலாக தமிழ் மக்கள் அளித்து வருகின்ற சுயநிர்ணயம் மற்றும் தமிழ்த் தேசம் போன்ற மக்கள் ஆணையானது ஓர் வரலாற்று விடயம் என்பதனால் எமது கடந்தகால வரலாற்று நிலைநினறே அதனை நுணுக்கமாக ஆராயவேண்டியுள்ளது.

நாம் சுயநிர்ணய உரிமைக்கும் தனித் தேசத்திற்கும் உரித்துடையவர்களாக இருந்தும் கூட 1977 ஆம் ஆண்டு வரையில் தமிழ் மக்களுக்கு தலைமை வகித்த கட்சிகள் மேற்கூறிய சுயநிர்ணயம் தனித் தேசம் போன்றவற்றுக்கு கூடிய முக்கியத்துவமளிக்கவில்லை. நடைமுறையில் தமிழ் மக்ககளின் இனப்பிரச்சினையை சிங்களத் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் யாப்புத் திருத்தங்களின் ஊடாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையையே அப்போது தமிழ்த் தலைமைகள் கொண்டியங்கின. ஒற்றையாட்சி முறைமையில் இருந்து அதிகாரப் பகிர்வை நோக்கியதாக அரசியலமைப்பினை மாற்றியமைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியுமெனவும் அவை நம்பின.

அரசியலமைப்பில் மாற்றத்தினைக் கொண்டுவருவதாயின் அதற்கான முன்நிபந்தனையாக தேசிய அரசுப் பேரவையில் (அன்றைய பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பெயர்) மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டவேண்டியிருந்தது. ஆகவே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற விடயத்தினை நடைமுறைச் சாத்தியமாக்குவதாயின் அதற்காக தேசிய அரசுப் பேரவையில் சிங்களத் தரப்புக்களின் ஆதரவு கட்டாயமானதாக இருந்தது.

இதன் அர்த்தம் இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் 75 சதவீதம் சிங்களவர்களாக இருக்கையில் சிங்களவர்களின் விருப்பின்றி நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பதாகும். எமது இனத்தின் நலன்களுக்கு எதிரான முடிவுகளை எம்முடைய கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சிங்கள தேசத்தினால் தன்னிச்சையாக நிறைவேற்றத் தக்கதாக ஆட்சிக்கட்டமைப்பு உள்ளது.

இதனை நாம் எமது இனத்திற்கு எதிராகக் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் வாயிலாக தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும் ( சென்ற வாரம் இது விபரிக்கப்பட்டிருந்தது.).

அதிகாரப் பகிர்வு என்பதை முன்வைத்து 1977 வரை அமோக வெற்றியடைந்த தமிழரசுக் கட்சி பெற்ற மக்கள் ஆணை கூட இலகுவான முறையில் அன்று உதாசீனப்படுத்தப்பட்டது. இதிலிருந்து வெளிப்படையாக தமிழ் மக்கள் தேர்தல்கள் வாயிலாக அளித்துள்ள எந்த ஆணைக்கும் சிங்களத் தரப்புக்கள் மதிப்பளிக்கவோ கருத்தில் கொள்ளவோ தேவையில்லை என்பது நிரூபணமாகின்றது. காரணம் பெரும்பான்மை ஜனநாயகத்தில் சனத்தொகை அடிப்படையில் நாம் சிங்களவர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கின்றோம். இதனால் சிங்கள பௌத்தத்தினை பாதுகாக்கும் இலங்கைத் தீவின் ஆட்சிக் கட்டமைப்பிற்குள் நாம் வலுவிழந்து விடுகின்றோம்.

ஆகவே கடந்த காலத்தினைப் போன்றே தற்போதும் தமிழ் மக்களது ஆணைக்கு சிங்களத் தரப்பு மதிப்பளிப்பதில்லை. எதிர்காலத்திலும் மதிப்பளிக்கத்தக்க நிலையில் அது இல்லை. எனவே இலங்கையில் சிங்கள தேசம் உருவாக்கிக் கொண்ட அரச கட்டமைப்பிற்குள் தமிழ்த் தேசத்திற்கு எந்தவித இடமும் இல்லை என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எதிர்காலத்திலும் எந்தவொரு அங்கீகாரத்தினையும் தமிழ் மக்கள் பெறமுடியாது.

சிக்குண்டு இருக்கும் வரை எமது தேசம் அழிக்கப்படும் என்பதுவே உண்மையாகும். கண்முன்னால் இதுவே நடைபெறுகின்றது.

இதனை உணர்ந்ததன் வெளிப்பாடே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் இலங்கை அரச கட்டமைப்பிற்குள் நின்று கொண்டு அதிகாரப் பகிர்வு என்ற வழிமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். அதன்வழி 1972 இல் காங்கேசன்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் இராஜினாமாச் செய்தார்.

பின்னர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அதிகாரப்பகிர்வு என்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சுயநிர்ணயம் என்ற புதிய பாதையினை அவர் தொடக்கிவைத்தார். இப் புதிய பாதைக்கு முழுத் தமிழ்த் தேசமும் 1977 தேர்தலில் தமது ஆணையை வழங்கியிருந்தது.

ஆகவே தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி பேசுகையில் நாம் இரண்டு சுயநிர்ணய உரிமை உடைய தேசங்கள் சந்திக்கின்ற புள்ளியையே கவனத்தில் கொள்ளவேண்டும். இருதேசக் கோட்பாடு என்ற எண்ணக்கரு இதனடிப்படையிலேயே எழுச்சியடைந்தது.

தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் ஒரு அரசியல் ஒப்பந்தந்தின் ஊடாக உருவாக்குகின்ற அரசே தமிழர்களுக்கு ஏற்புடையதாக அமையும். இந்த இரு தேசங்களும் ஒரு நாட்டிற்குரிய புதிய அரசொன்றை ஏற்படுத்தும் பொருட்டு இறைமையின் தேவையான பகுதிகளை மட்டும் ஒன்று கூட்டி (விட்டுக் கொடுத்து அன்றி) உருவாக்கப்படுகின்ற புதிய ஏற்பாடாக இது அமையும்.

தற்போதைய அரசு உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்தில் இருந்து (அதாவது சிங்கள பௌத்த தேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அரசு என்ற கருத்தாக்கத்திலிருந்து) ஒரு உடைப்பை செய்து உருவாக்கப்படுகின்ற இரு தேசத்திற்கும் பொதுவான அரசு இது. இத்தகைய அரசொன்றல்லாத ஒன்றில் நாம் கூட்டாக சிங்கள தேசத்துடன் வாழ்வது சாத்தியம் இல்லை.

மேலும் நாம் நம்மை சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக வெளிப்படுத்தும் போது தான் சட்ட ரீதியிலும் சர்வதேச அளவிலும் நாங்கள் ஓர் தனித்துவ இறைமை கொண்ட தரப்பாக எம்மை அடையாளப்படுத்த முடியும்.

இறைமையின் நடைமுறை வடிவமே சுயநிர்ணய உரிமையாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்ற வகையில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தினை முழுமையாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தின் இறைமையினை பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு நாம் செல்ல முயற்சிப்பது எமது இனத்தினை நாமே அழிவு நிலைக்குக் கொண்டு செல்வதாக அமைந்துவிடும்.

எனவே தான் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கே இணங்கமுடியாது எனச் சொல்கின்ற சிங்கள தேசம் எப்படி சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் என்று வாசகர்கள் கேட்கலாம்.

இவ்விடத்தில் எனது முதலாவது கட்டுரையான ஞாயிறு தினக்குரல் நவம்பர் 6 ஆம் திகதிய “இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலம் எவ்வாறானது” என்ற தலையங்கத்தினைக் கொண்ட கட்டுரையை வாசகர்கள் மீள வாசித்துப் பார்க்கலாம்.

அந்தக் கட்டுரையில் நாம் இன்று எடுக்கின்ற நிலைப்பாட்டை சர்வதேசம் நிராகரிக்க முடியாது என்றும் சர்வதேசத்தின் தற்போதைய பூகோள அரசியலுக்கு தமிழர் அரசியல் தேவைப்படுகின்றது என்றும் விளக்கியிருந்தேன்.

அதேவேளை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் யாதெனில் மக்கள் சுயநிர்ணயத்திற்கான ஆணையை தேர்தல்கள் வாயிலாக வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை வலியுறுத்திச் செயற்படுவதை தற்போது தலைமைகள் கைவிட்டுவிட்டு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தலாம் என்று கூறுவது சர்வதேச ஒழுங்கிலும் சர்வதேச அனுபவங்களின் அடிப்படையிலும் முடியாத காரியமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.