Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சிவநாயகத்தின் முதலாவது ஆண்டு நினைவு தினம்

Featured Replies

கடந்த மாதம் 29ம் திகதி மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்களது முதலாவது நினைவு தினம். தமிழீழ மக்களது சுயநிர்ணய போராட்டத்திற்கு ஐயா சிவநாயகத்தின் அர்பணிப்பு, சேவை, பங்களிப்பு பற்றி எழுதுவதனால் பக்கங்கள் அல்லா பல புத்தகங்கள் எழுதக்கூடியவிதமாக இருக்கும் என்பதை இங்கு நான் எழுதித் தான் உலகத் தமிழர் அறிந்திருக்க வேண்டியது அல்லா.

ஐயா சிவநாயகம் அவர்களின் எழுத்தாற்றல், இலங்கையில் ஆங்கில பத்திரிகைதுறையில் பிரபலிய பத்திரிகையாளரான – திரு தாசி வித்தாச்சி, றேயி மைக்கல், மேர்வின் டி சில்வா ஆகியோருக்கு நிகராகவும,; இவர்களது சகாவாவும் ஆங்கில பத்திரிகைதுறையில் ஐயா சிவநாயகம் ஒரே ஒரு தமிழனாக திகழ்ந்தார்.

ஐயா பற்றி மிக நீண்டகாலமாக அறிந்திருந்த பொழுதும், பிரான்சின் தலைநகரான பாரிஸில் முதல் முதலாக இவரை சந்தித்து கலந்துரையாடும் சந்தர்ப்பம் உருவானது. அன்றிலிருந்து ஐயா சிவநாயகம் எனது நெருங்கிய நண்பனாகவும், ஆசானாகவும் தேவை ஏற்படும்வேளைகளில் ஓர் ஆலோசகராகவும் இருந்தார் என்பதை புலம்பெயர் வாழ் தமிழர்கள் அறிவார்கள்.

இளமை கல்வி

யாழ்பாணத்தில் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்ட இவர், தனது இளமை கல்வியை கொக்குவில் இந்து கல்லுரியிலும், பின்னர் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக கொழம்பு சென்றிருந்தவர், தனது இரண்டாவது ஆண்டு சட்டக் கல்லூரிப் படிப்பின்பொழுது, பத்திரிகைதுறையில் ஆர்வம் கொண்ட காரணத்தினால், அவ்வேளையில் மிக பிரபலியமான ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தில் ‘சிலோன் டெயிலி நியூஸில்’ இணைந்து, பாரளுமன்ற நிகழ்வின் பிரதம நிரூபராக கடமையாற்றினார். பின்னர் ரைம்ஸ் பத்திரிகை நிறுவனத்தினரின் ‘டெயிலி மீறர்’ பத்திரிகையின் கடமையாற்றியவேளையில், அவ் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு றேயி மைக்கலின் உதவி ஆசிரியரில் ஒருவராக கடமையாற்றினார்.

இதனை அடுத்து அமெரிக்க நிறுவனமான ‘வோல்ரர் தோம்சன்’, இலங்கை சுற்றுலா நிறுவனம் போன்றவற்றில் பல முக்கிய பதவிகள் வகித்தார். இவர் இலங்கை சுற்றுலா நிறுவனத்தில் கடமையாற்றிய பொழுது, அவ்வேளையில் சுற்றுலா அமைச்சரும் பாரளுமன்ற சபாநாயகருமான காலநிதி ஆனந்த டீ அல்விஸினால் ‘‘ஓர் கடமை வீரானாக’’ போற்றப்பட்டவர்.

1979ம் ஆண்டு இலங்கைதீவில் தமிழ் மக்கள் மீது கட்;டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரத்தினால் பதிக்கப்பட்ட பலரில் ஐயா சிவநாயகமும் ஒருவராவார். இது இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது.

தனது இளமைகாலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையில் அக்கறை கொண்ட காரணத்தினால், தனது ஆசானான கொக்குவில் இந்து கல்லுரி அதிபர் திரு கன்டி பேரின்பநாயகம், பேரசிரியர் சி. சுந்தரலிங்கம் போன்ற முன்ணனி தமிழ் தலைவர்களுடன் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தார். தனது மனதுக்குள் எரிந்து கொண்டிருந்த தமிழ் தேசியத்திற்கு புத்துயிர் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்த காரணத்தினால், இனக்கலவரத்தை தொடர்ந்து தனது மனைவி பிள்ளைகளுடன் யாழ்பாணத்திற்கு இடம்பெயர்ந்தார்.

‘சற்றடே றீவியூ’

யாழ்பாணத்தில் தனது நண்பர்களான தமிழ் புத்திஜீவிகளுடன் கூட்டுச் சேர்ந்து, யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆங்கிலப் பத்திரிகையான ‘சற்றடே றீவியூ’ எனும் பத்திரிகையின் ஸ்தபாக ஆசிரியராக கடமையாற்றினார். இவரது எழுத்துக்கள் ‘வாழைபழத்தில் ஊசி ஏத்துவது’ போன்று அமைந்தாதை சகிக்க முடியாத சிறிலங்க அரசாங்கம் ‘சற்றடே ரீவியூ’ தடை செய்து, இவரையும் கைது செய்ய முயற்சித்த வேளையில், ஐயா கடல்மார்க்கமாக தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்று, அங்கு சில காலம் ‘தமிழர் தகவல் நிலையம்’ எனும் நிறுவனத்தில் கடமையாற்றினார்.

இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலங்களில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற முக்கிய மகாநாடுகள், பேச்சுவார்த்தைகளில் பல இலங்கை இந்தியா தமிழ் தலைவர்களுடன் கலந்து கொண்டார்.

1987ம் ஆண்டு இலங்கை-இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தான வேளையில,; யாழ்பாணத்திற்கு சில நாட்கள் விஜயம் செய்து நிலைமைகள் கவனித்த இவருக்கு, இலங்கை-இந்தியா ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. இதனால், தனது புலம் பெயர் வாழ் நண்பர்களுடன் இணைந்து ‘தமிழ் நேசன்’ என்ற பத்திரிகையை தமிழ் நாட்டில் ஆரம்பித்து சில காலம் நடத்தி வந்த வேளையில், திடீரென ஒரு நாள் இந்தியாவின் தடா சட்டத்தின் கீழ்; கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் இந்தியா சிறையில் காலத்தை கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இவரை விடுதலை செய்த இந்தியா நீதிமன்றம், இவர் இருபத்து நாலு மணி நேரத்தில் இந்தியா மண்ணிலிருந்து வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். இதன் காரணமாக இவர் கொங்கொங்கிலும், ஆபிரிக்காவில் சில நாடுகளில் தற்காலிகமாக காலத்தை கழித்து இறுதியில் பிரான்சை வந்தடைந்தார்.

ஐயா சிவநாயகம்

மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சிவநாயகம் பிரான்சின் தலைநகரான பாரிஸிற்கு காலெடிவைத்த நாள் முதல்;, இவரை ‘ஐயா’ என அன்பாக அழைக்கப்பட்டார். அன்றும் இன்று என்றும்; சகலரது மனங்களில் ஐயா சிவநாயகம நிலைத்து நிற்கிறார்.

பாரிஸ் வந்ததும் முதலில் தனது சுகயீனங்களுக்கான வைத்தியம், தான் தங்குவதற்காகன வதிவிடப் பத்திரம் ஆகியவற்றை கவனித்து வந்த அதேவேளை, அன்று சுடர் விட்டு எரிந்த தமிழீழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தனது பங்களிப்பையும் ஆற்றி வந்தார்.

பாரிஸில் வாழ்ந்த காலங்களில் ஓரு நாள் திடீரென மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஐயா பாரிஸில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டார். பாரிஸில் இவருக்கு வேண்டிய உறவினர்களோ நண்பர்களோ இல்லாத போதிலும், இவர் வைத்தியசாலையில் இருந்த காலத்தில,; இவரை பார்ப்பதற்கு எந்த நேரமும் ஆட்களுக்கு குறைவிருக்கவில்லை. இது ஐயா சிவநாயகம் மற்றவர்கள் மீது வைக்கும் பாசம் அன்புக்கு ஓர் நல்ல ஊதாரணமாகவிருந்தது.

‘கொற் ஸ்பிறிங்’

இவர் பாரிஸில் வாழ்ந்த வேளையில் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுக்கென ஓர் ஆங்கிலச் சஞ்சிகை சர்;வதேச மட்டத்தில் இருக்கவில்லை. சிறிலங்கா அரசு தமது பிரச்சாரவேளைகளை சர்வதேச மட்டத்தில் மிகவும் திறம்பட செய்துவந்ததை கவனித்த ஐயா சிவநாயகம், ‘கொற் ஸ்பிறிங்’ (சுடான ஊற்று) என்ற மாத சஞ்சீகையை பாரிஸில் ஆரம்பித்து, சில காலத்தின் பின்னர் இதே சஞ்சீகையை பிரித்தானியாவிலும் பிரசுரித்து வந்தார்.

ஐயா சிவநாயகத்தின் எழுதாற்றலை முழு உலகமே அறிந்துள்ளது. ஒருமுறை கொழும்பிலிருந்த அமெரிக்கா தூதுவர் திரு அல்சி வில்ஸ் யாழ்ப்பாணத்திற்கு சென்று ஆற்றிய உரையில் பொய்யான தகவல்களை அவதானித்த இவர்;, ‘கொற் ஸ்பிறிங்கில்’ அமெரிக்கா தூதுவருக்கு ஓர் திறந்த மடலை எழுதியிருந்தார். இக்கடிதத்தை வாசித்த அமெரிக்கா தூதுவர் ஐயா சிவநாயகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தனது தவறை திருத்திகொண்டார்.

மூன்று வெளியீடுகள்

ஐயா சிவநாயகத்தினால் பிரித்தானியாவில் வாழ்ந்த காலத்தில்; எழுதி வெளியிட்ட – ‘Pen and the Gun’ (பேனாவும் துப்பாக்கியும்), ‘Sri Lanka : Witness to History’ – A Journalist’s Memoirs 1930-2004 (சிறிலங்கா சரித்திரத்தின் சாட்சி – ஓர் பத்திரிகையாளரின் நினைவிலிருந்து) ஆகிய வெளியீடுகளும,; 1987ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட “Sri Lanka : 10 years of Jayewardene Rule” (சிறிலங்கா – ஜெயவர்தனாவின் 10 வருடகால ஆட்சி) ஆகிய மூன்று வெளியீடுகளும் எந்தவித இனபேதமின்றி சர்வதேச ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளினால் தமது ஆய்வின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயா சிவநாயகம் பத்திரிகைதுறையில் மட்டுமல்லா, தனது குடும்ப வாழ்க்கை, கலை கலாச்சார சமூக விடயங்களிலும் மிகவும் ரசனை கொண்ட மனிதனாக விளங்கினார். சங்கீதம், நடனம் போன்றவற்றை ரசித்து கெட்பவர் பார்ப்பவர். பகிடிகள் சொல்லி மற்றவர்களை மகிழ்விப்பதில் ஓர் அரச சபையின் விகடகவி போல் விளங்கினார்.

இவரது பகிடிக் கதையை கேட்டு ரசிப்பதற்கு எமது காரியாலயத்தில், சகல வயதை சேர்ந்தவர்களும் ஐயாவின் வருகையை எதிர்பார்த்து நிற்பார்கள். இன்று ஐயாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம். தமிழ் மக்களின் ஓர் பொக்கிஷத்தை நாம் இழந்துள்ளோம். ஐயாவின் பிரிவை தாங்கமுடியாது தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கு எம்மால் கூறக்கூடிய ஆறுதல் வார்த்தை, “ஐயா எழுதியவை, கூறிய ஆலோசனைகள், காட்டிய பதைகள் என்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா”.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

29 நவம்பர் 2011.

http://www.tamilkath...58//d,view.aspx

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.