Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை மிரட்டும் கடற்படையினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் வடக்கில் மீள்குடியேறிய மக்களை மிரட்டும் கடற்படையினர்.

  • Tuesday, December 6, 2011, 5:16

மலசலம் கூடம் கட்டுவது தொடக்கம் தமது காணி துப்பரவு செய்வதற்கும் வலிகாமம் வடக்கு மக்கள் சிறீலங்கா கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

படையினரின் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டவலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேறிய மக்களே கடற்படையினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர்20 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலையம் என்ற பேயரில் முடக்கப்பட்டிருந்தபிரதேசங்களில் மக்களுடைய சொத்துக்கள் எல்லாமே சூரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக அப்பகுதியில் இருந்தவீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு படையினர் தமது காவலரன்கள் அமைப்பதற்காக கற்கள், கதவு, ஜன்னல், ஓடு என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் வெய்யிலுக்கும் மழைக்கும் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் எந்தவிதமான அடிப்படைவசதிகளும் இல்லாமல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் படிப்படியாக தமது வாழ்வியலை முன்னேற்றஎத்தனிக்கும் இச் சந்தர்ப்பத்தில் கடற்படையினரின் இவ் திடீர் உத்தரவு மக்களை மேலும் பதற்றத்திற்குஉள்ளாக்கியுள்ளது.

சேந்தான் குளம், வலித்தூண்டல், கீரிமலை, கூவில், மாவிட்டபுரம், வசந்த புரம் ஆகிய பகுதிகளுக்குள்நாள்தோறும் அலைந்து திரியும் சிறீலங்காகடற்படையினர் குறிப்பிட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்படும் கட்டடங்கள்பற்றியும் அவை அனுமதி பெற்று கட்டப்படுகிறதா என்றும் விசாரனை சேய்து வருகின்றனர்.கடந்த மாதம் வருகை தந்த கடற்படையினர் சேந்தான் குளப்குதியில் சமுர்த்தியால்கட்டப்பட்டுக் கொடுக்கப்பட்டு வரும் மலசல கூடம் கட்டுவதற்கு தடை விதித்தனர். மற்றும் வசந்த புரத்தில் முன்பள்ளிகட்டுவதற்கு அடித்தளம் பேடப்பட்டதையும் இடைநடுவில் நிறுத்தினர்.

இதுகுறித்து பிரதேச சபையினர் கடற்படையினருடன் நடத்திய சந்திப்பில் மேற்படிக்கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் இனிவரும் காலங்களில் சிறு கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் தமதுஅனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தவிர கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடையம் கடற்படையினரினால் ஒவ்வெரு கிராமங்களிலும் சென்று கடும் தொணியில் உத்தரவிட்டுள்ளனர். இவ்விடையம் தொடர்பாக் பகுதியில் உள்ளஒரு வயோதிர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் எங்கட இடத்ததில குப்ப தாக்க கிடங்கு வெட்டோனும் என்றாலும் நேவீன்ர காலுக்க போய் நிற்கோனும் எங்கட நிலை அப்பிடியா போச்சு. எங்கடஅரசியல் தலைவர்களும் இப்ப அதத்தானே செய்யினம். அவர்களோட ஒப்பிடேக்க நாங்கள் பறவாய் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

http://www.tamilthai.com/newsite/?p=1040

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.