Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பௌத்தம்'; இந்தியா, சீனாவின் கெடுபிடி யுத்தம் அம்பலம்

Featured Replies

Tuesday, 29 November 2011 06:12 Hits: 822

  • emailButton.png
  • printButton.png

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளின் சந்திப்பானது திடீரென இச் சந்திப்பிற்கு முதல் நாள் கைவிடப்பட்டிருப்பது "பௌத்தம்' தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடி யுத்தத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான உலக புத்தபிக்குகள் மாநாட்டில் திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா பங்கேற்பதற்கு அனுமதிப்பதை மறுத்து விடுமாறு பெய்ஜிங் விடுத்திருந்த கோரிக்கையை புதுடில்லி நிராகரித்ததைத் தொடர்ந்து இருநாட்டு விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பைக் கைவிடுவதென சீனா தீர்மானித்துள்ளது. இந்த விடயமானது டிசம்பர் 89 இல் இருநாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு செயலாளர் மட்டத்திலான சந்திப்பையும் ஒத்திவைக்கும் நிலைமைக்கு தானாகவே இட்டுச் செல்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் "அமத்தி வாசித்தாலும்' திரைமறைவில் இந்த விடயம் தீவிரமடைந்துள்ளதாக ஐ.ஏ.என். செய்திச்சேவை நேற்றுக் குறிப்பிட்டது.

பௌத்தத்தில் வலுவான சக்தியுடைய நாடாக சீனாவை உருவாக்குவதென்ற தீர்மானத்தை சீனத்தலைமைத்துவம் எடுத்திருக்கின்றது. மதம் தொடர்பாக மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திலும் பார்க்க திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்புபட்ட விடயங்களின் அடிப்படையிலேயே பௌத்தத்தில் கொண்டிருக்கும் திடீர் பரிவானது மேலெழுந்திருக்கிறது.

தலாய்லாமா இறப்பதற்கு முன்னராக அவரின் "மறுபிறவியை' தெரிவு செய்யும் விவகாரத்தில் தாங்கள் கரிசனையுடன் ஈடுபட்டிருக்கின்றனரென்ற நம்பகத்தன்மையை சர்வதேச ரீதியாக பௌத்த சமூகத்தினர் மத்தியில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் சீனாவின் கம்யூனிஸ ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

நட்புறவுடன் கூடிய தலாய்லாமாவே தமது திபெத்தியச் சிக்கலுக்கு தீர்வைக் காண்பாரென சீனர்கள் நம்புகின்றனர். 1951 இலிருந்து பொதுமக்கள் கிளர்ச்சி, தீக்குளிப்பு போன்றவற்றின் மூலம் திபெத்தின் கிளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

1989இல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திபெத்திய கிளர்ச்சியானது தலாய்லாமாவை திபெத்திய மக்களின் அப்போதைய தலைமுறையினர் ஒருபோதுமே கண்டதில்லை என்பதையும் கம்யூனிஸ பிரசாரமானது குற்றமான விடயமென்ற தினசரி "தீனி'யுடன் அவர்கள் வளர்ந்ததையும் சீனத்தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.

1991 இல் மூன்றாவது செயற்பாட்டு மாநாட்டில் தீவிரமான முறையில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் திபெத் தொடர்பான புதிய கொள்கையை சீனா உள்ளீர்த்தது. மனங்களை வென்றெடுக்கும் கருவியாக மதம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதே அக் கொள்கையாகும்.

இந்தத் தந்திரோபாயத்தின் ஓரங்கமாக 1993 இலும் 1995 இலும் கர்மா பா, பஞ்சன்லாமா ஆகிய இரு உயர்மட்ட லாமாக்களின் மறுபிறப்புகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை சீனக் கம்யூனிஸ்ட்டுகள் ஆரம்பித்திருந்தன.

ஹெட்கூன் சோக்சி றிய்மா என்ற 6 வயதுப் பையன் டலியா லாமா வினால் "உண்மையான' பஞ்சன்லாமா என்று அடையாளம் காணப்பட்டதுடன் 18 வருடங்களாக இப்போதும் சீனாவின் காவலிலேயே இருந்து வருகிறார்.

சீனாவின் வேட்பாளரான ஜியான்சின் நோர்வூ திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கும் நிலையில் 2000 ஆம் ஆண்டு புத்தாண்டு வாரத்தில் கர்மாபா தலாய்லாமாவுடன் இணைந்து கொள்ள இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டார்.

மதம் தொடர்பான மாவோவின் விருப்பமின்மையை புறந்தள்ளிவிட்டு செஜ்ஜியின் மாகாணத்தில் 2006 இல் முதலாவது உலகப் பௌத்த மாநாட்டை சீனா நடத்தியது. இரண்டாவது மாநாடு 2009 மார்ச்சில் வூக்ளியில் இடம்பெற்றது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 1700 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இரு மாநாடுகளிலும் ஜியான்சின் நோர்வூ உலகிலுள்ள பௌத்த அதியுயர் மட்டப் பிரதிநிதியாகக் காட்சிப்படுத்தப்பட்டார்.

உண்மையில் பௌத்த வல்லாதிக்கம் மிகுந்த நாடாக சீனா இருக்கின்றதென ஆக்ரோஷமான முறையில் சீனா காட்சிப்படுத்துவதை கௌதம புத்தர் பரிநிர்வாணம் பெற்ற இந்தியா சிறப்பான முறையில் வரவேற்கவில்லை. சிங்கப்பூர், இலங்கை, கம்போடியாவில் பௌத்த மாநாடுகளை நடத்துவதை டில்லியும் ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான காட்சிகள் நேபாளம், வியட்நாமிலும் இடம்பெறவுள்ளது என்று ஐ.ஏ.என் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

சீனா எச்சரிக்கை

இது இவ்வாறிருக்க தலாய்லாமாவுக்கும் அவரின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எந்த நாடும் இடமளிப்பதைத் தான் எதிர்ப்பதாக சீனா நேற்று திங்கட்கிழமை எச்சரித்துள்ளது.

புதுடில்லியில் இடம்பெற்று வரும் சர்வதேச புத்தபிக்குகள் மாநாட்டில் உரையாற்றவுள்ள தலாய்லாமா தூய்மையான சமயப் பிரமுகர் அல்ல என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மதத்தின் போர்வையில் நீண்டகாலமாக பிரிவினைவாத நடவடிக்கைகளில் தலாய்லாமா ஈடுபட்டு வருபவர் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொங் லீயீ கூறியுள்ளார்.

இதேவேளை, பௌத்த மக்களை அதிகளவில் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் இந்தியாவை தளமாகக் கொண்ட புதிய சர்வதேச அமைப்பொன்றை உருவாக்கும் விடயத்தை நெருங்கி வந்திருப்பதாகவும் ஐ.நா.போன்ற சர்வதேச மட்டத்தில் பௌத்தம் தொடர்பாக ஒருமித்து குரல் கொடுக்கவல்ல அமைப்பை உருவாக்கத் தீர்மானித்திருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று தெரிவித்திருந்தது.

http://www.thinakkural.com/news/all-news/india/9735-2011-11-29-00-43-17.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.