Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போருடன் முடிவடைந்த கண்ணாணிப்பு குழு செப்படி வித்தை

Featured Replies

வன்னிப் போருடன் முடிவடைந்த கண்ணாணிப்பு குழு செப்படி வித்தை

சிரிய போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு திரும்பும் அவலம்

சிரியா சென்றுள்ள அரபுலீக்கின் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு செல்லாக்காசு வேலை என்பதை இப்போது அரபுலீக்கே உணர ஆரம்பித்துள்ளது. இவர்கள் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு செல்லம் கொடுக்கும் போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் அங்கு போய் இறங்கிய பின்னர் நிலமைகள் மோசமடைந்துள்ளதே தவிர வேறெந்த மாற்றங்களும் நடைபெறவில்லை.

இவர்களில் முக்கியமான ஒருவராக சூடான் நாட்டு கோமாள ஜெனரல் சிரிய சர்வாதிகாரிக்கு நட்பான கருத்தை தெரிவித்து, தான் வந்த வேலையை மறந்து போனது தெரிந்ததே. இந்த நிலையில் செல்லாக்காசு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவை அரபுலீக் திருப்பி அழைக்க வேண்டுமென ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபரின் அடாவடித்தனங்களை பதிவு செய்ய வேண்டிய கடமையில் மென்மையாக நடந்து கண்காணிப்புக் குழு கோட்டைவிட்டுள்ளது.

மேலும் அரபுலீக் கூட ஒரு செல்லாக்காசு தாபனமா என்று மற்றவர்கள் சந்தேகப்படும் அவலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆளும் அரசுகளுடன் இணைந்து கண்காணிப்புக் குழுக்கள் செப்படி வித்தை காட்ட இருந்த வாய்ப்புக்கள் 2009 மே வன்னிப் போருடன் முடிவடைந்துவிட்டமை கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=92696

  • தொடங்கியவர்

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்

ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட்பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்களின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 வீதமானவர்கள் பயங்கரவாதிகளோ ஆயுதம் தூக்கியவர்களோ அல்ல வெறுமனே அப்பாவி மக்கள் மட்டுமே என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கப் படைகள் 4474 பேர் மடிந்துள்ளனர், 9019 ஈராக்கிய போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இதர நாட்டு படைகளும், இவர்களை எதிர்த்து போரிட்டவருமாவர். இந்தக் கொலைகளில் 90 வீதம் 2009 ம் ஆண்டுக்குள் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. சுமார் 170.000 அமெரிக்கப் படைகள் மொத்தம் 505 இராணுவ முகாம்களில் முகாமிட்டு இந்தப் போரை நடாத்தி மேற்கண்ட நாசகார செயலை புரிந்துள்ளார்கள் என்றும் அது பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் மோசமான படு கொலைகள் நடைபெற்ற இடம் பாக்தாத் ஆகும். இங்கு அரைப்பங்கு கொலைகள் நடை பெற்றுள்ளன.

இதேபோல சிறீலங்காவில் 2009 ம் ஆண்டு மட்டும் 140.000 தமிழர்கள் சிங்கள இனவாத படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈராக் போருடன் ஒப்பிட்டால் சிறீலங்கா அரசு நடாத்திய கொலைகள் பத்து மடங்கு அதிகமாகும் என்பது கவனிக்கத்தக்கது. இந்தத் தவறுகளுக்கு புதிய உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது. பரவாயில்லை இனி நல்ல பிள்ளைகளாக நடவுங்கள் என்று ஐ.நா செயலர் சொல்லப்போகிறாரா என்பதுதான் உலகின் எதிர்பார்ப்பு.

அமெரிக்கப்படைகள் ஈராக்கிற்குள் அணு குண்டு இருப்பதாக போருக்குப் போயிருந்தன. அவர்கள் ஈராக்கில் யாதொரு அணு குண்டையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மடைத்தனமான போரினால் உலகை மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட வைத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. உலக அரசியல் தலைமைகள் மிகவும் தகுதி குறைந்தவர்களின் கைகளில் சிக்குண்டு தள்ளாடுகிறது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் எதுவும் வேண்டியதில்லை.

http://www.alaikal.com/news/?p=92783

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.