Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இனி ஒரு...” சபா நாவலன் GTV இல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த புதுவருடத் தினத்தன்று, GTV இல் சபா நாவலனின் கலந்துரையாடல் ஒன்று இடம்ப்பெற்றிருந்தது. அவர் தன் மொழித்திறனால் எமது ஈழப் பிரச்சினையை நன்றாக வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

ஒரு விளையாட்டுப் போட்டி வர்ணனை செய்யப்படுதல் என்பதில்; போட்டியாளன் திறன், வர்ணனையாளன் திறன் என்ற இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு கொண்டது. ஆனால் ஒரு போராட்டத்தின்- வர்ணனையாளன்- மேதாவித்தனம் போராளிகளின் தலையில் இலகுவாக குட்டு வைத்து விடுகின்றது!

"சுகம் வரும், ஆனால் ஆள் தப்பாது!" என்ற நிலை கண்கூடான பிறகும், தொடரப்படும் அந்த வைத்தியம்; விண்ணுக்கும், மண்ணுக்குமாய் துள்ளியேதான் கொண்டாடும் தகுதிதான் கொண்டதா? ஆனால் இந்த சபா நாவலன், அப்படியே விண்ணுக்கும், மண்ணுக்குமாய் குதித்து, அன்றைய EPRLF இன் புயபல பராக்கிரமங்களை கொண்டாகிக் கொண்டே இருந்தார்!

புலிகளின் இன்றைய தோல்விக்கும்; அவர்கள் பழைய நடவடிக்கைகளே அன்று அச்சாரமாய் விளங்கியதாகவும், அருள்வாக்கு சொல்லிக் கொண்டும் இருந்தார்.

அப்போது இடையில் எமது தொலைகாட்சி நடுவர், அறிவுபூர்வ முத்திரை இடப்பட்ட தகவலை அவர் பதிலுக்காக முன் மொழிந்தார். அது.. "ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய் என்ற நிலையில் விளங்கும் இந்தியாவே! இவர்களுக்கு எல்லாமாய் அன்று விளங்கியது என்பது மறுக்கப்பட முடியுமா? எதிரி ஆனவன் வாலாய் இருந்தகூடப் பறவாயில்லை, ஆனால் தலையாய் அவனே இருக்கும் போது, இந்த உடம்மைக் கொண்ட அமைப்பு எப்படி எங்களைப் பாதுகாப்பு பாதுகாக்கும்? எப்படி எங்களுக்கானது ஆகும்?" என வினவப்பட்ட போது இந்தியாவின் எதிரி நிலைப்பாட்டையும், EPRLF இன் தலை அதுவே என்பதிலும் மறுப்பின்றி உடன்பட்டார்!

ஆள் தப்பாது என்ற செய்தி அறியப்பட்ட பின்னாலும், வரும் அந்த சுகத்துக்காகத்தானா இவரும், இவர் கூட்டமும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக குதித்துக் கொண்டு இருக்கின்றார்கள்?

உடைத்து வைத்த தேங்காயில், பூஞ்சணம் பிடிப்பதால் தேங்காயின் தரம் குற்றப்படாது. அப்படியே உலகத்தில் எந்த ஒரு அமைப்பையும் சுயநலம் என்ற அந்தப் பூஞ்சணம் தீண்டாமல் விடாது. பொதுநலத்தின் இயங்குநிலை மிகவும் சிறிது, சுயநலத்தின் இயங்கு நிலை மிகவும் அதிகம். சிறப்பாக புலத்தில் சுயநலவாதிகளின் நாட்டாமைக்குள் புலித்தேசியம் அடங்கிக் கிடந்தது என்பது என்போன்றவர்களின் பார்வை. புலிகளின் தோல்வியை முன்னிறுத்தி, இந்த புலப்புலிகள் செயல்கைளை சாட்சியாய் வைத்து போராட்டத்தையும், சா! ஒன்றை மட்டும் கூலியாய் பெற்று எமது மண்காத்த அந்த மாவீரர்களையும் பரிகாசம் செய்வது என்பது, மானிடதர்மத்தை உயிரோடு புதைப்பதற்கு சமனான செயல்!

தோல்வி மூச்சுவரை எம்மை காயப்படுத்தி விட்டது. அதனால் தம் மூச்சுவரை எமக்காகக் கொடுத்தவரை எம் உயிர் உள்ளவரை மறக்க முடியாது!

GTV ?????????????????????/////////////>>>>>>>>>>>................<<<<<<<<<<,,,,,,,,,|||||||\\\\\::::::::::::::;;;;;;;;;;;;;;''''''''''''}[{}}{}{}{+++++++++-----------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.