Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசிலனின் இன்னொரு போர் முகம் பால்ராஜ் - விதானையார்

Featured Replies

காண்டீபன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா, இவர் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தவர். போராளியான இவர், 1983ம் ஆண்டு காலப் பகுதியில் வன்னிப்பிராந்தியத்தில் இருந்து புதிய போராளிகளை இணைத்து இந்தியாவில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பும் பணியைச் செய்துகொண்டிருந்தார்.

அவருடன் புதிய போராளிகளை இணைப்பதில் அப்போது முன்னின்று செயற்பட்டவர் தான் பாலராஜ் அண்ணன் அவர்கள். கொக்குத்தொடுவாயில் பிறந்து வாழ்ந்தபடியால் திருமலை, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒவ்வொரு பகுதிகளையும் பால்ராஜ் அண்ணை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அத்துடன், சிங்கள மொழியையும் சாரளமாக பேசவும் தெரிந்து வைத்திருந்தார்.

இதனால், வன்னியில் இருந்து புதிய போராளிகளை இணைத்துக்கொள்வதற்கு மிகவும் சுறுசுறுப்பான இளைஞன் ஒருவர் கிடைத்ததில் மகிழ்ந்த காண்டீபன், பால்ராஜ் அண்ணையை இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிக்கு அனுப்பி வைக்காமல், தன்கூடவே வைத்திருந்து புதிய போராளிகளை இணைக்கும் பணியை மேற்கொண்டார். இதனால் தமிழ்நாட்டில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் 1வது பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு பால்ராஜ் அவர்களுக்கு இருந்தும் அவர் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

1984 டிசம்பர் 21ம் திகதியன்று, புதிய போராளிகள் சிலரை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்புவதற்காக உழவு இயந்திரம் ஒன்றில் காண்டீபனும், பால்ராஜ்யும் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தனர். நெடுங்கேணி ஒதியமலை பகுதியிலுள்ள கடையொன்றினுள் மறைந்திருந்த சிறீலங்கா இராணுவத்தினர் அந்த உழவு இயந்திரத்தின் மீது திடீர்த்தாக்குதலைத் தொடுத்தனர்.

Commander_Balraj_6.jpg

இதன்போது காண்டீபன் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள, பால்ராஜ் அண்ணை முதுகில் காயமடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக பால்ராஜ் அண்ணை இந்தியா கொண்டு செல்லப்படுகின்றார். அங்கு சிகிச்சையை முடித்தவர் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் 9வது பயிற்சி முகாமில் இணைந்து ஆயுதப் பயிற்சிகளைப் முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிகின்றார்.

இதற்கிடையே காண்டீபன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில், 1985ம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பாக கப்டன் லோறன்ஸ் நியமிக்கப்படுகின்றார். அப்போது தமிழகத்தில் இருந்து வந்திருந்த பழ.நெடுமாறன் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் கப்டன் லோறன்ஸ் ஈடுபட்டிருந்தார். பழ.நெடுமாறன் அவர்களை தமிழகத்திற்கு திருப்பிஅனுப்பி வைத்துவிட்டு, திரும்பி வந்துகொண்டிருக்கும் போது வவுனியாப் பகுதியில் பதுங்கியிருந்து சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலின் போது கப்டன் லோறன்ஸ் உட்பட நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பை தமிழ் நாட்டில் நடைபெற்ற 3வது பயிற்சி முகாமில் பயிற்சியை பெற்றிருந்த மேஜர் பசிலன் ஏற்றிருந்தார். மேஜர் பசிலன் அவர்களை பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருந்தவர் காண்டீபன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பாளராக பசிலன் இருந்தபோதே பால்ராஜ் அவர்கள் இந்தியாவில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பி, பசிலனுடன் இணைந்து கொள்கின்றார். முல்லைத்தீவில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சிறீலங்கா இராணுவத்தினர் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் மேஜர் பசிலனுடன் இணைந்து பால்ராஜ் அவர்களும் செயற்பட்டிருந்தார்.

இதன்போது விடுதலைப்புலிகள்வசம் இல்லாத பல புதியரக ஆயுதங்களும் பசிலன் தலைமையிலான படையணியால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்தியா - சிறீலங்கா ஒப்பந்தமும் அதனையடுத்து, இந்தியப் படையினருக்கு இடையிலான போரும் ஆரம்பமாகியது. 1987 ஒக்டோபரில் யாழ்குடாவில் தலைவர் இருந்த பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்துவதற்காக இந்திய இராணுவத்தினர் பரசூட்மூலம் தரையிறங்குவதாக வந்த தகவலையடுத்து, தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக முல்லைத்தீவில் இருந்து பசிலனும் போராளிகளும் யாழ்ப்பாணம் புறப்படுகின்றனர்.

அந்த அணியில் பால்ராஜ் அண்ணனும் ஒருவராக இருந்தார். நல்லதண்ணீர் தொடுவாளிணி, செம்பியன்பற்று ஊடாக யாழ்ப்பாணத்தை இந்த அணியினர் வந்தடைவதற்கிடையில், போராளிகள் நடத்திய தாக்குதலில் சிக்குண்ட இந்தியப்படை பரசூட் மூலமாக தரையிறங்குவதற்கு முன்பாகவே உயிரிழந்திருந்தனர். எனினும் இந்தியப்படை பல்வேறு முனைகளூடாக தொடர்ந்து முன்னேற முனைந்துகொண்டிருந்தது. இந்தியப் படையினரை தடுத்து நிறுத்தவதற்காக ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு பகுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவில் இருந்து வந்திருந்த பசிலன் தலைமையிலான அணியினருக்கு கோப்பாய் சந்தி ஒதுக்கப்படுகின்றது.

maj-pasilan001.jpg

இந்திய இராணுவத்தினரின் கடும் தாக்குதலினால் பல முனைகள் உடைக்கப்பட்டன. ஆனாலும் கோப்பாய் சந்தியை மட்டும் இந்திய இராணுவத்தினரால் நெருங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய இராணுவத்தின் தாக்குதல் மிக மோசமான நிலைமையை அடைந்தது. டாங்கிகள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது இந்தியப்படை. அந்த முயற்சியைத்தடுத்து நிறுத்துவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்த பால்ராஜ் அண்ணை “வாறன் இப்ப, இவையளுக்கு பல் கழட்டி வைத்தியம் பார்க்கிறன்” என்று கூறிவிட்டு சென்றவர், சிறிது நேரத்தில் 50 கலிபர் துப்பாக்கி ஒன்றுடன் அங்கே வந்தார். கலிபர் துப்பாக்கியை இயக்குவதென்றால் அதற்கென சில பிரத்தியேக அமைப்புகள் தேவை. ஆனால், அவை எவையுமே இல்லாமல், நான்கு போராளிகளை அழைத்து அதன் கால்களை இறுக்கப் பிடிக்குமாறு பணித்தவர், துரிதமாக இந்தியப் படையினர் மீது கலிபர் துப்பாக்கியால் தாக்குதலை தொடுக்கின்றார். போராளிகளிடம் இருந்து வந்த இந்த அதிர்ச்சிகரத் தாக்குதலால், சிறிது நேரத்திலேயே அங்கு நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுகின்றனர்.

அத்துடன் இந்திய இராணுவத்தினரின் டாங்கிகள் சிலவும் அழிக்கப்படுகின்றன. இந்திய இராணுவத்தினர் நிலைகொண்டு தாக்குதல் நடத்திய இடம் முழுமையாக போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. அங்கிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிய போராளிகள், தொடர்ந்து அங்கேயே நிலைகொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, தலைவர் யாழ்குடாவில் இருந்து வெளியேறி பாதுகாப்பாக வன்னிக்கு சென்றுவிட்டார். ஆனாலும், கோப்பாய் சந்தியை பசிலன் தலைமையிலான அணியினர் கைவிடவில்லை. இறுதியில் தலைவரிடம் இருந்து உத்தரவு வந்ததடையடுத்தே அங்கிருந்து மேஜர் பசிலன் தலைமையிலான போராளிகள் விலகிச் சென்றனர். மீண்டும் முல்லைதீவிற்கு சென்ற பசிலன் அணியினர், முல்லைத்தீவில் தலைவரைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர். ஆனாலும், தலைவரைக் கொல்வதற்காக இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கில் முல்லைத்தீவு, வன்னிக் காடுகளில் குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இதன் ஒரு கட்டமாக ஒட்டிசுட்டானில் இருந்து முல்லைத்தீவு நோக்கி இந்தியப் படையின் பெரும் அணியொன்று நகர்ந்துகொண்டிருந்தது. அந்தப் படையணியை வழிமறித்து பசிலன் தலைமையிலான அணியினர் நடத்திய தாக்குதல் மிகவும் முக்கியமானது. இந்தச் சண்டையில் பசிலனுடன் இணைந்து பால்ராஜ் மற்றும் போராளிகள் கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். இதன்போது இந்தியப் படைக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. டாங்கிகள் பல அழிக்கப்பட்டன. ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்தத்தாக்குதலில் பசிலனுடன் முக்கியமாக நின்று செயற்பட்டவர்களில் பால்ராஜ்யும் ஒருவர். (பசிலனின் திறமையைப் பார்த்து தலைவர் ஒரு பிக்கப் வாகனத்தையும் இந்திய இராணுவத்துடனான போருக்கு முன்னதாக அவருக்கு வழங்கியிருந்தார்.) இந்நிலையில் 08.11.1987 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரை நீண்டதூரம் விரட்டிச்சென்று தாக்கிவிட்டு பசிலன் தலைமையிலான அணியினர் திரும்பிக்கொண்டிருந்த போது, அவர்கள் ஏவிய எறிகணை ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததில் மேஜர் பசிலன் தலையில் படுகாயமடைந்தார்.

இதேவேளை கிரிசாந்தன் என்ற போராளி இதன்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த பசிலனை பால்ராஜ் அவர்களும் போராளிகளும் சிகிச்சைக்காக கொண்டு சென்றுகொண்டிருந்தபோது வழியிலேயே அவர் உயிர்பிரிந்தது. இந்திய இராணுவத்தினரின் முற்றுகையான நிலையில், களிக்காடு பகுதியில் பசிலனின் வித்துடலைத் தகனம் செய்தனர். அதன்போது, இந்திய இராணுவத்தினரிடம் இருந்து பசிலன் கைப்பற்றிய ஆயுத்தாலேயே வேட்டுக்களைத் தீர்த்து, போராளிகள் அவருக்கு இராணுவ மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.

மேஜர் பசிலனின் வீரச்சாவையடுத்து, அவரின் அணியிலிருந்து போராடிய போராளிகள் மத்தியில் அடுத்து என்ன செய்வதென்ற கேள்வி எழுந்தது. தலைவரின் பாதுகாப்பு தொடர்பாக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த பசிலனின் இழப்பு போராளிகள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுதான் தலைவர் அவர்களால் பசிலனின் இடத்திற்கு பால்ராஜ் நியமிக்கப்படுகின்றார்.

ஆனால், அப்போது ஒவ்வொரு போராளிகள் மத்தியிலும் பசிலனின் இடத்தை பால்ராஜினால் நிரப்ப முடியுமா என்ற கேள்வியே எழுந்திருந்தது. ஆனால் அந்தக் கேள்விக்கான விடை ஒரு சில வாரங்களியே கிடைத்துவிட்டது. பால்ராஜ்ஜை பார்த்தால் போராளிகளுக்கு பசிலனண்ணையின் ஞாபகம் வருமளவிற்கு அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. சரம் கட்டுவதில் இருந்து தாக்குதல் முனைகளில் படையினருக்கு எதிரான தாக்குதலிலும் சரி, போராளிகள் மீதான அரவணைப்பிலும், அக்கறையிலும் இன்னொரு பசிலண்ணையாகவே போராளிகள் பால்ராஜ் அண்ணையைப் பார்த்தனர்.

ஒரு சில வாரங்களிலேயே பால்ராஜ் அண்ணை தொடர்பான ஒரு உயர்வான எண்ணம் போராளிகள் மத்தியில் உருவாகிவிட்டது. பால்ராஜ் அண்ணையின் செயற்பாட்டினால் போராளிகள் புதுவேகம் பெறத் தொடங்கினார்கள். இதற்கிடையே தலைவரை இந்திய இராணுவத்தினர் இறுக்கமாக முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். முல்லைத்தீவு காட்டினுள்

மிகவும் குறைந்தளவு போராளிகளுடன் நின்ற விடுதலைப் புலிகள், தங்களது இழப்புக்களைக் குறைத்து இந்திய இராணுவத்தினருக்கு அதிர்ச்சியளிக்க கூடிய தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டிய நிலைமை.

அப்போது பால்ராஜ் அண்ணை புதிய புதிய திட்டங்களை வகுத்து தாக்குதலை நடத்தத் தொடங்கினார். இந்திய இராணுவம் தலைவரை நெருங்கமுடியாமல் போனமைக்கு பால்ராஜ் அண்ணையின் அந்த தந்திரோபாயத் தாக்குதல்கள் மிக முக்கியமானவை.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.