Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்!

Featured Replies

உலகின் யதார்த்தங்கள் எப்போதும் ஒன்றாக நிலைத்திருந்ததில்லை. உலக ஒழுங்குகளும், யதார்த்தங்களும் எப்பொதுமே மாறியபடியே உள்ளன.

கிழக்கு - மேற்காக ஜெர்மன் நாட்டைப் பிரித்து வைத்திருந்த சுவர் தகர்க்கப்பட்டதும், இரும்புக் கோட்டையாக இருந்த சோவியத் யூனியன் உதிர்ந்து போனதும், சாத்தியமே இல்லாத ஒரு மக்கள் புரட்சி துனீசியாவின் அரசியலைப் புரட்டிப் போட்டதும், அதன் நீட்சியாக லிபியாவின் இரும்பு மனிதன் கடாபி இல்லாமல் போனதும் உலகில் மாறிவரும் யதார்த்தங்களை எமக்குப் புரிய வைக்கின்றது.

140212%20005.jpg

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், இந்தியாவைத் தாண்டி எந்த மாற்றமும் ஈழத்தில் சாத்தியம் இல்லை என்று கயிறு திரிப்பவர்கள் இந்தியாவிடமிருந்தே அந்த யாதார்த்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம்.

எண்பதுகள்வரை தன் பிடியில் நில்லாமல் நழுவிய சிங்கள தேசத்திற்குப் பாடம் புகட்டுவதற்காக இந்தியா மேற்கொண்ட நகர்விற்கு ஈழத் தமிழர்களது அரசியல் பலிப் பொருளாக ஆக்கப்பட்டது. தமிழீழம் சாத்தியமே இல்லை என்று தத்துவம் பேசும் இந்தியா, அந்த நாட்களில் ஈழத் தமிழர்கள் கைகளில் ஆயுதங்களை எதற்காக அள்ளிக் கொடுத்தது? தனது மண்ணில் வைத்து ஆயுதப் பயிற்சிகளை எதற்காக வழங்கியது? அப்போதெல்லாம் இந்தியா போட்ட கணக்கு என்ன? அது செய்ய நினைத்தது என்ன? என்பதை நாங்கள் முற்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள ஆட்சியாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்தியா பலி கொண்ட ஈழத் தமிழர்களது உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 'இந்தியாவின் போரை நாங்கள் நடாத்தினோம்' என்ற சிங்கள ஆட்சியாளர்களது வாக்குமூலத்தை இந்தியா மறுதலிக்காத யதார்த்தத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

140212%20006.jpg

சிங்கள தேசத்துடனான போரை ஈழத் தமிழர்களுடாக மேற்கொண்ட இந்தியா, பின்னர் யதார்த்த மாற்றத்துடன் ஈழத் தமிழர்கள் மீதான போரை சிங்களப் படைகளூடாக நடாத்தி நிறைவு செய்தது. முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்கான நீதி கோரிய தமிழினத்தின் ஆவேசக் குரல்களும், அதனூடான உலக மாற்றங்களும் சர்வதேச அவைகளில் அடங்கிப்போகச் செய்யும் அசிங்கத்தையும் இந்தியாவே முன்நின்று நிகழ்த்தியதை இந்தியாவுடன் சமரசம் செய்ய முற்படுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நல்லவனது பகையிலும் பார்க்க. கெட்டவனின் நட்பு பேரழிவை ஏற்படுத்தும் என்பது இந்தியா எமக்குக் கற்றுத்தந்த பாடம். நாங்கள் இந்தியாவை நேசித்தோம், இந்தியாவின் பகை நாடு என்பதால் சீனாவை வெறுத்தோம். நாங்கள் இந்திவை சுவாசித்தோம், இந்தியாவுடன் வன்மம் பாராட்டியதால் பாகிஸ்தானை உதாசீனம் செய்தோம். அதுவே எங்களுக்கு வினையாக வந்தது. சீனாவும், பாகிஸ்தானும் ஈழத் தமிழர்கள்மீது கருணை காட்டாததற்கு நாங்களே காரணமானோம்.

1971 இல் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்காள தேசத்தை விடுவிப்பதற்கான போரை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்தியா அமெரிக்கா உட்பட்ட அத்தனை நாடுகளிடமும் ஆதரவு கோரியது. 2012 இல் ஈழத் தமிழர்களுக்கான நீதிப் போராட்டத்திற்கு அமெரிக்கா உட்பட்ட மேற்குலகு இந்தியாவிடம் ஆதரவு கோரி தூது செல்கின்றன. இதில், யதார்த்தம் எங்கே உள்ளது? ஈழத் தமிழினம் அழிக்கப்பட்ட காலத்திலும், அவலப்பட்ட காலத்திலும், அதன் பின்னரான கொடூரமான அடக்குமுறை காலத்திலும் ஈழத் தமிழர்களுக்காகப் பேசச் செல்வதாக சிங்கள தேசம் சென்ற கிருஷ்ணா வரையிலான அத்தனை இந்திய அதிகார சக்திகளும் சிங்கள ஆட்சியாளர்களுடன் தமக்கான பேரம் பேசலிலும், ஒப்பந்தங்கள் செய்வதிலும் மட்டுமே சிரத்தை எடுத்த வரலாற்றை எந்த யதார்த்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?

ஈழத் தமிழர்களுக்கான நீதிப் போராட்டத்திற்காவது இந்தியா கருணை காட்டுமாக இருந்தால், ஐ.நா. மன்றத்தில் எத்தனை நாடுகள் சிறிலங்காவின் இன அழிப்பு யுத்தத்திற்கு ஆதரவு வழங்கப் போகின்றது? நாங்கள் வீழ்ந்தபோது, எங்களைத் தூக்கிவிடவில்லை. நாங்கள் மடிந்தபோது, எங்களைக் காப்பாற்ற வரவில்லை. நாங்கள் அவலப்பட்டபோது, எங்களுக்கு ஆறுதல் கூறவும் வரவில்லை. இனி எப்போது வரும் என்று இந்திய தாசர்கள் கற்பிதம் கூறுகின்றார்கள்?

நாங்கள் எழவேண்டும். எங்கள் சொந்தக் கரங்களை ஊன்றி நாங்கள் எழவேண்டும். எங்கள் பலத்தில் நாங்கள் நிமிர வேண்டும். சிங்கள தேசம் எப்படி இந்தியாவைக் கொண்டே ஈழத் தமிழர்களை அழித்து நிமிர்ந்ததோ, அது போலவே நாங்கள் எங்கள் எதிரியை வீழ்த்தும் வியூகத்தை மேற்கொள்ள வேண்டும். இனி வரும் போர்க் களத்தில் நண்பர்கள் எதிரிகளாக மாறலாம், எதிரிகள் நண்பர்களாகவும் மாறலாம். ஆனாலும், நாங்கள் யாருக்கும் தலைசாய்த்து நிற்கப் போவதில்லை. ஏனென்றால், நாங்கள் பிரபாகரன் காலத்துத் தமிழர்கள்!

http://yarlanpu.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.