Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன்

Featured Replies

இல்லை அகூதா அவர்களே! ராஜதந்திரம் என்ற பெயரில் நாம் நம்மை ஏமாற்றக் கூடாது.

அதுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவரும் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள அரச பயங்கரவாதிகளின் போலி நாடகத்துக்கு துணை போக முடியாது.

அடுத்தது மகிந்தவின் இரட்டைப் பேச்சு ராஜதந்திரம் (இரட்டை அணுகு முறை) என்று நீங்கள் குறிப்பிடுவதும் தவறு. குழப்பமான பத்திரிகைத் தலைப்புக்கள் - செய்திகளை வைத்து மகிந்த இரண்டுவிதமாக பேசுவதாக கருதினால் - நீங்கள் ஏமாந்தவர் ஆகிவிடுகிறீர்கள்.

மிக உன்னிப்பாக கவனியுங்கள் - மகிந்த மிகத் தெளிவாக ஒரே கருத்தையே சொல்லிவருகிறாx (சுய தணிக்கை). அவை தமிழின விரோத - தமிழின உரிமைகள் மறுப்பாகவே எப்போதும் உள்ளன. சிங்களப் பயங்கரவாத அரச உடகங்கள், சிங்கள பேரினவாத ஆங்கில ஊடகங்கள் வெளிநாடுகளை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமில்லாத தலைப்புக்களைப் போட்டு குழப்பமான முறையில் செய்திகளைப் பதிந்து விபரங்களை பூசி மெழுகி சாதுரியமாக தமிழர்களையும், அனைவரையும் ஏமாற்றி வருகின்றன. இதில் சிங்களப் பயங்கரவாத அரச உடகங்கள், சிங்கள பேரினவாத ஆங்கில ஊடகங்கள் பாரிய பணியை முன்னெடுக்கின்றன. எம்மிடம் இந்தப் பலம் குறைவு (தமிழ்நெட் மட்டும் ஓரளவு செய்கிறது).

உதாரணமாக: அண்மையில் இந்திய அரச பயங்கரவாதிகளின் பிரதிநிதி கிருஷ்ணாவே 13+ க்கு மகிந்த உடன்பட்டாx எனக் கூறினாx (சுய தணிக்கை). சிங்களப் பயங்கரவாதி மகிந்தவோ, சிங்களப் பயங்கரவாத அரசோ ஒரு கருத்தும் சொல்லவில்லை. முன்பு மன்மோகன் சிங்கே இதை அறிவித்து - பாரிய தமிழனப் படுகொலைகளை செய்த பின்னர் - நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள், என்ன செய்வது என வைக்கோவிடம் அழுது புலம்பினாx (சுய தணிக்கை). மகிந்த அப்போதும் ஒரு கருத்தையும் பகிரங்கமாகக் கூறவில்லை!

வெளியுலகை ஏமாற்றுவதற்கு தற்போது சிங்கள அரச பயங்கரவாதிகள் தற்போதைய பிரதமர், வாசுதேவ, ராஜித செனாரத்னே, பீரிஸ், ரணில், கருணா, டக்லஸ், வித்தியாதரன், சுமந்திரன், ஸ்ரீரங்கா, கேகெலிய ரம்புக்வெல, (முன்னர் கதிர்காமர், கூல் குழுவினர், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச)

போன்றவர்களைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.

மறுபக்கத்தில் மிகக் கடுமையான தமிழின விரோத கருத்துக்களை, சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகளை தமிழினக் கொலைசெய்யும் மனோநிலையில் வைத்திருக்கும் கருத்துக்களை வெளியிட விமல் வீரவன்ச, பாட்லி சம்பிக்க ரணவாக்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, ஜே.வி.பி. இன் சில உறுப்பினர்கள், குணதாச, கேகெலிய ரம்புக்வெல போன்றவர்களைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.

சம்பந்தன், சுமந்திரன் போல இல்லாமல் மகிந்தவோ, நிமல் ஸ்ரீபாலவோ, மகிந்த சமரசிங்கவோ, மைத்திரிபாலவோ மிகப் பொறுப்பான முறையிலே நடந்து வருகின்றனர். இது ராஜதந்திரம். இது அவர்கள் (மற்றவர்களைப் பயன்படுத்தி) கைக்கொள்ளும் இரட்டை அணுகு முறை. அவர்களின் இரட்டை அணுகுமுறையில்லை (இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்).

எனவே நான் மிக மதிப்பு வைத்திருக்கும் அகூதா அவர்களே - சம்பந்தன், சுமந்திரனின் எதேச்சையான கூத்துக்களை ராஜதந்திரம் என்று சொல்லி நாமும் ஏமாந்து, தமிழரும் ஏமாந்து போக துணை செய்யக் கூடாது என நினைக்கிறேன்.

நன்றி ஆராவமுதன் உங்கள் கருத்துக்களுக்கு.

சுமந்திரனோ இல்லை சம்பந்தனோ இல்லை வேறு யாருமோ ஒன்றை தெளிவாக புரிந்துள்ளார்கள். தாங்கள் மக்களை ஏமாற்றினால் அதனால் மக்களின் அரசியல் விடிவில் பின்னடைவு நிச்சயமாக ஏற்படும், ஆனால் அதனால் மக்கள் போராட்டத்தை நிற்பாட்டமுடியாது. மக்களாலும் காலப்போக்கில் சிங்களத்தாலும் அவர்கள் எறியப்படுவார்கள்.

மறுபக்கத்தில் கூட்டமைப்பு ஒரு சனநாயக அமைப்பு. எனவே, அவர்கள் ஒரு குழுவாகாத்தான் முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது நியதி, அந்தவகையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.