Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு..

Featured Replies

படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு..

இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது.

தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன்

இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம் வரும் மாணவர்களை பல ஆண்டுகளாக இழுத்தடித்து படிப்பிக்கின்றன, ஆனால் இந்தப் படிப்பு மேற்கண்ட மாணவனுக்கு ஏதாவது தொழில் வாய்ப்பை தருமா என்று அவர்கள் சிந்திப்பதில்லை.

life-3.jpg

மேலும் மாணவர்கள் கூட பல்கலைக் கழகம் போகிறோம் படிக்கிறோம் என்று நாட்களை கடத்துகிறார்கள். இவர்கள் நாம் ஏன் இத்தனை வருடம் படிக்க வேண்டும், இந்தப் படிப்பை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிடுவது குறைவு என்று சுட்டிக்காட்டினார். எப்போதுமே கல்வி என்பது வேலைச் சந்தையை குறியாக வைத்து நகர வேண்டும், இல்லையேல் அதனால் என்ன பயன் என்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் கேள்விக்கணை தொடுத்தார்.

இரண்டு விரிவுரையாளரின் கருத்துக்கள்

மாணவர்கள் நீண்ட காலமாக படித்து, அரசுக்கு பெரும் கடனாளிகளாகி சுமக்க முடியாத சுமையுடன் வெளியே வருகிறார்கள். இவர்களுக்கு வேலையளிக்க நாடு தயாரில்லை என்றால் அது பாரதூரமான விடயம் என்று ஒல்போ பல்கலைக்கழக பேராசிரியர் பிளமிங் இப்சன் கூறினார்.

மேலும் முன்னைய காலங்களுடன் ஒப்பிட்டால் இப்போது பல்கலைக்கழகங்களில் படிப்போர் தொகை அளவுக்கு அதிகமாக பெருகியுள்ளது. இந்த ஆண்டும் பெருந்தொகை விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. ஆனால் இதற்கேற்ப தொழில் வாய்ப்பு பெருகவில்லை. காரணம் உலகப் பொருளாதாரத்தின் சுருக்கம், ஏற்றுமதிகளின் வீழ்ச்சி, பணச்சுழர்ச்சி பெருகாமை போன்ற காரணங்கள் தொழில்களின் உருவாக்கத்தை அதிகரிக்கவில்லை இதுவே இந்த அவல நிலைக்கு முக்கிய காரணமாகும். இதை மாற்றியமைக்க வேண்டியது மாணவரின் பொறுப்பல்ல பதவி ஆசையில் கதிரைக்கு வந்துள்ள அரசியல்வாதிகளின் கடமை என்று அவருடைய கருத்து கோடி காட்டியது.

படித்த அக்கடமிக் இளைஞரின் வேலையின்மைக்கு தொழில்களின் பெருக்கமும் கற்றோர் பெருக்கமும் சம விகிதத்தில் உயர்வடையாததே பிரதான காரணமென்று ஒல்போ பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும் கூறினார்.

கல்வி அமைச்சரின் புதிய திட்டம்

மாணவரிடையே கல்வித் தரத்தை உருவாக்குவதில் பெற்றோர், குடும்பத்தின் பங்களிப்பு மிகமிக முக்கியமென புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் சிறந்த சித்தி பெறுவதற்கு குடும்பப் பின்னணியே 60 – 75 வீதமான பங்களிப்பு செலுத்துகிறது. பாடசாலைகளும் ஆசிரியரும் வெறுமனே 20 – 30 வீதமான தாக்கத்தையே செலுத்துகிறார்கள். அதேவேளை சமுதாயமும் வெளியாரும் 05 – 10 வீத தாக்கத்தை செலுத்துகின்றனர் என்று மேற்கண்ட ஆய்வு கூறுகிறது.

life-2.jpg

பெற்றோரில் அறிவு கூடிய பெற்றோர் தராதரம் குன்றிய பெற்றோர் என்ற பாகுபாடு மாணவரின் தராதரத்தை பெருமளவு தீர்மானிக்கிறது. இந்த அவலமான இடைவெளியை நீக்குவதற்கான புதிய ஏற்பாடுகள் இன்று 120 பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படுத்தப்படுகிறது. மொத்தம் 7000 சிறு பிள்ளைகள் சமமான அறிவுடையோராக உருவாவதற்கான ஏற்பாடுகள் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன. பிள்ளைகள் பராமரிப்பாளர், பெற்றோர் இணைந்த புதிய வேலைத்திட்டமாக இது அமைக்கப்படுகிறது. வரும் 2013 ம் ஆண்டுவரை நடைபெறவுள்ள இந்த வேலைத்திட்டத்தை ஓகூஸ் பல்கலைக்கழகம் பொறுப்பெடுத்துள்ளது. ஆக பல்கலைக்கழகங்களை பாலர் பராமரிப்பு நிலையங்களுக்கு இறக்கி, தொழில் அமைச்சுடன் இணைத்து விரிவான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்ற புள்ளிக்கு இளைஞர் வேலையின்மை கல்வியியலாளரையும் அரசியல்வாதிகளையும் நகர்த்தியுள்ளது.

தொகுப்பு

பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்திலிருந்தே டேனிஸ் பிள்ளைகளின் வாழ்வியல் தராதரங்கள் தீர்மானிக்கப்பட்டு, அது பல்கலைக்கழகம் வரை தொடர்கதையாகி நெற்றோ மாக்கற்றில் சாமான் அடுக்குவதுவரை நீடித்து நிற்கிறது. தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டது இனி சாணென்ன முழமென்ன என்று தொழில் அமைச்சரும் பல்கலைக் கழகங்களும் அலறுகின்றன.

வாழை நடுவதானால் ஆழ நடவேண்டுமென்பதை வேரில்லாத வாழைக்குட்டிகளை பார்த்த பின்னரே கண்டறிந்து இப்போது கிடங்கு கிண்டுகிறார் கல்வி அமைச்சர். வருமுன் காக்கும் திட்டமும் அடுத்த பத்தாண்டுகளுக்கு தம்மை தயார்படுத்தாத அன்றாடங்காய்ச்சி அரசியல் கொள்கைகளும் இந்த அவலத்தை பிறப்பித்துள்ளன. இதை வெகு காலதாமதமாக டேனிஸ் அரசியல்வாதிகள் கண்டறிந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

Edited by akootha

  • தொடங்கியவர்

மேலே இணைக்கப்பட்ட செய்தியானது டென்மார்க்கை சேர்ந்ததாயினும் இதில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் எல்லா மேலுலக நாடுகளுக்கும் பொதுவானவை.

பிள்ளைகளை எதில் படிக்கவைக்கவேண்டும் அதாவது வேலைகளை பெறக்கூடிய துறையில் கல்வி கற்க ஊக்குவிக்கவேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாதவகையில் முக்கியமாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.