Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 05 ஆம் நாள் உலகம் அதிரப் போர்ப்பறை ஒலிப்போம், ஒன்றாக அணிதிரண்டு வாருங்கள் ஜெனிவா முருகதாசன் திடலுக்கு!

Featured Replies

பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது.

ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் எந்தவித நகர்வுகளுக்கும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை.

இன்னொன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பேரினவாதிகளது அரச எதிர்ப்புப் போராட்டத்தினுள் தமிழ் மக்களை உள்ளிளுக்கும் தந்திரத்திற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

கடந்த வருட இறுதியில் சிறிலங்கா அரசுமீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போர்க் குற்றச்சாட்டு முன்மொழிவுகளை முறியடிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுக்குப் பேருதவி செய்தது. இடையில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்திருந்த கூட்டமைப்புடன் மகிந்த மேற்கொண்ட சமரச உடன்பாடு காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தர் பல்டி அடித்து, ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மேற்குலகின் நகர்வைத் தகர்த்தது. இதில் வேறு பல நாடுகளது தலையீடுகள் இருந்தாலும் நமது கையைக் கொண்டே நமது கண்ணைக் குத்தியது அதிக வலியையும், அதிக இழப்பையும் தமிழீழ மக்களுக்கு ஏற்படுத்தியது.

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கும் மகிந்த ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மலை போல நம்பியிருந்தார்கள். சிங்கள தேசத்தால் மௌனமாக்கப்பட்டிருந்த தமிழிழ மக்கள் மத்தியிலிருந்து எதிர்பாராமல் கிழம்பிய பூதம் ஒன்று மகிந்தவின் கனவை மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தப்புத் தாளத்தையும் தகர்த்துவிட்டது. சிவில் சமூகம் என்ற பெயரில், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்பட்ட கேள்விகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கடிவாளத்தைப் போட்டதனால், தமிழ்த் தலைமைகள் ஊடாகத் தமிழ் மக்களை ஏமாற்றும் சிங்களத்தின் ராஜதந்திரம் தோல்வியைத் தழுவியது.

சிறிலங்கா அரசின்மீது மேற்குலகம் முன்னைத்துள்ள இறுதிப் போர்க் களத்தில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் போர்க் குற்றம், மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள் குறித்த நேர்மையான விசாரணை, அதற்கான பொறுப்புக் கூறுதல் ஆகிய விடயங்களை சிங்கள ஆட்சியாளாகள் இதுவரை கவனத்தில் எடுக்காததுடன், அவற்றை நிராகரிப்பதிலேயே குறியாக இருந்து வருகின்றார்கள். இதனால், சிங்கள ஆட்சியாளர்கள்மீது போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டுடன் மேற்குலகால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மேற்கொள்ளப்படுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ள நிலையில், சிங்கள ஆட்சியாளர்கள் இன்னொரு காமெடியாக, இறுதி யுத்த காலப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாக்களில் பார்த்துப் புளித்ததொரு திரைக் கதைக்கு வடிவம் கொடுத்து, நல்லிணக்க ஆணைக்குழுவினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள சில சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்காகவென இராணுவ நீதிமன்றமொன்றை நியமித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த 15ஆம் திகதி அறிவித்துள்ளார். அதாவதாகப்பட்டது, வில்லனால் நடாத்தப்பட்ட கொலைகள், பாலியல் வல்லுறவுக்கள், கொள்ளைகள் சட்டத்தின் கவனத்திற்கு வரும்போது, வில்லனாகப்பட்டவன் தன்னுடைய கை அருவாக்களில் சிலவற்றை கூப்பிட்டு, 'நீ குற்றத்தை ஒப்புக்கொள்... உன்னை நான் கவனித்துக் கொள்கின்றேன். உன் வீட்டையும் பார்த்துக்கொள்கின்றேன்' என்பான். கை அருவாக்களும் தலையாட்டிக்கொண்டு, சட்டத்திடம் சரணடைவார்கள்.

கொலைக் களமே நீதிமன்றமாகவும், கொலைகாரர்களே நீதிவான்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பாத்திரமேற்று, தமிழீழ மக்களுக்கு நீதி வழங்குவார்கள் என்பதை நம்பும்படி கூறுவதையும் தமிழீழ மக்கள் மௌனமாக நிராகரித்துவிட்டார்கள். அவர்கள், தாங்கள் பேசவேண்டியதையும், கூறவேண்டியதையும் அதற்குரிய இடங்களில், அதற்குரியவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டார்கள்.

தமிழீழ மக்களது இந்த மௌத்தின் கனம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஊட்டிய காரணத்தால், அவர்களைத் தேசிய போராட்டமொன்றிற்குள் வலிந்திழுக்கும் முயற்சியாக திடீர் எரிபொருள் விலையுயர்வு என்ற அஸ்திரத்தை சிங்களப் பேரினவாதம் கையில் எடுத்தது. சிங்களப் பேரினவாதம் எதிர்பார்த்தபடி சிங்களப் பெரும்பான்மை சமூகம் பொங்கி எழுந்தது. ஆனாலும், தமிழ் மக்கள் அதன் பார்வையாளர்களாக இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள்.

'விலைவாசி உயர்வால் நீங்கள் பாதிக்கப்படவில்லையா? உங்கள் வயிற்றில் அடிக்கும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடவில்லையா?' என்ற பாசக் குரல்கள் தெற்கிலிருந்து தமிழீழம் நோக்கி எழுப்பப்படுகின்றது. இதைவிடக் கொடூரமான பொருளாதாரத் தடைகளையும், மருத்துவத் தடைகளையும், தமிழின அழிப்புப் போரினையும் கடந்த வந்த தமிழ் மக்களை இந்த எரி பொருள் விலையுயர்வா அசைத்துவிடப் போகின்றது? தமிழினத்தின் உணர்வுகளுக்கும், உயிர்களுக்கும், அவலங்களுக்கும், மரணங்களுக்கும் குரல் எழுப்பாத சிங்களப் பெரும்பான்மையினம், எரி பொருளுக்கான ஒத்த குரலுக்குள் தமிழ் மக்களை உள்ளிழுத்துச் சாய்க்கும் தந்திரத்திலும் தோல்வியைக் கண்டுள்ளது.

தமிழீழ மக்களது உன்னதமான இந்தத் தன்மான உணர்வைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உறுதியோடு தமிழீழம் நோக்கி மௌனமாக நகர்கின்றார்கள். அதனைப் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் கனவல்ல, அது நிதர்சனம்! அது மாவீரர்களது இலட்சியம்! அந்த மணிணன் பெருந் தாகம்! அந்த மக்களின் பெரு வேள்வி! அதனை மலினப்படுத்த முயற்சிப்போர் மன்னிக்கப்பட மாட்டார்கள்! எதிர்வரும் மார்ச் 05 ஆம் நாள் உலகம் அதிரப் போர்ப்பறை ஒலிப்போம், ஒன்றாக அணிதிரண்டு வாருங்கள் ஜெனிவா முருகதாசன் திடலுக்கு!

- சிவகுரு பாலச்சந்திரன்

மக்கள் பிரதிநிதி - பாரிஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.