Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஜெனீவாத் தீர்மானம்: “பாதுகாப்பு சபையை சென்றடையப் போவதில்லை’

Featured Replies

“ஜெனீவாத் தீர்மானம் செயலிழந்து போவதை சீனா உறுதிப்படுத்தும்’ “பாதுகாப்பு சபையை சென்றடையப் போவதில்லை’

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் இந்தியா பக்கம் சார்ந்து வாக்களித்ததால் சீனாவின் பக்கம் கொழும்பு நெருங்கிச் செல்லக்கூடுமென இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் த வீக் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. குழம்பிய குட்டை என்ற தலைப்பில் த வீக் சஞ்சிகையில் கல்லோல் பட்டாச்சேர்ஜி கடந்த சனிக்கிழமை இது தொடர்பாக எழுதியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கடந்த இரு வாரங்களாக பிரதமர் மன்மோகன் சிங்கினதும்இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் அலுவலகங்கள் ஒன்றுடன் ஒன்று அதிகளவு தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தன. புதுடில்லிக்கு தனது நெருங்கிய உதவியாளரான பந்துல ஜயசேகரவை ராஜபக்ஷ அனுப்பியிருந்தார். அங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் பந்துல ஜயசேகர கலந்துரையாடல்களை மேற்கொண்டார். 2009 யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது இலக்கு வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க உள்ளமை குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தமை இலங்கை தரப்பை கடுமையாகத் தாக்கியுள்ளது.

“சிவ்சங்கர் மேனன், நிருபமா ராவ் போன்ற இந்திய இராஜதந்திரிகள் இலங்கையிலுள்ள தமது அந்தஸ்திலுள்ள இராஜதந்திரிகளுடன் இந்திய இலங்கை உறவுகளை மேம்படுத்த பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தனர். ஆனால், இந்தக் கடுமையான முன் நகர்வினால் அந்தப் பணி செயலிழந்து விட்டது என்று இலங்கை இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார். தம்மை அடையாளங் காட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பெய்ஜிங் நெருக்கமாக கொழும்பு செல்வதற்கு இந்தியா நிர்ப்பந்திக்கின்றது என்று இலங்கை இராஜதந்திரிகள் கருதுகின்றனர். புவியியல் ரீதியில் நாங்கள் இந்தியாவுடன் பிணைப்புகளைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்தும் நட்புறவுடன் இருப்போம். ஆனால், தி.மு.க.வின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இலங்கையை இந்தியா கண்டனம் செய்துள்ளது. சீனா, மற்றும் ரஷ்யா பக்கம் இலங்கை பார்ப்பதற்கு இந்தியா நிர்ப்பந்தித்துளளது என்று இலங்கை இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் மீதான சர்வதேச விமர்சனத்திற்கு இந்தியா ஆதரவளித்திருப்பதானது சிங்கள அரசியலிலுள்ள கடும் போக்குடையவர்களுக்கு புதிய வலுவை வழங்குமென இலங்கையின் சிரேஷ்ட விமர்சகர்கள் த வீக்கிற்குக் கூறியுள்ளனர். கடந்த சில வருடங்களாக சிங்கள அரசியலிலுள்ள கடும் போக்காளர்கள் செயற்பாடுகளை இழந்திருந்தனர். ஒருபுறம் தமிழரின் பிரச்சினை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் ஆதரவை நிலைநிறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் ஒரு தடவை இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது. மறுபுறத்தில் ஜனதா விமுக்தி பெரமுனை போன்ற கடும் போக்கு சிங்கள கட்சிகளுக்கு புதிய வாழ்வைக் கொடுத்ததாக அமைகிறது என்று லங்கா தீப பத்திரிகையின் சிறிரணசிங்க கூறியுள்ளார். ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் உள்மட்ட அரசியல் அழுத்தங்களே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக செல்வதற்கான தீர்மானம் என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளுகிறோம். ஆனால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தனக்கு ஆசனத்தைப் பெறுவதற்கான ஆதரவை இந்தியா நாடிக்கொண்டிருக்கின்றது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டிய விடயமாக உள்ளது என்று ரணசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை இந்திய தரப்பு அமத்தி வாசிக்கின்றது. 2009 ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கைப் படை வீரர்களால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஊடக பிரசாரம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயமானது இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யுமாறு ஐ.நா. நிபுணர் குழு மேற்கொண்டிருந்த இலங்கைப் படையினருக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சவுத் புளக் (இந்திய வெளிவிவகார அமைச்சு) புறக்கணிக்கும் விடயத்தை

நெருக்கடியானதாக்கியுள்ளது என்று ஓய்வுபெற்ற இராஜதந்திரியான அருந்ததி கோஸ் கூறியுள்ளார்.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கையென அழைக்கப்பட்ட நடவடிக்கையின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் யுத்தத்தின் இறுதி ஐந்து மாதங்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு கூறியிருந்தது. இலங்கையில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டமாக இந்த விடயத்தை இலங்கை இராஜதந்திரிகள் நோக்குகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஐலின் டொனாகோ சமர்ப்பித்திருந்தார். இந்தத் தீர்மானமானது அமெரிக்காவிற்கு அதிகளவிற்கு பெறுபேறைக் கொண்டுவராதென த வீக்கிற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலகத்திலுள்ள நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். திபெத் மற்றும் மங்கோலியாவின் உட்புறத்தில் உள்ள தனது மாகாணங்களின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக தன்னை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கையாக இந்தத் தீர்மானத்தை சீனா கருதுகின்றது. அதனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமானது இறுதியில் பயனற்றதாகப் போய்விடுவதை சீனா உறுதிப்படுத்தும் இந்தத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையை சென்றடையாது என்று இந்திய தேசிய பாதுகாப்பு பேரவை செயலகத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். சீனாவின் ஒத்துழைப்பானத நன்றியுள்ள இலங்கையை பெய்ஜிங்கிற்கு நெருக்கமான விதத்தில் கொண்டு வந்து சேர்க்கும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, 21 ஆம் நூற்றாண்டில் இலங்யைனது இந்து சமுத்திரத்தில் மோதலில் சிக்குண்டதாகவும் இலங்கையானது அமெரிக்காவின் தொலைநோக்கிற்கு சேவையாற்றும் விதத்தில் விதத்தில் சீர்குலைக்கப்பட்டதாகவும் இருக்கும் சீனாவிற்கு முழுமையாக சேவையாற்ற இயலாத நிலைமையைக் கொண்டிருக்கும் என்று தன்னை இனங்காட்ட விரும்பாத நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்தினதும் அரசாங்கத்தின் முக்கிய தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்புடம் மனத உரிமை மீறல் சம்பவங்கள் தவறானவை அல்ல என்று இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்போர் கூறுகின்றனர். ஆனால், இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவானது த வீக்குடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்திய இலங்கை பிணைப்புக்களின் தற்போதைய நிலைவரத்திற்கான சில குற்றங்கள் சில கொழும்பு தரப்பிலிருப்பதாக இலங்கை வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுமென நாங்கள் இந்தியாவிற்குக் கூறியிருந்தோம். அந்த உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா உறுதிமொழியை அளித்திருந்தது. இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலைமையை மீள நிலைநிறுத்த உதவுவதாக இந்தியா உறுதியளித்திருந்தது. ஆனால், இந்தியாவுக்களித்த வாக்குறுதியைக் கௌரவிக்க ராஜபக்ஷ தவறிவிட்டார். இதனால், இந்தியாவின் உறுதிமொழிகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஏமாற்றமாகத் தென்பட்டன. இலங்கை இந்திய தரப்புகளுக்கிடையில் நம்பிக்கை இழப்புக்கான நிலைவரம் ஏற்பட்டது என்று ரணசிங்க கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தின் கனதியைக் குறைப்பதற்கு இந்தியா சமாளித்தக்கொண்டது. நடவடிக்கையெடுப்பதற்கு முன்னராக இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை ஐ.நா. முகரவமைப்புகள் பெற்றுக்கொள்ளவதை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற தீர்மானமானது இந்தியாவின் வலியுறுத்தலினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும் இந்திய இலங்கை உறவுகள் மீண்டும் ஒரு தடவை வாக்களிப்பானது கசப்பிற்குள்ளாக்கியுள்ளது. ஜே.வி.பி.யினால் கொழும்பில் இந்தியாவிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். எதிர்வரும் நாட்களில்சீனாவின் பக்கம் நெருங்கிச் செல்வதற்கு இலங்கை சில அடிகளை முன்னெடுத்து வைத்தால் அதற்கு இந்தியாவே பொறுப்பாக அமையும் என்று ரணசிங்க கூறியுள்ளார்.

இராஜதந்திர ரீதியில் கருணாநிதிக்கு இந்த விடயம் சரியானதாக அமையுமெனத் தோன்றுகிறது. ஆனால், இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை கடினமான சோதனைக்கு மன்மோகன் சிங் வைத்துவிட்டுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/local/11621-2012-03-25-18-39-40.html

இந்தியாவில் முதியோர் அரசியல் பாரம்பரியம் மாறும் வரை அரசியல் முதுகெலும்பு தென்படாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.