Jump to content

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.

Posted by சோபிதா on 12/07/2011 in செய்தி

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் இதயத்தை பிழியும் அதிர்ச்சியான ஆவணப் படம் என பிரித்தானிய இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களின் ஆதாரமாகவும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் குற்றங்களை இழைத்தோரைக் கொண்டுவருவதற்கான வலுவான விடயமாகவும் இது இருப்பதாக இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்த ஜோன் ஸ்னோ விபரித்திருக்கிறார் என்று பிரிட்டனின் த இன்டிபென்டன்ட் பத்திரிகையில் ஜோடிமக்லின் டயர் எழுதியுள்ளார்.

தமிழர்களின் துன்பங்கள் பற்றி நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்வியுடன் ஜோடி மக்லின் டயரின் கட்டுரை த இன்டிபென்டன்ற்றில் வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

2009 ஏப்ரலில் லண்டனில் பாரியளவில் இடம்பெற்ற தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களை நான் ஞாபகத்தில் கொள்கிறேன். இன படுகொலை இடம்பெறுவதாக பலர் கருத்துத் தெரிவித்தனர். நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான தமிழ் சமூகம் பாராளுமன்ற சதுக்கத்தில் ஒன்றுகூடியது. பல தடவைகளில் பாராளுமன்றத்தின் சபைகள் முற்றுகைக்குள்ளாகின. வாரக்கணக்காக தமிழ்ச் சமூகம் சதுக்கத்தில் தங்கியிருந்தது. தமது குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், அழிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக அவர்கள் அங்கு குழுமியிருந்தனர். சில இரவுகளில் நானும் சதுக்கத்தில் உறங்கியிருக்கிறேன். குளிர்காற்றும் பனித்துளி நிறைந்த புல்வெளியிலும் அவர்கள் தீர்க்கமான உறுதிப்பாட்டுடன் குழுமியிருந்ததை காண முடிந்தது.

உலகின் வல்லமைவாய்ந்த நாடுகள் பலவற்றின் தந்திரோபாயமான ஆதரவை இலங்கை அரசு பெற்றுள்ளது என்று ஜோன் ஸ்னோ கூறுகிறார். மோதல் சூனிய வலயம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது என்பதை தொலைக்காட்சி கமராக்களில் ஏற்றுக்கொள்வதற்கு ஐ.நா. அதிகாரிகள் இப்போது அதிகளவு விருப்பத்தைக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் சிறிய பகுதிகளுக்குள் நெரிசலாகக் காணப்பட்டனர். அவர்களை பாதுகாக்க முடியவில்லை.

இழப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இலங்கை இருந்ததாக ஆவணப்படத்தில் சாட்சியங்கள் பல கூறுகின்றன. மருத்துவ மனைகள் இலக்குவைக்கப்பட்டிருந்தன. காயமடைந்தோருக்கு உதவ முயற்சித்தோரும் இலக்காக்கப்பட்டனர். காஸாவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயத்தை ஒத்ததன்மை கொண்டதாக இது அமைந்திருந்தது.

இஸ்ரேலின் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் இலங்கைக்குக் கிடைத்திருந்ததாக ஆவணப் படம் குறிப்பிடுகிறது. பொதுமக்களின் துன்பங்களை வெளிப்படுத்திய இந்த ஆவணப்படத்தை ஜோன்ஸ்னோவும் சனல் 4 உம் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்திருந்தன. ஆனால், இவற்றை ஏன் பிரிட்டிஷ் பொதுமக்களுக்குக் காண்பிக்க வேண்டுமென டெய்லி டெலிகிராவ் பத்திரிகைக்கான நிகழ்ச்சியில் செரீனா டேவிஸ் கேட்கிறார். தமிழ் மக்களின் துன்பத்திற்கு நாங்கள் பொறுப்பைக் கொண்டிருக்கவில்லையென அவர் வாதிடுகிறார். அவர்கள் மற்றொரு நாட்டின் உறுப்பினர்கள் எனவும் உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ளவர்கள் என்றும் முன்னாள் காலனியாக இருந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாதென்றும் அவர் கூறுகிறார்.

ஆகவே, நாங்கள் ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு சில காரணங்களைக் கூறுகிறேன். முதலாவதாக 2009 இல் த டைம்ஸ் பத்திரிகையில் ஜெரமி பேஜ் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு வர்த்தக விற்பனைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்க பிஸ்டல்கள் உட்பட 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸுக்கும் அதிகமான தொகை விற்பனைக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்ப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி மூன்று ஆண்டு காலப்பகுதியில் இந்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, கொலைக் களங்கள் ஆவணப்படத்தில், பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார். இந்த ஆயுதங்கள் தமிழ்ப் பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் வேறுபாட்டை கண்டு கொண்டிருப்பது கடினமானதாகும். சகலரையும் கொன்று முடித்துவிடு என்று அந்த ஜோன் ஸ்னோவால் காண்பிக்கப்பட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மோதலிலிருந்து தப்பி வெளியேறும் தமிழர்கள் நடத்தப்படும் விடயத்தை நாம் பரிசீலனைக்குக் கொள்ள முடியும். எமது வரிப்பணத்தினால் தயாரிக்கப்பட்ட சன்னங்களிலிருந்தும் தப்பி அவர்கள் பிரிட்டனுக்கு புகலிடம் நாடி வருகின்றனர்.

சனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்ட அதே தினத்தில் 40 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட இருந்தனர். இலங்கை தொடர்பான உள்நாட்டு அமைச்சின் சொந்த அறிக்கையின் பிரகாரமே திருப்பி அனுப்பப்படுவதாக செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த போதிலும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், காணாமல் போதல் நீதி விசாரணைக்குப் புறம்பான கொலைகள், கைதுகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் ஆகியவையும் இந்த அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்ற சதுக்கத்தில் முகாமிட்டிருந்த தமிழ் மக்களை நான் பேட்டி கண்டேன். 2009 ஏப்ரலில் நான் அவர்களைச் சந்தித்தேன். வானம் இருளாக இருந்தது. கடும் குளிரான காலநிலை காணப்பட்டது. எனது கமராவை இளைஞர் ஒருவர் உற்றுப்பார்த்தார். அதன் பின் அவர் “இது உங்களின் குடும்பங்களாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.eelampress.com/2011/07/29944/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டக்வேர்த் லூயிஸ் முறைமையில் மேற்கிந்தியத் தீவுகளை 5 விக்கெட்களால் வென்றது இலங்கை; மதுஷ்க, அசலன்க ODI வெற்றியை சுலபமாக்கினர் (நெவில் அன்தனி) கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (20) மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 5 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றிகொண்டது. அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 137 ஓட்டங்களும் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என  இலங்கை  முன்னிலை வகிக்கிறது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 38.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. ஷேர்ஃபேன் ரதபர்ட் 74 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் இருவரைவிட கியேசி கார்ட்டி 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பிற்பகல் 5.00 மணிக்கு தடைப்பட்ட ஆட்டம் 3 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் இரவு 8.25 மணிக்கு தொடர்ந்தபோது இலங்கைக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இல க்கு  37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 31.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கை துடுப்பெடுத்தாடியபோது முன்வரிசை வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (5), குசல் மெண்டிஸ் (13), சதீர சமரவிக்ரம (18) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (45 - 3 விக்.) அறிமுக வீரரரும் ஆரம்ப வீரருமான நிஷான் மதுஷ்கவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 109 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினர். நிஷான் மதுஷ்க 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 69 ஓட்டங்களையும் சரித் அசலன்க 71 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஜனித் லியனகே (18 ஆ.இ.), கமிந்து மெண்டிஸ் (30 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் குடாகேஷ் மோட்டி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க. https://www.virakesari.lk/article/196738
    • 190 போா்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன் ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது. போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இதற்கிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்தது. இது குறித்து ரண்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா்” என்று தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310917
    • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196760 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21 திகதி வரை ரவி செனவிரத்னவுக்கு 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களின் பெயர்கள் இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் இவ்விரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. https://www.virakesari.lk/article/196758
    • இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 ஆவது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்ன தான் செய்வது என்று அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை. பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம் என வட மாகாணசபை உறுப்பினரும், வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது.  இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அபிவிருத்தியோடு எமது தீர்வை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு. ஆனால் எமது நிலம் இருந்தால் மாத்திரமே அந்த அபிவிருத்தியை செய்ய முடியும். எமது நிலம் எமது உரிமை. அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். எமது மதத்தை அழித்து பௌத்த மதத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பொலிஸ், இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல். பௌத்த மதத்திற்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமது விசுவாத்தினை காட்டும் நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாறாக நாங்கள் களத்திலே நிற்கின்றோம். எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில்  மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராட வேண்டிய காலம் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தீர்வு தான் கிடைக்கவில்லை. மாற்றம் என்று கூறப்படும் இந்த ஆட்சி ஒரு வருடத்தை கடந்தபின் தான் தெரியும் இதன் போக்கு எப்படி இருக்கிறது என்று. எனவே வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சர்வதேசம் பாராமுகமாக இருக்க கூடாது. இந்தியா பச்சோந்தி தனமாக இருக்க கூடாது. 13 வது திருத்தத்தை எமது தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எமது அரசியல் தலைவர்கள் வேறு என்னதான் செய்வது என்று அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதில் காணி அதிகாரம் இல்லை பொலிஸ் அதிகாரமும் இல்லை பிறகு எதற்காக எங்களுக்கு அந்த அதிகாரம். எமது நிலத்தை முழுவதுமாக பறித்து விட்டால் நாங்கள் என்ன எங்கயும் ஓடுவதா?. இலங்கை தமிழன் ஆண்ட பூமி எனவே எமக்கான தீர்வை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தரத்தான் வேண்டும் தட்டிக் கழிக்க முடியாது. எனவே இதற்கு எதிராக எமது குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்றார். https://thinakkural.lk/article/310928
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.