Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. 80, 90களில் நடந்த தென் தமிழீழக் கரூரங்கள் தொடர்பான போர்க்கால இலக்கியப் பாடல்கள் பாடல்: காற்றில் ஏறிவரும் இறுவட்டு: வெல்லும் வரை செல்வோம் இசை: இசைப்பிரியன் பாடலாசிரியர்: உதயலட்சுமி பாடியவர்: மேரி வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள் பாடல் வரிகள்: காற்றில் ஏறிவரும் எங்கள் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். கண்ணீர்க் கடலோடும் வாழ்க்கைப் படகைப் பாருங்கள். படுவான்கரையின் சிவப்பு நிறம் - அதுவே எங்கள் வாழ்வின் நிறம். எழுவான் கதிர்கள் மேனி தொடும் - இனியெம் வாழ்வு மேலுயரும். வாவியில் பாடும் மீன்களுக்கு எங்கள் மேனியை தீனாய்ப் போட்டனர்! கூப்பிய கைகளை வெட்டி எறிந்து பிள்ளைகள் உயிரைக் குடித்தனர்! மகிழடித்தீவின் மரங்களைக் கேளும் - உயிர் விலை என்ன, கூறிவிடும்! கொக்கட்டிச்சோலை மணல் வெளி எங்கும் குருதியே கோலம் கீறியது. இருவிழி நிறையக் கனவுகளோடு எழுவாய் எழுவாயம்மா நீ! பூபதித் தாயின் பூமியில் பிறந்தாய், புயல்களின் வடிவம் அன்றோ நீ! மலைகளைத் தாவும் காற்றின் வேகம் மனங்களுக்குண்டு கொண்டு எழுவாய் நீ! எவரோ எழுதும் சிலை நீ இல்லை, அலைகடல் போல எழுவாய் நீ! கோவில்களோடு தெய்வங்கள் சாக வைத்த நெருப்பு எரியுது! தேவியர் பாட்டில் தென்றல்கள் மாறி தேய்பிறை வானம் அழுகுது! வயல்வெளி எங்கும் பயிர்களின் நாற்று வன்முறைத் தீயில் அவிகிறது! அதிரடிக்காரன் எழுதிய தீர்ப்பே எங்களின் விதியாய் மாறியது! --> எழுத்துணரியாக்கம்: இனந்தெரியா யாழ் கள உறுப்பினர் ++++++++++++++++++++++++++++ பாடல்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து இறுவட்டு: ?? இசை: ?? பாடலாசிரியர்: அறியில்லை பாடியவர்: ?? வெளியீடு: ?? பாடல் வரிகள்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து போகுதே! தென் தமிழ் மக்கள் தினமும் நூறு சாகிறார்! தீயில் அவர் வேகுகிறார், பசியில் அவர் மாள்கிறார்! தீராத கொடுமைகளை எதிரி அங்கு இழைக்கிறான்! மீன்பாடும் மட்டு. நகர், அம்பாறை, திருமலையும் மிருகவெறிச் சிங்களவர் குடிமனையாய் மாறுதே! இனமழிக்கும் ராணுவத்தின் வதைமுகாம்கள் வளருதே! இன்னல் செய்யும் துரோகக் கும்பல் பெருகி அங்கு வளருதே! நெய்தல் நிலம், வயல்வெளிகள், நதியோரம், காட்டுநிலம் ஐயகோ எம் தமிழர் ஆண்ட நிலம் யாவுமே! அன்னியனின் குடிமனைகள் அங்கு நிதம் வளருதே! இழந்த மண்ணை மீட்பதற்கும் இன்னலுறும் எம்மினத்தைக் காப்பதற்கும் ஈழமே எழுச்சிகொள்! எழுந்திடு! எழுந்திடு! இனமழிப்பு நடக்குதே வேங்கையாய் விரைந்திடு! --> எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் *****
  3. என்னது இருந்தாற்போல் இவருக்கு இவ்வளவு கரிசனை? வெளிநாட்டு மத்யஸ்த்தோடு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இவர் பங்குபற்றியிருந்தார், நீதியமைச்சராக இருந்திருக்கிறார், அழிப்பு வேலை செய்த அரசாங்க கட்சிகளில் முக்கிய அமைச்சராக இருந்திருக்கிறார், கல்விமான் வேறு. அப்போதெல்லாம் வராத கரிசனை, இப்போ எப்படி வந்தது? சரி, இதையெல்லாம் எழுதி எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓய்வு பெற்றபின் வயதான காலத்தில் துடிப்போடு இருக்க இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்களோ?
  4. சமராய்வுதலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித... தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்- பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு! இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனைக் கொன்று விடக் கூறிய தலைவர்கள்! சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, 'முடித்துக் கொள்ளுங்கள்' என சிவசங்கர் மேனனும் எங்களுக்கு கட்டளை வழங்கினார். பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு இறுதிப் போரின் போது புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில், அவரை மீட்க பல்வேறு தரப்பினரால் முயற்சிகள் முன்னெ டுக்கப்பட்ட போதும், அவரை மீட்க முடியாது என்ற நிலைமை உருவாகியிருந்த போது, சம்பந்தன்; கருணாநிதி, ஜெயலலிதா உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர் என்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்பக்கத் தொடர்ச்சி... 'நியூஸ் சென்ரர்' என்ற யூடியுப் செய்தி பிரி வுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இந்த நேர்காணலில் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இறுதிக் கட்ட போர் காலத்தில் இந்தியா வில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள், பேர்டினன்ட் மற்றும் இன் றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் அதில் உள்ளடங்குவர். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில், காங்கி ரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, சி வசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார். அதற்கு முன் சம்பந்தன் மற்றும் இலங்கை யின் தமிழ்தலைவர்கள், கருணாநிதி, ஜெயல லிதா, சர்வதேச, உள்ளூர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர். அச்சந்தர்ப் பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைத்ததால் அவரை மீட்பதா என கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், கனடா உட்பட குமரன் பத்ம நாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. அதனுடாக விடுத லைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்க மாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பார்க்கப் பட்டது. அதற்கு அமெரிக்காவின் மெரைன் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற் றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், நான் தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி. ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும் என்று சொல்லியுள்ளார். இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேன னுடனான இறுதிச் சந்திப்பில் தெரிவிக்கப் பட்டதாகும். பலத்துடன் இருக்கும் போது கொண்டாடு வார்கள். ஆனால் பலம் குறைந்து விட்டால் அனைவரும் சேர்ந்து மிதிப்பார்கள். இது உலக நியதி. இன்றிருக்கும் தலைவர்களுக் கும் இவை படிப்பினையாகும். ஆனால், இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற் புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது. அதாவது யேமனிலுள்ள அமெரிக்க தளத் திற்கு அல்-கொய்தா தாக்குதல் நடத்தியது. அதன் தொழில்நுட்பத்திற்கு விடுதலைப் புலிகளே உதவியது நிரூபணமானதால் அமெ ரிக்கா எங்கள் பக்கம் சார்ந்தது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கீரன் னாகொட அவுஸ்திரேலியா கடல் பரப்புக்கு சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை முறியடிக்க அமெரிக்காவும் உதவியது. அவ் வாறு செய்திருக்காவிட்டால் இன்று யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
  5. கொஞ்ச நாளாக இவரின் தியாக, வீர பேச்சுக்களை காணோமே என்று ஏங்கினேன், இன்றைக்கு விடை கிடைத்து விட்டது. இவர்களை தன்னோடு சேர்க்கவும் மாட்டார், தன்னை எதிர்க்கவும் விட மாட்டார் அனுரா. சும்மா எச்சரிப்பு மட்டுந்தான்!
  6. Today
  7. "சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 73 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 9 அபயனின் பட்டாபிஷேகம் பற்றியது. பண்டுவசுதேவனுக்கு [அல்லது பண்டுவாசுதேவவுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மூத்தவன் அபயன் அல்லது அபய [Abhaya], இளையவள் உம்மத சித்தா அல்லது உன்மாதசித்திரா [Unmada Chitra]. இவள் மிகவும் அழகானவள். பண்டுவாசுதேவ முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு, இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.[மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.] இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். உம்மத சித்தாவின் மகன் தனது அனைத்து மாமாக்களையும் கொல்வான் என்று ஒரு ஜோதிடர் கணித்தார்; இதனால், அவளுக்கு ஒரு மகன் பிறந்தால், மாமாக்கள் எல்லோரும் அவனைக் கொல்ல முடிவு செய்தனர். இந்த வேளையில், சக்க இளவரசர் பாண்டுவின் மகன்களும் இலங்கைக்கு வந்தனர். அதாவது, கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனின், இளைய சகோதரன், அமிதோதனாவின் பேரன்களும், பேத்தியைத் தொடர்ந்து இலங்கை வந்தனர்? நம்பினால் நம்புங்கள், மகாவம்சத்தின் கதை இது?? எனவே மீண்டும் கௌதம புத்தருடன் மற்றொரு உயிரியல் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது! ராமர், அனுராதா, விஜிதா, திகாயு, ரோஹண [Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana] ஆகியோர், இலங்கை வந்த சக்க பாண்டுவின் மகன்கள் ஆவார்கள். அங்கு அவர்களின் சகோதரியே ராணியாவார். நாளடைவில், இளவரசி உம்மத சித்தா திகாயுவின் மகனுடன் [Dighagamini / தீககாமினி] உறவு வைத்து கர்ப்பமானார். ஒரு மகன் பிறந்தார், ஆனால் இந்த பையனுக்காக மற்றொரு பெண்ணை மாற்றுவதன் மூலம், பையன் காப்பாற்றப்பட்டு, இரகசியமாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு பண்டு காபய [பண்டுகாபயன் / Pandukabhaya] என்று பெயரிடப்பட்டது. பண்டு காபய பிறந்து அபயன் பட்டாபிஷேகம் செய்யப்பட்டபோது, பண்டுவாசுதேவன் இறந்தார். "பண்டு கபாயன்" என்ற பெயரில், பண்டு என்றால் "பழைய", கபாயன் என்றால் "சிவன்" என்றும் இது இந்துக்களின் பழ‌ம்பெரும் தெய்வ‌மான "முந்துசிவ‌ன்" என்ற‌ பெய‌ரை ஒத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதே 'பண்டு' என்ற சொல்லே பாண்டியன் (பண்டு+இயன்) என்ற பெயரின் வேர்ச்சொல்லுமாகும் என்பதையும் அறிக. மேலும் தீபவம்சத்தில், பண்டுகாபயாவை பகுண்டக சோரா [Pakundaka chora] என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது திருடன் என்று பொருள்படுகிறது. [In Pali, the word "chora" (छोर) means "thief" or "robber"] எனவே விஜயன் குலத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றாகிறது. அத்தியாயம் 10: பண்டுகாபயனின் குழந்தைப் பருவம் முதல் பட்டாபிஷேகம் வரையிலான வாழ்க்கையைப் பற்றி, நம்பமுடியாத திருப்பங்களைக் கொண்ட கதைகள் போன்று, பல விசித்திரக் கதைகள் இங்கு உள்ளன. பண்டுகாபயன் முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, அவன் நூற்று ஏழு ஆண்டுகள், திடகாத்திரமாக வாழ்ந்திருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை மன்னனாகவே ஆட்சி செய்துள்ளார். நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆயுள் கொண்ட மன்னன். நாம் முன்பு கூறியவாறு, தீபாவம்சம் அவனை பகுண்ட மற்றும் பகுண்டகன் [Pakunda and Pakundaka] என்றும் குறிப்பிடுவதுடன், தீபாவம்சத்தின் 11 - 1 & 2 இல்: 1. அபயனின் இருபதாம் ஆண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையில், பகுண்டனும் தனது இருபதாம் ஆண்டு அகவை நிறைவடைந்தார். பகுண்டகன் பிறந்து முப்பத்தேழாவது ஆண்டு நிறைவடைந்தபோது அவன் மன்னனாக முடிசூட்டப்பட்டார். 2. அபயனின் இருபதாம் ஆண்டுக்குப் ஆட்சிக்குப் பிறகு பகுண்டகன் ஒரு கொள்ளையனாக வாழ்ந்தான்; பதினேழு ஆண்டு கொள்ளை வாழ்வின் பின், அவன் தன் தாய் மாமன்கள் ஏழு பேரையும் கொன்று, அனுராதபுர நகரில் அரசனாக முடிசூடிக் கொண்டான் என்று கூறுகிறது. என்றாலும், அவன் பதினேழு ஆண்டுகள் ஒரு கொள்ளையனாக வாழ்ந்ததாக தீபவம்சம் கூறும் அதேவேளை, மகாவம்சம் இதைப் பற்றி அமைதியாக உள்ளது. பண்டு கபாயன் பதினாறு வயதைக் கடந்தபோது தனது மனைவி சுவண்ணபாலியை [Suvannapali] மணந்தார். மூத்தசிவா [மூத்தசிவன் / Mutasiva] பண்டுகபயனின் மகன், அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதுவும் ஒரு நீண்ட ஆட்சி. ஆனால் மகாவம்சம் அவரைப் பற்றியோ அல்லது அவரது நீண்ட ஆட்சியைப் பற்றியோ அதிகம் எதுவும் கூறவில்லை; அவரது ஆட்சி சுமார் ஆறு வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் ? ஒருவேளை, அவரது பெயர் தமிழில் ஒலிப்பதால் இப்படி இருக்குமா? அவரது தாயார் சுவண்ணபாலி ஆகும். சுவண்ணபாலி அல்லது சுவர்ணபாலி, சுவர்ணலதா போன்ற பெயர்களைக் கொண்ட தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர் என்பதையும் நோக்குக. Part: 73 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 9: This is about the consecrating of Abhaya. Panduvasudeva had ten sons, and one daughter. Abhaya is the eldest, and youngest is the daughter Citta, very beautiful one. Panduvasudeva ruled for thirty years. A soothsayer predicted that Citta’s son would kill his uncles; the uncles wanted to kill if a son is born to her. Sakka Pandu’s sons also came to Lanka. Another biological connection with Gautama Buddha is invented! Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana are the sons of Sakka Pandu who came to Lanka where their sister already came and became the queen. Princess Citta had an affair with the son of Dighayu and became pregnant. A son was born, but by interchanging with another girl for this boy, the boy was saved and was brought up clandestinely. An ancient tale is copied here. He was named Pandukabhya. Panduvasudeva died when Pandukabhya was born and Abhaya was consecrated. Another coincidence is invented. Chapter 10: There are many fairy tales like stories with many unbelievable twists and turns about Pandukabhaya’s life from childhood to the consecration. To quote from the page 52 of Reference 22: “It is interesting to note how the Chroniclers availed themselves of the Indian legend of Devagabbha, Nandagopa, Vasudeva, and Kamsa as contained in the Ghata Jataka“. Indian Puranic stories are liberally used to spin stories here. Pandukabhaya was crowned when he was thirty-seven years old, and he ruled for seventy years. He must have lived for one hundred and seven years, incredibly a long life. The Dipavamsa refers him as Pakunda and Pakundaka, refer 11 - 1 of the Dipavamsa. The Dipavamsa says that he lived as a robber for seventeen years. The Mahavamsa is selectively silent on this. Pandukabhaya took his wife, Suvannapali, when he has passed sixteen years of age. Mutasive was the son of Pandukabhaya, and he ruled for sixty years. It is also a long reign, but the Mahavamsa has nothing much to say about him or about his long reign; his rule was mentioned in passing in about six verses. Could the reason be that his name sounds Tamil? His mother was Suvannapali. There were Tamil ladies with names Suvannapali, Suvarnalatha etc. in Tamil Nadu. Mahanama, author of the Mahavamsa, must have decided to erase this Tamil identity of sixty years by not giving any importance to it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 74 தொடரும் / Will follow துளி/DROP: 1956 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 https://www.facebook.com/groups/978753388866632/posts/33009567578691797/?
  9. சிங்களத் தாயாரான திருமதி சீலாவதி அவர்களின் 5 பிள்ளைகளும் தவிபு அமைப்பில் போராளிகளாகயிருந்தனர். அவர்களில் 3 பேர் மாவீரர்களாயினர். கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரே மாவீரர்களாயினர். இவரின் ஏனைய இரு பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்திலிருந்து இயக்கமே விடுவித்தது, பெற்றாரிற்கு உதவிக்காக. எனினும் அவர் கிபிர் வான்குண்டுவீச்சில் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறந்து போனார். மற்றையவர் பேருக்குப் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் தமிழராவார்.
  10. நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்? அவ்வாறாயின் உங்களுக்கு உள்நாட்டு நிலவரம் தெளிவாக தெரியலாம். இணையத்தில் ஜேர்மனியின் பிரதான பிரச்சினையாக வயதான சனத்தொகை கூறப்படுகிறது, இது ஒரு பொதுவான வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரச்சினையாக இருக்கிறது, குடிவரவுகள் மூலம் பெரும்பாலும் இந்த பிரச்சினை மேற்கு நாடுகளில் கையாளப்படுகிறது. ஜேர்மனிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளூக்குள்ள பொதுவான பிரச்சினை இருப்பதாக கூறுகிறார்கள், உற்பத்தி பொருள்களின் உற்பத்தி விலை அதிகரிப்பு அதற்கு பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை பேணவேண்டிய நிலை காணப்படுகிறது. பூகோள அரசியல்; பிராந்திய பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகிறது, இந்த இரஸ்சிய உக்கிரேன் போரின் காலகட்டத்தில் உற்பத்தித்துறை தொடர்ச்சியாக பொருளாதார சுருக்க நிலையிலேயே தொடர்கிறது , ஆனால் சேவைத்துறை பொருளாதார சுருக்க நிலையில் இல்லை. அரசியல்வாதிகள் சில காரணங்களால் சில முடிவுகளை எடுப்பார்கள், இங்கு அவுஸ்ரேலியா சீன பொருளாதாரத்தில் தங்கியுள்ளது தற்போதுள்ள அரசு அதற்கு முன்னர் இருந்த அரசு சீனாவுடன் ஏற்படுத்திய நெருக்கடி நிலையின் தீவிரத்தினை ஓரளவு குறைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னர் இருந்த அரசு; மக்களையும் அதற்கேற்ப மக்களிடையே ஒரு சீன அச்ச நிலையினை தோற்றுவித்து சீன எதிர்ப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தது, தற்போது மக்களிடையே அவ்வாறான எதிர்ப்புணர்வு தென்படுவதில்லை என்பது போல உணருகிறேன். ஐரோப்ப்பாவில் தற்போது இரஸ்சியாவினை பார்த்து பயப்படுவதாக கூறும் நிலை அதிகரித்து காணப்படுகிறது, உக்கிரேன் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரஸ்சியா நேட்டோவிடம் தனது பாதுகாப்பு உத்தரவாதத்தினை இரந்து நின்றது, போர் ஆரம்பித்த பின்னர் இரஸ்சிய இராணுவம் உலகின் இரண்டாவது பெரிய இராணுவம் அல்ல உக்கிரேனில் இரண்டாவது பெரிய இராணுவம் என கேலியாக பேசிய நிலை, தற்போது இரஸ்சியா ஐரோப்பாவிற்கு ஆபத்து என கூறப்படுகிறது. நான் நினைக்கிறேன் அரசுகள் தமது ஆட்சியினை தக்கவைப்பதற்காக அச்சுறுத்தல் உளவியலை பயன்படுத்துகிறார்களோ? தற்போது பெரும்பாலான நாடுகளில் உள்ள பொதுவான பிரச்சினை எரிசக்க்தி, வழங்கல் பாதை தடை உள்நாட்டு உற்பத்தியில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. ஒரு நீண்ட உண்மையான சமாதானமே ஒரு சுமூகமான அபிவிருத்தியினை உலகெங்கும் உருவாக்கும், அதற்கு இதய சுத்தியுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும், போரினை தொடர்வோம், நாட்டினை பாதுகாப்போம் என கூறி போருக்கான செலவீடுகளை அதிகரிப்பதால் உண்மையான பலத்தின் மூலமான சமாதானம் என்பதெல்லாம் எந்தளவிற்கு தற்கால சூழலில் பொருந்து என தெரியவில்லை. ஜேர்மனி பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது, ஐரோப்பா அமெரிக்கா அற்ற ஒரு பாதுகாப்பு நோக்கி நகரவேண்டிய தேவை உருவாகிக்கொண்டுள்ளது, தனிய பாதுகாப்பு செலவீனங்களை செய்வது மட்டும் ஒரு உண்மையான போரற்ற சமாதானம் நிலவாது, ஐரோப்பியர்கள் கடந்த கால வரலாற்று மனநிலையில் வாழ்கிறார்கள், ஜேர்மனியினை போர்களில் இரஸ்சியா மட்டும் தோற்கடிக்கவில்லை, ஆனால் பின்னர் அவர்களுடன் சமாதானமாக முடிகின்ற நிலையினை ஏற்படுத்த கூடிய நல்லிணக்கம் ஏற்பட்டது போல; ஒட்டு மொத்த ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதி உருவாக ஐரோப்பிய ஒன்றியம் தனது செயற்பாட்டினை சுமூகமான செயற்பாடாக மாற்ற வேண்டும்.
  11. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? WI ?? BAN ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI BAN NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் X1 எதிர் X4 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல Y1 எதிர் Y3 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y2 எதிர் Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் X3 எதிர் X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) Y1 எதிர் Y2 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, X2 எதிர் X4 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் X1 எதிர் X3 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 ?? X2 ?? X3 ?? X4 ?? 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? Y2 ?? Y3 ?? Y4 ?? 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  12. நடைமுறைக்கு செல்ல முயற்சிக்கும் பூகோள அரசியல், அரசியல் ஆய்வாளர், சட்டதரணி சி.அ.யோதிலிங்கம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒரு குழுவாக தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருக்கின்றது. இக்குழுவில் தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த கட்சிகளில் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மட்டும் பங்குபற்றியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கமும், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராஜாவும் சுகவீனம் காரணமாக பங்கு பற்றவில்லை. இந்தப் பயணத்திற்கான ஒழுங்குகளை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஊடாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனே மேற்கொண்டிருந்தார.; தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் 1970களில் ஆரம்பத்தில் குழுவாக பயணம் செய்து தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்த பின்னர் குழுவாக சந்தித்தமை இந்தத் தடவையே ஆகும். தந்தை செல்வா தலைமையிலான குழுவின் பயணத்திற்கும், கஜேந்திரகுமார் தலைமையிலான குழுவின் பயணத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நாட்டின் கட்சி அரசியலுக்குள் மாட்டுப்படாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்துள்ளனர். அனைவரிiயேயும் பொதுவான கோரிக்கைகளையே முன்வைத்தனர். பிரதான கோரிக்கை சமஸ்டி ஆட்சி முறைக்கு ஆட்சி அளிக்க வேண்டும் என்பதேயாகும.; இந்தத் தடைவ மேலதிகமாக தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி நாம் தமிழர் இயக்கம், திராவிடர் கழகம், பாரதீயஜனதாக்கட்சி என்பன சந்தித்த கட்சிகளில் முக்கியமானவையாகும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோவும், தமிழீழ ஆதரவாளர் நெடுமாறனும் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இம்மறுப்புக்கு புலம்பெயர் தமிழர் சிலரின் தூண்டுதல்கள் காரணமாக இருக்கலாம். சமஸ்டியை முன்வைப்பதனால் தமிழீழக் கோரிக்கை பலவீனப்பட்டுவிடும் என்ற கருத்து புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருக்கின்றது. வலைத்தளங்களிலும் இது பற்றிய கருத்துக்கள் வந்திருக்கின்றன. இச்சந்திப்புக்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்தமையே முக்கியமானதாகும.; அண்மைக்காலமாக ஈழத் தமிழர் விவகாரத்திலிருந்து சற்று விலகிய போக்கே ஸ்டாலினிடம் காணப்பட்டது. நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஸ்டாலின் எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை. தாயகத்தில் ஒரு தேக்க நிலை இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். தி.மு.க மட்டுமல்ல ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் மௌனமாகவே இருந்தன. சீமானின் “நாம் தமிழர் இயக்கம்”; மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஸ்டாலினைச் சந்திக்க முடிந்தமைக்கு திருமாவளவனே பிரதான காரணமாவார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதால் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்யக்கூடியதாக இருந்தது. இதற்கு முன்னர் சுமந்திரன், சாணக்கியன், செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர் சென்றபோதும் ஸ்டாலினை சந்தித்து உரையாட முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாகவே சந்திக்க முடிந்தது. கனிமொழியுடன் மட்டும் சந்தித்து உரையாட அவர்களினால் முடிந்தது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் வர இருப்பதால் அதுவும் சந்திப்பை சாத்தியப்படுத்தியிருக்கலாம். இது விடயத்தில் திருமாவளவனுக்கு தமிழ் மக்கள் நன்றி கூறியேயாக வேண்டும். அவர் கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்தபோது இக்கட்டுரையாளரும் அவரை சந்தித்திருந்தார். அவரிடம் ஈழத் தமிழர் - தமிழ்நாடு உறவினை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் என கூட்டாக நாம் கோரிக்கை விடுத்தோம். உடனடியாக அதை செய்வதாக அவர் வாக்குறுதியளித்திருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை வாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த அவர் வடமராட்சியின் கிராமங்கள் தோறும் நடந்து சென்று பனம் விதைகளை நாட்டினார். தமிழ் இளைஞர்களுடனும் மனம் திறந்து உரையாடினார். “நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கின்றோம். நீங்கள் இங்கு ஒற்றுமையாக குரல் கொடுங்கள்” என தமிழ் இளைஞர்களிடம் கூறினார். சந்திப்புகளின் போது கஜேந்திரகுமார் மத்திய அரசினையும் பகைக்காமல,; தமிழ்நாட்டு மக்களையும் பகைக்காமல் நிதானமாக கருத்துக்களை முன்வைத்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கூறுகின்ற போதும் அதன் விளைவான 13வது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தவில்லை என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அவரது கருத்துக்களில் சமஸ்டி கோரிக்கை, ஏக்கிய ராச்சிய தீர்வு யோசனை நிராகரிப்பு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் என்பனவே முக்கிய விடயப் பொருட்களாக இருந்தன. தமிழக மீனவர்களின் அத்துமீறல் விவகாரம் தமிழ்நாட்டிற்;கும், தாயகத்திற்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்தும் வகையில் சிறீPலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுகின்றது என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். ; ஈழத் தமிழருக்கு சார்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடையச் செய்யும் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு. இந்த வகையில் டெல்லியை கையாள்வதற்கான திறவு கோல் தமிழ்நாடு தான் என 2006 இலேயே ஆய்வாளர் திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரையாளர் சென்னையில் இந்தியா கம்யூனிஸ்ட்கட்சி தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான மகேந்திரனை சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் சந்தித்தபோது அவர் இதனையே கூறியிருந்தார.; “நீங்கள் நேரடியாக மத்திய அரசினை கையாளாதீர்கள் தமிழ்நாட்டினூடாக கையாளுங்கள்” எனக் கூறியிருந்தார். “ஒரு தடவை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தமிழ்நாட்டின் விருப்பத்திற்கு மாறாக கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கு பற்றச் சென்ற போது ஈழத் தமிழர் ஒடுக்கப்படுவதனை சுட்டிக்காட்டி நாம் தடுத்து நிறுத்தினோம்” எனவும் அவர் கூறி இருந்தார். ஈழத் தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் கொண்ட புவியியல் அமைவிடமாகும். புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு மட்டுமல்ல தமிழ்நாடும் கேந்திர இடத்தில் இருக்கின்றது. தமிழ்நாட்டின் கேந்திர ஆற்றல் தமிழர் தாயக கேந்திர ஆற்றலை விட உயர்வானது ஏனெனில் அதற்கு பின்னே மிகப்பெரிய நிலத் தொடர்ச்சி இருக்கின்றது. இந்திய மத்திய அரசுக்கு மட்டுமல்ல புவிசார அரசியலில் அக்கறை கொண்ட வல்லரசுகளுக்கும் தமிழ்நாடு இது விடயத்தில் முக்கியமானதாக உள்ளது. இரண்டாவது தமிழ்நாட்டின் சனத்தொகையாகும். சுமார் 7 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். இது இலங்கையில் உள்ள சனத்தொகையை விட ஐந்து மடங்கு அதிகமானதாகும். தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் இணைந்தால் இந்தியாவில் வசிக்கும் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை 8 கோடியையும் தாண்டும். தவிர தமிழக வம்சாவளித்தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் எழுச்சி அவர்களையும் ஈழத் தமிழர்கள் பால் அக்கறைப் பட வைக்கும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மலையக தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகமெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்கள் நல்ல சேமிப்புச் சக்திகளாவர். நாம் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனமாக இருப்பதினால் இச் சேமிப்புச் சக்திகள் எப்போதும் நமக்கு துணையாக நிற்கும். மொறீசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அவர்கள் எங்கள்; மீது வைத்திருக்கின்ற அக்கறைக்கு சான்றாகும். ; மூன்றாவது தமிழ்நாடு வரலாற்று ரீதியாக மைய நீரோட்ட அரசியலுக்கு வெளியில் நிற்கின்றமையாகும். திராவிட கருத்து நிலை கொண்ட அரசியலே இதற்கு பிரதான காரணமாகும். தமிழ்நாட்டில் இன்று ஆதிக்கம் செலுத்தும் இரு பிரதான கட்சிகளும் திராவிட அரசியல் மூலம் உருவான கட்சிகளே! இந்தக் கட்சிகளின் ஆதிக்கத்தை மைய நீரோட்ட கட்சிகளினால் சிறிதளவு கூட உடைக்க முடியவில்லை. இவ்வாறு மைய நீரோட்ட அரசியலிருந்து விலகி நிற்பது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு சார்பானதாகும். தவிர தமிழ் மக்கள் இன்று நாள்தோறும் பச்சை ஆக்கிரமிப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர.; இதற்கு இடதுசாரி முகமூடி போர்த்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்காக இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்பின்; மையமாக இன்று விளங்குவது முல்லைத்தீவு மாவட்டம் தான். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும். தமிழ்நாடு இதில் பாரிய பங்களிப்பை ஆற்றக்கூடியதாக இருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி அழிக்கப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப் போராட்டம் தமிழ் நாட்டிலும் பரவத் தொடங்கியது. அப்போது தேர்தல் காலமாக இருந்தபடியால் இந்தியத் தூதுவர் உடனடியாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவினைச் சந்தித்து உண்ணாவிரதத்தை நிறுத்தி நினைவுத்தூபியினை மீளக் கட்ட அனுமதிக்குமாறு வேண்டினார். அதன் பின்னரே அரசாங்கம் அனுமதி வழங்க நினைவுத்தூபி மீளக் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றது. இன்று பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவின் பிடிக்குள் இலங்கை இருக்கின்றது. டித்வா புயல் பேரிடரின் பின்னர் இந்தப்பிடி அதிகமாக இருக்கின்றது எனலாம.; எனவே சென்னைக்கூடாக புதுடில்லிக்கு அழுத்தம் கொடுத்தால் சில விடயங்களை வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும். இன்று புது டில்லி தமிழ் மக்கள் தொடர்பாக பாராமுகமாக இருக்கின்றது என்றால் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற் கூடாக அணுகுவதை விரும்பப்போவதில்லை. அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணமாகும். ஈழத் தமிழர்களில் சிலரும்; தமிழ்நாட்டிற்கூடாக அணுகாமல் மத்திய அரசினை நேரடியாக அணுக வேண்டும் எனக் கூறப் பார்க்கின்றனர். நேரடியாக அணுகும் போது இந்திய மத்திய அரசிற்கு பலமான அழுத்தங்களை ஒருபோதும் கொடுக்க முடியாது. அண்மைக்கால தேக்க நிலைக்கு நேரடியாக அணுகியமையை காரணம் எனலாம். இன்று மாநில அரசுகள் மத்திய அரசில் பலமான செல்வாக்கை செலுத்துகின்றன. இதனால் ஏனைய மாநிலங்களையும் இணைத்து பயணித்தால் அழுத்தங்களை மேலும் பலமாக கொடுக்கக் கூடியதாக இருக்கும். கருணாநிதியின் ரெசோ அமைப்பினை மீளவும் புதுப்பிப்பது இது விடயத்தில் ஆரோக்கியமான பயன்களை தரக்கூடியதாக இருக்கும். இன்று இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கையின் இறைமை, ஆள்புலம்; பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம், சமூகநீதி பேணப்பட வேண்டும் என்று பெயருக்காகவாவது இருப்பது தமிழ்நாட்டின் அழுத்தங்களின் விளைவு என்றே கூற வேண்டும். தமிழ்த் தேசிய பேரவையின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு எதிர்வினைகளும் வந்துள்ளன. ஈழத் தமிழர்களில் சிலர் முன்னரும் கூறியது போல தமிழ்நாட்டுடன் பேசி பயனில்லை. மத்திய அரசுடன் தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் இங்கு மத்திய அரசுடன் இதுவரை நேரடியாக பேசி எந்தவித முன்னேற்றத்தையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அழுத்தம் பலமாக இல்லாததே இதற்கு காரணமாகும.; மத்திய அரசுடன் பேசத்தான் வேண்டும். அழுத்தம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டுடன் இணைந்து பேசுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். இரண்டாவது எதிர்வினை புலம்பெயர் தமிழர் சிலரிடம் இருந்து வந்துள்ளது. இது பற்றியும் முன்னர் கூறியிருக்கின்றேன். தமிழீழக் கோரிக்கை பலவீனமடைந்து விடும் என்பதே இதற்கு பின்னால் உள்ள நியாயப்பாடு ஆகும். தாயகத்தில் 6 வது திருத்தச் சட்டம் அமுலில் உள்ளது. தாயகத்தில் இருப்பவர்களினால் தமிமீழக்; கோரிக்கையை முன்வைக்க முடியாது. தவிர இந்திய மத்திய அரசாங்கத்திற்கு முழு இலங்கைத் தீவும் தேவையாக உள்ளது. இதனால் இந்திய நலன்களையும் ஈழத் தமிழர் நலன்களையும் சந்திக்கின்ற புள்ளியை கட்டமைக்க முடியாது. சமஸ்டிக் கோரிக்கையின் மூலம் நடுப்புள்ளியை கண்டுபிடித்து பலப்படுத்தலாம். தவிர தமிழீழக் கோரிக்கை தொடர்பாக ஒரு எழுச்சியை தமிழ் நாட்டில் கொண்டுவர புலம்பெயர் தரப்பினரால் முடியவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சியோடு அவர்களது அரசியல் சுருங்கிப் போயுள்ளது. மொத்தத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் பயணம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான பயன்களைக் கொண்டு வரலாம். இதற்கு தொடர் செயற்பாடுகள் தேவை. தமிழ்நாட்டில் ஒரு தொடர்பு அலுவலகத்தை உருவாக்குவது அவசியம். தமிழர் அரசியலில் பூகோள, புவிசார் அரசியல் பற்றி அதிகம் பேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் தான். அவரது அரசியலின் மையமே அதுதான். இதற்காக அவர் பல தடவைகள் கிண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார். இன்று தனது புவிசார் , பூகோள அரசியலை நடைமுறைச் செயற்பாட்டிற்கு கொண்டுவர அவர் முயற்சிக்கின்றார். அவரது முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை எதிர்கால வரலாறு தான் கூறக்கூடியதாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முதன்மையானது தாயகத்தில் பலமான, ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே! இதனை உருவாக்காமல் தமிழ் நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்கப் போவதில்லை. தமிழ்த்; தேசிய சக்திகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.https://www.facebook.com/share/1hR98CBVxW/?mibextid=wwXIfr
  13. கணவன், மனைவி எனக்கூறிக்கொள்வோர் தாங்கள் கணவன்- மனைவியாக வாழவேண்டும்.இது உளவியலை மேம்படுத்தும்.
  14. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளை காட்டும். குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second அதே போன்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் அணிகள், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் அணிகள் எல்லாவற்றையும் சரியாகக் காட்டும் (என நினைக்கின்றேன்). எனவே கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தெரிவு செய்து பதியுங்கள். இது பதில்களைத் தரவேற்றும் வேலையை இலகுவாக்கும். ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள்.
  15. டக்ளசுக்கு எதிராக எத்தனையோ வழக்குகளைத் தொடுக்கலாம் அப்படியிருக்க இப்படி ஒரு பலவீனமான வழக்கில் கைது செய்திருப்பது. தாங்கள் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதில்லை கண்துடைப்பிற்காகத்தான்.ரணிலின்கைதுபோல் மற்றுமொரு நாடகம்.
  16. இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பல உன்னதமான விடயங்களை கொண்டிருக்கின்றன. அதில் ஒற்றைப் பக்கம் தான் மாணவர் அமைப்பு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணச் சிந்தனையிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் உறுதியான நம்பிக்கையிலும் விதையிடப்பட்டது தான் மாணவர் எழுச்சிக்கான களம். எமது விடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு, மகளிரின் பங்களிப்பு என தேசக்கடமைகள் விரிந்து கிடந்த போது விடுதலைக்கான எழுச்சியின் படிக்கல்லை மாணவர்களிடம் இருந்து உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்தக் களத்தின் திறவுகோள். 1985 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் மாணவர் இயக்கம் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் முதலாவது பொறுப்பாளராக பொறுப்பெடுத்தார் முரளி என்ற போராளி. அவரின் தீவிர முயற்சியின் பெறுபேறு தமிழீழ மாணவர்களின் எழுச்சி மிக்க செயற்பாடுகளாக உருமாறியது. பெரும் சாதனைகளைச் செய்த போராளிகளை உருவாக்கவும், தமது உரிமைகளுக்காக புதுப் புதுப் போராட்டக் களங்களை உருவாக்கவும் தமிழீழ மாணவர்களுக்கு புது வழிகளைத் திறந்தது மாணவர் இயக்கம். அனைத்து தமிழீழ மாணவர்களையும் எழுச்சி மிக்க தமிழீழ உணர்வாளர்களாக மாற்றுவதற்கும் தமிழீழ மாணவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் உருவாக்கம் கண்ட மாணவர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் கீழ் இயங்கிய கிட்டத்தட்ட 54 உப பிரிவுகளுக்குள் மிக முக்கியமான பிரிவாக இயங்கத் தொடங்கி 2009 மே 18 வரை தனது பணியை சிறப்பாக செய்து வந்தது. கல்வி ஒடுக்குமுறையால் மற்றும் வெட்டுப்புள்ளித் திட்டத்தால் உயர்கல்விகளை தொடர முடியாமல் தமிழ் மாணவர்களை ஒடுக்க நினைத்த சிங்களத்துக்கு பெரும் எழுச்சி மூலம் பதில் சொல்லவும், பாதிக்கப்பட்டிருக்கும் எம் தமிழ் மாணவர் சமூகத்தின் அரசியல் பொருளாதார விழுமியங்களில் வளர் தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும், பொறுப்பாளர் முரளி தன் துவிச்சக்கர வண்டியோடு வயல்வெளிகளிலும் புற்றரைகளிலும் குச்சொழுங்கைகளிலும் என்று பயணிக்கத் தொடங்கினார். இதனூடாக விடுதலை பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே பெரும் கருத்துப் பரம்பல்களை விதைத்து அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அவர்களை புரட்சிகர விடுதலைப் பாதையில் பயணிக்க வைத்தார். அதை நிரூபிக்கும் விதமாக, “எம் மக்களில் எதிர்காலத்தை நோக்கி “ என்ற பெரும் பொருட்காட்சி ஒன்றை மாணவர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பொருளியலாளர்கள் என்று அனைத்து தமிழீழ வளங்களையும் ஒருங்கிணைத்து வளமற்ற தமிழீழம் என்று கருத்தாடல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு தமிழீழம் வளமுள்ளது என்று அடித்துக் காட்டினார். தமிழீழத்தில் உள்ள அனைத்துத்துறை வல்லுனர்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தமிழீழம் சுய பொருளாதார நாடாக அமையும் என்ற செயற்பாட்டு நிலையை உறுதிப்படுத்தினார். இதுவே மாணவர் இயக்கத்தின் முதல் வெற்றியாக பதியப்பட்டது. அதன் பின்பு அறிவியல் கழகங்கள் தமிழீழ பரப்பெங்கும் உருவாக்கப்பட்டன. அதனூடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மெருகூட்டப்பட்டது மட்டுமல்லாது போட்டிகள், கருத்தரங்குகள் என்று வளர்நிலையை நோக்கிப் பயணிக்க வைத்தார் பொறுப்பாளர் முரளி. 23.12.1987 இந்திய இராணுவத்தின் கோப்பாய் பகுதியில் நடந்த சுற்றிவளைப்பு ஒன்றில் இருந்து தப்பிக்க முனைந்த போது நடந்த நேரடிச் சண்டையில் தமிழீழ மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளர் மேஜர் முரளியாக வீரச்சாவடைந்தில் இருந்து அவரால் நிலைநிறுத்தப்பட்ட தமிழீழ மாணவர் இயக்கம், 2009 மே 18 ஆம் நாள் விடுதலைப் போராட்டம் மௌனிக்கும் வரை பல பத்து பொறுப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டு தமிழீழ மாணவர்களுக்கு தன் பணி செய்தது. தமிழீழ மாணவர் அமைப்பின் இறுதிப் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணன் அல்லது இளந்திரையன் என்று அழைக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளி. மேஜர் முரளி முதல் கண்ணன் வரை பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களும் அவர்களுடன் பணியாற்றிய போராளிகளும் தளராத துணிவோடு இறுதி நாள்வரை மாணவர்களுக்கான கல்விப் பணியில் ஈடுபட்டார்கள். யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழீழ நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்த 1995 இற்கு முன்பான காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது நடுவப்பணியகத்தை நிறுவியும் அதன் பின்பான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் நிர்வாக கட்டமைப்புக்கள் நகர்த்தப்பட்ட பின்பு கிளிநொச்சி, மாங்குளம், புதுக்குடியிருப்பு, மல்லாவி என்று தன் நடுவகத் தளங்களை நிறுவி தென்தமிழீழம் வடதமிழீழம் என்று அனைத்து பிரதேசங்களிலும் மாணவரமைப்பு தன் பணியாற்றி வந்தது. 2001 ஆம் வருடத்துக்கு பின் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் நடுவப்பணியகத்தை நிறுவிக் கொண்டது. சுற்றி வர தேக்கு மரங்களால் சூழப்பட்ட நல்ல இயற்கையின் சூழலில் அமர்ந்திருந்த நடுவப்பணியகம் தனது பணிகளை அதற்கான பொறுப்பாளர்களூடாக பணியாற்றியது. மாணவர் அமைப்பு தனது கட்டமைப்பை பல வழிகளில் நிறுவிக் கொண்டது. பொறுப்பாளர், துணைப்பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள், கோட்டப் பொறுப்பாளர்கள் என்றும் போராளிகள் பொறுப்புக்களை வகித்த அதே நேரம் வெறும் கற்றல் செயற்பாடுகள் மட்டுமல்லாது, தேசிய எழுச்சி நீரோட்டத்தில் மாணவர்களை வழிப்படுத்தவும் ஏராளமான திட்டவரைவுகளோடு பணியாற்றியது மாணவரமைப்பு. க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை வழிகாட்டுதல் செயலரங்குகளும் முன்னோடிப் பரீட்சைகளும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் வெற்றித் திறவுகோளாக அமைந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் நான் நினைக்கிறேன், 1997 ஆம் வருடமாக இருக்க வேண்டும் க.பொ.த சாதாரண தர முன்னோடிப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்ற மாணவர்கள் சிலரை தேசியத்தலைவர் சந்தித்து அவர்களுக்கான மதிப்பளிப்பு ஒன்றை செய்திருந்தமை மிக முக்கியமாகின்றது. இத்திட்டம் தமிழீழ கல்விக்கழகம் மற்றும் தமிழீழ மாணவர் அமைப்பு என்ற இரு கட்டமைப்புக்கள் இணைந்து செய்த செயற்றிட்டம் என நினைக்கின்றேன். (இதன் உண்மைத்தகவல் எனக்கு நினைவில்லை தேசியத்தலைவர் சந்தித்தாரா அல்லது அவரின் கையெழுத்துடனான சான்றிதழ் வழங்கப்பட்டதா என்று நினைவு வருக்குதில்லை இந்த தகவலை உறுதிப்படுத்த என்னால் முடியவில்லை தயவு செய்து தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். ) வசதிகள் அற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிதொகைக் கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்குவதில் இருந்து கற்பதற்கு வசதிகள் அற்ற பள்ளிப் பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லங்கள் வரை மாணவரமைப்பால் உருவாக்கப்பட்டநிர்வகிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக மல்லாவியில் இயங்கிய ஆண்கள் இல்லமான மாறன் மற்றும் பெண்கள் இல்லமான சாந்தி மற்றும் கற்சிலைமடுவில் இயங்கிய சிறுவர் இல்லம். ( பெயர் நினைவில்லை) ஆகியவை சான்றாகின்றன. இது மட்டுமல்லாது பல இடங்களில் பல சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அதை விட ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளர்களின் அலுவலகங்களிலும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கணனி பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படைக் கணனிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடிப்படை வசதிகளற்ற பல கிராமங்களில் கல்வி படிக்கல்லை தொட வேண்டும் என்பதற்காக கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையங்கள் “கல்வி வளர்ச்சிக் கழகம் “ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு மாலைநேரக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. இவை தவிர, மாதாந்த சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு அவை மாணவர்களுக்கு அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியை பற்றிய அறிவூட்டல்களை செய்தன. இதை விட ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படைக் கணனி கற்கைகளை அறிமுகம் செய்வதற்காக சுழற்சி முறையிலான கணனி செயலமர்வுகள் செய்யப்பட்டு மாணவர்கள் முதல் பெற்றறவர்கள் வரை தொழில்நுட்பக் கல்வியின் அவசியங்கள் பற்றித் தெளிவு படுத்தப்பட்டு தொழில்நுட்ப அறிவு ஊட்டப்பட்டது. முரளி என்ற தொலைத்தொடர்பாடல் நிலைய பெயரைக் கொண்ட மாணவரமைப்பின் நடுவப்பணியக தொலைத்தொடர்புக் கருவியில் ஒலிக்கும் குரல்கள் அனேகமான நேரங்களில் மாணவர்களின் வளர்ச்சி பற்றியே ஒலிக்கும். தேசிய எழுச்சி நீரோட்டத்தில் தமிழீழ மாணவர் அமைப்பும் தமிழீழ கல்விக் கழகமும் இணைந்து எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் செய்த பணிகளை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் என் நினைவில் இருந்தவன்றை கொஞ்சமேனும் தொட்டுச் செல்கின்றேன். மேஜர் முரளி தொடக்கம் லெப். கேணல் ராணிமைந்தன், லெப் துளசி, …. வீரவேங்கை சக்கரவர்த்தி, லெப். புயல்வீரன், வீரவேங்கை கோபி என தமிழீழ தேசத்துக்கான விதைகளாக மாணவரமைப்பு பல போராளிகளை விதைத்துள்ளது. அந்த வரிசை மிக நீளமானது. அந்த வரிசையை அறிந்தவர்கள் பட்டியலிடுங்கள்… குறிப்பு: தயவு செய்து இக்கட்டுரையை பகிருங்கள் பிரதி செய்து பதிவேற்றாதீர்கள் இக்கட்டுரையில் சிறு தகவல் உறுதிப்படுத்தல் செய்ய வேண்டி உள்ளது. அதை நான் செய்தால் நீங்கள் பிரதி எடுத்து பதிவேற்றும் போது தவறி விடும். மீள் பதிவு. எழுதியது : இ.இ.கவிமகன் நாள் 06.06.2022
  17. குறிப்பிட்ட 1-3 கிலோமீட்டர் பரப்பளவு. வல்லாதிக்க நாடுகளின் உதவிகளோடு முப்படைகளும் ஒருங்கிணைந்து தாக்கும் களமாக மாறி இருக்கிறது அந்த குறுகிய நிலப்பரப்பு. கந்தக நெடியும் குருதி நெடியையும் தவிர வேறெதும் இல்லாத இருண்ட பொழுது. மூடிய பதுங்ககழி இல்லை. திறந்தநிலை பதுங்ககழி வெட்ட எங்களால் முடியவும் இல்லை. நந்திக்களி அவ்வளவு திடமான மண். அதனால் பெரும்பாலும் சின்ன சின்ன கிடங்குகளே எம் அரண். அதை விட்டால் துணிகளில் நிரப்பப்பட்ட மண். அதுவும் இல்லை என்றால் திறந்தவெளியே எம் அரண். திரும்பும் இடமெங்கும் பிணக்காடு. “ஐயோ அம்மா என்னைக் காப்பாத்துங்கோ “ என்ற அலறல். காயப்பட்டுவிட்ட போராளி மைத்துனனின் பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு நடைப்பிணமாக நடந்து கொண்டிருக்கிறேன் நான். இல்லை இல்லை தவழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்பா வட்டுவாகல் பக்கம் போவம். நான் வரேல்ல நீங்கள் எல்லாரும் போங்கோ… கழுத்தில் இருந்த தகட்டையும் குப்பியையும் தடவிப்பார்த்தபடி அப்பா கூறுகிறார். அம்மா குளறுகிறா. அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தபடி வட்டுவாகல் நோக்கி நகர்கிறா. அப்பாவின் எழுத்துக்கள் (கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் )அடங்கிய 4-5 உரப்பைகளை நாங்கள் தங்கி இருந்த பங்கருக்குள் போட்டு அதற்குள்ளையே அப்பாவின் ஆவணங்களையும் போட்டு அவசரம் அவசரமாக கொஞ்ச மண்ணை எடுத்து மூடிவிட்டே நகர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் அப்பா அண்ணனுடன் தளபதிகளுடன் போராளிகளுடன் என எடுத்த ஏராளமான படங்களும் இருந்தன. அவை கண்டெடுக்கப்பட்டால் எல்லோருக்கும் பிரச்சனை வரலாம் என்ற பயத்தில் உயிரைக் காக்கப் போராடிய நேரத்திலும் அவற்றை மண்ணுக்குள் புதைத்துவிட்டேன். எதற்கும் அழாத என் அப்பா தன் உயிராக காத்தவற்றை நான் மண்ணுக்குள் மூடிய போது அழுதார். அவரது அழுகை அதற்கு மட்டுமல்ல தான் நேசித்த தமிழீழம் தாம் தமிழீழத் தேசிய தலைவரின் அணியில் ஒன்றிணைந்து அமைக்கத் துடித்த சுதந்திர தேசம் மீண்டும் அடிமையாக கண்முன்னே பகைவன் காலடியில் செல்லும் அந்த பொல்லாத நிலையையும் எண்ணி விழி கலங்கினார். அப்பா மட்டுமல்ல தளபதிகள் போராளிகள் மட்டுமல்ல ஆயிரம் ஆயிரமாய் அவர்களை நேசித்து அண்ணனை நேசித்து நின்ற தமிழீழ மக்களும் தான். ஒருபுறம் உயிர் பிரியும் நாளி எப்போதும் வரலாம் என்ற அச்சம். மறுபுறம் எம் தாய்நிலத்தைவிட்டு வலசைப் பறவைகளைப் போல போகிறோமே என்ற அங்கலாய்ப்பு. காலுக்கடியில் தட்டுப்படும் பிணங்களும் அறுந்து விழுந்து கிடக்கும் உடல் துண்டுகளும். ஐயோ ஐயோ ஐயோ என்ற அலறல்களும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. “55, பப்பா லீமா, லீமா சேரா, டாங்கோ சேரா “ என்று பல ஆயிரம் சங்கேத பாசைகளினூடாக அழைத்துக் கொண்டிருக்கும் எங்கட அண்ணாக்களின், அக்காக்களின் வோக்கிகளின் சத்தம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் துப்பாக்கிகள் ஓயவில்லை. இயங்க மறுக்கவில்லை. வானிலிருந்தும் கடலிலிருந்தும் தரையில் இருந்தும் வரும் ஒவ்வொரு உயிர்கொல்லிக் குண்டுகளின் சிதறல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் எம் தேசத்தை புண்ணாக்கிக் கொண்டிருக்கிறது. இதேநாள் முன்னிரவு என் இரண்டு சித்தப்பாக்களின் இரண்டு தங்கைகளின் உயிரை ஒரு ஆடலரி எறிகணை என் கையருகே பறித்த போது கையறுநிலையில் இருந்த நான் இன்று என் உயிரைக் காப்பாற்றிவிட எதிரியின் கட்டுப்பாட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். “அம்மா நானும் உங்களோடு வரவா” என்னையும் உங்கட பிள்ளை என்று சொல்லிக் கூட்டிப் போறீங்களா? முடி வெட்டிய நிலையில் காயப்பட்ட பெண் போராளி ஒருத்தி அம்மாவிடம் கேட்கிறா. நான் நினைக்கிறேன் உறவுகள் என யாரும் அங்கே இல்லாத சகோதரியாக இருக்கலாம். அல்லது உறவுகளைப் பறிகொடுத்திருக்கலாம். கையில் பெரிய அளவில் காயப்பட்டிருந்தா. போராளிக்கான மிடுக்கு பறிபோயிருந்தது. என் தங்கை ஒருத்தி தன் உடைகளை அவாவுக்காக கொடுக்கிறாள். அதை அணிந்து சாதாரண பெண்ணாகிறா அந்தப் போராளி. இறுதியாக தான் போட்டிருந்த பச்சையுடையை தன் நெஞ்சோடு அணைத்தபடி, “ அம்மா எல்லாம் முடிஞ்சு போச்சல்ல?” அப்பா ஒருமுறை அவாவைத் திரும்பிப் பாக்கிறார். அவாவின் விழிகள் கலங்கிப் போயிருந்தன. அப்பாவுக்கோ அம்மாவுக்கோ எனக்கோ அவாவுக்குச் சொல்லுவதற்கு எதுவும் இருக்கவில்லை. நினைவோடு: இ.இ.கவிமகன். 16.05.2025
  18. பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது. வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம். அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள். மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அருகில் பல குழந்தைகளின் அழுகுரல்கள். மாமா பசிக்குது என்று மருமகள் என்னிடம் கெஞ்சுகிறாள். அவளுக்கு அம்மா அப்பாவை காணவில்லை என்ற ஏக்கம் வேறு. வாய் திறந்து பசிக்குது என்று கூற முடியாத மருமகன் என்னை கட்டிப்பிடித்தபடி தாயின் அரவணைப்புக்காக ஏங்கியபடி அழுது கொண்டிருக்கிறான். என்னிடமோ என் அம்மா அப்பாவிடமோ எதுவும் இல்லை. பச்சைத்தண்ணீர் கூட தீர்ந்துவிட்ட நிலை. தலைநிமிர்த்த முடியவில்லை. முல்லைத்தீவுப்பகுதியில் இருந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தும் வரும் கந்தகக் குண்டுகளும் எறிகணைகளும் ரவைகளும் எந்த நிமிடமும் எங்களை உணவாக்க காத்திருக்கின்றன. இருந்தும் சின்னப்பிள்ளைகள் பசியில் துடிப்பதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மருமக்களை அம்மாவிடமும் சித்தப்பாவின் தங்கையிடமும் கொடுத்துவிட்டு மைத்துனனும் நானும் குனிந்தபடி திசைதெரியாது நகர்கிறோம். கையில் இரண்டு போத்தல்கள். எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்பது மட்டுமே எமது ஏக்கம். மெதுவாக குனிந்தநிலையில் நகர்கிறோம். நிரையாக நாலைந்து பனைமரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. எதிரில் இருந்து வரும் குண்டுகளை தம்மில் தாங்கியபடி அரைகுறை உயிரில் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அருகில் ஒரு “ஐ பங்கர்” என்று சொல்லப்படும் சிறிய ஒரு பதுங்ககழி. அதற்குப் பக்கத்தில் பனைமரத்துக்கு கீழே இறுதியாக நான் பார்த்த அண்ணா ஒருவனினதோ அல்லது அக்காவினதோ ஒரு வோக்கி. அதை பற்றியபடி ஒரு கரம். அக்கரத்துக்கு சொந்தமாக இருக்கலாம் என்று நம்பக்கூடியதாக வரி உடையில் சிதறிய ஒரு உடல். அழுகை கண்ணை அடைக்கிறது. எப்படி வாழ்ந்தம்? எதற்கும் அஞ்சாமல் அண்ணனின் நிழலில் வாழ்ந்த நாம் இப்போது எல்லாத்துக்குமே அஞ்சும் பாவிகளாக ஊர்ந்து கொண்டிருக்கிறோமே என்ற சொல்லமுடியாத துக்கம் தொண்டையை அடைத்தது. இரண்டு மூன்று மீட்டர்கள் நடந்த போது கால்கள் இடறின. கால்களுக்கிடையில் தட்டுப்பட்டது உயிரற்ற உடல்கள் என்பதை பார்க்காமலே உணரக்கூடியதாக நாற்றம் வந்தது. அவற்றின் அருகே ஒரு உடுப்புப்பை கிழிந்த நிலையில் கிடக்கிறது. அதற்குள்ளிருந்த ஒரு நெஸ்டமோல்ட் டின் தெரிந்தது. ஓடிச்சென்று அதை எடுத்தேன். பைக்குள் இருந்த ஒரு அல்பம் வெளியே வீழ்ந்தது. பள்ளிச்சீருடையில் அழகாக வாரியழுத்த இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியும் அவளின் சகோதரனும் சிரித்தபடி ஒரு நிழல்படத்தில் நின்றார்கள். ஒருவேளை கால்கள் இடறிய போது தட்டுப்பட்ட உடல்களுக்குள் அவர்களும் உயிரற்று இருந்திருக்கலாம். நான் அதைப்பற்றி எல்லாம் எண்ணிக்கொண்டிருக்காமல் நெஸ்டமோல்ட் டின்னை எடுத்து குலுக்கிப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட முக்கால் டின் அளவுக்கு மா இருந்தது. பெரும் சந்தோசம். உதடுகள் புன்னகைத்தன. டின்னைப் பிடித்திருந்த கை கொஞ்சம் பிசுபிசுத்தது. என்னவென்று பார்த்தேன் கையில் இரத்தம். டின்னைத் திருப்பிப் பார்க்கிறேன் டின்னிலும் குருதிபட்டிருந்தது. அப்பையினை பார்த்தேன் குருதி அதிலும் இருந்தது. அப்போது தான் அல்பத்திலும் குருதி பட்டிருப்பது புரிந்தது. ஒருவேளை அந்த நிழல்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளின் குருதியாகக் கூட இருக்கலாம். மனம் ஓவென்று கத்தி அழவேண்டும் போல எண்ணியது. இருந்தும் அடக்கிக்கொண்டு “ என்ட மருமக்களுக்கு கொஞ்சம் பசி தீர்க்க உதவும் இது” சொல்லியபடி நகர்கிறேன். மைத்துனனோ “ அண்ண இரத்தம் எல்லாம் பட்டுக்கிடக்கு அதை எடுக்காத அண்ண” என்கிறான். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க இப்போது அது மட்டுமே மனதில் நிலைத்த எண்ணம். “பரவாயில்ல வா” நெஸ்டமோல்ட் டின் மடித்துக் கட்டிய என் சாறத்துக்குள் பத்திரப்படுத்தப்படுகிறது. எப்படியாயினும் பசிக்குது மாமா என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தைகளின் பசியில் கொஞ்சத்தையாவது இப்போது என்னால் நிவர்த்தி செய்ய முடியும். திரும்பி அவர்களிடம் நடக்கிறேன். சிதறிக்கிடந்த கரத்தில் அமைதியாக கிடந்த அந்த வோக்கி திடீர் என்று உயிர் பெற்று யாரையோ அழைத்தபடி இருக்கிறது. அது எதுவும் அப்போது எனக்கு செவியில் விழவில்லை. பள்ளிச்சீருடையில் புன்னகைத்தபடி இருந்த குழந்தைகளின் குருதியில் தோய்ந்து போய்க்கிடந்த அந்த நெஸ்டமோல்ட் மாவினால் என் மருகர்களின் பசியாற்ற கொஞ்சமாவது முடியுமே என்பதை மட்டுமே என் மனம் சொல்லிக்கொண்டது… நான் நடந்து கொண்டே இருந்தேன்…. நினைவுகளுடன்: இ.இ.கவிமகன் 17.05.2025
  19. வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன. என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன். இறுதிவரை சிறிய முதலுதவி செய்யக் கூடியதாக மருத்துவப் பை ஒன்றைக் கைவிடாது என் தோழில் வைத்திருந்தேன். அப்போது எனக்கு பெரிதாகத் தெரிந்த சொத்துக்களில் அந்த நெஸ்டமோல் டின்னும் இதுவுமே இருந்தன. அதற்குள் பெரிதாக ஒன்றும் இல்ல. நானே அம்மப்பாவின் வேட்டிகளைக் கொண்டு உருவாக்கிய “பீல்ட்கொம்ரேசர்” என்று இராணுவப்பாசையில் சொல்லக்கூடிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் துணி போன்று சுருட்டப்பட்டுக்கிடந்த நீண்ட வேட்டித் துண்டுகளே இருந்தன. அதனோடு ஓரிரண்டு பனடோல்கள் மட்டுமே இருந்தன. ஒருவேளை திடீர் என்று யாருக்காவது காயம் வந்தால் அதைக்கொண்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்பாடு அது. அதுகளைக் கொண்டு வந்ததால் அதை வைத்து எதிரி எதாவது பிரச்சனை தரலாம் என்ற பயம் வந்ததனால் என் சித்தப்பா அவற்றை எறியச்சொல்கிறார். அதனால் வட்டுவாகல் நீரேரி அதை தனக்குள் வாங்கிக் கொண்டது. நேற்று குருதியில் நனைந்து கிடந்த நெஸ்டமோல்ட் டின் இப்போது வெறுமையாகி இருந்தது. சின்னவர்கள் அதை முடித்துவிட்டார்கள். அதனால் அதையும் எறிகிறேன். எங்கள் உடல்கள் குருதி நாற்றத்தாலும் பயத்தினாலும் ஒடுங்கிப் போய் கிடந்தது. குரல்வளை நீருக்காகவும் இரைப்பை சாப்பாட்டுக்காகவும் ஏங்கிக் கொண்டிருந்தன. அதைவிட எங்கள் முன்னே நீண்டு கிடந்த வரிசையைத் தாண்டி கனரக ஆயுதங்களைத் ஏந்திக் கொண்டு முறைத்தபடி நின்ற சிங்கள கொடூரர்களின் அடுத்தது என்ன செய்யப்போகிறார்கள் என்று எண்ணி மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தன. இரு எறிகணைகள், இரண்டே இரண்டு எறிகணைகள் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தால் போதும் நாம் அனைவரும் உடல்சிதறிப் பலியாகிடுவோம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதுவும் தெரியாத பதட்டமான நிலை. திடீர் என்று எமக்கு பின்னால் இருந்து சில துப்பாக்கி வேட்டுக்கள். என் அருகில் இருந்த சிலர் காயப்படுகிறார்கள். என் சகோதரன் ஒருவன் முதுகில் காயமடைகிறான். குருதி கொப்பளிக்கிறது. அவலத்தின் ஓசை வானில் எழுந்தது. இன்னமும் நாங்கள் யுத்த பிரதேசத்துக்குள் தான் இருக்கிறோம் என்பது புரிந்தது. ஐயோ ஐயோ என்று அத்தனைபேரும் குளறுகிறார்கள். நாங்கள் அப்பாவி மக்கள் எங்களை சுடாதீர்கள் என்று கத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நகைக்கிறது எம்மைச் சுற்றி நின்ற சிங்கள வல்லூறுகள். பீறிட்ட குருதியை கட்டுப்படுத்த எதுவும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் நீருக்குள் எறிந்த வேட்டித்துண்டுகளை திரும்பிப்பார்க்கிறேன். அவை நனைந்து போய் கிடந்தன. காயப்பட்டவர்களை அணைத்தபடி குருதி வரும் இடங்களுக்கு ஏதோ ஒன்றை கிழித்துக் கட்டுகிறார்கள் உறவுகள். மீண்டும் மீண்டும் ஏவப்பட்டுக்கொண்டிருக்கும் எறிகணைகளின் வீச்சு கொஞ்சம் தூரவாக சென்று வெடித்தது. எம் தலைகளுக்கு மேலாக துப்பாக்கி ரவைகளும் எம்மை தாண்டிச்சென்றன. வழமை போல் பாதுகாப்பு வலையம் என்று ஓரிடத்தில் மக்களை குவிய வைத்து இனவழிப்பு செய்ததைப் போல வட்டுவாகல் பாலத்தில் முண்டியடித்தபடி கூடிநிற்கும் எம் எல்லோரையும் இதில் வைத்தே சுட்டுக் கொல்லப்போகிறது இந்த சிங்கள வல்லூறுகள் என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு அருகில் மூடிய நிலையில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்ககழி ஒன்றில் நான்கு நாட்களுக்கு முன் பத்துப்பேருக்கு மேல் ஒரே ஒரு எறிகணைத் தாக்குதலால் இறந்த சம்பவம் கண்ணுக்குள் வந்தது. அதைப் போலவே இப்போதும் நடக்கப்போவதாகவே உள்மனம் சொல்கிறது. மனமும் உடலும் நடுங்குகிறன. நான் மருமகனை இறுக கட்டியணைத்தபடி அவன் அழுவதை நிறுத்த முயற்சிக்கிறேன். பாவம் ஒன்றரை வயதுக் குழந்தை அனுபவிக்க கூடாத எல்லா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான். திடீர் என்று ஏதோ ஆரவாரம். முன்னே வரச்சொல்லி சொல்லி சிங்களத்தில் கட்டளைகள். சிறிய நேரத்தில் தமிழிலும் கட்டளை. வட்டுவாகல் பாலத்தில் இருந்து இறுதியாக என் மண்ணை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். அது குருதிக்காடாக சோர்ந்துபோய் பிணங்களைச்சுமந்து கிடக்கிறது. மருமகனை அணைத்தபடி எழுந்து கொள்கிறேன். கொலைவெறி ஆடிய சண்டைக்களத்தில் இருந்து தப்பி வந்து பலிக்களத்துக்கு இழுத்துச்செல்லப்படும் பலிக்கடாக்களைப் போல எம்மை வரிசையில் கொண்டு சென்றார்கள் கொடிய சிங்கள இராணுவம். நடைப்பிணமாக நடந்து கொண்டிருந்தோம். முப்பது வருடங்களாக லீமா சேராவையும்,கிலோ9 ஐயும், அல்பாவையும் அழைத்துக்கொண்டருந்த வோக்கிகள் அப்போது எனக்குப்புரயாத சிங்களத்தில் யாரையோ அழைத்துக்கொண்டிருந்தன… நினைவுடன் இ.இ.கவிமகன் 18.05.2025
  20. தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள். “மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்” சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர். சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர். சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர். “அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்று கத்துகின்றனர் கதறுகின்றனர். உங்கள விட்டிட்டு போகமாட்டம் என்று அழுகின்றனர். இருந்தும் அக்குழந்தைகளின் முகங்களை, அவர்களின் அழுகையினை அவர்களின் பிரிவை விட தாய் மண்ணை எதிரியிடம் விட்டு வர முடியாது தவித்த போராளிகள் அவர்களை விட்டு வந்து கொண்டிருக்கும் எதிரியை நோக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் இணையிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காது துப்பாக்கிகளை இறுகப்பற்றியபடி எதிரியை நோக்கி போகின்றார்கள். அதுவரை கண்முன்னே சாவும் பட்டினியும் எம்மரவை உலுக்கி எடுத்தது. இருந்தாலும் களமாடிய வேங்கைகள் உயிருடன் என்றோ ஒருநாள் மீள்வார்கள் என்று நம்பி உறவுகள் காத்திருப்பார்கள் பலர் மீண்டு வருவார்கள். சிலர் மீளமாட்டார்கள். அவர்கள் எமக்காக காவியமாகி இருப்பார்கள். இப்போது அவ்வாறில்லை. இது பயங்கர மணித்துளி. சுற்றிவர முட்கம்பி வேலிகளைப்போல கந்தகக்குண்டுகளால் நிரப்பப்படும் குறுகிய பிரதேசத்தில் தம் இணையை இனி காண்போமா இல்லையா என்ற உத்தரவாதம் எதுவும் இல்லாத பொழுதில் அவர்கள் தம் இணைகளைப் பிரிந்தார்கள். மனதுக்குள் துடித்தாலும் கொண்ட இலட்சியத்தின் உறுதி அவர்களின் துப்பாக்கிகளை இறுகிப்பற்ற வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க சிலர் இணையாகவே கரத்தில் ஏந்திய துப்பாக்கிகளை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். குறுக்கும்மறுக்கும் வரும் ரவைப் பின்னல்களுக்குள் அவர்கள் இருவரும் இணையாகவே எதிரியை எதிர்கொள்கின்றனர். சிலர் குழந்தைகளை உறவுகளிடம் கையளித்துவிட்டு உறுதியோடு நிற்கிறார்கள். இன்னொரு புறம், அம்மா பிள்ளையை பிடித்து இழுக்கிறாள். அப்பா கெஞ்சுகிறார் “எங்களுடன் வா “என்று. பிள்ளை வர மறுக்கிறது. தங்கை அண்ணனை, தம்பி அக்காவை, அண்ணன் தங்கையை, அக்கா தம்பியை என்று கெஞ்சுகிறார்கள். “ஆமியட்ட போவம் வா சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் தருவதாக அறிவிக்கிறாங்கள் தானே வாடா ” என்று வற்புறுத்துகிறார்கள். பற்றி இருந்த கையினை விலக்கியபடி நீங்கள் போங்கோ நான் வரேல்ல. என்னால வர முடியாதும்மா என்னை நினைச்சுக் கொண்டிருக்காமல் உடம்பை கவனமா பாருங்கோ நான் போறன் என்று நெஞ்சில் இருந்த கோள்சரை இறுக்கிக் கொள்கிறார்கள் பல போராளிகள். அவர்கள் நிச்சயமாக ஒன்றை அறிவார்கள். இது எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்போகும் இறுதிமணித்துளிகள் இவை. உயிர்களுக்கு எப்போதும் உத்தரவாதம் இல்லை. இருந்தாலும் எதிரியிடம் மண்டியிட்டு அடிமையாக சாவதை விட வரும் எதிரியில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டு பெருமையாக சாகலாம் என்ற உறுதி அவர்களுக்குள் இருந்தது. அதனால் தான் அவர்களால் தம் உயிரான உறவுகளைப் பிரிய முடிந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்தபடி எதிரியின் பிரதேசத்துக்குள் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் எம் தாயகத்தை வன்பறித்து வந்து கொண்டிருக்கும் எதிரியன் கதை முடிக்க நகர்ந்து கொண்டிருந்தார்கள். திடீர் திடீர் என்று பெரும் வெடியோசைகள் தனித்தனியாக பாரிய சத்தமாக கேட்கின்றன. என் நினைவுக்குத் தெரிந்தவரை அவை பெரும்பாலும் எங்கள் வேங்கைகள் கட்டியிருந்த வெடியங்கிகளின் வெடிப்போசைகளாகவே இருக்கக்கூடும். நாங்கள் அடிமைகளாக எதிரியினை நோக்கி…. அவர்களோ உறுதிமிக்கவர்களாக எதிரியை நோக்கி… வெடியோசைகள் கேட்டவண்ணமே இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு முடிவில்லை. நினைவுடன்: இ.இ. கவிமகன் 18.05.2025
  21. அன்புடன் குமுதினி அக்கா…! எப்பிடி நீ சுகமா இருக்கிறியா என்று எழுதிடத்தான் என் விரல்கள் துடிக்கிறது. ஆனால் நீ உன் நண்பிகளோடு இணைந்து தமிழீழ தேசத்துக்காக உன்னை விதையாக்கிவிட்டாய் என்ற தூய்மையான திமிர் எழுந்து என்னை “நினைவுக்கல்லுக்குள் நீ நலமாக உறங்குகிறாயா? என்று தான் கேட்க சொல்கிறது. நீ எப்படி நிம்மதியாக உறங்குவாய்? அந்த நிம்மதியை நாங்கள் உனக்குத் தரவில்லையே. உன் நிம்மதியாக உறக்கத்துக்கு கூட சந்தர்ப்பத்தை தராது எங்கள் தேசத்தை எதிரியிடம் கைவிட்டு விட்டோமே. குமுதினி அக்கா என்று தான் உனை நான் அழைப்பேன். என் பெரியப்பாவிற்கு நீ மூன்றாவதாக பிறந்தவள். சிறு வயதில் இருந்து நீ அமைதியின் உருவம். உன்னை நேசித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அக்கா அக்கா என்று உங்களோடு திரிந்த காலங்கள் நெஞ்சுக்குள் வந்து வருத்தத்தை தருகிறது. கரவை மண்ணில் கூடி இருந்து களித்த ஒவ்வொரு வினாடிகளும் நெஞ்சுக்கள் நின்று வருத்தத்தை தருகிறது. நீ ஊட்டி விட்ட சோற்று பருக்கைகள் என் குருதியின் அணுக்களில் நின்று கொண்டு உன்னை தேடுகிறது. அக்கா 1994 ஆம் வருடம் நீ என்னையும் எங்களையும் விட்டு தேசக்கடமைக்காக பயணித்துவிட்டாய். உன் சித்தப்பாக்கள் தூக்கிய ஆதே ஆயுதங்களை உன் தோழில் சுமக்க துணிந்து சென்று விட்டாய். நானோ உனைத் தேடி அழுவதை தவிர வழியற்றுப்போய்விட்டேன். எங்கே நீ என்று யாருக்கும் தெரியவில்லை. உன் விடுதலைப்பணி அடிப்படைப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு மாலதி படையணியில் தொடர்கிறதாக ஒருநாள் என் தந்தை வந்து கூறிய போது, “அக்காவை நாங்கள் பார்க்க ஏலாதா அப்பா” என்ற வினாவை கேட்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா மறுத்துவிட்டார். அதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றார். நீ சிறப்பு பயிற்சி ஒன்றில் நிற்பதால் சந்திக்க முடியாது என்றார். நான் ஏமாற்றத்தோடு அப்பாவை பார்த்த பின் பெரியப்பாவை பார்த்தேன். அவர் விழிகள் கலங்கி இருந்தது. காலங்கள் மெல்ல அல்ல வேகமாகவே கரைந்து போனது. ஊரில் இருந்து நாம் மல்லாவிக்கு வன்பறிப்பாளர்களால் இடம்பெயரவைக்கப்பட்ட போது நீயும் வன்னிக்கு நகர்ந்திருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் நியமாக நீ எங்கே என்பது யாருக்கும் தெரியாது. நீ படையணியோடு. நாங்கள் படகேறி எங்கள் குடும்பங்களோடு. வன்னிக்கு வந்தும் காலங்கள் ஓடின. என் தந்தை தன் தேசப்பணியோடு. நீ உன் பணியோடு. என் சித்தப்பாவும் நானும் பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்னைத் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்தோம். “கருப்பட்டமுறிப்பு” மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடு தாண்டி வரும் ஒரு சிறு கிராமம். அங்கு தான் நீ உன் படையணியோடு நிற்பதாக உன் படையணி போராளியாக இருந்த எங்கள் உறவுக்காற சகோதரி கூறிய அடுத்த பொழுது உன்னைத்தேடி சித்தப்பாவின் ஈருருளி நகர்ந்தது. முன்னால் இருந்து “கெதியா சித்தப்பா கெதியா “ என்று விரட்டிக்கொண்டிருந்தேன் நான். ஒரு நிமிசம் கூட மணித்தியாலங்களைப்போல நகர்ந்தது. அந்த கிரவல் கூட ஒழுங்காக போடப்படாத காட்டு வீதியில் எங்கள் பயணம் உன்னைத் தேடித் தொடர்ந்தது. உன் முகாம் வந்து சேர்ந்தோம். காவல் கொட்டிலில் நின்ற உன் தோழியிடம் “தளிர் அக்காவின் தம்பி நான் அக்காவ பார்க்க வேணும்.” சித்தப்பாவ கதைக்க விடாமல் நானே கேட்டேன். தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை தோழில் கொழுவிய அந்த அக்கா என் கையை பிடித்துக் கொண்டு என் பெயரைக்கேட்டா. “இப்ப எதுக்கு என்ட பெயர் அக்காவ வரச்சொல்லுங்கோ நான் பார்க்க வேணும்.” என்று அதிகாரமா சொன்னேன். அவாவுக்கு சிரிப்பு வந்திருக்க வேணும் என்று நினைக்கிறேன். கையில பிடிச்சு மெதுவா கிள்ளிப்போட்டு என்ன மிரட்டுறாய் என்று பொய் கோவத்தோடு உள்ளே சென்றா. காத்திருப்புக் கொட்டிலில் உனக்காக காத்திருக்கத் தொடங்கினோம். நீ வருவாய் வருவாய் என்று அந்த அக்கா போன திசையில் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டு வந்த அந்த அக்கா “தளிர் இங்க இல்ல ஆள் ஒரு பயிற்சிக்காக வேற இடத்துக்கு போயிட்டா நீங்கள் சந்திக்க முடியாது” என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பிவிட்டா. நாட்கள் வருடத்தை தின்று தீர்த்தது. யாழ்ப்பாணத்துக்கான பாதை திறக்கவென்று “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” என்று பெயர் வைத்து வவுனியாவில் இருந்து கிளம்பிய இராணுவ நடவடிக்கை பேரலையாக எழுந்து ஆர்ப்பரித்தது. அப்போது எங்கள் படையணிகளின் தாண்டிக்குளத்தில், புளியங்குளத்தில் கனகராயன்குளத்தில் என தொடரான முறியடிப்பு நடவடிக்கைகளில் காலுடைந்து நொண்டியபடி நகர்ந்து கொண்டிருந்தது ஜெயசிக்குறு எனும் அரக்கன். A9 வீதியை குறுக்கறுத்து வன்னியை துண்டாடியபடி யாழ்ப்பாணத்துக்கான பாதையை திறப்பதுவே அந்த அரக்கனின் நோக்கம். அதை முறியடித்து சிறீலங்காவின் படையகத்துக்கு பெரும் அதிர்வை கொடுத்துக்கொண்டிருந்தன விடுதலைப்புலிகளின் அணிகள். அந்த நேரத்தில் தான் “மன்னகுளம்” பகுதியில் வைத்து ஒரு பெரும் திணறடிப்பை செய்தன தலைவன் படையணிகள். அதில் உன் படையணியும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. அதில் நீயும் ஒருத்தியானாய். மகனாருக்கு நிகரானவர்கள் என்று உன் போன்ற மகளாரும் நொண்டிய அரக்கனுக்கு செவியில் உரத்து உரைத்த சண்டை அது. உன் துப்பாக்கியின் ஒவ்வொரு ரவைகளும் தமிழீழ வரலாற்றை எழுதின. நாங்களோ எங்கோ தூரக் கேட்கும் தொடர் வெடிச்சத்தங்களில் பயந்து போய் கிடந்தோம். உனக்கோ இருட்டுக்கும் பயம் இல்லை. கொல்ல வந்த பகைக்கும் பயம் இல்லை. வெடித்த வெடிகளுக்கும் பயம் இல்லை. அதனால் தான் மழையென பொழிந்த வெடிக்குள்ளும் உன் கரங்கள் உறுதியாக எதிர்த்து நின்றன. அக்கா நீ அன்று நிகழ்த்தியது சாதனையல்ல என் வாழ்வுக்கான தியாகம். நான் வாழ வேண்டும் என்று நீ உன்னை ஈந்த ஈகம் அது. நீ உன்னை எனக்காக தியாகித்தாய். நானோ பள்ளியுடையில் பரபரத்துக்கொண்டிருந்தேன். அக்கா நீ வீரச்சாவாம். தகவல் அப்பா ஊடாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது. முத்தையன்கட்டில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அக்காவும் இருந்தார்கள். நாங்கள் மல்லாவியில். பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தோம். உன் திருவுருவப்படம் தான் எனக்காக காத்திருந்தது. நீ உன் வித்துடலைக் கூட நான் பார்க்க கூடாது என்று நினைத்துவிட்டாய் போல. உயிருடன் உன்னைப் பார்க்காத இந்த தம்பி உயிரற்று வீழ்ந்துவிட்ட உன் வித்துடலையுமா பார்க்க கூடாது அக்கா? அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றியது. கருப்பட்டமுறிப்பில் நீ நின்ற முகாமில் காவல் காத்த அதே அக்கா. தம்பி அன்று நீங்கள் வரும் போது அக்கா உள்ள தான் நின்றவா. ஆனால் நீ தன்னை பார்த்தவுடன் “ வா வீட்ட போவம் “ என்று கேட்டால் தன்னால பதில் சொல்ல முடியாது. அவன் அழுவான் என்னை கண்டால் அழுவான் என்று திரும்பத்திரும்ப சொல்லி அழுததாக கூறினா. அதுமட்டுமல்ல உன்னை மறைந்திருந்து பார்த்தா என்றும் கூறினா. அக்கா, உன்னை பார்க்கத்தானே ஓடி வந்தனான். எனக்கு அக்கா தங்கை யாரும் இல்லை. சிறு வயது முதல் பெரியப்பாவின் அல்லது பெரியம்மாவின் பிள்ளைகளான நீங்கள் தானே சகோதரங்கள். உங்களைத்தானே நேசித்தபடி வளர்ந்தேன். இப்படி இருக்க ஏன் உன்னை பார்க்க வந்த என்னை பார்க்காமல் தவிர்த்தாய்? அப்படி நான் என்ன கேட்டுவிடப்போகிறேன் என்னோடு வீட்டுக்கு வா என்று தானே. அதற்கு நீ இல்ல அக்கா இப்ப வரமாட்டன் பிறகு வாறன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே. கேட்டுக்கேட்டு அழ நெஞ்சம் தவித்தது. ஆனால் ஒரு முறையேனும் உன் திருமுகத்தை காண வந்த அன்புத்தம்பியை பார்க்காமல் தவிர்த்து விட்டு நிரந்தரமாக போய்விட்ட உன்னோடு கதைக்க கூடாது என்று அந்த சின்ன வயசு கவிக்கு கோவம் வந்தது அக்கா. அக்கா, உன் தம்பி இப்போது வளர்ந்து ஒரு மகனின் அப்பா ஆகிவிட்டேன். உன் அக்காவுக்கு 3 பிள்ளைகள். நாங்கள் அனைவரும் நலம். என்ன ஒரே கவலை. உன்னைப்போலவே உன் அப்பா, சித்தப்பாக்கள் அத்தை என்று அனைவரும் என்னை விட்டு உன்னோடு வந்துவிட்டார்கள். நீ கண்ட தமிழீழ கனவும் நனவாகாமல் போய் மீண்டும் தான் அந்நிய தேசத்து அகதியாக்கப்பட்டுவிட்டேன். தனித்து நிற்கும் வெளிநாட்டு வாழ்க்கை ரம்ப கசக்கிறது. உங்களோடு மண் வீடு கட்டி விளையாடிய சின்ன வயசு திரும்பி வராதா என்று மனம் ஏங்குகிறது. அக்கா, இறுதியாக முள்ளிவாய்க்காலில் அடிமையாக எதிரியின் கால்களைக்கு மிதிபட்டு நாம் ஏற்றப்பட்ட பேரூந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்த போது காற்றுப் போன நிலையில் நீ உறங்கும் முள்ளியவளை துயிலும் இல்லத்தின் முன் நின்றுவிட்டது. அப்போது தான் உன்னை தேடினேன். அக்கா நீ உறங்கிக் கொண்டிருந்த அந்த புனித பூமி புனிதமற்ற புத்தனின் பேரர்களினால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோலத்தை பார்க்க முடியாது தலையை திருப்பிக்கொண்டேன். உன்னை இனி பார்க்க முடியாது என்று தெரிந்தும் ஏக்கத்தோடு உன் இருப்பிடத்தை பார்த்துக்கொண்டு வந்த அந்த நொடி இன்றும் நினைவிருக்கிறது அக்கா. நிம்மதியற்ற உன் ஆத்மாவுக்கு என்னால் என்ன சொல்லி விட முடியும்? நீங்கள் கண்ட கனவை தொலைத்து விட்டோம். இருந்தாலும் உன் மீதும் உண் தோழர்கள் மீதும் உள்ள நேசத்தை. உறுதி குலைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேன் என்பதை மட்டுமே சொல்ல முடியும். தேடும் விழிகளோடு அன்புத் தம்பி அன்புடன் : இ.இ.கவிமகன் நாள் 20.11.2025
  22. 2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் என்பதை மட்டுமே அறிந்தேன். நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. எம் கல்லூரி நாட்கள் இனிமையாக கழிந்தது. நீ கல்வியில் ஒரு படி மேலே இருந்தாய். உன் சிந்தனை முழுவதும், உன் இலக்கு முழுவதும் ஒரே ஒரு விடயத்தில் தான் குவிந்து நின்றது. அந்த பாடத்திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளையும் சிறப்பாக கற்றுத் தேற வேண்டும். அந்த நோக்கத்தில் மட்டுமே உன் ஒவ்வொரு வினாடிகளையும் நீ செதுக்கிக் கொண்டாய். கேணல் சார்ள்ஸ் அண்ணாவின் வீரச்சாவு நிகழ்வில் நீ வரி உடையுடன் வருவதை கண்ட எம்மில் பலருக்கு அதிர்ச்சி. நீ ஒரு போராளியா என்ற அங்கலாய்ப்பு. அதுவரைக்கும் நீ ஒரு போராளி என்பதை எம்மில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அன்று எல்லோருக்கும் தெரிந்தது நீ காக்கும் உன்னை பற்றிய இரகசியத்தின் தன்மை. படையப்புலனாய்வின் பணிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் ஒன்றுக்காக நீ கற்க வந்திருந்தாய். வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் இரகசிய போராளிகளுக்கான தொடர்பாடல்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு மென்பொருளை உருவாக்க நீ முனைந்தாய். இரகசிய போராளிகள் பற்றிய இரகசிய விபரக்கோவைகளை பாதுகாக்கும் மென்பொருளையும் உருவாக்க முனைந்தாய். நிச்சயமாக அவை மட்டுமல்ல அதை விட நிறைய மென்பொருள்களை உருவாக்கி இருக்க வாய்பிருந்திருக்கும். இருப்பினும் அவற்றின் முழு விபரங்களை நான் அறிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உயர் தொழில்நுட்பக்கற்கை முடிந்து அவரவர் பணிகளுக்கு திரும்ப முந்திய பொழுதொன்றில் உன் உயிரொன்றையும் எமக்கு அறிமுகப்படுத்திவிட்டு நீ உன் பணிக்குத் திரும்பிவிட்டாய். காலம் நகர்ந்து தொலைந்தது. 2008 ஐப்பசித்திங்கள் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து நகர்ந்து விசுவமடுவில் எமது கல்லூரியை அமைத்தோம். நீ படையகப்புலனாய்வின் படையணியில் ஒருவனாகி விட்டாய். நிர்வாக வேலைகள் குறைந்து களமுனை உன்னை அழைத்துக்கொண்டது. உன் கரங்கள் நீ விரும்பிய ஆயுதத்தை வெளிப்படையாக பற்றிக்கொண்டது. நாங்கள் நடைப்பிணங்களாக நடந்து கொண்டிருக்க நீ உன் அணியோடு எதிரியை மறித்து முறியடிப்புச்சமரை செய்து கொண்டிருந்தாய். சுதந்திரபுரத்தில் என் வீட்டுக்கு திடீர் ஒன்று ஒருநாள் வந்தாய். அது உன் உயிரின் சந்திப்புக்கான நாளென்று நான் நினைக்கிறேன். ஏதேதோ எல்லாம் கதைத்துக்கொண்டிருந்தாய். பாணும் சம்பலும் சாப்பிட்டாய். “அம்மா இது தான் உங்கட கையால சாப்பிடுற கடைசிச்சாப்பாடோ தெரியாது” சொல்லிவிட்டு அம்மாவிடம் முறையான திட்டையும் வாங்கியபடி சென்று விட்டாய். உன்னை அதன் பின் சந்தித்தது நீ காயப்பட்டு சில நாட்கள் மருத்துவ ஓய்வுக்காக வந்து இரட்டைவாய்க்காலில் நின்ற போது. இருவரும் நீண்ட நாட்களின் பின் கிணற்றடியில் ஒன்றாக குளித்தோம். பழைய கதைகள் கதைத்தோம். சிரித்தோம் கவலைப்பட்டோம். மீண்டும் பிரிந்துவிட்டோம். நீ களமுனை நோக்கி நான் கடற்கரையில் இருந்த என் தறப்பாள் கொட்டகை நோக்கி. திடீர் என்று ஒரு நாள். எங்கள் நண்பன் சசி வந்தான். நீ ஒரு அணியை வழிநடாத்தியபடி எதிரியின் எல்லை தாண்டி உள்நுழைய முற்பட்ட போது சிங்கள வல்லாதிக்கப்படைகளின் சினைப்பர் அணியால் தாக்கப்பட்டதாய் கூறினான். நீ உள்நுழைந்தது பாதை ஏற்படுத்திய உடனே உள்நுழைய காத்திருந்த தன் அணியை பின்நகருமாறு கட்டளை வந்ததால் தான் மீண்டு விட்டதாகவும் கூறினான். அவன் கண்கள் கலங்கின. பழகிய நாட்கள் நெஞ்சுக்குள் குருதியோட்டத்தை அதிகரிக்க வைத்து இதயத்துடிப்பு அதிகரித்தது. உன்னை எப்படியாவது இறுதியாகப் பார்த்துவிட துடித்து இருவரும் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லம் ஓடி வந்தோம். ஆனால் உன்னை காணமுடியவில்லை. அவர்கள் விதைத்துவிட்டார்கள். உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால் அதை தாண்டி நண்பர்கள் நாங்கள் அருகில் இருந்தோம். உனக்காக அழ உன்னை நேசித்தவர்கள் இருந்தோம். எமக்காக உயிர் ஈந்த உயிர் தோழனே உன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு வந்தவருக்கு நீ வேறு நண்பர்களினால் விதைக்கப்பட்டுவிட்டாய் என் செய்தி மட்டுமே கிடைத்தது. உன் விதைகுழியின் மேல் விழியில் இருந்த வழிந்த நீரை படையலாக்க மட்டுமே எங்களால் முடிந்தது. நீ படைக்கத் துடித்த தமிழீழத்துக்காக நீ விதையாகிவிட நாமோ உன் கனவுகளை முள்ளிவாய்க்காலில் புதைத்துவிட்டு ஏதிலியாகிவிட்டோம். நண்பனே…! சேர்ந்திருந்த நாட்கள் கொஞ்சம் எனிலும் நினைவுகள் ஏராளமடா. அருகில் இருந்தும் உன் திருமுகத்தை பார்க்க முடியாத வேதனையோடு உன் விதைகுழியில் ஒரு பிடி மண்ணைப் போட்டு இறுதி வழியனுப்பலை செய்ய முடியாத துயரத்தோடு… இ.இ.கவிமகன் நாள்: 22.11.2025
  23. நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது தான் நீ எனக்கு அறிமுகமாகினாய். அப்போதெல்லாம் அகிலன் அண்ணா என்று தான் உனை அழைப்பேன். நீங்கள் இரட்டைக் குழந்தைகள். ஒரே வயிற்றில் பிறந்த மற்றவன் நிமலன். உங்கள் இருவரையும் இனங்கண்டு கொள்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. அடிக்கடி உன்னை நிமலன் அண்ணா என்றும் அவனை அகிலன் அண்ணா என்றும் மாறி அழைத்திருக்கிறேன். உன் தம்பி தான் “டேய் மண்டு அது நிமலன் அண்ணா இல்ல அகிலன் அண்ணா “ என்பான். எப்படியோ நீங்கள் இருவருமே என் அண்ணன்களாகிப் போன நாட்களில் மல்லாவியில் உன் குடும்பமும் என் குடும்பமாகியதை நீ நன்றாகவே அறிவாய். நான் நினைக்கிறேன் 1999 என்று. திடீர் என்று நீ காணாமல் போனாய். காரணம் உடனடியாகவே எமக்கு நன்றாகவே தெரிந்தது. நிமலன் அண்ணாவை தனிய விட்டு எப்படி உன்னால் போக முடிந்தது? உன் அக்கா அழுது குழறினா. ஏற்கனவே ஒரு தம்பியையும் தன் கணவனையும் போராட்டத்துக்காக அனுப்பிவிட்டுத் தினமும் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் உன் அக்காவை விட்டு எப்படி போக முடிந்தது? உன் அம்மா பற்றி யோசித்தாயா? அப்பாவின் இறப்புக்கு பின் உங்கள் அனைவரையும் எவ்வளவு போராட்டத்தோடு வளர்த்து வந்தா? உன் குட்டி மருமகள்? இது எதுவுமே உனக்கு அன்று தோன்றவில்லையா அகிலன் அண்ணா?. ஓ… இது தான் தேசம் மீதான காதலா? உன்னோடு கூடப்பிறந்தவன் மீதான பாசத்தை விட அம்மா அக்கா என்று குருதியில் ஒன்றாகிய உறவுகளின் மீதான அன்பை விட தேசம் மீதான காதல் அதிகம் என்பது இது தானா? நீ உன் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற நீல வரியுடுக்கத் துணிந்து சென்றுவிட்டாய். உறவுகளோடு நாங்களும் நீ எம்மோடு அருகில் இல்லாத வெறுமையை நினைத்து கஸ்டப்பட்டோம். நீண்ட நாட்களுக்குப் பின் நானும் நிமலன் அண்ணாவும் உனைக் காணவென்று கைவேலிப்பகுதியில் இருந்த உன் முகாமுக்கு வந்திருந்தோம். நீ அங்கில்லை மாத்தளன் முகாம் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக கூறினார்கள். சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அந்த காட்டுப்பாதைக்குள் ஈருருளி எம்மை சுமந்து கொண்டு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியை நோக்கி சென்று கொண்டிருக்க உன் பொறுப்பாளர் வந்தார். நீ என்று நினைத்து நிமலன் அண்ணைக்கு சில விடயங்களைச் சொல்ல தொடங்கினார். நிமலன் அண்ணையோ “ அண்ண நான் செஞ்சேரன் இல்லை செஞ்சேரனின் தம்பி நிமலன்” என்றான். “ டேய் உங்களோட பெரிய பிரச்சனையடா… என்று புன்னகைத்தார். நாங்களும் புன்னகைத்தபடி நகர்ந்துவிட்டோம். மருதங்கேணி மண் தமிழீழத்துக்காக தந்த செஞ்சேரா, திடீர் என்று ஒருநாள் விடுமுறையில் வந்தாய். அந்த குறுகிய விடுமுறை நாட்கள் எம் எல்லோருக்கும் சந்தோசமான நாட்கள். ஒட்டங்குளம் , பேராறு , வவுனிக்குளம் அது இது என்று மல்லாவியின் அழகிய இடம் அனைத்திலும் நின்று நிழல்படம் எடுத்து மகிழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் பசுமையானவை. பெரும்பாலும் நாங்கள் நால்வரும் தான் சுற்றித்திரிந்தோம். படிக்க மறந்தோம். உன்னோடு மகிழ்ந்திருக்கவே விரும்பினோம். நாட்கள் கடந்து நீ மறுபடியும் முகாம் திரும்ப வெளிக்கிட்ட போது மனமின்றியே விடைபெற்றோம். 2001 ஐப்பசி மாதம் 21 அன்று உன் அண்ணா தேசத்துக்காக ஆகுதியாகிப்போக மல்லாவி மண் துடித்தது. நீயும் சோர்ந்து போய் இருந்தாய். அதே நேரம் உன் அக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனே உன் அண்ணாவாகி போய்விட்டான். அண்ணனின் பெயரையே அக்கா தன் குழந்தைக்கு வைத்தா. உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகிய தன் சகோதரனை தினமும் தன் மகனின் முகத்தில் பார்க்கத் தொடங்கினா. தேசப்பணிக்காக நீ மீண்டும் நிமிர்ந்தெழுந்து சென்றுவிட்டாய். அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. உன் பணி அதிகமாக கடல் மீது இருப்பதாக அறிந்தோம். செஞ்சேரா, எம் தேசம் பெரும் வெற்றிகளைப் பெற்று யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகள் எம் கைகளில் வந்த போது, நீயும் உன் தோழர்களும் மருதங்கேணியை அண்டிய பகுதிகளிலே பணியாற்றினீர்கள். சமாதானம் (2002 ) என்ற பொல்லாத உயிர்கொல்லி எம் மீது திணிக்கப்பட்ட போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். ஆனால் அதிகமாக நின்று கதைக்க உனக்கு நேரம் இருக்காது நீ ஓடிக்கொண்டே இருப்பாய். ஒரு நாள் உனை சந்திக்க வந்திருந்த என்னோடு பேசிக்கொண்டிருந்தாய். அப்போது கிபிர் வருவதற்கான எச்சரிக்கை வந்ததோ என்னவோ அவசரமாக என்னை அனுப்பி விட்டு உன் படகையும் அதற்கான எரிபொருளையும் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்துக்கு ஓடினாய். ஏனெனில் உன்னை விட உன் உயிரை விட அவற்றின் மீதே உனக்கு அதிகமான நேசம். அவற்றை காத்திட வேண்டும் என்ற துடிப்பு அதனால் நீ ஓடினாய். 2006.08.11 ஆம் நாள் மீண்டும் மருதங்கேணி விட்டு இடம்பெயர வேண்டிய சூழல். அங்கிருந்து நகர்ந்து வள்ளிபுனம் பகுதியில் அம்மாவும் அக்காவும் இருந்தார்கள். 2007 மார்கழித் திங்கள் அக்காவுக்கு குழந்தை பிறக்க இருந்தது. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து பெரும் மகிழ்வு. மருத்துவமனையில் அக்கா பிரவசத்துக்காக அனுமதிக்கப்பட்ட அதே நேரம், பருத்தித்துறை கடற்பகுதியில் உன் படகிற்கும் சிங்கள கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் உருவெடுத்தது. நீ உன் அணியினரோடு கடுமையான சண்டையிட்டாய். உனக்கு உதவிக்காக எமது சண்டைப்படகுகள் விரைந்தன. எதிரியின் டோராக்களை ஓட ஓட அடித்துத் துரத்தின. ஆனாலும் உன் படகு எதிரியின் குண்டடிபட்டு இயங்கு நிலையில் இல்லை. தாக்குதலை தாங்கிக்க முடியாது ஓடிய சிங்களத்தின் சண்டைப்படகுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் முழு வேகத்துடன் எம் படகுகள் மீது பாய்ந்தன. அந்த பாச்சலில் நீ எம்மை விட்டு பிரிந்து விட்டாய் என்ற செய்தி எங்கள் செவிகளுக்குள் ஆறாத துயரத்தோடு வந்து சேர்ந்தது. அக்காவை பார்க்க வீட்டுக்குச் சென்ற எனக்கு உன் அதிர்ச்சி செய்தியே கிடைத்தது. உன் நண்பர்கள் வந்தார்கள். சம்பவத்தை கூறினார்கள். வீடு அதிர்ந்து போனது. ஐயோ ஐயோ என்ற குரல்கள் வானெழுந்தன. அருகில் இருந்த உறவுகள் வீட்டில் கூடினார்கள். மஞ்சள் சிகப்பு கொடிகள் உன் வீடெங்கும் நிறைந்து கிடந்தன. தகரக்கொட்டகை போடப்பட்டு புலிக்கொடியின் முன்னே நீ திருவுருவப்படமாக இருந்தாய். பூக்கள் உன் மேல் மாலைகளாகவும் இதழ்களாகவும் கிடந்தன. நெஞ்சு வெடிக்கும் சோகம் எங்கள் எல்லோருக்கும் நிறைந்து கிடந்தது. அகிலன் அண்ணா. டேய் செஞ்சேரா, எப்படிடா உன் பிரிவை இந்த குடும்பம் தாங்க போகிறது? அக்காவுக்கு எப்படிடா நாங்கள் உன் வீரச்சாவை சொல்வது? அம்மா எத்தனை இழப்புக்களை தாங்குவா? உன் சகோதரனை எப்படிடா நாங்கள் தேற்றுவது? பதில் இல்லாத வினாக்கள் வந்து நினைவுகளை உலுப்பியது. நீ விரும்பி இருந்தால் உன் அணியோடு கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் நேசித்த உங்கள் படகினை விட்டு வர மாட்டம் என்று எதற்காக பிடிவாதமாக நின்றீர்கள். ஓ…நான் ஏற்கனவே கேட்டதைப்போல இது தான் தமிழீழ தேசம் மீதான உங்கள் காதல் அல்லவா. நீ சென்று விட்டாய். இப்போது உன் அக்கா மடியில் மகன் ஒருவன் செஞ்சேரனாக வந்து பிறந்துவிட்டான். அவன் முகத்தில் இனி வரும் காலம் எல்லாம் அக்கா உன்னைக் காண்பாள். உன் மருமக்கள் இருவரின் முகத்திலும் அம்மா உன்னையும் அண்ணாவையும் வாழ்நாள் முழுவதும் காண்பா. நாங்களும் உங்கள் நினைவோடே அவர்களை காண்போம்… உன் அக்காவின் இணையும் இறுதி நாளில் முல்லைத்தீவில் வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டுவிட்டார். அவரின் இருப்பையும் நாம் யாரும் அறிய முடியவில்லை. அண்ணா உன்னை இறுதியாக கண்ட அன்று எனக்காக நீ ஒரு பரிசு தந்தாய். அதில் தேசத்தின் அண்ணன் நீல வரியோடு நிற்கும் படமும் மறுபுறம் கடற்புலிகளின் இலட்சனையும் பிரதிபண்ணப்பட்டிருந்தது. அதை என் உந்துருளியின் சாவியில் அதை நான் கொழுவி வைத்திருந்தேன். 2009 மே 16 ஆம் நாள் இரவு வரை அதை நான் தவற விடவில்லை. கவனமாக பாதுகாத்தேன். ஆனால் எதிரியின் காலடிக்குள் அடிமையாக சென்ற அந்த பொல்லாத நாளில் உன் பரிசையும் என் அப்பாவின் தகட்டோடும் எழுத்துக்களோடும் சேர்த்து நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்குள் போட்டு தாட்டுவிட்டேன். அதுவும் உன்னைப் போலவே அமைதியாக உறங்கும். ஆழ்கடலின் அலைகளுக்குள் நீ அமைதியாகி விட்ட பொழுது இன்றும் நெஞ்சுக்குள் வந்து நெருடிக்கொண்டிருக்கிறது. செஞ்சேரன் அண்ணனுக்காக, இ.இ.கவிமகன். நாள் :24.11.2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.