Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1460686
  3. தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்! தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார். பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத்தி வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்தப் பாடப்புத்தகம் குறித்த முறையான புகாரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460621
  4. தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டங்கள் தொடர்பில் எமது கட்சிக்கோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கோ மக்கள் பிரதிநிதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புக்களும் விடப்படவில்லை. அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. வெறுமனே அரச நிதியில் என்பிபி அல்லது ஜேவிபி கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து சோ காட்டி இருக்கின்றனர். எனவே அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் சோ காட்டுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் என்பிபியினர் வடக்கிற்கு வந்து சோ அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலெடுத்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கம் தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் விமர்சிப்பதோ கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியமோ இல்லை. அதேபோன்று இந்த விவகாரத்தில் அனுர தரப்பு குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது – என்றார். https://athavannews.com/2026/1460642
  5. ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது! கடந்த ஜனவரி 16 அன்று கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் காயமடைந்தனர். நேற்று (19) மற்றும் அதற்கு முந்தைய நாள் (18) ஆகிய இரு தினங்களிலும், ஜிந்துபிட்டிய மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் கடலோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது. அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதற்காக 04 கிராம் 800 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்பதுடன் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது ஒரு சந்தேக நபரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் மீதமுள்ளவர்களை ஜனவரி 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்துறையினரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460655
  6. நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! 20 January 2026 கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், "எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/441611/denmark-not-awarding-nobel-prize-trump-is-eager-to-take-over-greenland-as-revenge
  7. நீங்களும், சுத்துமாத்து சுமந்திரனும் காட்டுற "சோ" வை விட, இது பரவாயில்லை. போய்... நித்திரை குளிசைசையை போட்டுட்டு, குப்புற படுங்கோ.
  8. ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்! செய்திகள் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியது ஆளும் கட்சி அல்ல எனவும் அது எதிர்க்கட்சியே எனவும் கூறியதுடன், அரசாங்கம் கூறுவதற்கமைய அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkm7z2jt0464o29ny1pimdpv
  9. அலுவலகத்தில் பெண்களுடன் நெருங்கிய தொடர்பு; மூத்த இந்திய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்! தனது அலுவலகத்தில் பெண்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து காவல் துறை தலைமை பணிப்பாளர் (DGP) அந்தஸ்துள்ள மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கர்நாடக அரசு இன்று (20) பதவி நீக்கம் செய்தது. இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர் டிஜிபி ராமச்சந்திர ராவ் ஆவார். பொது அலுவலகத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் நடத்தை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் பொதுமக்களின் சீற்றத்திற்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகத்தை எட்டியதும், அவர் திங்களன்று சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெற்றார். ஒரு நாள் கழித்து, அதாவது இன்று மாநில நிர்வாகம் மூத்த காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. சர்ச்சைக்கு மத்தியில், இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க ராமச்சந்திர ராவ் இந்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தார். எனினும், அந்த சந்திப்பு அவரது இடைநீக்கத்தைத் தடுக்க முடியவில்லை. https://athavannews.com/2026/1460632
  10. 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – adminJanuary 20, 2026 தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். “எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார். மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார். https://globaltamilnews.net/2026/226891/
  11. ⚖️ செம்மணி புதைகுழியின் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு adminJanuary 20, 2026 யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதைகுழி அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே இருந்த வீதியை, நல்லூர் பிரதேச சபையினர் அண்மையில் செப்பனிட்டுள்ளனர். இது அகழ்வுப் பணிகளுக்கும் சாட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளோ அல்லது கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் சட்டத்தரணிகள் கடுமையாக வலியுறுத்தினர். சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அனுமதியின்றி நிலத்தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம், புதைகுழியில் மறைந்துள்ள உண்மைகளும் சாட்சியங்களும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/226891/
  12. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460
  13. அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471
  14. ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459
  15. ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236502
  16. Today
  17. ஓம் சித்தி, பெரியம்மா எவருமே அசாதாரணமானோராக இருக்க வேண்டியதில்லை.
  18. இது வெஸ்ட்பாங்க் இஸ்ரேல் பகுதி உடன்பாடு போன்ற ஒன்றிற்கு வரலாம் (வெஸ்ர்பாங்க் பலஸ்தீனம் ஆனாலும் நிர்வாக அலகால் இணைக்கப்பட்ட).
  19. கிறீன்லாந்தினை சில நிபந்தனைகளுடன் ஐரோப்பா விட்டுக்கொடுக்கும் என நம்புகிறேன்.
  20. நேட்டோ நிச்சயமாக உடையாது என நம்புகிறேன். 2025 வெளியான அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கை மூலம் தன்னிச்சையான ஐரோப்பாவினை விரும்புவதனை அமெரிக்கா தெளிவான கொள்கையாக கொண்டுள்ளது, அதற்கு காரணம், அமெரிக்காவினால் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு இனிமேலும் பணம் செலவழிக்க முடியாத நிலை, அத்துடன் ஐரோப்பா அமெரிக்க எதிரி எனும் வாதத்திலும் எனக்கு உடன்பாடில்லை, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா தவிர்க்க முடியாத தெரிவு. இருதரப்பும் இராணுவ ரீதியான ஒத்துழைப்பு தொடரும் நிலையே காணப்படுகிறது. இரஸ்சியாவும் சீனாவும் அமெரிக்க தரப்பு எதிர்த்தரப்பிலேயே பேணவிரும்புகிறது, சீனாவினை தனது போட்டியாளர் நிலையில் அமெரிக்கா பார்க்கிறது, இரஸ்சியாவினை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இரையாக பாவிக்கின்றது ஆனாலும் தனது எரிசக்திக்கு போட்டியாக இரஸ்சியாவை தொடர்ந்தும் பார்க்கின்றது. இந்த கிறீன்ட்லான்ட் விவகாரத்தில் இருதரப்பும் நிகழ்வுகளும் ஒரு நாடகமாகவே கருதுகிறேன். இரஸ்சியா மிகப்பெரிய இராணுவ சக்தியில்லை என்ற புரிதல் இரஸ்சியாவிற்கும் இருக்கும் என கருதுகிறேன், ஆனால் ஐரோப்பாவிற்கு ஆபத்து எனும் கதை பேணப்படுவதன் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு. அண்மையில் பிரான்ஸ் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தது 2/3 பங்கு உளவுத்தகவல்களை தற்போது உக்கிரேனுக்கு தாமே வழங்குவதாக என்பது ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றினது ஆற்றல் பற்றிய புரிதலுக்கு இலகுவாக இருக்கும். https://www.facebook.com/DefenseChannel/videos/macron-says-france-now-provides-majority-of-intelligence-support-to-ukraine/1872783746685712/ https://kyivindependent.com/france-replaces-us-as-main-intelligence-provider-to-kyiv-macron-says/
  21. இது பல நெடுங்காலமாக நடக்கும் ஐரோப்பிய மேலாண்மைக்கான போட்டிதான். The Great Game என ஒரு காலத்தில் ரஸ்யாவும், பிரிட்டனும் இதை மத்திய ஆசியா வரை விரித்தன. ஆனால் ஐரோப்பாவை பொறுத்தவரை எப்போதும் ரஸ்யா, பிரிட்டன், பிரான்ஸ். ஜேர்மனி என்பன சமவலு நாடுகளே. இப்போதும் இதில் மாற்றமில்லை. சோவியத் காலத்தில் கூட வோர்சோ கூட்டு, நேட்டோவுக்கு இணையாகவே இருந்தது. நேட்டோவில் அமெரிக்கா இருப்பதால், சோவியத் உடைந்ததால் இந்த சமநிலை 1991 இன் பின் குழம்பி இருந்தது. அதை மீள பெறுவதே புட்டினின் வாழ்நாள் இலட்சியம். இதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக பயம் இல்லை. பிரிட்டனும், பிரான்சும் அணு ஆயுத நாடுகள். ஜேர்மனி அதே நிலைக்கு வர ஐந்து வருடம் போதும். இத்தாலி கூட மோசமில்லை. இவர்களோடு ஏலவே ரஸ்யாவுக்கு மரண பயத்தை காட்டிய பின்லாந்து, உக்ரேன் போன்ற நாடுகளும் சேர்ந்தால். ரஸ்யா வாலாட்ட முடியாது. ஆனால் - ரஸ்யா அருகே இருக்கும், போலந்து, பால்டிக் நாடுகள் பாடு சிக்கல்தான். இதனால்தான் இவை கிரீன்லாந்து விடயத்தில் அடக்கி வாசிக்கிறன. நேட்டோ உடைந்தால், இந்த நாடுகள் மீளவும் ரஸ்யா வட்டத்துள் வலுக்கட்டாயமாக இழுக்கப்படும். ஐரோப்பா மீள மேற்கு, கிழக்கு என பிரியும். 35+ வருடம் அதன் கிழக்கு எல்லை நாடுகளை தவிர வேறு எங்கும், யுத்தத்தை காணாத, பல சிறிய இனவழி தேசிய நாடுகளில் ஜனநாயகம் துளிர்விட்ட காலம் முடிவுக்கு வரும். இதைத்தான் ரஸ்யா விரும்புகிறது. காரணம்? முன்பு ஷார் மன்னரின், பின் கம்யூனிஸ்டுகளின், இப்போ புட்டின் மாபியாவின் ரஸ்யாவுக்குள்ளான அதிகாரத்தை தக்க வைக்க, ரஸ்யாவுக்கு வெளியே ஆக்கிரமிப்பை செய்வது அவசியமாகிறது.
  22. Yesterday
  23. இலங்கை நிலவரம் பற்றியதுதான் செய்தி, இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா? இது தெரிஞ்சிருந்தா நானும் எப்பவோ டாக்டர் சுங்கப்பா ஆகியிருக்கலாம்.
  24. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் முறுகல் போக்கைத் தொடர்ந்தால் நிலமை மிகவும் மோசமாகும்.ஐரோப்பியநாடுகள் பொருளாதார வலிமை மிக்க நாடுகள்.அமெரிக்ககண்டத்தில் அமெரிக்க கனடா தவிர பெரிய பொருளாதாரம் மிக்க நாடுகள் இல்லை. ஐரோப்பிய நாடுகள் உக்கிரைன் விடயத்தில் ரஸ்யாவை எதிர்த்தாலும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.இந்தியா சீனா போன்ற நாடுகளும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.அமெரிக்கா வரிகளை விதித்தால் இந்த வரத்தகம் மேலும் கூடும்.அனைத்து நாடுகளுக்கும் சகட்டுமேனிக்கு வரிவிதித்தால் அமெரிக்க வர்த்தகத்தைப்புறக்கணித்து நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு வழிகளில் அதனை அடைய முயற்சிக்கும்.அமெரிக்கா தனித்து விடப்படும். இந்த நிலமை தொடர்ந்தால்என்னதான்அமெரிக்கா வலிமையான நாடாக இருந்தாலும் தனித்து விடப்படும்.அப்போது அதன்நிலை மோசமாகும். அனால் அப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு உடன்பாட்டு வந்து விடுவார்கள். ட்ரம்புக்கு இன்னும் 3 ஆண்டுகள்தான் இருக்கின்றன.
  25. அமெரிக்க பாதுகாப்பு செலவீடு நேட்டோவிற்கான செலவு 65% மொத்த அமெரிக்க பாதுகாப்பு செலவினை 1 ரில்லியன் என எடுத்துக்கொண்டால் 650 பில்லியன். 2024 இல் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி பெறுமதி வெறும் 318.7 பில்லியன் அதில் வரும் தேறிய இலாபம் மிக சொற்பமானது, அமெரிக்க ஆயுத இறக்குமதியில் பெரும்பான்மை ஐரோப்பா என கூறப்படுகிறது. கிழே உள்ள இணைப்பில் அதன் விபரம் உள்ளது. Ed Nash's Military MattersEurope Without America? What’s the Costs? - Defense News...Recent issues have raised the possibility of the United States pulling out of Europe. If that happens, what's at stake and what's the costs?அமெரிக்க அரசு பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளது, அது தன்னை தக்க வைக்க எடுக்கும் முயற்சிகளின் சிதறும் விளைவுகள் தற்போதய நிகழ்வுகள் என கருதுகிறேன்.
  26. 'ஒற்றை ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு' பற்றிய ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வை ஐரோப்பிய பாதுகாப்புக்கான பல வருட ரஷ்ய திட்டங்கள் 2008 ரஷ்ய-ஜார்ஜியப் போரால் மறைக்கப்பட்டன. (புகைப்படம்: யூரியல் சினாய்/கெட்டி இமேஜஸ்) 17 ஏப்ரல் 2025 பகிர் மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் உக்ரைன் போருக்காக அர்ப்பணிக்கப்பட்ட பரந்த அளவிலான பகுப்பாய்வுகள் மற்றும் தொடர்ச்சியான விவாதங்கள் இருந்தபோதிலும், ரஷ்யா உண்மையில் என்ன விரும்புகிறது மற்றும் அதன் நோக்கங்கள் என்ன என்பதில் இன்னும் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. புடின் பழைய ரஷ்ய அல்லது சோவியத் சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டமைக்கப் பார்க்கும்போது, பழைய பாணியிலான பிரதேசங்களைக் கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் என்று நம்புபவர்களும் உள்ளனர் (விமர்சகர்கள் அது எது என்று ஒருபோதும் உறுதியாகத் தெரியவில்லை). மற்றவர்கள், நேட்டோவை அரசியல் ரீதியாக அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம் என்று நம்புகிறார்கள், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் "சுதந்திரமான" நிலங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் ஒரு முடிவுக்கு வருவதற்குப் பதிலாக. ஆனால் ரஷ்யா மேற்கு நோக்கி மேலும் விரிவாக்கம் செய்ய இயலாது என்றும், உக்ரைனை ஆக்கிரமிக்கக் கூட முடியாது என்றும், எனவே புதின் உண்மையில் நேட்டோவுடனான போரில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதில் அவரால் வெற்றி பெற முடியாது என்றும் ஒரு கருத்து உள்ளது. இவை அனைத்திற்கும் இடையே, கேள்வி தொடர்கிறது: இறுதியில் ரஷ்யா உண்மையில் என்ன விரும்புகிறது? இந்த முக்கியமான கேள்வி இப்போது அமெரிக்காவால் மேற்பார்வையிடப்படும் தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறையால் மேலும் மறைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக உக்ரைன் தொடர்பாக ரஷ்யா என்ன விரும்புகிறது என்பதில் உலகளாவிய கவனம் செலுத்தப்படுகிறது . இருப்பினும், இதைப் பார்ப்பதற்கான தவறான வழியாக இது இருக்கலாம். மாறாக, தொடக்கப் புள்ளி ரஷ்யாவின் மேலோட்டமான மகத்தான மூலோபாய வடிவமைப்பாக இருக்க வேண்டும், அதில் உக்ரைன் ஒரு அம்சம் மட்டுமே. மாஸ்கோவின் மிக உயர்ந்த யோசனை அல்லது அதன் சொந்த பாதுகாப்பு பற்றிய கருத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தை மேசையில் புடினைச் சமாளிப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய உதவும். மேலும் உண்மை என்னவென்றால், ரஷ்யா தனது பாதுகாப்புக் கண்ணோட்டத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பது குறித்து மிக நீண்ட காலமாக மிகவும் நிலையானதாக இருந்து வருகிறது . பனிப்போர் முதல் ரஷ்யா "அட்லாண்டிக் முதல் யூரல்ஸ் வரை" பரவியிருக்கும் ஒரு கூட்டுறவு கட்டமைப்பாகக் கருதப்பட்டு, "பிரிக்க முடியாத பாதுகாப்பு" என்ற கொள்கையில் அடித்தளமாக இருக்கும் ஒற்றை ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் கருத்தை ஆதரித்து வருகிறது - அதாவது எந்தவொரு அரசின் பாதுகாப்பையும் மற்றொருவரின் செலவில் மேம்படுத்தக்கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 1970 களில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டு, பல தசாப்த கால புவிசார் அரசியல் மாற்றங்களின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட இந்த தொலைநோக்கு, மேற்கத்திய ஆதிக்க பாதுகாப்பு கட்டமைப்புகளை, குறிப்பாக நேட்டோவை எதிர்த்துப் போராடி குறைமதிப்பிற்கு உட்படுத்தி, ஐரோப்பாவில் சமமான பங்காளியாக அதன் பங்கைப் பாதுகாப்பதற்கான ரஷ்யாவின் மூலோபாய நோக்கத்தை பிரதிபலிக்கிறது. ரஷ்யாவின் தொலைநோக்குப் பார்வையின் வேர்கள் 1975 ஆம் ஆண்டு ஹெல்சின்கி இறுதிச் சட்டத்தில் உள்ளன , இது ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மாநாட்டின் (CSCE) கீழ் 35 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இந்த ஆவணம் " பாதுகாப்பின் பிரிக்க முடியாத தன்மை " என்ற கொள்கையை உட்பொதித்தது, இது சோவியத் யூனியன் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கிழக்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கு மண்டலத்தை சட்டப்பூர்வமாக்கப் பயன்படுத்தியது. ஹெல்சின்கி சட்டம் வெளிப்படையாக ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை முன்மொழியவில்லை என்றாலும், மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணிகளின் எந்தவொரு விரிவாக்கமும் கண்ட சமநிலையை மீறுவதாகும் என்ற பிற்கால சோவியத் மற்றும் ரஷ்ய கூற்றுக்களுக்கு இது கருத்தியல் அடித்தளத்தை அமைத்தது. ஹெல்சின்கி யோசனையை அடிப்படையாகக் கொண்டு அதை ஒரு கணிசமான புவிசார் அரசியல் பார்வையாக மாற்றியவர் மிகைல் கோர்பச்சேவ் தான். ஜூலை 6, 1989 அன்று ஐரோப்பிய கவுன்சிலில் நிகழ்த்திய உரையில் , கோர்பச்சேவ் "பொது ஐரோப்பிய வீடு" என்ற கருத்தை வெளிப்படுத்தினார் - இது இராணுவ முகாம்களால் அல்ல, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பால் வரையறுக்கப்பட்ட இடம். டி கோலால் முதன்முதலில் முற்றிலும் புவியியல் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட " அட்லாண்டிக் முதல் யூரல்ஸ் வரை " என்ற சொற்றொடர், இப்போது கோர்பச்சேவால் ஒரு அரசியல் கருத்தாக மீண்டும் உருவாக்கப்பட்டது, இது சோவியத் யூனியனை பிராந்திய ஒழுங்கின் சட்டபூர்வமான இணை-கட்டமைப்பாளராக உள்ளடக்கிய ஐரோப்பாவைக் குறிக்கிறது . சோவியத் சீர்திருத்தவாதத்தின் வீழ்ச்சியடைந்த ஆண்டுகளில், இந்த பார்வை மேற்கு நாடுகளுக்கு ஒரு சித்தாந்த பாலமாகவும், சோவியத் ஒன்றியத்தின் மூலோபாய வீழ்ச்சியை நிர்வகிப்பதற்கான ஒரு பொறிமுறையாகவும் செயல்படும் நோக்கம் கொண்டது. சோவியத்துக்குப் பிந்தைய காலத்தில், போரிஸ் யெல்ட்சினின் கீழ் ரஷ்யாவின் பலவீனமான அரசு ஆரம்பத்தில் கண்ட விவகாரங்களை வடிவமைக்கும் அதன் திறனைக் குறைத்தது, ஆனால் ஒரு பான்-ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பின் பார்வை நீடித்தது. CSCE இன் வாரிசான ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE), ஐரோப்பிய பாதுகாப்பின் மீதான நேட்டோவின் "ஏகபோகத்தை" எதிர்க்க ரஷ்யா முயற்சிக்கும் நிறுவன வாகனமாக மாறியது, மேலும் அதன் மூலம் அது ஒரு உள்ளடக்கிய பாதுகாப்பு அமைப்பை ஆதரித்தது. நவம்பர் 1999 இல் நடந்த OSCE இஸ்தான்புல் உச்சி மாநாட்டில், யெல்ட்சின் " ஐரோப்பிய பாதுகாப்புக்கான சாசனம் " ஒன்றை வலியுறுத்தினார் , மீண்டும் "பாதுகாப்பின் பிரிக்க முடியாத தன்மை" மற்றும் " சமமான கூட்டாண்மை " ஆகியவற்றை வலியுறுத்தினார். நேட்டோவின் விரிவாக்கம் - போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகியவை மார்ச் 1999 இல் இணைந்தன - ஐரோப்பாவில் "பிளவு கோடுகளை" மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். யெல்ட்சின் ஒப்பீட்டளவில் மென்மையான மொழியை ஏற்றுக்கொண்டாலும் (நிச்சயமாக அவரது வாரிசுடன் ஒப்பிடும்போது), அவரது நிலைப்பாட்டின் உந்துதல் OSCE-மையப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை விட நேட்டோ கூட்டணி அடிப்படையிலான பிரத்தியேகத்திற்கான மேற்கத்திய விருப்பமாக அவர்கள் கண்டது தொடர்பான அதிகரித்து வரும் ரஷ்ய கவலைகளைப் பிரதிபலித்தது . பின்னர் 2000 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புடின், இணக்கத்திலிருந்து உறுதிப்பாட்டிற்கு ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறித்தார். பிப்ரவரி 2007 இல் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் ஆற்றிய இழிவான உரை ஒரு திருப்புமுனை தருணமாக அமைந்தது: அமெரிக்காவின் ஒருதலைப்பட்சவாதம் மற்றும் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் என அவர் கருதியதற்கு எதிரான ஒரு சொல்லாட்சிக் கலை, இது அவரது பார்வையில், பனிப்போருக்குப் பிந்தைய உத்தரவாதங்களின் துரோகம். ரஷ்யாவை ஒரு சமமான வீரராக உள்ளடக்கிய ஒரு புதிய " உலகளாவிய பாதுகாப்பின் கட்டமைப்பிற்கு " அவர் அழைப்பு விடுத்தார், மீண்டும் ஐரோப்பாவிற்கான நேட்டோ மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பை நிராகரித்து "பிரிக்க முடியாத பாதுகாப்பு" என்ற மந்திரத்தை வலியுறுத்தினார். ஒரு வருடம் கழித்து, ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் 2008 ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான முன்மொழிவு , ரஷ்யாவின் பாதுகாப்பு பார்வையை முன்னேற்றுவதற்கான நீண்டகால முயற்சிகளில் ஒரு புதிய கட்டத்தை அடையாளம் காட்டியது: நெறிமுறை உரிமைகோரல்களை பிணைப்பு நிறுவன கட்டமைப்பாக மாற்றுவது. ஜூன் 2008 இல் பெர்லினில் வெளியிடப்பட்டு பின்னர் வரைவு வடிவத்தில் முறைப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், எந்தவொரு நாடும் அல்லது கூட்டணியும் மற்றொருவரின் செலவில் (பழைய "பிரிக்க முடியாத பாதுகாப்பு" யோசனையின்படி) அதன் பாதுகாப்பை மேம்படுத்துவதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய முயன்றது - குறிப்பாக உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவில் நேட்டோ விரிவாக்கத்தை திறம்பட நிராகரித்து, யூரோ-அட்லாண்டிக் சீரமைப்பு மீது ரஷ்ய வீட்டோவை வலியுறுத்தியது. 2010 ஆம் ஆண்டு அஸ்தானாவில் நடந்த OSCE உச்சிமாநாட்டில் ஐரோப்பாவில் "பொது பாதுகாப்பு இடம்" தேவை என்பதை மெட்வெடேவ் மீண்டும் வலியுறுத்தினார் . நிச்சயமாக, இவை அனைத்தும் ஆகஸ்ட் 2008 ரஷ்ய-ஜார்ஜியப் போராலும் அதன் விளைவுகளாலும் மறைக்கப்பட்டன. மெட்வெடேவின் முன்முயற்சிகள் பொது விவாதத்தில் கூட அரிதாகவே பதிவு செய்யப்பட்டன. தொழில்முறை மற்றும் உத்தியோகபூர்வ வட்டாரங்களிடையே இது எந்த கவனத்தையும் ஈர்த்தது , இந்த திட்டம் புரிந்துகொள்ளத்தக்க வகையில் கடுமையான மேற்கத்திய சந்தேகங்களை சந்தித்தது மற்றும் அந்த நேரத்தில் "கூட்டுறவு" பாதுகாப்பிற்கான நம்பகமான உரையாசிரியராக ரஷ்யாவைக் காண முடியாததால் ஓரங்கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு கிரிமியா இணைக்கப்பட்டது ரஷ்யாவின் பாதுகாப்பு விவரிப்பை நெறிமுறை விமர்சனத்திலிருந்து அரசியல்-மூலோபாய நியாயப்படுத்தலுக்கு மாற்றியமைத்தது. இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்ய தூதர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி ஆற்றிய உரையில் , ரஷ்ய தலையீட்டை மறைமுகமாக நியாயப்படுத்த புடின் பிரிக்க முடியாத பாதுகாப்பு கொள்கையை வெளிப்படையாக மேற்கோள் காட்டினார், நேட்டோவின் அத்துமீறல் ரஷ்யாவின் முக்கிய நலன்களை அச்சுறுத்துவதாக வாதிட்டார். இந்த கீழ்நோக்கிய போக்கு நீடித்தது. 2010 களின் பிற்பகுதியில், ஒற்றை ஐரோப்பிய பாதுகாப்பு இடம் என்ற ரஷ்ய பார்வை வெறும் அபிலாஷைக்குரியதாக மட்டுமல்லாமல் எதிர்வினையாற்றுவதாகவும் மாறியது - ரஷ்ய நலன்களுக்கு மாற்ற முடியாத அளவிற்கு விரோதமானதாகக் கருதப்படும் யூரோ-அட்லாண்டிக் ஒழுங்கின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்ய ஒரு கட்டமைப்பை செயல்படுத்தியது. உக்ரைன் மீதான நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், டிசம்பர் 2021 இல் கட்டிடக்கலை கருத்தின் மிகவும் வெளிப்படையான மறுமலர்ச்சி வெளிப்பட்டது, ஏனெனில் ரஷ்ய இராஜதந்திரம் அமெரிக்கா மற்றும் நேட்டோவிடமிருந்து முறையான பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரியது. இந்த முன்மொழிவுகள் - ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு ஒப்பந்தங்கள் - நேட்டோ விரிவாக்கத்திற்கு தடை விதிக்கவும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே நேச நாட்டு இராணுவப் படைகளை திரும்பப் பெறவும் அழைப்பு விடுத்தன. இது ரஷ்யாவின் மூலோபாய சிவப்புக் கோடுகளை சட்டப்பூர்வமாக பிணைக்கும் வகையில் குறியீடாக்க முயல்வதில் மெட்வெடேவ் அணுகுமுறைக்குத் திரும்புவதாகும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு, பிப்ரவரி 21, 2022 அன்று புதின் ஆற்றிய உரை , இந்த தர்க்கத்தை அதன் இறுதிப் புள்ளிக்கு முன்னேற்றியது. ரஷ்ய நலன்களைப் பொருட்படுத்தாமல் "தனது சொந்த பாதுகாப்பு அமைப்பைத் தேர்ந்தெடுக்க" முயல்வதன் மூலம் உக்ரைன் (மேற்கத்திய ஆதரவுடன்) " சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்பின் கொள்கையை " மீறுவதாக திறம்பட குற்றம் சாட்டுவதன் மூலம், மேற்கத்திய பிடிவாதத்தின் விளைவாக ஆக்கிரமிப்பை முன்கூட்டியே தாக்குவதாகவும், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வாகவும் அவர் மறுவடிவமைத்தார். பிரிக்க முடியாத பாதுகாப்பை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்துவது மேற்கத்திய தலைநகரங்களில் நீடித்த எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. அவர்கள் அதை உண்மையில் என்னவென்று பார்க்கிறார்கள்: சமமான சமநிலைக்கான அழைப்பு அல்ல, ட்ரோஜன் ஹார்ஸ் - நேட்டோவின் ஒத்திசைவை நீர்த்துப்போகச் செய்து, சட்ட சமத்துவம் என்ற போர்வையில் ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்த வடிவமைக்கப்பட்ட நிறுவன நாசவேலைக்கான ஒரு கருவி. ஆனால் ஜார்ஜியா (2008), கிரிமியா (2014) மற்றும் உக்ரைன் (2022) மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்குப் பிறகு நம்பிக்கையின் முழுமையான அரிப்பு, அமைதியின் இணை கட்டமைப்பாளராக மாஸ்கோவின் நம்பகத்தன்மையை அரசியல் ரீதியாக திறம்பட ஏற்றுக்கொள்ள முடியாததாக மாற்றியுள்ளது. ரஷ்யாவின் பாசாங்குத்தனம் மற்றும் ஏமாற்றுத்தனம் அனைத்தையும் மீறி, ஒற்றை ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு என்ற அதன் கருத்துக்கு தீவிர கவனம் செலுத்துவது மதிப்புக்குரியது. இது வெறும் இராஜதந்திர அல்லது சொல்லாட்சிக் கருவி மட்டுமல்ல, ரஷ்ய அரசுக்குள் ஒரு முக்கிய மூலோபாயக் கருத்தாகும், இது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது - ஹெல்சின்கி கொள்கைகளில் நங்கூரமிடப்பட்டு, கோர்பச்சேவ் மறுசீரமைக்கப்பட்டு, மெட்வெடேவ் நிறுவனமயமாக்கப்பட்டு, புடினின் கீழ் இராணுவமயமாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நலன்களை முன்னேற்றுவதற்காக அதை இழிவாகப் பயன்படுத்தலாம், ஆனால் ரஷ்யர்கள் உண்மையில் அதை ஒரு உண்மையான கொள்கை இலக்காகக் கொண்டிருக்கவில்லை என்று அர்த்தமல்ல. எனவே, ரஷ்யாவுடனான எந்தவொரு நீடித்த சமாதானத்திற்கும், அட்லாண்டிக் முதல் யூரல்ஸ் வரையிலான "பகிரப்பட்ட பாதுகாப்பு இடம்" என்ற கருத்தை உள்ளடக்கிய ஒரு பரந்த தீர்வு தேவைப்படும் - குறைந்தபட்சம் ஏதோ ஒரு வகையில். தந்திரம் அதை மறுபரிசீலனை செய்து, ஓரளவிற்கு, முக்கிய ஐரோப்பிய நலன்களுடன் இணக்கமாக மாற்றுவதாகும். பரந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இதுபோன்ற ஏதாவது சேர்க்கப்படாவிட்டால், உண்மையான அமைதி ஒருபோதும் இருக்காது, அல்லது நீண்ட காலத்திற்கு இருக்காது. Brussels SignalRussia’s vision of a ‘single European security architecture’For all the vast amounts of analysis and the constant discussion dedicated to the Ukraine war across Western media and specialist centres, there is still considerable divergence of opinion on what…ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு கட்டமைப்பு பற்றிய இரஸ்சிய பலதசாபதகால திட்டம் பற்றிய கருத்தினை 2008 இல் புட்டின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அது நேட்டோவிற்கான மாற்றீடாக இரஸ்சியாவின் பார்வையாக இருந்து வந்துள்ளது, இரஸ்சியா தன்னை ஐரோப்பிய பிராந்தியத்தின் வல்லரசாக வலியுறுத்துவதற்கான தேவையாக அதனை கருதி செயற்பட்டுவருகிறது. இந்த திட்டத்தினால் எந்த வகையில் அமெரிக்க நலன் பாதிப்புள்ளாகும்? நேட்டோவிற்கு மாற்றீடு உருவாக்கப்படும் போது பெரும்பாலான ஆயுத வியாபாரம் பாதிக்கப்படும், ஆனால் அமெரிக்க பாதுகாப்பு செலவீடுகள் குறையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார தக்கவைப்பின் பின்புலமே இரஸ்சியா அற்ற ஐரோப்பா (ஐரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான சவால்). கிழே உள்ள கட்டுரையில் அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனத்தில் 65% நேட்டோவிற்காக செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா இல்லாமல் நேட்டோ? இராணுவ வலிமையை அதிகரிக்க ஐரோப்பாவிற்கு $1 டிரில்லியன் விலைக் குறி; பிரஸ்ஸல்ஸ் குண்டு வீசுமா? மூலம் பிரகாஷ் நந்தா - ஜனவரி 17, 2026 பகிர் பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப் ரெடிட்இட் "அமெரிக்கா இல்லாத நேட்டோ" என்ற வாய்ப்பு, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒரு தத்துவார்த்த விவாதத்திலிருந்து ஒரு முக்கியமான மூலோபாய கவலையாக மாறிவிட்டதாகத் தெரிகிறது. சக நேட்டோ நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51வது மாநிலமாக இணைப்பதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகரித்து வரும் கடினத்தன்மையுடன். அமெரிக்க ஜனாதிபதி ஜனவரி 16 அன்று கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று கூறினார், மேலும் அந்தப் பிரதேசம் தொடர்பாக நேட்டோவுடன் விவாதங்கள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தினார். "கிரீன்லாந்து விஷயத்தில் நேட்டோ எங்களுடன் கையாண்டு வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு மிகவும் மோசமாகத் தேவை" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். "நமக்கு அது இல்லையென்றால், தேசிய பாதுகாப்பில் ஒரு பெரிய ஓட்டை உள்ளது - குறிப்பாக கோல்டன் டோம் மற்றும் பிற அனைத்து விஷயங்களிலும் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தவரை." ஆனால் இது மற்ற 31 உறுப்பினர்களிடையே ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவர்கள் அனைவரும் கனடாவைத் தவிர, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். ஒரு சக நேட்டோ நாடு மற்றொரு நாட்டின் பிரதேசத்தை இராணுவ வழிமுறைகளால் கைப்பற்றும் சூழ்நிலையை அவர்களால் ஏற்றுக்கொள்வது கற்பனை செய்ய முடியாதது. தற்போதைய நிலவரப்படி, கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் "கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும்" என்று போலந்து எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற பிற ஐரோப்பிய உறுப்பினர்கள், கிரீன்லாந்தில் ஒரு "நேட்டோ இராணுவப் பணி" பற்றி விவாதித்து வருகின்றனர், இது ஒரு வரலாற்று பிளவைக் குறிக்கிறது. இது சக உறுப்பினரான அமெரிக்காவிடமிருந்து கிரீன்லாந்தை பாதுகாக்கும். இதை ஒருவர் எழுதுகையில், வார தொடக்கத்தில் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளில் "அடிப்படை கருத்து வேறுபாடு" ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆர்க்டிக் தீவின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவுவதற்காக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கிரீன்லாந்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். பிரான்ஸ் 15 வீரர்களையும், ஜெர்மனி 13 வீரர்களையும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் அனுப்புகின்றன. இந்தப் பணி, பிரதேசத்தை அங்கீகரிப்பதற்கான ஒரு பயிற்சியாக விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் துருப்புக்கள் கிரீன்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியக் கொடியை ஒரு அடையாளச் செயலாக நட்டனர். "முதல் பிரெஞ்சு இராணுவக் கூறுகள் ஏற்கனவே பாதையில் உள்ளன", மேலும் "மற்றவை பின்தொடர்ந்து வரும்" என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். நாட்டின் மலை காலாட்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஏற்கனவே கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் இருந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனி 13 பேர் கொண்ட உளவுப் படையை கிரீன்லாந்திற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. டென்மார்க் ஏற்கனவே கிரீன்லாந்தில் தனது சொந்த இராணுவ இருப்பை அதிகரித்துள்ளது, மேலும் அதிக வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு விசித்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன - அமெரிக்கா இல்லாமல் நேட்டோவின் வாய்ப்பு - இது வரை கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருந்தது. நிச்சயமாக, அதன் 76 ஆண்டுகால வரலாற்றில், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு அதன் பங்கு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது, ஆனால் இன்று அது எதிர்கொள்ளும் அளவுக்கு மோசமானதாக எதுவும் இருந்ததில்லை. தற்போதுள்ள நிலையில், கடந்த ஆண்டு டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து, நேட்டோ பட்ஜெட்டில் அமெரிக்க பங்கைக் குறைக்கும் டிரம்பின் கொள்கையும், உக்ரைனில் நடந்து வரும் போருக்கு பதிலளிப்பதில் மாறுபட்ட நிலைப்பாடும் கூட்டணியின் கூட்டு பாதுகாப்பு உறுதிப்பாட்டின் குறைந்தது இரண்டு அடிப்படை அம்சங்களை - நேட்டோ உறுப்பினர்களுக்கு "அச்சுறுத்தல்கள் பற்றிய பகிரப்பட்ட புரிதல்" மற்றும் "உறுப்பினர்களிடையே பாதுகாப்பு பிரிக்க முடியாதது" - ஏற்கனவே சிதைத்துவிட்டது. ஆனால் கிரீன்லாந்து மீதான டிரம்பின் தற்போதைய வெறி, நேட்டோவின் பிளவுக்கே வழிவகுக்கும், அல்லது சிதைவுக்கு வழிவகுக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா அதிலிருந்து விலகி, நேட்டோ உண்மையிலேயே பிளவுபட்டால் அல்லது சிதைந்தால், என்ன நடக்கும்? அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் வாழ ஐரோப்பியர்கள் தயாரா? நிச்சயமாக, கடந்த ஆண்டு டிரம்ப் திரும்பிய பிறகு பாதுகாப்பு நிபுணர்கள் இந்தக் கேள்விகளைப் பற்றி விவாதித்து வருகின்றனர். சமீபத்தில், உலகளாவிய பாதுகாப்பு, அரசியல் ஆபத்து மற்றும் இராணுவ மோதல்கள் குறித்த உலகின் முன்னணி அதிகார அமைப்பான லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (IISS), “அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பாவைப் பாதுகாத்தல்: செலவுகள் மற்றும் விளைவுகள்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்தது. அமெரிக்கா நேட்டோவிலிருந்து விலகினால், எதிர்கால ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க ஐரோப்பிய நேட்டோவிற்கான நிதிச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை தேவைகளை இந்த அறிக்கை மதிப்பிட்டது. நேட்டோவின் மொத்த இராணுவச் செலவினங்களில் அமெரிக்கா தோராயமாக 65% பங்களிப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பு படம்: மக்ரோன் & ஸ்டார்மர் IISS அறிக்கையின்படி, யூரோ-அட்லாண்டிக் அரங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போது கருதப்படும் அமெரிக்க வழக்கமான திறன்களை மாற்றுவதற்கு, ஐரோப்பிய நாடுகள் இராணுவத் திறனை அதிகரிக்க ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு மேல் குறிப்பிடத்தக்க வளங்களை முதலீடு செய்ய வேண்டும். ஒரு முறை கொள்முதல் செலவுகளைக் கருத்தில் கொண்டு, 25 வருட வாழ்க்கைச் சுழற்சியைக் கருதி, இந்த செலவுகள் தோராயமாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று IISS மதிப்பிடுகிறது. பாதுகாப்பு முதலீடு மற்றும் பாதுகாப்பு செலவின அளவுகளுக்கு மிகவும் தீவிரமான அணுகுமுறைகள் - பனிப்போர் நிலைகளுக்கு நெருக்கமானவை - அங்கு செலவு 'வழக்கமாக சராசரியாக' 3% க்கும் அதிகமாக இருக்கும் - தேவைப்படும். நிச்சயமாக, நேர்மறையான பக்கத்தில், பல ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கனவே அதிகரித்த பாதுகாப்பு செலவினங்களுக்கும் சிறந்த பாதுகாப்பு முதலீட்டு சூழலுக்கும் வழி வகுக்கத் தொடங்கியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் பல அரசாங்கங்களுக்கு வரையறுக்கப்பட்ட நிதி இடம் இருப்பதால், தேவையான செலவின அளவுகளை வழங்குவதற்கான அரசியல் விருப்பம் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் வருமா என்பதைப் பார்க்க வேண்டும். ஐரோப்பிய நட்பு நாடுகள் பாதுகாப்பு தொழில்துறை சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் IISS அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிலத் துறையில் கொள்முதல் ஆர்டர்கள் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கடற்படை மற்றும் விண்வெளித் துறைகளில் உற்பத்தித் திறனில் கூடுதல் முதலீடு குறைவாகவே உள்ளது. இது சிக்கலானது, ஏனெனில் ஐரோப்பா இந்த களங்களில் அமெரிக்க இராணுவத்தின் பங்களிப்பை மாற்ற வேண்டுமானால், பெரிய அளவிலான விமான மற்றும் கடல் தளங்களை வழங்குவது ஒரு முக்கிய தேவையாக இருக்கும். ஒப்பந்தங்கள், நிதி, பணியாளர் பற்றாக்குறை, ஒழுங்குமுறை மற்றும் விநியோக பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு-தொழில்துறை சவால்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த தசாப்தத்திற்குள், ஐரோப்பாவின் பாதுகாப்புத் துறை, குறிப்பாக வான் மற்றும் கடல்சார் களங்களில் பல அமெரிக்க திறன்களை மாற்றுவது கடினமாக இருக்கும் என்று IISS மதிப்பிடுகிறது. "இருப்பினும், ஐரோப்பாவின் தொழில்துறை திறனில் குறிப்பிடத்தக்க முதலீடு மற்றும் நிரப்பு மக்கள் வசிக்காத அமைப்புகளைப் பெறுவதன் மூலம் நீண்ட முன்னணி நேரங்களைக் குறைக்க முடியும்" என்று அறிக்கை கூறியது. சிகாகோ உலகளாவிய விவகாரங்களுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியும், 2009 முதல் 2013 வரை நேட்டோவிற்கான முன்னாள் அமெரிக்க தூதருமான ஐவோ எச். டால்டரின் கூற்றுப்படி, ஐரோப்பிய தலைவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படத் தொடங்கியுள்ளனர் . கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் பாதுகாப்பு உற்பத்திக்காக 150 பில்லியன் யூரோக்களை ($162 பில்லியன்) கடன் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கான வருடாந்திர செலவினங்களைக் கட்டுப்படுத்தும் பட்ஜெட் விதிகளிலிருந்து பாதுகாப்புச் செலவினங்களுக்கு விலக்கு அளிக்கவும் ஒப்புக்கொண்டதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புக்காக மேலும் 650 பில்லியன் யூரோக்கள் ($701 பில்லியன்) சேர்க்கப்படலாம். ஆனால், அமெரிக்க நேரம் இல்லாமல் நேட்டோவில் ஐரோப்பா எதிர்கொள்ளும் ஒரே சவால் பணம் மட்டுமல்ல, மாற்றக் காலத்தில் அமெரிக்க ஆதரவு மற்ற இரண்டு முக்கிய சவால்களாகும். அமெரிக்கா இல்லாத நிலையில், ஐரோப்பாவிற்கு வேறுபட்ட கோட்பாடுகளையும் துண்டு துண்டான கட்டளைச் சங்கிலிகளையும் ஒன்றிணைக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தேவைப்படும். குறைந்தபட்சம், ஐரோப்பிய உறுப்பினர்கள் 2030 களின் முற்பகுதியில் கூட்டணியின் பிராந்திய பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான படைகளில் 75-80 சதவீதத்தை வழங்க உறுதியளிக்க வேண்டும் - மேலும், நீண்ட காலத்திற்கு, கிட்டத்தட்ட அனைத்துப் படைகளையும் வழங்க வேண்டும் என்று டால்டர் மதிப்பிடுகிறார். இதில், செயற்கைக்கோள் தகவல் தொடர்புகள் மற்றும் மேம்பட்ட வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான திறன்களை மேம்படுத்துவதும் அடங்கும் - அதிக தீவிரம் மற்றும் நீடித்த போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள. ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் இராணுவப் படைகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சி செய்வதை இரட்டிப்பாக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். வெளிப்படையாக, இந்த நேரத்தில், 30 நேட்டோ உறுப்பினர்கள் 1.5 மில்லியன் செயலில் உள்ள இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளனர். அமெரிக்கா இல்லாத நிலையில், தற்போதைய அமெரிக்க திறன்களை மாற்றுவதற்கு அவர்கள் 300,000 துருப்புக்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த மாற்றக் காலத்திற்கு அமெரிக்க ஆதரவு தேவைப்படுகிறது. டால்டர் வாதிடுவது போல், "அமெரிக்கா நேட்டோவை விட்டு வெளியேறி ஐரோப்பாவிலிருந்து விரைவாகவும் ஒருங்கிணைக்கப்படாத முறையிலும் விலகினால், பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டமைப்பு சரிந்துவிடும். அமெரிக்காவால் வழங்கப்பட்டதை உடனடியாக மாற்றுவதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இராணுவ மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை". டிசம்பர் 12, 2025 அன்று லண்டனின் தென்மேற்கே உள்ள சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் நடைபெறும் எண். 251 சவரன் அணிவகுப்பில் பங்கேற்க அதிகாரி கேடட்கள் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அணிவகுப்பு, கமிஷனிங் கோர்ஸ் 251 இன் அதிகாரி கேடட்களுக்கான 44 வார தீவிர பயிற்சியின் நிறைவைக் குறிக்கிறது. (புகைப்படம்: அட்ரியன் டென்னிஸ் / AFP) அமெரிக்கப் படைகள் விலகுவது, அமெரிக்க நிர்வாக அமைப்புகளின் இழப்பு காரணமாக ஐரோப்பிய நட்பு நாடுகளை "போராடும் பார்வையற்றவர்களாக" மாற்றிவிடும்: புலனாய்வு மற்றும் கட்டளை: அமெரிக்கா வான்வழி எச்சரிக்கை (AWACS), மூலோபாய புலனாய்வு சேகரிப்பு மற்றும் போர்க்கள கண்காணிப்பு ஆகியவற்றின் பெரும்பகுதியை வழங்குகிறது. தளவாடங்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள்: ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு எரிபொருள் நிரப்புதல், மூலோபாய விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி அடிப்படையிலான சொத்துக்கள் போன்ற முக்கிய திறன்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அமெரிக்க வளங்களைச் சார்ந்துள்ளன. ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு: நேட்டோவின் தற்போதைய வான் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் முதன்மையாக அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் கட்டளை கட்டமைப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்கா இல்லாத நேட்டோவில் ஐரோப்பியர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான இழப்பு அணு ஆயுதத் தடுப்பு ஆகும். பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன, மொத்தத்தில் (தோராயமாக 515 போர்க்கப்பல்கள்) அமெரிக்கா தனது ஆயுதக் களஞ்சியத்தில் வைத்திருக்க வேண்டிய 5000 ஐ விடக் குறைவாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ரஷ்யாவும் 5000 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. தற்செயலாக , அமெரிக்கா நேட்டோவிலிருந்து விலகினால், முந்தையதும் தோற்கும். பின்னர் அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் உள்ள அதன் 31 நிரந்தர தளங்களை அணுக முடியாது. இந்த வசதிகள், குறிப்பாக ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் செயல்பாடுகள் மற்றும் அமெரிக்க சக்தி திட்டத்திற்கு முக்கியமானவை. இரண்டாவதாக, அமெரிக்கா-ஐரோப்பா பிரிந்தால், நேட்டோ நெறிமுறைகள் மூலம் பல தசாப்தங்களாக தடையற்ற உளவுத்துறை பகிர்வு சீர்குலைந்து, முழு யூரேசியப் பகுதியிலும் அமெரிக்க "கண்கள் மற்றும் காதுகளை" மட்டுப்படுத்தும். மூன்றாவதாக, அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தியாளர்களுக்கு மிகவும் முக்கியமான ஐரோப்பாவிற்கான ஆயுத விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து, ஐரோப்பாவிற்கான அமெரிக்க ஆயுத விற்பனை வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது என்பது உணரப்படவில்லை. ஐரோப்பாவிற்கான அமெரிக்க வெளிநாட்டு இராணுவ விற்பனையின் (FMS) மதிப்பு கணிசமாக உயர்ந்து, 2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட $68 பில்லியனை எட்டியது, இது 2017 மற்றும் 2021 க்கு இடையிலான சராசரி $11 பில்லியனில் இருந்து மிகப்பெரிய அதிகரிப்பாகும். உண்மையில், 2024 நிதியாண்டில் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு $117.9 பில்லியனை எட்டியது, அந்த நிதியில் பெரும்பகுதி ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களால் வழங்கப்பட்டது. வெளிப்படையாக, தன்னிறைவு மற்றும் மூலோபாய சுயாட்சியை அடைய பாரிய இராணுவ நவீனமயமாக்கலைத் தொடரும் "பிரிக்கப்பட்ட" ஐரோப்பா, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் சந்தைப் பங்கிற்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஐரோப்பாவை அமெரிக்காவிலிருந்து நேட்டோவிற்குள் பிரிப்பது, சிலர் இதை "அட்லாண்டிக் கடல்கடந்த விவாகரத்து" என்று விவரிக்கும், இரு தரப்பினருக்கும் மிகவும் வேதனையாக இருக்கும் என்று ஒருவர் கூறலாம். இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீர்குலைவில் பெரும் மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். EURASIAN TIMESNATO Without America? $1 Trillion Price Tag For Europe To...The prospect of a “NATO without the United States” seems to have shifted from a theoretical debate to a critical strategic concern for European leaders, with President Donald Trump’s increasing rigidi.
  27. பெரும்பான்மை ..அதுவும் கண்டிப்பெரும்பான்மை ..கமுக்கமாய் அமுக்கிபோடுவினம் ...இப்ப சிலநாட்களுக்கு முன் ..யாழ் பல்கலையில் ...முக்காடுபோட்ட மாணவி ...தொலைபேசி காதுத்தொடுக்கிமூலம் உதவிபெற்று ...மருத்துவபீட இறுதித்தேர்வை எழுதிப் பிடிபட்டார் ...இதுவும் அமுக்கப்பட்டுவிட்டது ...இதில் ஒன்று நம்மினம் என்றால் ..அங்கு வம்பன் தொடங்கி ..முழுக் காணோலிக் கோமாளிகள் .. அங்கு குவிந்திருப்பர்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.