stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 84 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மூத்தசிவனின் தந்தை பண்டுகாபயா பதினாறு முதல் இருபது வயதுக்குள் தனது மனைவி சுவண்ணபாலியைச் சந்தித்தார் என்றும் அவருக்கு முப்பது வயதில் மகன் மூத்தசிவன் பிறந்திருந்தார் என்றும் வைத்தால், மூத்தசிவன் தனது எழுபத்தேழு வயதில் அரியணை ஏறியிருப்பார். பின்னர் அவர் நூற்று முப்பத்தேழு வயது வரை, [அறுபது ஆண்டுகள்] ஆட்சி செய்திருக்க வேண்டும். மூத்தசிவனுக்கு பத்து மகன்கள் இருந்தனர், அசேலன் ஒன்பதாவது மகன். மூத்தசிவனுக்கு ஐம்பது வயதாக இருந்தபோது அசேல பிறந்திருந்தால், அசேல நூற்று எண்பத்தொன்பது வயது வரை, 137-50 + 40 + 10 + 10 + 10 + 22 + 10 = 189 வரை வாழ்ந்திருப்பார். இந்த விபரங்கள் விரிவாக முழுமையாக முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றும் பல நம்பமுடியாத நிகழ்வுகளாலும் விஜயன் முதல் அசேல வரையிலான மன்னர்கள் நிச்சயமாக உண்மையான மன்னர்கள் அல்ல என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் அவர்களின் பல ஆட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆட்சிகளைக் கொண்டவை. விஜயனின் வருகையை புத்தரின் மரணத்துடன் ஒத்திசைக்க வரலாற்றாசிரியர்கள் ஆர்வமாக இருந்ததால், அந்த நடவடிக்கையின் காரணமாக, இது ஏற்பட்டிருக்க வேண்டும்? அதேவேளை புத்தரின் மரணத்தையும், அதாவது மரண திகதியையும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். இவை எல்லாம் முழுவிபரமாக, விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, இலங்கை நாளாகமங்களின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இறந்தார். அதேவேளை, இந்திய மரபுகளின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் மரணம் நடந்திருக்க வேண்டும். இந்த நிகழ்வு இந்தியாவில் நடந்தது, மேலும் இந்திய தரவுகளை விட இலங்கை நாளேடுகளை நம்பகமானதாகக் கருதுவதற்கு எந்த சரியான காரணமும் இல்லை. இந்த அத்தியாயத்தின் சுமார் அறுபது சதவீதம், மன்னன் எல்லாளனின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது 21 - 13 முதல் 34 வரை பார்க்கவும். எங்கள் கீழ்நிலைப் பள்ளிகளில் இதே போன்ற நிகழ்வுகளைப் பற்றி நாங்கள் படித்துள்ளோம். மன்னனுடைய மகன் கவனக் குறைவாக ஒரு கன்றின் கழுத்தில் தேரை ஓட்டியதும், தாய்ப் பசு, அதன் காரணமாக, நீதி கேட்டு, கயிற்றை இழுத்தது மணி அடித்தது என்றும், இதனால், மன்னன் தன் சொந்த மகன் மீதே தேர் சக்கரத்தை செலுத்தி தண்டனை வழங்கினான் என்று நாங்கள் எங்கள் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்புகளில் படித்தோம். இருப்பினும் இங்கு மன்னன் எல்லாளன் அல்ல. அது மனுநீதி கண்ட சோழன் [Manuneethy Kannda Cholan]. அது போல, எல்லாளனின் கதையில் வரும் நெல்லை உலர்த்தும் ஒரு வயதான பெண்மணியின் கதையையும் இதே மன்னரின் கதையில் காண்கிறோம். மேலும், எல்லாளன் கதையில் வரும், பாம்பு மற்றும் இளம் பறவைக்கு ஒத்த ஒரு சம்பவம், வேறு வழியில் மற்றொரு மன்னன் சிபி சக்கரவர்த்தி [King Shibi] கதையில் காண்கிறோம். இதுவும் நாங்கள் அதே வகுப்புகளில் படித்தோம். தமிழ் நாட்டு நாளாகமம்களுக்கும் மற்றும் இலங்கை நாளாகமம்களுக்கும் இடையில் பல பொதுவான இழைகள் [நிகழ்வுகள்] பின்னிப் பிணைவதைக் இங்கு காண்கிறோம். சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவகற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன், அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவன் படுக்கும் [சயன] அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் திஸ்ஸா வாவிக்குச் [Tissa-tank] சென்று கொண்டிருந்தான. அப்போது தாய்ப் பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச் சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்று விட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். பனைமரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத் தின் மீது தொங்கவிட்டான். ஒரு கிழவி வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாள். பருவமில்லாத காலத்தில் வானம் மழையைப் பெய்து அரிசியை நனைத்து விட்டது. அவள் அரிசியை எடுத்துக் கொண்டு போய் மணியை அடித்தாள். பருவமில்லாத காலத்தில் மழை பெய்ததை அறிந்த மன்னன் கிழவியை அனுப்பிவிட்டான். "அரசன் நீதியுடன் நடந்தால் உரிய பருவத்தில் தானே மழைபெய்ய வேண்டும்?' என்று எண்ணியவனாக, இதுபற்றி முடிவு செய்வதற்கு உண்ணுவிரதத்தை மேற்கொண்டான். அரசனுடைய விரதத்தினால் வெப்பம் தாங்காத அவனுடைய குலதெய்வம் இதுபற்றி நான்கு பெருந் தேவர்களிடம் தெரிவித்தது. * நான்கு பெரும் திசைகளை காக்கும் இவர்களை லோகபாலர்கள் என்பர். பிரம்ம லோகத்தில் இந்திரனுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்கள். தத்த ரதா, விருல்ஹகா, விபோக்கூடிா, வேஸ்வணு என்பது இவர்கள் பெயர். முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஆட்சி செலுத்துபவர்கள்.அவர்கள் எல்லோருமாக சக்கனிடம் சென்றார்கள். சக்கன் [Sakka] பஜ்ஜூனனை [pajjunna, A devarāja, the god of rain] அழைத்து இனி உரிய காலத்தில் மட்டுமே மழை பெய்ய வேண்டுமெனக் கட்டளை இட்டான். அரசனுடைய குலதெய்வம் இதுபற்றி அவனிடம் தெரிவித்தது. அப்போது முதல் அவன் ஆட்சிக் காலம் முழுவதும் பகலில் மழை பெய்வது இல்லை. இரவில் மட்டுமே வாரம் ஒரு முறை வானம் மழை பெய்யும். இவ்வாறு நடுநிலையாக நீதியாக ஆட்சி செய்த எல்லாளனுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல, இருபத்தி மூன்றாவது அத்தியாயம் [படைவீரர்கள் திரட்டல்] என்ற பகுதியில் வசனம் 8 இல் இருந்து 10 வரை அமைந்துள்ளது? ........ அதிலிருந்து அவனை 'நந்தி மித்ரன்' [Nandhimitta] என்று அழைக்கலாயினர். பத்து யானைகளுடைய பலம் அவனுக்கு இருந்தது. அவன் வளர்ந்து பெரியவனுனதும் நகரத்துக்குச் சென்று மாமனிடம் பணியாற்றினான். தமிழர்கள் அப்போது தூபிகளையும் இதர புனித சின்னங்களையும் நாசப்படுத்தி வந்தனர். இந்தப் பலசாலி எதிரிகளைக் காலைப் பிடித்துக் கிழித்து எறிவது வழக்கம். அவன் எறிந்த சவங்களைத் தேவர்கள் மறைந்து போகும்படி செய்து வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது. இங்கே எல்லாளனின் ஆட்சிக் காலத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் தமிழர்களால் சேதப்படுத்தப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுவது முரண்பாடாக உள்ளது. தாய் பசு எப்படி வலியை அனுபவித்ததோ, அவ்வாறே தானும் அனுபவிக்க வேண்டும் என்று, தனது சொந்த தேரின் சக்கரத்தின் கீழ் தனது சொந்த மகனைக் கொன்ற ஒரு நீதியுள்ள மன்னன் இவன்! அது மட்டும் அல்ல, மன்னன் எல்லாளன், ஒரு முறை தற்செயலாக ஒரு தூபியை சேதப்படுத்தி விட்டான். இந்த தவறுக்காக அவன் உடனே இறக்க விரும்பினான். அத்தகைய மன்னன், தமிழனோ அல்லது தமிழனாக இல்லாவிட்டாலும், தனது குடிமக்கள் புனித நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்த அனுமதிப்பானா? கொஞ்சம் சிந்தியுங்கள்? இவை பிற்காலத்தில் துறவிகள் நகலெடுப்பதன் மூலம் செருகப்பட்ட செருகல்களாக இருக்க வேண்டும். [These must be later insertions by copying monks.] துறவிகள் ஒவ்வொரு நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலை கையெழுத்துப் பிரதிகளை நகலெடுப்பார்கள். பல துறவிகள் நகலெடுக்க தனித்தனியான அத்தியாயங்கள் [discreet chapters] ஒதுக்கப்படுகின்றன. அந்தவேளையில், யாராவது ஒரு துறவி தனது நேர்மையற்ற செயலால் புத்த மதத்திற்கு பெரும் சேவை செய்வதாக நினைத்து இந்த முரண்பாடான கதையை புத்திசாலித்தனமாக செருகியிருக்கலாம்? இதேபோன்ற செயல்கள் பல அல்லது சில துறவிகளால் நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளாகமம்கள் ஒன்றின் பின் ஒன்றாக எழுதும் பொழுது, அவ்வற்றின் போக்கு, எந்த திசையில் போகிறது என்பதை இலகுவாக, முக்கிய மூன்று நாளாகமம்களை அலசுவது மூலம் அறிந்து கொள்ளலாம். தீபவம்சம் தமிழர்களுக்கும் எதிரான எந்த பெரும் கருத்துக்களையும் கொண்டு இருக்கவில்லை. அதன் நோக்கம் புத்தமதத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமே. ஆனால் இரண்டாவதாக எழுதப்பட்ட மகாவம்சம், புத்த மதத்துக்கு பெருமை சேர்க்கிறோம் என்று தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசத்தையும் புகுத்தி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். அது மேலும் ராஜவலியாவில் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அது மேலும் மேலும் இன்றைய வடக்கு கிழக்கு அல்லது தமிழ் மக்களின் நிலவரத்தில் எப்படி பாதிக்கிறது என்பதை எவரும் உணரலாம்! சொல்லித் தெரிய வேண்டியது இல்லை! Part: 84 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Asela is the ninth son of Mutasiva as per the Mahavamsa, 21 - 12. The Dipavamsa, however, indicates Asela as the eighth son of Mutasiva, 11 – 7 and 17 – 76 of the Dipavamsa. The Dipavamsa gives the order of Mutasiva’s sons twice in it. Mutasiva’s father, Pandukhabhaya met his consort Suvannapalli when he was between sixteen and twenty years of age. If he had his son, Mutasiva, when he was at about thirty years of age, then Mutasiva would have ascended the throne at the age of seventy-seven years. Then he must have ruledun til the age of One hundred and thirty seven. Mutasiva had ten sons, and Asela is the ninth son. If Asela were born when Mutasiva was fifty years of age, then Asela would have lived to the ripe age of one hundred and eighty nine, 137-50+40+10+10+10+22+10=189. It is very clear that the kings from Vijaya to Asela are definitely not real kings, and many of their reigns are with unreliably long reigns. This could be because that the chroniclers were anxious to synchronize the arrival of Vijay with the death of the Buddha and got the Buddha’s death wrong. The death of Buddha must have happened about one hundred years before the consecration of Asoka, as given in the Indian tradition, than two hundred and eighteen years as given the Lanka chronicles. The event took place in India and there is no valid reason to consider the Lanka chronicles as trustworthy in preference to the Indian data. About sixty percentage of this chapter speaks of the merits of king Elara, 21 – 13 to 34. We have studied about similar events in our lower schools. The incident of Elara’s son inadvertently running over the neck of a calf and the mother cow pulling the justice rope of Elara seeking justice, and the Elara’s act of running his chariot wheel over his own son is what we studied in our fifth or sixth grades. However, the king was Manuneethy Kannda Cholan, not Elara. An old woman drying her rice also attributed to this king. An incident similar to snake and the young bird is attributed to another king Ciby Chakaravatty. This also we studied in the same grades. There are many common strands running between Tamil Nadu and the Lanka chronicles, and it would be summarised elsewhere, even if the events were to be repeated for cohesive presentation. It is ironic that accusations are made in, 23 – 9, that thupas and other sacred memorials are damaged by Damilas during the time of Elara’s rule. Would a just king who killed his own only son under the wheel of his own chariot to suffer the same pain as the mother cow allow this? King Elara once inadvertently damaged a thupa, and wanted to die for this mistake. Would such a king allow his subjects, whether Damila or not, to desecrate sacred memorials? These must be later insertions by copying monks. Monks used to copy Ola manuscripts every one hundred to one hundred and fifty years. Many monks are assigned discreet chapters to copy. One such monk must have discreetly inserted this contradictory tale, thinking he was doing great service to the Buddhism by his dishonest act. Similar acts must have been in the process by many monks every one hundred to one hundred and fifty years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 85 தொடரும் / Will follow துளி/DROP: 1981 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84 https://www.facebook.com/groups/978753388866632/posts/33193965833585303/?
-
இலங்கையைச் சுற்றும் ஆபத்து - யாழ். பல்கலையின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுக்கும் முக்கிய தகவல்கள்
நல்லதை சொல்லி எதிர்வு கூறும் பேராசியர்க்கே ...கிண்டலடிக்கும் யாழ்ப்பாணத்தான் ....அப்ப எப்படி இவர்களிடம் ...ஒற்றுமை மலரும் ....திருந்தாத இனம் நம் இனம் ....
- Today
-
மதியிறுக்கம்(ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர்
மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர் 08 Jan, 2026 | 04:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற நோய்களால் அவதியுறும் பிள்ளைகளை முன்கூட்டியே இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிக்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள், தெற்கு மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமேல் மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமத்திய மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், மத்திய மாகாணத்தில் 09 வைத்தியசாலைகள், ஊவா மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், கிழக்கு மாகாணத்தில் 03 வைத்தியசாலைகள், வடக்கு மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள் என்ற அடிப்படையில் 55 வைத்தியசாலைகளில் குழந்தை மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள். இவ்வாறான வைத்தியசாலைகளில் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்குதம் கிளினிக்குகள் இயங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக காணப்படுகிறது. இந்த வைத்தியசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நோயால் அவதியுறும் பிள்ளைகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/235528
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கறுப்பு கை தானே தவிர உள்ளம் வெள்ளை என்பதை யாழ் அறியும் அண்ணை. வாங்கோ ஊர் கூடித் தேர் இழுப்போம்.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
ராஜதந்திரம் இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர். திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும். தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம். தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை. ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
-
ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
28.86 கோடிக்கு ஏலம்போன புளூபின் டூனா (Bluefin Tuna)! இந்திய ரூபாய் என நினைக்கிறேன்.
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அண்ணை, வெனிசுலா சம்பவத்தின் பின் கிரீன்லாண்ட் கைப்பற்றப்பட்டால் இலங்கையையும் அமெரிக்கா பிடிக்காதோ என தம்பி ஒருத்தன் கேக்கிறான்! போறபோக்கை பார்த்தால் நடந்தாலும் நடக்குமோ?!
-
சேர் லூயிஸ் ஹமில்ரன் - இன்னொரு முகம்
சேர் லூயிஸ் ஹமில்ரன் போர்முலா வன் கார்ப்பந்தய சாம்பியனின் இன்னுமொரு முகம்!
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.
-
இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு
இலங்கையில் இன்று நிலநடுக்கம் பதிவு Jan 8, 2026 - 06:54 PM கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk5hawq803p0o29nfh0w5ihk
-
முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கு சா அண்ணை, ஒரு சின்ன தெளிவுபடுதலை வேண்டி நிற்கிறேன். நீங்கள் தனிமனிதனாக செய்யும் பங்களிப்புக்கு அப்பால் - முன்னோடிக்கான நிதி சேகரிப்பாளராகவும் நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறீர்கள் தானே? மற்றைய திரியில் எமது முதலாவது சம்பாசணையில் இதை சொன்னதன் பின் வேறு இடங்களில் இதை நாம் கதைக்கவில்லை என நினைக்கிறேன். இந்த முயற்சியில் மிக கடினமான பணிகளில் இது முதன்மையானது. அடுத்த கட்டத்துகு நகரும் போது, நாம் தனிநபர்களோ அல்லது யாழ் கள உறவுகளோ சேர்ந்து மட்டும் தேவைப்படும் தொகையை சேர்ப்பது கடினம். யாழுக்கு வெளியே இருந்தும் நிதி உதவிகள் வந்து சேரல் அவசியமாகும். திட்டம் தடையின்றி முன்செல்ல இந்த தெளிவு அவசியமாவதால் கேட்கிறேன். பிழை ஏதும் இருப்பின் மன்னித்தருள்க.
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
மதில் உடையாமல் மெதுவாக காலடி எடுத்து வைத்து போகிறது.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
இது உங்கள் பாவனைக்கு இல்லை. சீனாவுக்கு எதிரான போரின் போது அமெரிக்கா பாவிப்பதற்கே.
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
படக்காட்சியல்ல! சேவல் 3 லட்சமா? மதிற்சுவரை தாண்டும் யானை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓ அப்பிடி வேற நடக்குதா. போற போக்கில, வங்காள அணியினால், குழப்பங்கள் வரும் போல. ஐசீசீ என்ன செய்யப் போகிறதோ.
-
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்! பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.
-
அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி
ரஸ்ய கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா!
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
அவன் கழண்ட காற்சட்டைய விட்டிட்டு ஓடினா! இவன் ஏன் அவுத்துப்போட்டு ஓடுறான்! பாலகர்களின் விளையாட்டு. பட்டத்தோட பறக்கிறதே இவங்களுக்கு பொழுதுபோக்கோ?! சுவியண்ணை 2 ஆம் திகதிக்கு பிறகு சிலமனைக் காணவில்லை. அண்ணை ஓடியாங்கோ.
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
https://www.facebook.com/reel/1291652396316203 அண்ணை, இந்தக் 👆காணொளியில் குறிப்பிடும் சம்பவத்திற்கும் செய்தியில் கூறப்படும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ?!
-
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
இந்தியாவில்தான் இப்படி நடப்பதாக இதுவரை செய்திகளில் பார்த்துள்ளதாக நினைவு.
-
காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண்
காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது. Play video, "போலீஸ் காவலில் உயிரிழந்த கணவர் - 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்", கால அளவு 10,36 10:36 காணொளிக் குறிப்பு, கணவரை தேடி வந்து மனைவியை கொண்டு சென்ற போலீஸ் மதுரை நகரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இருக்கும் உசிலம்பட்டியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது அந்த கிராமம். அங்கிருக்கும் குறுகிய தெரு ஒன்றில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருடைய மெல்லிய தோற்றத்தைப் பார்த்தால், 27 ஆண்டுகளாகப் போராடும் ஒரு நபரைப் போலத் தெரியாது. ஆனால், அவர் பேசத் தொடங்கும்போது அவரது குரலில் தொனிக்கும் உறுதி அந்தச் சந்தேகத்தை உடைத்துவிடும். அது 1998ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 27ஆம் தேதி. காலை ஏழு மணி. தனது வயல்காட்டில் இந்தப் பெண்மணியும் வேறு சில பெண்களுமாக சுமார் பத்து பேர் சேர்ந்து பருத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உசிலம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவலர்கள், அங்கே வந்தனர். அந்தப் பெண்மணியை நெருங்கிய காவலர்கள், அவரது கணவரைப் பற்றிக் கேட்டனர். அவர் வெளியே சென்றிருப்பதாக அந்தப் பெண் சொல்லவே, ஒரு திருட்டு வழக்கைப் பற்றி விசாரிக்க வேண்டுமெனக் கூறி முதலில் அவரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு அங்கிருந்து மதுரை நகருக்கு அருகிலுள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை ஆறு மணிவரை அந்தப் பெண் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அன்று காலை 11 மணியளவில் அவரது கணவரும் சில காவலர்களால் ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதற்குப் பிறகு இருவருக்கும் சித்ரவதைகள் துவங்கின என்கிறார் அந்தப் பெண்மணி. அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேல் நீளவிருக்கும் ஒரு நீண்ட போராட்டத்தின் துவக்கமாக அந்த சித்ரவதைகள் அமைந்தன. அந்தக் கொடூரமான காலகட்டத்தை பிபிசியிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணீருடன் நினைவுகூர ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயல்காட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது தனது கணவரைத் தேடி வந்த காவலர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் அந்தப் பெண்மணி (சித்தரிப்புப் படம்) காவல் நிலையத்தில் நடந்த கொடூர சித்ரவதைகள் "ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் எங்கள் இருவரையும் அடித்து நொறுக்கினர். நண்பகல் 12 மணியளவில் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இருந்து வந்த சில காவலர்கள் என் கணவரை மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கேயும் தாக்குதல் தொடர்ந்தது. அன்று மாலை ஆறு மணியளவில் கணவரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்திற்கே அழைத்து வந்த காவலர்கள், அவரை மீண்டும் தாக்கினார்கள்" என்கிறார் அந்தப் பெண்மணி. ஜூலை 29ஆம் தேதியன்றும் தாக்குதல் தொடர்ந்தது. 30ஆம் தேதியன்று கணவரை மட்டும் ஒரு வண்டியில் ஏற்றி எம். கல்லுப்பட்டிக்குக் கொண்டு போன காவலர்கள் அங்கிருந்த ஒரு நகைக்கடையில், பத்து பவுன் நகையை விற்றதாக ஒப்புக்கொள்ளச் சொன்னதாகவும் கணவர் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார் அப்பெண். இதற்குப் பிறகு ஆகஸ்ட் 2ஆம் தேதி உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களது நிலை மிக மோசமாக இருந்ததால், இருவரையும் பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து உசிலம்பட்டியிலேயே இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி கணவர் இறந்துவிட்டார். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட உசிலம்பட்டி மக்கள் போராட்டத்தில் இறங்க, கணவருடன் சேர்ந்து கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண்மணி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடற்கூராய்வும் ஆர்.டி.ஓ விசாரணையும் இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஒரு சிறிய செய்தியைப் பார்த்து, மதுரையில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அரசு மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண்மணியிடம் பேசியது. அதற்குப் பிறகு அவர், அரசு மருத்துவமனையில் இருந்து மதுரையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆகஸ்ட் 12ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இறந்துபோன கணவரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் ராதாகிருஷ்ணன், அடிபட்ட காயங்களால்தான் அவர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டார் என்கிறார் அப்பெண். ஆர்.டி.ஓ-வும் தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். இதற்குப் பிறகு, அரசு அறிவுறுத்தலின் பேரில் உசிலம்பட்டி நீதிமன்ற நடுவரிடம் 1999 செப்டம்பரில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முடிவால் நிலைகுலைந்த தாயும் மகனும் காவல் நிலையத்தில் நடந்த சித்ரவதையை நேற்று நடந்ததைப் போல இப்போதும் நினைவுகூர்கிறார் அந்தப் பெண். "தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தார்கள். தண்ணீர் கேட்டால் தரமாட்டார்கள். என் கணவர் நிர்வாணமாகத்தான் கிடந்தார். அங்கே வந்தவர்கள், போனவர்கள் எல்லோருமே பார்த்தார்கள். யாரும் மீட்கவில்லை. நான்கு சுவற்றுக்கு இடையில் எந்தக் கடவுளைக் கூப்பிடுவது?" "வருகிறவர்கள், போகிறவர்களெல்லாம் அடிப்பார்கள். எனக்குக் கை ஒடிந்தது. பின்பக்கம் முழுவதும் காயமாக இருந்ததால் எப்போதும் குப்புறவேதான் படுப்போம். கருப்பாயூரணி காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் விடிய விடிய கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்." "நான் பெரிய ஆஸ்பத்திரியில் (அரசு மருத்துவமனையில்) இருக்கும்போது பலர் எங்களை அணுகி ஏழு லட்சம் தருகிறோம், பத்து லட்சம் தருகிறோம் என்று கூறி, வழக்கை திரும்பப் பெறச் சொன்னார்கள். காசே எங்களுக்கு வேண்டாம். ஏழு நாட்களாக எங்களை ஏன் அடித்தீர்கள், அவரை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டேன். இனி தமிழ்நாட்டில் இப்படி நடக்கக்கூடாது. என்னையும்கூட அடித்துக் கொல்லுங்கள் பணத்தை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்" என்கிறார் அவர். படக்குறிப்பு,இந்த வழக்கின் விசாரணை தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. இறுதியாக 2012ஆம் ஆண்டில்தான் விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கியது. ஆனால், இந்த வழக்கில் விசாரணை துவங்குவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. ஒரு வழியாக 2012ஆம் ஆண்டின் துவக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இதில் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், வழக்கு முடிவதற்குள் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பைக் கடுமையாக மறுத்தனர். அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேரையும் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொல்லப்பட்டவரின் மனைவியின் சாட்சியத்தைத் தவிர, நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும் அவரது சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவும் கூறி 2016 செப்டம்பரில் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. இது அந்தப் பெண்மணியை நொறுங்கச் செய்தது. அவர் மட்டுமல்ல, அவரது மகனும் துவண்டுபோனார். தனது தந்தையைக் கொன்று, தாயை சித்ரவதை செய்தவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே சட்டம் படித்திருந்தார் அந்த மகன். அந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு வழக்கு நடந்த காலகட்டம் நெடுக உதவியாகச் செயல்பட்டார். இந்த நிலையில் வழக்கின் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்தது. படக்குறிப்பு,ஊமச்சிகுளம் காவல் நிலையம் சட்டம் படிக்கக் காரணமான தந்தையின் மரணம் இந்தச் சம்பவம் நடந்த தருணத்தில், அதாவது 1998இல் அந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களில் மூத்த மகன் 14 வயது சிறுவனாக இருந்தார். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். தனது தந்தையின் நிலைக்குக் காரணமானவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆத்திரம் அவருக்கு இருந்தது. "என் தந்தையைக் கொன்றவர்களை ஏதாவது செய்ய வேண்டுமென கிராமத்து பாணியிலான கோபத்தில் இருந்தேன். அப்போதுதான் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் போன்றவர்கள், 'நீ நன்றாகப் படித்து இதுபோல பாதிக்கப்படும் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்' என்றார்கள். எனக்கு அந்த நேரத்தில் அதைப் பற்றிய புரிதல் ஏதும் இல்லை. என் அப்பாவையும் அம்மாவையும் கொடூரமாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். அது தொடர்பானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற கோபம் மட்டும் மனதில் இருந்தது. ஆனால், ஹென்றியும் அவருடன் இருந்தவர்களும் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்தனர். நீ சட்டம் படித்து, இதுபோல பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்கள்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் அவர். இந்த விவகாரம் நடக்கும்போது அவர் பள்ளி மாணவராக இருந்தார். ஆனால், வழக்கின் விசாரணை முழுமையாகத் துவங்கியபோது அவர் தனது சட்டப் படிப்பையே முடித்திருந்தார். 2008இல் அவர் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு, திருச்சி சட்டக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். தமது பெற்றோர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அரசு வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். வழக்கின் விசாரணை நடக்கும் நாட்களில் சாட்சிகளை பத்திரமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது போன்ற பணிகளை அவர் பார்த்துக்கொண்டார். "அடுத்த நாள் சாட்சியமளிக்க வேண்டுமென்றால், முதல் நாள் இரவே அவர்கள் (சாட்சிகளின்) வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டிலேயே தங்குவேன். அவர்களைக் கையோடு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். அதேபோல, அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று, என் தந்தையின் உடற்கூராய்வு அறிக்கையை வாங்குவது, அங்கு பதிவான அறிக்கைகளை வாங்கி, அரசு வழக்கறிஞருக்குத் தருவது போன்ற உதவிகளைச் செய்தேன்" என பிபிசியிடம் அந்த நாட்களை நினைவுகூர்ந்தார் அந்த இளைஞர். 'போராடிக்கொண்டே இருப்பேன்' இந்த வழக்கில் நீதிமன்றத்தில் கிடைத்த தொடர் தோல்விகளுக்குப் பிறகும் இந்த வழக்கை அப்படியே விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை. "இந்த வழக்கில் காவல்துறையின் சித்ரவதை இல்லை என்று தீர்ப்பு ஏதும் வரவில்லை. சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதால்தான் ஒன்பது பேரும் விடுதலையாகி இருக்கிறார்களே தவிர 'அவர்கள் சித்ரவதை செய்யவில்லை, அந்தச் சித்ரவதையால் மரணம் ஏற்படவில்லை' என்று நீதிமன்றம் சொல்லவில்லை. உடற்கூராய்வு அறிக்கையும், ஆரம்பக் கால சாட்சியங்களும் சித்ரவதையை உறுதிசெய்திருக்கின்றன. சித்ரவதை நடந்தது என்பதை விசாரணை நீதிமன்றத்தில் முதல் முதலில் சாட்சி சொல்லும்போது அங்கிருந்த சக கைதிகள் வலுவாகச் சொன்னார்கள்." என்கிறார் கொல்லப்பட்டவரின் மகன். "ஆனால், குறுக்கு விசாரணையில் அவர்கள் அதை மாற்றிச் சொன்னார்கள். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்பதால்தான் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. என் தாய்க்கும் தந்தைக்கும் சித்ரவதை நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம்" என்கிறார் அவர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டப் போராட்டம் என்பது மிக நீண்டது என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். ஆனால், தாயும் மகனும் இந்தப் போராட்டத்தை இப்போதைக்கு விடுவதாக இல்லை. "நாங்கள் யார் சொத்துக்கும் ஆசைப்படவில்லை. நேர்மையாக உழைத்தோம். வண்டி மாடு ஓட்டுவோம். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தோம். இதேபோலத்தானே மனிதர்கள் எல்லோரும் கஷ்டப்படுவார்கள்?" "நான் இவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு கரையேறிவிடலாம். ஆனால், நம்மைப் போன்ற அப்பிராணிகளைக் கொல்லக்கூடாது. இதுக்கு நீதி கிடைக்கனும். எனக்கு அந்த நீதி இதுவரை கிடைக்கவில்லை. 27 வருடங்களாகக் கிடைக்கவில்லை. இன்னமும் போராடுகிறேன். போராடிக்கிட்டே இருப்பேன்" என்கிறார் அந்தப் பெண். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjerpg1mvo