Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக இராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் தெரிவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 04:40 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தற்போது அந்நாட்டின் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (ஏப் 03) நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், இராணுவ ஆட்சியிலிருந்து ஒரு "சிவில்" ஜனாதிபதியாகத் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். இந்த வாக்கெடுப்பில் மின் ஆங் ஹ்லைங் 429 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ஜெனரலும், தற்போதைய பிரதமருமான நியோ சோ 126 வாக்குகளை மட்டுமே பெற்றார். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சியே வெற்றி பெற்றிருந்தது. எனினும், இந்தத் தேர்தலை மேற்கத்திய நாடுகள் மற்றும் விமர்சகர்கள் "ஜனநாயக முகமூடி அணிந்த இராணுவ ஆட்சி" என விமர்சித்துள்ளனர். ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னதாக, தான் 2011 முதல் வகித்து வந்த இராணுவத் தளபதி பதவியை தனது தீவிர விசுவாசியான யே வின் ஓ என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். மின் ஆங் ஹ்லைங் நீண்ட காலமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஜனாதிபதி பதவிக்கு மாற விரும்பியதாகவும், தற்போது அவரது லட்சியம் நனவாகியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மியன்மார் ஜெனரல்களின் நீண்டகால நட்பு நாடான சீனா, மின் ஆங் ஹ்லைங்கிற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. புதிய அரசு நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தத் தாங்கள் ஆதரவு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242662
  3. பிறாந்தநாள் வாழ்த்துகள் யாயினி.
  4. தலைமயிர் கறுப்பாகவும், தாடி வெள்ளையாகவும் உள்ளது. மறியலில்... தலைக்கு "டை" அடியும் நடக்குது போலுள்ளது. 😂
  5. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செவ்வந்தியின் பிறந்ததின கொண்டாட்டம் ; பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம் Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 03:52 PM (செ.சுபதர்ஷனி)Beaches & Islands பாதாள உலகக்குழுத் தலைவர் என அறியப்படும் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தினுள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபரும், தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினுள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது. அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று பிறந்த தின கொண்டாட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறெனினும் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதற்கமைய இஷாரா செவ்வந்தியின் பிறந்த தின கொண்டாட்ட ஏற்பாடுகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இடம்பெற உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே, அவர் கொண்டாட்ட ஏற்பாடுகளில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் விசேட படையணி தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்தோடு பொலிஸ் அதிகாரிகள் எந்நேரமும் தமது தொழில்சார் ஒழுக்கக்கோவையைப் பின்பற்றச் செயற்படுவது அவசியம். அவ்வாறிருக்கையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/242654
  6. ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல் கட்டுரை தகவல் ஃபிராங்க் கார்ட்னர் & லோர்னா கார்டன் பிபிசி 22 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இரான் மற்றும் ஓமனுக்கு இடைப்பட்ட அந்த குறுகிய கடல் பகுதியைத் கடப்பதற்காகக் காத்திருக்கும் 2000 கப்பல்களில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மாலுமிகளின் நிலை குறித்து மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் கடல் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உள்ளனர். மாலுமிகள் குறைந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள், அதீத சோர்வு மற்றும் கடுமையான மன அழுத்தத்துடன் போராடி வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்செனியோ டோமிங்குவேஸ், "இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையற்ற நடவடிக்கைகள் இனிப் போதாது" என்று தெரிவித்தார். மேலும் இதற்கு ராஜீய ரீதியிலான உதவிகள் தேவை என அவர் கூறினார். 'ஹோர்மூஸ் தலைவலி' இந்தப் போர் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படுத்தியுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வது என்பது, அவசியமான அதே வேளையில் மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான பணியாகும். ஹோர்மூஸ் நீரிணைக்கு எதிரே உள்ள கடற்கரையின் பெரும்பகுதியை இரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதாவது, கப்பல்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதற்காக எத்தனை குறைவான தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களையும் அந்த நாடு நினைத்தால் அங்கு மறைத்து வைக்க முடியும். கடற்படைகள் தங்கள் போர்க்கப்பல்களை அந்தக் கடற்கரைக்கு மிக அருகில் அனுப்ப விரும்புவதில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் தாக்கப்படுவோம் என்று பயப்படுகிறார்கள். எனவே, நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ராணுவ பலம் மட்டுமே வேலை செய்யாது என்பதில் பெரும்பாலான ராணுவ ஆய்வாளர்கள் உடன்படுகிறார்கள். இது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சாத்தியமாகும், ஒருவேளை பாகிஸ்தான் போன்ற மூன்றாம் தரப்பு நாடு வழியாக இது நடக்கலாம். இறுதியில் இதற்கு இரானிடமிருந்து பச்சைக்கொடி காட்டப்படவேண்டும். இது இரானின் எதிரிகளுக்கு விழுங்க முடியாத ஒரு கசப்பான மாத்திரையாக இருக்கும். ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய 34 நாட்கள் பேரழிவுகரமான வான்வழித் தாக்குதல்களால் இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த முடியவில்லை. அந்த நாடு ஒவ்வொரு நாள் தப்பிப்பிழைப்பதும் அதன் உறுதியை இன்னும் ஆழப்படுத்துகிறது. எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இரான் தயாராக இல்லாத நிலையில், அனைத்துக் கப்பல்களும் மீண்டும் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பதற்கு முன்னதாக நிதி ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ அதிக விலையை அது கோரக்கூடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் இரானுக்கு சாதகமான நிலவியல் உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளது. நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது. இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c33l5yxer20o
  7. சபாஷ்... பலே... சரியான போட்டி. இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி... யார் பெரிசு என்று, அடித்துக் காட்டு(ங்க.) 😂
  8. நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை! Published By: Digital Desk 1 03 Apr, 2026 | 02:00 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில், நாட்டின் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக திறந்த வெளிகளிலும், மரங்களின் அடியிலும் இருப்பதைத் தவிர்க்குமாறும், மின் சாதனங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/242640
  9. அரசியல்வாதி ஆகுவதற்கு உரிய தகுதிகள் அத்தனையும் இவருக்கு இருந்தாலும்.. இரண்டு பெண்டாட்டி, மூன்று பெண்டாட்டி இருந்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். 😂
  10. அண்ணை, கலகலப்பு கொமடி தான் எனக்கு ஞாபகம் வருது! "இங்க அடிச்சா இங்கதான் வலிக்கும்" https://www.instagram.com/reel/DVfEirBjDfi/?utm_source=ig_web_copy_link
  11. உந்த விசர் மண்டை வீங்கி புலம்புது. ஈரானை அழித்துவிட்டோம் என்று எப்போதோ அறிவித்தார், அங்கு ஒன்றுமேயில்லை, யாருமேயில்லை, யாரோடு பேசுவது என்று தெரியவில்லை என்றார். யாரும் இல்லை என்றால்; ஏன் பேசுவது, என்ன பேசுவது> தானே போய் முடியை சூடிக்கொண்டு உட்காருவதுதானே. இன்னும் யாரோடு போர் செய்கிறார்? போர் முடியுதோ இல்லையோ இவருக்கு சிகிச்சை அவசியம்!
  12. எனக்கு ஓட்டு போடு இல்லையென்றால் சாப்பிட கூப்பிட்டு சோத்தில நஞ்சு வைச்சு கொல். இப்படி என்னை வருசக்கணக்காக கத்தவைக்கதே என்று செபஸ்ரியன் சீமான் மக்களை பார்தது கேட்டுள்ளார். அதற்கும் கைதட்டல் தான்.
  13. இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது Apr 3, 2026 - 10:38 AM இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 133 பேரும், வியட்நாமை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த 13 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmnig0grf000a356pssjof6rt
  14. ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான் 03 Apr, 2026 | 02:56 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது. அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமை (2) இரவு ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுடைய மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது. அதற்கு முன்னதாக, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் போடப்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளிவிடுமளவு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கடுத்த நாளே ஈரான் பாலம் தாக்கப்பட்டது. அதன் பின்னர், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ட்ரம்பின் மிரட்டலுக்கும் ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் 8 பெரிய பாலங்களை அழிக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. https://www.virakesari.lk/article/242643
  15. அததெரண கருத்துப்படம்.
  16. அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம் பட மூலாதாரம்,Reuters அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நீண்டகால கூட்டாளியும், தனது நிர்வாகத்தின் தீவிர ஆதரவாளருமான அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியைப் ( Pam Bondi) பணிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் என்பவர் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமலாக்க அதிகாரியாகக் கருதப்படுகிறார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், டிரம்ப் பாம் பாண்டியைப் பாராட்டியதுடன், அவர் இனி தனியார் துறையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தெரிவித்தார். நீதித்துறையில் பாம் பாண்டி வகித்த பதவிக்காலம், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுதல் மற்றும் அந்தத் தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீதான விசாரணை ஆகியவற்றைச் சூழ்ந்த சர்ச்சைகளாலேயே பெரும்பாலும் சூழ்ந்திருந்தது. சமீபத்திய வாரங்களில், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது உயர் அதிகாரி இவராவார். கடந்த மார்ச் மாதம், கிறிஸ்டி நோம் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டாட் பிளான்ச், பாம் பாண்டிக்கு பதிலாக அப்பதவியை ஏற்கவுள்ளார். தனது பொறுப்புகளை பிளான்ச்சிடம் ஒப்படைக்கும் பணியில் "சோர்வின்றி உழைப்பேன்" என்று பாண்டி கூறினார்; மேலும், இப்பதவியை வகித்தது தனது வாழ்வின் "பெருமைக்குரிய விஷயம்" என்றும் அவர் குறிப்பிட்டார். தனியார் துறையில் தான் ஏற்கவுள்ள புதிய பொறுப்பிலும், "அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்காகத் தொடர்ந்து போராடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார். எனினும், தனது புதிய பொறுப்பு என்னவாக இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்
  17. Today
  18. ஈரானில் மிகப் பெரிய பாலத்தை ஏவுகணை வீசித் தகர்த்தது அமெரிக்கா ; 8 பேர் பலி ; 95 பேர் காயம் 03 Apr, 2026 | 10:32 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை (2) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 95 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஐந்து வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர உடன்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளுமளவுக்கு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த அடுத்த நாளே இந்தப் பாலம் தாக்கப்பட்டுள்ளது. தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய கட்டுமானமான இந்தப் பெரிய பாலம் 136 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டொலர். “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242625
  19. பிள்ளையான் வழக்கு: நீதிமன்ற உத்தரவை சவாலிடுவேன் – கம்மன்பில Published By: Vishnu 03 Apr, 2026 | 04:48 AM (இராஜதுரை ஹஷான்) பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் வியாழக்கிழமை (2) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு. இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள். அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம். பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/242607
  20. அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல் பட மூலாதாரம்,Getty Images பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை அவரது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜார்ஜ் "41வது ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்" என்று கூறியுள்ளார். ராணுவத் தலைமைத் தளபதி பொதுவாக நான்கு ஆண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற, தொழில்முறை ராணுவ அதிகாரியான ஜார்ஜ், 2023-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜார்ஜ் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய மோதல்களிலும் காலாட்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் ஏன் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. "அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் ராணுவத்தில் ஒரு தலைமை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது," என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிபிஎஸ்ஸிடம் கூறினார். பென்டகன் செய்தித் தொடர்பாளர் பார்னெல் கூறியதாவது: "ஜெனரல் ஜார்ஜ் நமது தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவைக்கு போர் துறை நன்றியுடையதாக உள்ளது. அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்." அமெரிக்க ஊடகங்களின்படி, அவருக்குப் பதிலாக ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார். அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்
  21. ட்ரம்ப் ஐயும் பதவி நீக்கம் செய்து விட்டால் உலகம் நிம்மதியடையும்.
  22. அமெரிக்காவில் இராணுவ மந்திரியைத்தான் செயளாளர் என்பார்கள். அதிபர் தேரும் இவரின் பதவியை செனேட் ஆளை நேரில் விசாரித்து வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யும். அதன் பின் இராணுவ நியமன விடயங்களில் சட்டத்துக்கு உட்பட்டு, இவர் செயல்படலாம். இந்த பதவி நீக்கங்களில் சட்டம் மீறப்பட்டதாக தெரியவில்லை. இருபினும் நட்ட ஈடுதான் கிடைக்கும். மீள பதவி அல்ல.
  23. அதே போல் தனது பிராந்திய நலனுக்கு ஏற்ப, ஈழவிடுதலை/புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரியானதே என்பது சில அனுபவம்மிக்க யாழ்கள உறுப்பினர்களது நிலைப்பாடு என்பதையும் நான் சுட்டி காட்ட விளைகிறேன்.
  24. ஈரான் மத்திய பகுதியில் IRGC வான்படை பாதுகாப்பு Ame Jet யைசுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது Al JazeeraWater plant hit in Kuwait as Iran attacks Gulf, Israel af...Water plant hit in Kuwait as Iran warns to expand attacks if Trump follows through on threats to escalate strikes.
  25. மன்னிக்கவும் இதையும் … அதையும்👇 நான் ஒப்பிட்டிருக்க கூடாதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.