Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. யாழ் மக்களிடம் அதனை வரலாற்றின் அடையாளமாக பார்க்கும் நிலை இருந்த்தநிலையில் பாதுகாப்பு காரணங்களிற்காக உடைக்கப்பட்ட போது அதற்கு கூறப்பட்ட காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
  3. கனடா மீது 100% வரி விதிக்கப்படும் : சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 11:15 AM கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து கனேடிய பொருட்கள் மீதும் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "சீனா கனடாவை உயிரோடு விழுங்கிவிடும். அந்நாட்டின் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சீனா முற்றிலுமாக அழித்துவிடும். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும்," என பதிவிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ட்ரம்பின் மிரட்டலுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், "வெளிநாடுகளில் இருந்து நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் வரும்போது, நாம் நமது சொந்த நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும். ஏனைய நாடுகள் செய்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமக்கான சிறந்த வாடிக்கையாளராக நாமே இருக்க முடியும்," என காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஜனவரி மாதம் 16 ஆம் திகதி, கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதை ஆதரிப்பதாகக் கூறியிருந்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சீனாவுடன் 'சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (Free Trade Deal) எதையும் செய்யவில்லை எனவும், சில வரி தொடர்பான சிக்கல்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதாகவும் கனடா அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் விளக்கமளித்துள்ளார். அமெரிக்கா கிரீன்லாந்தை (Greenland) கையகப்படுத்த முயற்சிப்பதைக் கனடா பிரதமர் விமர்சித்ததைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விரிசல் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/236936
  4. சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி மீது விசாரணை! Published By: Digital Desk 3 25 Jan, 2026 | 10:07 AM சீன இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (CMC) துணைத் தலைவரும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவருமான ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஊழல் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சீன இராணுவத்தில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகாரமிக்க இடத்தில் ஜெனரல் ஜாங் யூக்ஸியா உள்ளார். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான 'பொலிட்பீரோ' (Politburo) உறுப்பினராகவும், நேரடிப் போர் அனுபவம் கொண்ட மிகச்சில தளபதிகளில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார். ஜாங்குடன் இணைந்து, சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் கூட்டுப் பணியாளர் பிரிவின் தலைமை அதிகாரியான லியு ஜென்லி (Liu Zhenli) என்பவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் "சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாக" (suspected serious violations of discipline and law) சந்தேகிக்கப்படுகிறார்கள். சீனாவில் இது பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிக்கும் சொல்லாகும். சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வரும் வேளையில், அதன் மிக மூத்த தளபதிகளே விசாரணைக்குட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஷி ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இராணுவத்தில் ஊழலை ஒழிக்கவும் மேற்கொண்டு வரும் அரசியல் களையெடுப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/236925
  5. அரச நிர்வாக ஊழலே இலஞ்ச மனப்பாங்குக்குக் காரணம் – ரங்க திசாநாயக்க Published By: Vishnu 28 Jan, 2026 | 03:51 AM (இராஜதுரை ஹஷான்) ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழலுக்கு அனைவரும் எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் சமூககட்டமைப்பில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துள்ளது என்பதை ஆராய வேண்டும். ஒருசில அரச நிறுவனங்களுக்கு செல்லும் போது வேலையை விரைவாக முடித்துக் கொள்வதற்கு மேலதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இன்றும் உள்ளார்கள். அது அவர்களின் தவறல்ல, அரச நிர்வாக கட்டமைப்பின் ஊழலின் வெளிப்பாடு அது. ஒருசில அரச நிறுவனங்களில் மேலதிகமாக பணம் பெறுவது தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று கருதுகிறார்கள். அண்மையில் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தோம். அப்போது அங்கு பிரதி பணிப்பாளர் நாயகத்தின் காரியாலயத்தின் அலுமாரியில் இருந்து 41 இலட்சம் ரூபாவை கைப்பற்றினோம். பெற்றுக்கொள்ளும் இலஞ்ச பணத்தை வார இறுதியில் பகிர்ந்துக்கொள்ளும் ஒருமைப்பாடு தான் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டிய தரப்பினர் ஊழலுக்கு துணைபோகும் போது சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இலஞ்ச ஊழலுக்கு எதிராக தனிமனிதர்கள் அனைவரும் எதிரானால் நாட்டுக்கு ஆணைக்குழு அவசியமற்றதாகும். ஒரு நிறுவனத்தில் எவரேனும் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக செயற்பட்டு தகவல் வழங்கினால் அந்த நபருக்கு எதிராக செயற்படும் போக்கு காணப்படுகிறது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் ஊழல் தொடர்பில் தகவல் வழங்குபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/237184
  6. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த ‘ஈ-கேட்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://athavannews.com/category/sri-lanka
  7. சங்கிலிய மன்னனின் மந்திரிமனை... சென்ற வருடம் கவனிப்பாரற்று இடிந்து விழுந்து விட்டது. அதனை காப்பாற்ற எந்த அரசியல்வாதியும் அக்கறை செலுத்தவில்லை. இப்ப... கோட்டையை ஆய்வு செய்கிறார்களாம். தேர்தல் வருகிறது என்றால்.... சுத்து மாத்து அரசியல்வாதிகள் போடும் வேடங்கள் அநேகம். முதலில்... உங்கள், தமிழரசு கட்சி, இடிந்து விழுந்து கொண்டு இருக்கின்றது. அதை காப்பாற்றுகின்ற வழியை பாருங்கள்.
  8. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது? 28 ஜனவரி 2026, 04:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) உறுதிப்படுத்தியுள்ளது. டிஜிசிஏ தகவலின்படி, அந்த சிறிய ரக விமானத்தில் அஜித் பவார், அவரது தனி உதவியாளர், ஒரு பாதுகாவலர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார். பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இந்த விபத்து காலை 8:48 மணிக்கு நிகழ்ந்தது. இந்த விமானம் VTSSK, LJ45 வகையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் ஆகும். பட மூலாதாரம்,ANI லியர்ஜெட்-45 (LJ45) என்பது ஒரு நடுத்தர விமானமாகும். கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த லியர்ஜெட் விமானம், பல வாடகை விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு ஹனிவெல் TFE731-20AR/BR டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் பயணிக்க முடியும். இது சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு விமானமாக அறியப்படுகிறது. பாராமதியில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 விமானம் 2010ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல் அஜித் பவார் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். "பாராமதியில் ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் உட்பட பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் துயரமானது. அஜித் பவாரின் எதிர்பாராத மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் குறிப்பாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் அவரின் சிறப்பான பங்களிப்புக்காக நினைவு கூறப்படுவார். அவரின் குடும்பம், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இந்த இழப்பை தாங்கிக் கொள்வதற்கான சக்தியை கடவுள் வழங்கப்பட்டும்," என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "பாராமதியில் ஏற்பட்ட விபத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு சக்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்," என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI அஜித் பவாரின் அரசியல் பின்னணி அஜித் பவார், மகாராஷ்டிராவின் தேவ்லாலி எனும் சிறிய ஊரில் 1959-ஆம் ஆண்டு பிறந்தார், 1982ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கியின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தவர், 1991-ஆம் ஆண்டு பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் அதை அவரது சித்தப்பா சரத் பவாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இதைத்தொடர்ந்து, அவர் அப்பகுதியின் அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்தார். 1991-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டுவரை, பாராமதி தொகுதியில் போட்டியிட்டு ஏழுமுறை தொடர்ந்து வென்றார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக பாராமதி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். அவரது அரசியல் பயணத்தை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் உத்தவ் பட்சல்கரின் கருத்துப்படி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் அப்பகுதியில் அரசியல் செய்துவந்த காலத்தில், அஜித் பவார் கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டுவந்தார். சித்தப்பா சரத் பவாருக்காக எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தபின் அஜித் பவார் தன் கவனத்தை மாநில அரசியல் பக்கம் திருப்பி ஆர்வமாக ஈடுபடத் துவங்கினார். 1991ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான இணை அமைச்சராக இருந்தார். அதன்பின் பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் மும்பையில் பெரும் கலவரங்கள் வெடித்தன. அதைச் சமாளிக்க, அனுபவசாலியான சரத் பவாரை முதல்வராக்கினார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். உடனடியாக பதவியேற்ற சரத் பவார், அஜித் பவாரை மின்சாரத் துறை அமைச்சராக்கினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சரத் பவாருடன் அஜித் பவார் (கோப்புப் படம்) அதன்பின், 1995-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று, சிவசேனா-பா.ஜ.க கூட்டணி வென்றது. சரத் பவர் மீண்டும் எம்.பி ஆனார். அஜித் பவாரோ மாநில அரசியலிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் அவர் மகாராஷ்டிராவில் காங்கிரஸின் செல்வாக்கினை மேம்படுத்தி, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தான் சரத் பவாரின் அரசியல் வாரிசு என்ற நிலையை உருவாக்கினார், என்று தனது கட்டுரை ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் கிரண் தாரே கூறுகிறார். அதன்பின் 1999-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரானார். 2004ஆம் ஆண்டு, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து தேர்தலில் வென்றன. காங்கிரசுக்கு 69 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 71 தொகுதிகளும் கிடைத்தன. ஆனால் கூட்டணிக் கணக்குகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் சரத் பவார். அப்படிச் செய்திருக்காவிட்டால், அப்போது அஜித் பவார் முதல்வராகியிருக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, துணை முதல்வராகப் பதவியும் ஏற்றார். கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்க, அஜித் பவார் துணை முதல்வராக தொடர்ந்தார். அஜித் பவரின் அரசியல் வாழ்வில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இல்லை. 1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும், 2005ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுப்ரியா சூலேவுடன் அஜித் பவார் (கோப்புப் படம்) சுப்ரியா சூலே - அஜித் பவார் போட்டி 2006-ஆம் ஆண்டு, சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் நுழைந்தார், ராஜ்ய சபா உறுப்பினரானார். அப்போது, அஜித் பவாருக்கும் சுப்ரியாவுக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை, என்கிறார் அபய் தேஷ்பாண்டே. "ஆனால் சுப்ரியா சூலே தேசியவாதியாக அறியப்பட்டு, அவரது தலைமை பரவலாக வெளியே தெரிந்தது. அஜித் பவாரின் செல்வாக்கும் கட்சிக்குள் வளர்ந்ததால் அவர்களிடையே போட்டியும் வளர்ந்தது," என்கிறார். 2009-ஆம் ஆண்டு, சுப்ரியா சூலேவுக்கு, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது அஜித் பவாரின் செல்வாக்கு மிக்க பகுதி. ஆனால் அஜித் பவாரும் சுப்ரியா சூலேவும் தங்களுக்கிடையே போட்டி இல்லை என்று கூறிவந்திருக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dm2l21zglo
  9. 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடுகிறது Published By: Vishnu 27 Jan, 2026 | 08:57 PM (இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், நீதியமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இரண்டாவது தடவையாக 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் பி.ப 2.00 மணிக்குக் கூட்டி விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார அவர்களின் தலைமையில் கடந்த வாரம் முதல் தடவையாகக் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய இக்குழு இன்று புதன்கிழமை பி.ப 2.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் குழுவின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் அநுர கருணாதிலக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் (சட்டத்தரணி)சுனில் வட்டகல, வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237179
  10. எனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரானியர் இலங்கையில் நடந்த கோத்தபாயவிற்கு எதிரான போராட்டக்காரர்களை பாராட்டுவார், தமது நாட்டிலும் மக்கள் அவ்வாறு செய்யவேண்டும் என கூறுவார். கோவிட் காலத்தில் எமது நிறுவனமும் கோவிட் தடுப்பூசியினை வழங்கிய நிறுவனங்களில் ஒன்று, அப்போது இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் எமது நிறுவனம் ஈரானில் மருந்து விநியோகம் செய்ய முன்வரவேண்டும் என கேட்டார், பின்னர் அவரிடம் கேட்டேன் ஏன் மனிதாபிமான பொருள்களிற்கு வர்த்தக தடை இல்லைதானே என கேட்டேன் அவர் பதில் சொல்லாமல் என்னை பார்த்துவிட்டு சென்றுவிட்டார். இந்த ஈரான் விவகாரத்தில் மக்கள் எழுச்சி ஏற்படவில்லை என்பதோ அல்லது இது ஒரு தூண்டப்படாத தன்னெழுச்சி எனவோ கொள்ளமுடியாது, இது இரண்டும் உள்ள ஒரு விடயம்தான் என கருதுகிறேன். மக்கள் நீண்டகாலமாக ஒரு பொருளாதார தடைகளிற்குள் இருக்கிறார்கள் அத்துடன் கடும் பிற்போக்குத்தனமான அடக்குமுறைகளிற்குள் இருக்கிறார்கள், கடந்த காலத்தில் எமது பிரதேசத்திலும் கடுமையான போரிற்கு மத்தியில் கடும் பொருளாதார தடை ஒரு புறம், மறு புறம் மக்கள் வெளியேற தடை, தன்னிச்சையான பொழுது போக்குகளில் கட்டுப்பாடு போன்ற (இதில் உள்ள சரி தவறுகளுக்கப்பால்) மக்களை விழிப்ம்பிற்குள் தள்ளும் காரணிகள் நிறைந்து காணப்பட்டது, ஆனாலும் இப்படி ஒரு மக்கள் எழுச்சி ஏற்படவில்லை, அதற்கு காரணமாக மின்சாரத்தடை காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன், அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் அனைத்தும் வரையறைக்குட்பட்டவையாக இருந்தன, தற்போது உள்ளது போல இணைய வசதிகள் இருக்கவில்லை (ஈரானிலும் இலங்கையிலும் கோத்தபாயவிற்கெதிரான போராட்ட நேரத்தில் இணையத்தினை அரசு முடக்கியிருந்த்து). பங்களாதேசத்தில் நடந்த போராட்டத்திற்கு அமெரிக்கா உதவி செய்தது என குற்றம் சாட்டும் தரப்பினர் மீது அந்த போராட்ட தலைவரின் கொலைக்கான பழி கூறப்படுகிறது, எனது இந்திய நண்பர் கூறும் விடயம் இது ஒரு அமெரிக்காவிற்கான எச்சரிக்கை என. ஈரானில் ஒரு ஆட்சி மாற்றம்; அமெரிக்காவிற்கு தற்போதய நிலையில் மிக ஆதாரமான ஒரு விடயம், தற்போது இந்த ஆட்சி மாற்றத்தினால் பெரும் நன்மை அடைய போகும் நாடு அமெரிக்கா என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்மையில் சீனாவில் ஒரு சதித்திட்டத்திற்கும் அமெரிக்காதான் என குற்றம் சாட்டப்பட்டது, 2014 உக்கிரேனில் இரஸ்சிய ஆதரவு அரசிற்கெதிரான சதிதிட்டத்திற்காக 5 பில்லியன் செலவு செய்ததாக விக்டோரியா நூலன் கூறியதாக இரஸ்சிய வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார் ( யாழ்களத்தின் வேறொரு திரியில் காணொளி உள்ளது), ஆனால் விக்டோரியா நூலன் அம்மையார் ஜனநாயக நடவடிக்கைகளுக்கான முதலீடாக அதனை கூறியிருந்தார். தற்போது உலகில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அமெரிக்காவினை கைகாட்டும் நிலை காணப்படுகிறது, இது சில தமது உள்வீட்டு தவறுகளை இலகுவாக மறைக்கவும் பயன்படுத்தப்படும் நிலையினை உருவாக்கிவிடுகிறது.
  11. விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு! தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் பின்னர் குறித்த விமானம் தீக்கிரையானது. விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 66 வயதான அஜித் பவார், மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரின் மருமகன், மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461908
  12. இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை! இங்கிலாந்தில் மிகக் கடுமையான வறுமை கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோசப் ரவுண்ட்ரீ அறக்கட்டளை எச்சரிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.2 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு குழந்தைகள் நலனுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும், ஒட்டுமொத்த வறுமை விகிதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஏனைய எளிய மக்கள் சமூகப் பாதுகாப்பின்றி தவிப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த நெருக்கடியைக் கையாளப் போவதாக அரசாங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1461808
  13. '20 ஆண்டு தீரா பகையில் 17 கொலைகள்' - போலீஸ் என்கவுன்டரில் பலியான அழகுராஜா யார்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக, நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 23-ஆம் தேதியன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். படக்குறிப்பு,தாக்குதல் நடத்திய கும்பல் காரில் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை 'உணவருந்தும்போது வெடிகுண்டு வீசி தாக்குதல்' நீதிமன்றப் பணிகள் முடிந்த பிறகு சென்னை புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஓர் உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர். "மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த நேரத்தில் வெள்ளைக்காளியை தாக்குவதற்காக அவர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்" என்கிறார், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன். இந்தச் சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது? ஓராண்டில் 60% விலையேற்றம்: தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா? பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம் End of அதிகம் படிக்கப்பட்டது அப்போது உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை. படக்குறிப்பு,ஐ.ஜி பாலகிருஷ்ணன் அழகுராஜா கொல்லப்பட்டது ஏன்? ஐ.ஜி விளக்கம் இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ள ஐ.ஜி பாலகிருஷ்ணன், "ஊட்டியில் வைத்து கொட்டு ராஜா என்ற அழகுராஜாவை தனிப்படை போலீஸ் கைது செய்தது. இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மூன்று கொலை வழக்குகள் உள்ளன" என்கிறார். அழகுராஜாவுடன் சேர்த்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ''ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்தைக் காண்பிக்குமாறு அப்பகுதிக்கு அழகுராஜாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.'' ''அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை திடீரென காவலர்கள் மீது வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ ஒருவர் அழகுராஜாவை பிடிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா தலையில் காயம் ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார் பாலகிருஷ்ணன். அவரை அங்கிருந்து காவல் வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும் ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். படக்குறிப்பு,அழகுராஜா (இடது), வெள்ளைக்காளி (வலது) மோதல் தொடங்கிய பின்னணி காவல்துறை கூற்றுப்படி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை பூர்வீகமாகக் கொண்ட வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகியோர் அடிப்படையில் உறவினர்களாக உள்ளனர். இவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் தி.மு.கவில் வி.கே.குருசாமியும் அ.தி.மு.கவில் ராஜபாண்டியும் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது சுவரொட்டி ஒட்டுவதில் ஏற்பட்ட சிறு மோதலால் இருவர் இடையே பகை ஏற்பட்டது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இருதரப்பின் நபர்களும் பழிக்கு பழியாக கொல்லப்பட்டனர். படக்குறிப்பு,தாக்குதல் நடந்த உணவகம் 'இதுவரை 17 பேர் கொலை' 2003-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இரு தரப்பிலும் தற்போது வரை சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ராஜபாண்டியின் ஆதரவாளரான வெள்ளைக்காளி கைது செய்யப்பட்டார். அவரைக் கொல்வதற்கு குருசாமியின் உறவினரான அழகுராஜா முயன்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல்துறை சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார். "அரசியல்ரீதியாக ஏற்பட்ட பகை, பல்வேறு கொலைகளுக்கு காரணமாக மாறியது. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கு இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.'' என்கிறார் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் புகழேந்தி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8p23v9xyeo
  14. உக்ரேன் போர்: இரு தரப்பிலும் சுமார் 20 இலட்சம் இராணுவத்தினர் உயிரிழப்பு – அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் Published By: Digital Desk 3 28 Jan, 2026 | 09:38 AM ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உயிரிழந்தோர், காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனோர் உட்பட இராணுவ ரீதியான மொத்த பாதிப்புகள் சுமார் 20 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) தரவுகளின்படி, சுமார் 12 இலட்சம் மொத்த பாதிப்புகளில், ரஷ்ய தரப்பில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,25,000 ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், எந்தவொரு பெரிய வல்லரசு நாடும் இவ்வளவு பெரிய அளவிலான உயிரிழப்புகளையோ அல்லது பாதிப்புகளையோ சந்தித்ததில்லை என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்தபோதிலும், ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் மிக மெதுவாகவே முன்னேறி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. உக்ரேன் தரப்பிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், உக்ரேன் இராணுவத்தின் மொத்த பாதிப்புகள் 5,00,000 முதல் 6,00,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,000 முதல் 1,40,000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேன் தரப்பில் மொத்த இராணுவப் பாதிப்புகள் 18 இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இது 2026 வசந்த காலத்திற்குள் 20 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவ வீரர்களைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும் இந்த போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதிக பொதுமக்களின் உயிரிழப்புகள் பதிவான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 15,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி சுமார் 46,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கை மிகக் குறைவானது என்று கருதுகின்றனர். அதேபோல், ரஷ்யாவின் பிபிசி சேவை மற்றும் மீடியாசோனா போன்ற ஊடகங்கள் இதுவரை 1,63,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237209
  15. Today
  16. அமெரிக்காவின் உதவி இல்லாமல் ஐரோப்பா தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? 'நல்ல அதிர்ஷ்டம்' என்கிறார் நேட்டோ தலைவர். "ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா இல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று யாராவது இங்கே நினைத்தால், தொடர்ந்து கனவு காணுங்கள். உங்களால் முடியாது," என்று மார்க் ருட்டே பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். திங்களன்று கிரீன்லாந்தின் நூக் துறைமுகத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் ஒரு டேனிஷ் சிப்பாய் நிற்கிறார்.கெட்டி இமேஜஸ் வழியாக இனா ஃபாஸ்பெண்டர் / AFP NBC செய்திகளை Googleளில் சேர் ஜனவரி 27, 2026, இரவு 8:47 GMT+11/ மூலம் : அசோசியேட்டட் பிரஸ் அசோசியேட்டட் பிரஸ் மூலம் இலவசக் கணக்கின் மூலம் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள். 00:0003:02 1 x அமெரிக்காவின் இராணுவ ஆதரவு இல்லாமல் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இயலாது என்றும், அவ்வாறு செய்ய தற்போதைய இராணுவச் செலவு இலக்குகளை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செலுத்த வேண்டும் என்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே திங்களன்று வலியுறுத்தினார் . "ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா இல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று யாராவது இங்கே நினைத்தால், தொடர்ந்து கனவு காணுங்கள். உங்களால் முடியாது," என்று ரூட் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ஐரோப்பாவும் அமெரிக்காவும் "ஒருவருக்கொருவர் தேவை" என்று அவர் கூறினார். நேட்டோவின் நட்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை இணைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்திய வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் நேட்டோவிற்குள் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கிரீன்லாந்தின் ஐரோப்பிய ஆதரவாளர்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாகவும் டிரம்ப் கூறினார், ஆனால் பின்னர் கனிம வளம் மிக்க தீவில் ஒரு ஒப்பந்தத்திற்கான "கட்டமைப்பு" எட்டப்பட்ட பிறகு, ரூட்டின் உதவியுடன் தனது அச்சுறுத்தல்களைக் கைவிட்டார். ஒப்பந்தம் பற்றிய சில விவரங்கள் வெளிவந்துள்ளன. கிரீன்லாந்து 'கட்டமைப்பு' திட்டத்தின் விவரங்களை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் 02:27 டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள் செவ்வாயன்று பெர்லின் மற்றும் பாரிஸுக்குச் சென்று ஆதரவைத் திரட்டுவதாகக் கூறினர். டென்மார்க்கின் மெட் ஃபிரடெரிக்சென் மற்றும் கிரீன்லாந்தின் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் ஆகியோர் செவ்வாயன்று ஜெர்மன் சான்சலர் ஃபிரடெரிக் மெர்ஸையும் புதன்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனையும் சந்திப்பார்கள் என்று அதிகாரப்பூர்வ அட்டவணைகள் காட்டுகின்றன. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஐரோப்பிய ஒற்றுமையையும் பிரான்சின் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்த மக்ரோன் திட்டமிட்டுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எச்.டி.எம்.எஸ் எஜ்னார் மிக்கேல்சென் ராயல் டேனிஷ் கடற்படை ரோந்துக் கப்பல் திங்களன்று நூக் துறைமுகத்தில் உள்ளது.கெட்டி இமேஜஸ் வழியாக இனா ஃபாஸ்பெண்டர் / AFP நேட்டோவின் ஸ்தாபக வாஷிங்டன் ஒப்பந்தத்தின் பிரிவு 5, பரஸ்பர பாதுகாப்பு விதியால் நேட்டோ ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இது 32 நாடுகளைக் கொண்ட இராணுவ அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரு கூட்டாளியின் பாதுகாப்பிற்கு வர வேண்டும் என்று உறுதியளிக்கிறது. ஜூலை மாதம் ஹேக்கில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில், ஐரோப்பிய நட்பு நாடுகள் - ஸ்பெயினைத் தவிர - கனடாவும் சேர்ந்து, ஒரு தசாப்தத்திற்குள் அமெரிக்காவைப் போலவே தங்கள் பொருளாதார உற்பத்தியில் அதே சதவீதத்தை பாதுகாப்பில் முதலீடு செய்ய வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டன. 2035 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% முக்கிய பாதுகாப்புக்காகவும், மேலும் 1.5% பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பிற்காகவும் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% - செலவிடுவதாக அவர்கள் உறுதியளித்தனர். பரிந்துரைக்கப்படுகிறது மத்திய கிழக்கு மோதல்ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காசாவில் தனது காவல்துறையினருக்கு ஹமாஸ் பங்களிப்பை நாடுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு மோதல்கடைசி உடல் வீடு திரும்பிய பிறகு இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகள் கடிகாரத்தை நிறுத்துகிறார்கள் "நீங்கள் உண்மையிலேயே தனியாகச் செல்ல விரும்பினால், 5% உடன் நீங்கள் எப்போதாவது அங்கு செல்ல முடியும் என்பதை மறந்துவிடுங்கள். அது 10% ஆக இருக்கும். நீங்கள் உங்கள் சொந்த அணுசக்தி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவாகும்" என்று ரூட் கூறினார். திங்கட்கிழமை நூக்கில் ஒரு குடியிருப்பு பகுதி.கெட்டி இமேஜஸ் வழியாக இனா ஃபாஸ்பெண்டர் / AFP ஐரோப்பா தனது "மூலோபாய சுயாட்சியை" கட்டியெழுப்ப பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது, மேலும் கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் அதன் பாதுகாப்பு முன்னுரிமைகள் வேறு இடங்களில் இருப்பதாகவும், ஐரோப்பியர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்ததிலிருந்து அதன் நிலைப்பாட்டிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அமெரிக்கா இல்லாமல், ஐரோப்பா "நமது சுதந்திரத்திற்கான இறுதி உத்தரவாதமான அமெரிக்க அணு குடையை இழக்கும்" என்று ரூட் சட்டமியற்றுபவர்களிடம் கூறினார். எனவே, ஏய், நல்ல அதிர்ஷ்டம்! https://www.nbcnews.com/world/greenland/think-europe-can-defend-us-help-good-luck-says-nato-chief-rcna256083
  17. டாலர் மதிப்பு சரிவு குறித்து தனக்கு கவலை இல்லை என்று கூறி, டிரம்ப் டாலர் துயரங்களை மேலும் அதிகரிக்கிறார். நெட்வொர்க் பிரச்சனையால் வீடியோக்களை இயக்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும். பிழைக் குறியீடு: 400-100 அமர்வு ஐடி: gkjn23xj (தயவுசெய்து: d71822ca-fa7c-46ac-8853-eba7bb87e978) ஜோஷ் விங்க்ரோவ், ஹாட்ரியானா லோவென்க்ரான் மற்றும் கார்ட்டர் ஜான்சன் புதன், ஜனவரி 28, 2026 மதியம் 12:35 GMT+11 ·4 நிமிடம் படித்தது இந்தக் கட்டுரையில் : DX-Y.NYB (டிஎக்ஸ்-ஒய்.என்ஒய்பி) -0.13% (ப்ளூம்பெர்க்) -- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் சமீபத்திய சரிவை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டாலர் மதிப்பு மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்தது. "இல்லை, இது மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்," என்று செவ்வாயன்று அயோவாவில் செய்தியாளர்களிடம் கேட்டபோது டிரம்ப் கூறினார். நாணயத்தின் வீழ்ச்சி குறித்து அவர் கவலைப்படுகிறீர்களா என்று கேட்டார். "டாலரின் மதிப்பு - நாம் செய்யும் தொழிலைப் பாருங்கள். டாலர் சிறப்பாக செயல்படுகிறது." ப்ளூம்பெர்க்கிலிருந்து அதிகம் படிக்கப்பட்டவை NYCயின் மம்தானி பனி நாள் நம்பிக்கைகளை நசுக்குகிறார், ஆனால் அவரும் அதற்காக ஏங்குகிறார். பாஸ்டனின் 18 அங்குல பனி வெள்ளம் பயணத்தை 'சாத்தியமற்றது' ஆக்குகிறது லண்டனின் மறைந்து வரும் அலுவலகக் கட்டிடங்கள் ஹோட்டல்களால் மாற்றப்படுகின்றன. புயல் மீட்பு? அது ஒரு கருவி நூலகத்திற்கான வேலை. LA கவுன்சில் மேன்ஷன் வரி மாற்றங்களைத் திரும்ப அனுப்புகிறது, வாய்ப்புகளை மங்கச் செய்கிறது கடந்த ஆண்டு டிரம்பின் வரி விதிப்பு சந்தைகளை சரிவில் ஆழ்த்தியதிலிருந்து, ஏற்கனவே டாலரின் மதிப்பு மிக மோசமான வீழ்ச்சிக்கு டிரம்பின் கருத்துக்கள் எரிபொருளைச் சேர்த்தன, அவரது ஒழுங்கற்ற கொள்கை மாற்றங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அமெரிக்காவிலிருந்து பின்வாங்கும் என்ற அச்சத்தை அதிகரித்தன. அவரது கருத்துகளுக்குப் பிறகு, புளூம்பெர்க் டாலர் ஸ்பாட் இன்டெக்ஸ் இழப்புகளை 1.2% வரை நீட்டித்தது, பின்னர் புதன்கிழமை ஆசிய வர்த்தகத்தில் ஓரளவு நிலையாக இருந்தது. ஏற்றுமதியை அதிகரிக்க மற்ற நாடுகள் மாற்று விகிதங்களை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார், மேலும் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் டாலரின் விலைக்கும் இருப்பு நாணயமாக அதன் மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைத்துள்ளார். எனவே இந்த சமீபத்திய கருத்துக்கள் வர்த்தகர்கள் அமெரிக்க நாணயத்தை விற்க பச்சைக்கொடி காட்டுவதாகக் கருதப்பட்டது. "டிரம்ப் அமைச்சரவையில் பலர் ஏற்றுமதிகளை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுவதற்காக பலவீனமான டாலரை விரும்புகிறார்கள்," என்று பாங்க் ஆஃப் நாசாவின் தலைமை பொருளாதார நிபுணர் வின் தின் கூறினார். அவர்கள் "கணக்கிடப்பட்ட ஆபத்தை எடுத்துக்கொள்கிறார்கள். விஷயங்கள் ஒழுங்கற்றதாக மாறும் வரை பலவீனமான நாணயம் நன்றாக இருக்கும்." கடந்த வாரம் முதல் யென் திடீரென உயர்ந்ததால் டாலரின் மதிப்பு சரிவு ஏற்பட்டது. ஜப்பானிய அதிகாரிகள் அந்த நாட்டின் நாணயத்தை முட்டுக் கொடுக்கத் தலையிடக்கூடும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்ததால் இது நிகழ்ந்தது. ஆனால், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான அவரது அச்சுறுத்தல்கள்; பெடரல் ரிசர்வ் மீதான அவரது அழுத்தம்; பற்றாக்குறையை அதிகரித்த வரி குறைப்புகள்; மற்றும் அமெரிக்க அரசியல் துருவமுனைப்பை ஆழமாக்கும் தலைமைத்துவ பாணி ஆகியவை டிரம்பின் கணிக்க முடியாத கொள்கை வகுப்பால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் அதிகரித்துள்ளது. இது வெளிநாட்டு நட்பு நாடுகளையும் முதலீட்டாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசாங்க பத்திர வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் புதன்கிழமை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதக் குறைப்புகளை இடைநிறுத்தத் தயாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் டாலரின் சமீபத்திய சரிவு ஏற்பட்டுள்ளது - இவை இரண்டும் பாரம்பரியமாக நாணயத்திற்கு ஆதரவாகக் கருதப்பட்டிருக்கும். உண்மையில், விகிதங்கள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தில் டிரம்ப் குரல் கொடுத்து வருகிறார், இது டாலரை மேலும் எடைபோடும். இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற மதிப்புள்ள போட்டியாளர்களின் கடைகளுக்குள் தள்ள உதவியது, இது மதிப்புக் குறைப்பு வர்த்தகம் என்று அழைக்கப்படும் சாதனை உச்சத்திற்கு அனுப்பியது. அமெரிக்க பங்குகளில் இருந்து சுழற்சிக்கான உந்துதல் இன்னும் பரந்த அளவில் உருவாகும்போது, அவர்கள் வளர்ந்து வரும் சந்தை நிதிகள் போன்ற சொத்துக்களில் சாதனை வேகத்தில் பணத்தை ஊற்றுகிறார்கள், இந்த நடவடிக்கையை சிலர் "அமைதியாக வெளியேறுதல்" என்று அழைத்தனர். ப்ளூம்பெர்க் மூலோபாயவாதிகள் என்ன சொல்கிறார்கள்... "பல சகாக்களுக்கு எதிராக விகித வேறுபாடுகள் அதற்கு சாதகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, டாலரின் இன்றைய நகர்வு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், ஜனாதிபதி டிரம்பின் கருத்துக்கள் நாணயத்தை தொடர்ந்து தாக்கும் மற்றும் முதலீட்டாளர்கள் வேறு இடங்களில் பாதுகாப்பு தேட ஊக்குவிக்கும் நீடித்த அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன." —டாடியானா டேரி, மேக்ரோ மூலோபாயவாதி, சந்தைகள் நேரலை பல ஆண்டுகளாக டிரம்ப் டாலரைப் பற்றி போட்டித்தன்மை வாய்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளார், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஒரு நன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அதன் வலிமையைப் பாராட்டுகிறார், அதே நேரத்தில் உற்பத்தித் துறைக்கு பலவீனமான டாலரின் நன்மைகளைப் பற்றியும் பேசுகிறார். "நான் ஒரு வலுவான டாலரை விரும்பும் நபர், ஆனால் ஒரு பலவீனமான டாலர் உங்களுக்கு அதிக பணத்தை ஈட்டித் தருகிறது," என்று அவர் கடந்த ஆண்டு கூறினார். அவர் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க நாணயத்தின் ப்ளூம்பெர்க்கின் அளவீடு 10% க்கு அருகில் சரிந்துள்ளது, மேலும் வர்த்தகர்கள் மேலும் இழப்புகளைப் பற்றி பந்தயம் கட்டியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு ப்ளூம்பெர்க் தரவுகளைத் தொகுக்கத் தொடங்கியதிலிருந்து, பலவீனமான அமெரிக்க நாணயத்திலிருந்து லாபம் ஈட்டும் குறுகிய கால விருப்பங்களுக்கான பிரீமியம் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. பிற நாணயங்களுக்கான ஏற்ற எதிர்பார்ப்புகளும் பல மாத உச்சத்தை எட்டியுள்ளன, ஏப்ரல் கட்டண வெளியீட்டிற்குப் பிறகு காணப்பட்ட அளவுகளுக்கு அருகில் அல்லது இணையாக. வர்த்தக அளவுகள் அதிகமாக உள்ளன. திங்களன்று, டெபாசிட்டரி டிரஸ்ட் & கிளியரிங் கார்ப்பரேஷன் மூலம் வருவாய் இரண்டாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளது, இது ஏப்ரல் 3, 2025 அன்று மட்டுமே முறியடிக்கப்பட்டது. டாலரின் 'இடைவிடாத' சரிவு வர்த்தகர்களை மேலும் வலியை எதிர்கொள்ளத் தயாராக்குகிறது காண்க: அயோவாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று தான் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.மூலம்: ப்ளூம்பெர்க் செவ்வாயன்று, டிரம்ப் டாலரின் வலிமையைக் கையாள முடியும் என்று பரிந்துரைத்தார், "யோ யோ போல நான் அதை மேலே அல்லது கீழே கொண்டு வர முடியும்" என்று கூறினார். ஆனால் அவர் அதை ஒரு சாதகமற்ற விளைவாகக் காட்டி, வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க தேவையற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஒப்பிட்டு, ஆசிய பொருளாதாரங்கள் தங்கள் நாணயங்களை மதிப்பிழக்கச் செய்ய முயற்சித்ததாக அவர் கூறினார். "சீனாவையும் ஜப்பானையும் நீங்கள் பார்த்தால், நான் அவர்களுடன் மிகவும் சண்டையிட்டேன், ஏனென்றால் அவர்கள் எப்போதும் தங்கள் யென் மதிப்பைக் குறைக்க விரும்பினர். உங்களுக்குத் தெரியுமா? யென் மற்றும் யுவான், அவர்கள் எப்போதும் அதை மதிப்பைக் குறைக்க விரும்புவார்கள். அவர்கள் மதிப்பைக் குறைப்பார்கள், மதிப்பைக் குறைப்பார்கள், மதிப்பைக் குறைப்பார்கள்," என்று டிரம்ப் செவ்வாயன்று கூறினார். "நீங்கள் மதிப்பைக் குறைப்பது நியாயமில்லை என்று நான் சொன்னேன், ஏனென்றால் அவர்கள் மதிப்பைக் குறைக்கும்போது போட்டியிடுவது கடினம். ஆனால் அவர்கள் எப்போதும் போராடினார்கள், எங்கள் டாலர் பெரியதல்ல," என்று அவர் மேலும் கூறினார். --ரூத் கார்சன், மேகாஷ்யம் மாலி, கிரெக் ரிச்சி, அன்யா ஆண்ட்ரியனோவா மற்றும் கோர்மக் முல்லன் ஆகியோரின் உதவியுடன். ப்ளூம்பெர்க் பிசினஸ் வீக்கிலிருந்து அதிகம் படிக்கப்பட்டவை கனடியர்கள் அமெரிக்க ஸ்கை சரிவுகளைப் புறக்கணிக்கின்றனர். காக்னாக் தயாரிப்பாளர்கள் கொடிகளை வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். குப்பை கொட்டும் பொருட்கள் அடுத்ததாக இருக்கலாம். டிரம்பின் H-1B குழப்பத்தைத் தொடர்ந்து அமெரிக்கா சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை இந்தியாவிடம் இழக்கிறது. ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகள் அதன் போராட்டத்தை தொழிற்சாலை தளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் அமெரிக்க உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு அன்-மகா திட்டம் ©2026 ப்ளூம்பெர்க் எல்பி https://finance.yahoo.com/news/trump-says-not-concerned-decline-205831235.html
  18. நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது. பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம். கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.
  19. மதுபானத்தை போலிசாருக்கு இலவசமாக அல்லாமல் காசுக்கு கொடுக்கக்கூடாது தானே.
  20. புலம்பெயர் வாழ் இளந்தலைமுறையினரின் முயற்சியால் வெளிவந்துள்ள ஓர் ஆவணப்படம். ஆதரவளிப்பீர்! வெறுமனே பாராட்டாமல், நல்ல உருப்படியான கருத்துக்கள் இடுங்கள். அப்போது தான் பலரைச் சென்றடையும். The Tamil Genocide that no one talks about
  21. மல்லாகம் கோர்ட் என்றால் விரைவில் பிணையில் வரலாம் ..மீண்டும் அமோகமாய் தொழில் செய்யலாம் ...பயமே இராது
  22. திறந்துவைத்த போட்டின் அளவைவிட ரோட்டின் நீளம் குறைவு போல..
  23. இது. இலங்கை. பாஸ்போட். உள்ளவர்களை. குறிக்காது. இலங்கையில்பிறந்த. வெளிநாட்டு. குடியுரிமை. பெற்றவர்களை. மட்டுமே. குறிக்கும்.
  24. Yesterday
  25. யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.