All Activity
- Past hour
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
FactCheck: IRISDena - சர்வதேச கடற்பரப்பிலா மூழ்கடிக்கப்பட்டது? பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது. கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசம் சர்வதேச கடல் எல்லை என்று பலராலும் கூறப்படுவது உண்மையா? இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஈரானிய கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் கடல் வழி காட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக் கரையில் இருந்து 12 கடல் மைகள் தூரம் வரை இலங்கைக்கான பிராந்திய கடல் வலையமாகும் (Territorial sea) . இது இலங்கைக்கான நிலம் போன்ற அதிகாரங்கள் உள்ள பிரதேசமாகும். அதன் தொடர்ச்சியாக 12-24 கடல் மைல் பிரதேசம் Contiguous zone என்னும் தொடர்வலய பிரதேசமாகும். இதுவும் இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் கொண்ட பகுதியாகும். இலங்கை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்கள் பிரதேசம் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone (EEZ) என்றழைக்கப்படும். இவ்வலயத்தில் மீன்பிடி, கனியவளம், காற்று சக்தி போன்றவை இலங்கைக்கு சொந்தமாகும். (இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் சிறிதாகையால் அதன் நடுப்புள்ளி எடுக்கப்படும்.) இதற்கு அப்பால் உள்ள பிரதேசமே உண்மையில் சர்வதேச கடல் பிரதேசமாகும். இப்பொழுது சொல்லுங்கள், காலியில் இருந்து 40 கடல் மைல்கள் தூரம் சர்வதேச கடலா? Kumar Ganesh- கருத்து படங்கள்
- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை. நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள். இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும். நாட்காட்டியின்படி சனிக்கிழமை பெருநாள் வந்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக அமைந்து நன்மையளிக்கும். இலங்கையின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக இம்ரான் மகரூப் எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1467253- காணாமல் போன ஊரணி மீனவர்கள்!
காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்! யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கபட்டுள்ளது. https://athavannews.com/2026/1467250- இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்!
இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்! ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வொஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள், வான்வழித் தாக்குதலை நிறுத்துவதையும், இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மோதல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், போரை இயக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாக உள்ளது. அமெரிக்க செனட் 53க்கு 47 என்ற வாக்குகளில் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று வாக்களித்தது, பெரும்பாலும் கட்சி அடிப்படையில், ஒரு குடியரசுக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் நடைமுறை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் அதை ஆதரித்தனர். புதன்கிழமை இலங்கைக்கு அருகில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததன் மூலமும், அமெரிக்க-ஈரான் போர் கூர்மையாக விரிவடைந்துள்ளது. ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் சக்திவாய்ந்த மகன் அவருக்குப் பின் வருவதற்கான முன்னணிப் போட்டியாளராக வெளிப்பட்டதால் இந்த மோதல் ஆழமானது. இது, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று உலக சந்தைகளை உலுக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் அழுத்தத்திற்கு தெஹ்ரான் அடிபணியப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியது. இந்த ஏவுகணை சம்பவம், ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி மோதலில் ஈடுபடுவது இதுவே முதல். வியாழக்கிழமையும் போர் தொடர்ந்ததால், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது, மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டம் தடைபட்டது. வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த கப்பல்களுக்கு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் மதிப்பீடுகளின்படி, குறைந்தது 200 கப்பல்கள் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. போரில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர பல நாடுகளின் அரசாங்கங்கள் விரைந்ததால், புதன்கிழமை மத்திய கிழக்கிலிருந்து திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டன. சர்வதேச பயணிகளுக்கு உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் உள்ளிட்ட முக்கிய வளைகுடா மையங்கள் பாதிக்கப்பட்டதால், பிராந்தியத்தின் பெரும்பகுதியில் வணிக விமானப் போக்குவரத்து பெரும்பாலும் இரத்து செய்யப்பட்டிருந்தன. கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு சனிக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 86 வயதான ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் குறித்த திட்டங்கள் சந்தேகத்தில் இருந்தன. ஒரு நாட்டின் உயர்மட்ட ஆட்சியாளர் வான்வழித் தாக்குதலில் முதன்முறையாக படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை முதல் தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய மசூதியில் உடல் அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும், இறுதிச் சடங்கு திகதி அறிவிக்கப்படவில்லை என்றும் ஈரான் அறிவித்தது. பெயர் வெளியிட விரும்பாத இரண்டு ஈரானிய வட்டாரங்கள், ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் மகன் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை கொல்லப்பட்டபோது தெஹ்ரானில் இல்லை என்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் சபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும், 1979 இல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக அவ்வாறு செய்யும் என்றும் ஈரான் கூறியது. சட்டமன்ற உறுப்பினர் அயதுல்லா அகமட் கட்டாமி அரசு தொலைக்காட்சிக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். உயர் தலைவருக்கான பிற வேட்பாளர்களில் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் பேரனும் அண்மைய தசாப்தங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட சீர்திருத்தவாத பிரிவின் ஆதரவாளருமான ஹசன் கோமேனியும் அடங்குவர். https://athavannews.com/2026/1467208- கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின் சுரங்க அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகரில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெய்த கனமழைக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஜனவரி மாத இறுதியில் இதே சுரங்கத்தில் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது. ரூபாயா சுரங்கம் உலகின் தாதுக்கில் சுமார் 15 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி உபகரணங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் உற்பத்தி உட்பட பல தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். https://athavannews.com/2026/1467243- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார். https://athavannews.com/2026/1467254- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம். இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.- Today
- இரசித்த.... புகைப்படங்கள்.
இஸ்ரேல் & இரான் யுத்தத்தின் போக்கு பற்றி ரகசிய மாநாடு .......! 😂- யாழ் இணயத்தின் லோகோ(LOGO) சின்னம்
இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்தின் உப பக்கங்களின் தலைப்பு விபரங்கள் அடங்கிய பட்டியலுள்ள forum3 என்று குறியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்திற்கே செல்கிறது.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 11:36 AM மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கன்பெராவில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். கடந்த வாரம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்த பிரதமர் கார்னி, தற்போது அவுஸ்திரேலியாவில் தனது கருத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார். "எந்தவொரு சூழ்நிலையிலும் போரில் பங்கேற்பதை நாம் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. இது ஒரு கருதுகோள் சார்ந்த கேள்வி என்றாலும், தேவைப்படும்போது நாம் எமது நட்பு நாடுகளுடன் உறுதியாக நிற்போம்" என அவர் குறிப்பிட்டார். ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 'சர்வதேச சட்டங்களுக்கு முரணானது' எனத் தெரிவித்த அவர், இது சர்வதேச ஒழுங்குமுறை தோல்வியடைந்துள்ளதையே காட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். மார்க் கார்னியின் இந்த ஆசிய-பசிபிக் விஜயம் (இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்) அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற 'நடுத்தர சக்திகள்' ஒன்றிணைந்து புதிய உலக விதிகளை எழுதவேண்டும் என அழைப்பு விடுத்தார். அரிய வகை கனிம வளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அவுஸ்திரேலியாவுடன் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், மார்க் கார்னியின் இந்த வெளிநாட்டுப் பயணம் சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து Published By: Vishnu 05 Mar, 2026 | 11:32 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஃபின் அலன் குவித்த அற்புதமான சாதனைமிகு ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2021 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடி இருந்தது. அப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியனாகியது. இந்த உலகக் கிண்ணத்தில் அரை இறுதிவரை தோல்வி அடையாமல் இருந்த 2024 உப சம்பியன் தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தொல்வி அடைந்து ஏமாற்றத்துடனும் கவலையுடனும் வெளியேறியது. 170 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து எதிரணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 12.5 ஓவரக்ளில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறதிப் போட்டிக்குள் நுழைந்தது. தென் ஆபிரிக்கா பந்தவீச்சாளர்கள் மீது கொஞ்சமேனும் இறக்கம் காட்டாத ஃபின் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டறி கள், 8 சிக்ஸ்களை விளாசி ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது ரி20 உலகக் கிண்ணத்தில் அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. 19 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த வருட உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிவேக அரைச் சதத்தை சமப்படுத்தினார். அவருக்கு இரண்டாவது 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய 14 பந்துகளே தெவைப்பட்டது. தனது ஆரம்ப ஜோடி டிம் சீஃபேர்ட்டுடன் 55 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ஃபின் அலன் மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தார். டிம் சீஃபேர்ட் 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். ரச்சின் ரவிந்த்ரா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்களால் சுதந்திரமாக ஓட்டங்களைப் பெற முடியவில்லை. இரண்டாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 12 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் (10), ரெயான் ரிக்ல்டன் (0) ஆகிய இருவரும் கோல் மெக்கொன்ச்சியின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டிவோல்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், ஏய்டன் மார்க்ராம் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் (6), டிவோல்ட் ப்ரெவிஸ் (34) ஆகிய இருவரும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்கா நெருக்கடியில் வீழ்ந்தது. இதனை அடுத்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (29), மார்க்கோ ஜென்சன் ஆகிய இருவரும் முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கோ ஜென்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோல் மெக்கொன்ச்சி ஒரு ஓவர் மாத்திரம் வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட ரச்சின் ரவிந்த்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது. ஆட்டநாயகன்: ஃபின் அலன் தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து- காணாமல் போன ஊரணி மீனவர்கள்!
இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள் Mar 5, 2026 - 06:18 AM யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த இந்த மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட இந்திய மீனவர்கள், நடுக்கடலில் தவித்த ஈழத்து மீனவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளனர். அத்துடன், அவர்களின் படகினைப் பாதுகாப்பாக இழுத்து வந்து இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த முழுமையான நிகழ்வையும் இந்திய மீனவர்கள் காணொளியாகப் பதிவு செய்து உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர். இந்திய மீனவர்களால் உணவு வழங்கி எல்லைக்குள் விடப்பட்ட காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பவம் நடைபெற்று ஆறு நாட்கள் கடந்தும் இலங்கை கடற்படையினரால் குறித்த இரண்டு மீனவர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஆதாரத்தின் அடிப்படையிலாவது கடற்படையினர் தமது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்- அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம்
அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வந்துவிடுமோ என நெதன்யாகு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பைத் தொடர்புகொண்டு, போரை நிறுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmd1mxla0004356picrn04zb- சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி
சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி எம்.எஸ்.எம். ஐயூப் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை குறைகூறவும் முடியாது. ஆனால் அதற்காக நடப்பவை எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு நியாயப்படுத்தவோ எதிர்க்கவோ முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவாளர்களே இந்தக் கைதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் சலே கோட்டாபயவின் நெருங்கிய நன்பராவார். அதேவேளை இந்த கைது கோட்டாவுக்கும் ஆபத்தானதாகுமென பலர் கருதுகின்றனர். புலிகளுக்கு எதிரான போரின் போது உளவுத்துறை அதிகாரியாக சலே பெரும் பணியாற்றியுள்ளார் என்றும் புலிகளின் பேச்சாளராக இருந்த தமிழ்செல்வனை விமானப் படையினர் சலேயின் வழிகாட்டலிலேயே கொன்றனர் என்றும் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை 2009 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரும் திட்டத்தையும் சலேயே வகுத்தார் என்றும் எனவே அவரை கைது செய்தமை அநீதியாகும் என்றும் கோட்டாபயவின் சட்டத்தரணியும் அவரது அரசாங்கத்தின் அமைச்சருமான அலி சப்ரி கூறியிருந்தார். புலம் பெயர் தமிழர்களின் (தமிழ் டயஸ்போராவின்) தூண்டுதலிலேயே அரசாங்கம் சலேயை கைது செய்துள்ளதாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முன்னாள் ராஜபக்ஷ அதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்காக கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களை குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இந்த கைதை குறை கூறி வந்தாலும் அவர்கள் அதற்காக வேறு வாதங்களையே முன்வைக்கின்றனர். நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்துக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நாடகம் இடம்பெற்றுள்ளதாக ஐமச தலைவர்கள் கூறுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதியே இடம்பெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஏப்ரல் 21 அம் திகதியும் தாக்குதலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்துமாறு கத்தோலிக்க திருச் சபையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வற்புறுத்தி வருகின்றனர். எனவே இவ்வருடம் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த கைதின் மூலம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்ற முயல்கிறது என்பது அவர்களின் மற்றொரு வாதமாகும். ராஜபக்ஷ அதரவாளர்களும் இந்த வாதங்களை முன்வைக்கின்றனர். கடந்த வருடமும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவதாக அதற்கு அண்மித்த ஒரு நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேNயு ஜனாதிபதி எங்கும் எப்போதும் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவுதாக கூறியதில்லை. ஆனால் ஏபரல் 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய புதிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கடந்த வருடம் மார்ச் 30 ஆம் திகதி மாத்தறை தெய்யந்தரவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார். அதைத் தான் எதிர்க் கட்சியினர் திரிபுபடுத்தி கூறுகின்றனர். இந்த வாதங்களில் சில ஒன்றோடு ஒன்று மோதுவதாகவம் தெரிகிறது. புலம் பெயர் தமிழர்களின் தூண்டதலைப் பற்றியும் நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதைப் பற்றியும் ஒரே நபர் கூறும் போது அது பொருத்தமற்றதாகவே தெரிகிறது. அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலிலா அரசாங்கம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றப் போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் இந்த வாதங்களை மறுத்துள்ளார். தமிழ்செல்வன் கொல்லப்பட்ட காலத்திலோ அல்லது கே.பி கைது செய்யப்பட்ட காலத்திலோ சலே இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளரராக இருக்கவில்லை என்றும் எனவே இந்த சம்பவங்களை பாவித்து சலேயை ஊதிப் பெருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை கே.பியை கைது செய்தமை பெரிய விடயமாக காட்;ட முயலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் இலங்கைக்கு கொண்டவரப்பட்ட கேபிக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிடுவதில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அப்போதிருந்த தேசிய பாதுகாப்பு தொடர்டபான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன ஹ_லுகல்ல கூறினார். கேபிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 2015 ஆம் ஆண்டு அதாவது மைத்திரி-ரனில் அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததை அடுத்து 2017 அம் ஆண்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கேபியைப் பற்றிக் குறிப்பிட்டு சலேவுக்கு பெரும்பான்மை மக்களின் மத்தியில் பெருமை தேடிக்கொடுக்க முற்படும் பொதுஜன முன்னணி கேபியை எவ்வாறு நடத்தியது என்பது இதன் மூலம் தெரிகிறது. அது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்தவிடயத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் மேலே குறிப்பிடப்பட்டதைப் போல் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுர குமார கடந்த வருடம் கூறியிருந்தார். பின்னர் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை இரகசிய பொலிசார் கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி கைது செய்தனர். நேரடியாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்படாக விடயம் ஒன்றுக்காக அவர் கைது செய்யப்பட்ட போதிலும்; அத்தாக்குதலைப் பற்றி முன்னரே அவர் அறிந்திருந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். ஒக்டொபர் மாதம் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜேபால பிளளையானுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். அமைச்சர் விஜேபாலவுக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிள்ளையானின் முன்னாள் இணைப்புச் செயலாளர் ஹன்சீர் ஆசாத் மௌலானா இது போன்றதோர் தொடர்பைப் பற்றி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தார். ஜோசப் பரரஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் சைனியும் 2017 ஆம் ஆண்டு வன்முறை சம்பவவம் ஒன்று தொடர்பாக அதே சிறையில் அடைக்கப்டடதாகவும் அப்போது பிள்ளையானுக்கும் சைனிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாகவும் மௌலானா அந்நிகழ்ச்சியல் கூறினார். இந்தத் தொடர்பை அடுத்து பிள்ளையானின் ஆலோசனைப் படி தாம் சலேக்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்றை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் கரடிப்பூவலில் ஏற்பாடு செய்ததாகவும் அச்சந்திப்பை முடித்துக்கொண்ட சலே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு நாட்டில் பதற்ற நிலைமை உருவாக வேண்டும் என்று தம்மிடம் கூறியதாகவும் அவர் அந்நகழ்ச்சியல் மேலும் கூறினார். மௌலானாவின் கூற்றுக்களைப் பற்றி விசாரிக்க 2023 ஆம் ஆண்டு ரனில் விக்ரமசிங்க நியமித்த இமாம் குழு அக்கூற்றுக்களை நிராகரித்தது. இந்தப் பின்னணியில் தான் அநுர குமார 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அவர் உடனடியாக அரம்பித்த விசாரணைகளின் படி அதே ஆண்டு பிள்ளையான் விசாரிக்கப்பட்டடார். பின்னர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். அவர் பேராசிரயர் ரவீந்திரனாத் விவகாரத்துக்காக கைது செய்யப்பட்ட போதும் தெற்கில் சில அரசியல்வாதிகள் அப்போது பதற்றமடைந்தனர். ரனில் அவரோடு பேச அனுமதி கேட்;டார். கம்மன்பில தாமாகவே முன்வந்து அவரது சட்டத்தரணியானார். இவற்றையெல்லாம் பார்க்கும் மௌலானா கூறியதைப் போல் ஏதும் நடந்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுரேஷ்-சலேயின்-கைதின்-பின்னணி/91-373396- யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
இது நாங்களே எங்களுக்கு ஏற்படுத்தி உள்ள முட்டாள்தனமான தட்டுப்பாடு. செற்றில 10-15 பேருக்கு மேல கூடவிடாமல் பொலிஸ் கலைத்தாலே பதட்டம் பரபரப்பு குறைந்துவிடும்.ஏராளன் started following யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை- மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு
மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது. ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/மற்றுமொரு-ஈரானிய-கப்பலால்-சலசலப்பு/175-373430- யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை adminMarch 4, 2026 யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , இன்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லிட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளாா் Global Tamil Newsயாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்க...யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5…- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
சைப்ரஸிலுள்ள இராணுவ விமானப்படை தளத்தைத் தாக்கிய ட்ரோன் ஈரான் இலிருந்து ஏவப்படவில்லை – பிரித்தானியா தெரிவிப்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 10:09 AM சைப்ரஸிலுள்ள பிரித்தானியாவின் ஆக்ரோட்டிரி விமானப்படை தளம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் நேரடிப் பொறுப்பல்ல என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானிய தயாரிப்பான 'ஷாஹெட்' ரக வடிவமைப்பை ஒத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு இருப்பை பலப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது. நவீன ஏவுகணைகளுடன் கூடிய ரோயல் கடற்படையின் 'வைல்ட்கேட்' உலங்குவானூர்திகள் இன்னும் சில தினங்களில் சைப்ரஸிற்கு அனுப்பப்படவுள்ளன. செவ்வாயன்று இரவு 'போயிங் சி-17ஏ குளோப்மாஸ்டர் III' ரக பாரிய இராணுவ விமானம் சைப்ரஸை வந்தடைந்தது. இது பிரித்தானிய படைகளின் வலுவூட்டல் நடவடிக்கையின் புதிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது. வான் பாதுகாப்புத் திறன் கொண்ட எச்.எம்.எஸ். ட்ராகன் போர்க்கப்பலும் இப்பிராந்தியத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த மோதல் சூழலில், சைப்ரஸிலுள்ள பிரித்தானிய தளங்கள் அமெரிக்கப் படைகளால் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் கீர் ஸ்டார்மர் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், ஈரானிய ஆதரவுப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆக்ரோட்டிரி தளம் தற்போது அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. சைப்ரஸிலுள்ள இராணுவ விமானப்படை தளத்தைத் தாக்கிய ட்ரோன் ஈரான் இலிருந்து ஏவப்படவில்லை – பிரித்தானியா தெரிவிப்பு- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சர வெடிதான் என்று சொல்கிறீர்கள்.- ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி
ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கியபோது அதிலிருந்த சிலரை காப்பாற்றிய ஶ்ரீ லங்காவையும் நன்றியுணர்வுடன் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படி ஈரானின் புதிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஐரோப்பாவில் வாழும் உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கு மத வெறி, மத அடிப்படைவாதம் இல்லை என்பது. அப்படி இருந்தால் அது ஆசிய/ ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வாழும் மக்களிடையே தான் அது வீரியத்துடன் இருக்கிறது என்பது. உங்களுக்கு தெரியும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பாவில் இனவெறி மிக குறைவான அளவில் உள்ளதென்பது. உங்களுக்கு தெரியும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் இனவெறியை விடவே ஐரோப்பியர்களுக்குள் இனவெறி மிக குறைவு என்பது . உங்களுக்கு தெரியும் வரட்டு கெளரவம், வெற்று பழமைவாதம் ஆசிய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு குறைவு என்பது. உங்களுக்கு அது நன்றாக தெரிந்ததால் தான் அப்படியான பிற்போக்குத்தனம் உள்ள நாட்டில் இருந்து இவ்வாறான தாராளமயமான நாடுகளில் குடியேறி அவர்களின் நாட்டு முன்னேற்றத்தால் பலன் பெற்று மகிழ்சசியாக வாழ்கின்றீர்கள். இவ்வாறாக, அனைத்தும் உங்கள் அறிவுக்கு தெரிந்த நீங்கள் அதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். காரணம் அதே வரட்டு கௌரவம், போலி பெருமை பேசுவதற்காக என்பதும் என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும். இப்படி அனைத்தும் தெரிந்த உங்களுக்கு எனது அறிவுரை தேவையில்லை என்பது எனக்கு தெரியும்.- நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை!
நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை! 04 Mar, 2026 | 03:56 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நுண்கடன் திட்டங்களை முறையாக கையாள்வதற்கு கடந்த கால அரசாங்கங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நுண்கடன் திட்டங்களால் நெருக்கடிக்குள்ளாகி 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் சட்டமியற்றாது என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் நிபுணராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் கலக்கமடையவில்லை. எதிர்க்கட்சிகள் இன்று கலக்கமடைந்து மக்களை குழப்பமடையச் செய்கின்றன.போலியான விடயங்களை குறிப்பிட்டு மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அல்லது மக்களுக்கு எதிரான வகையில் சட்டமியற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கம். மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது கட்டம் கட்டமாக திருத்தம் செய்யப்படுகின்றன. மக்களுக்கு இணக்கமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.இதன் ஒரு அங்கமாகவே நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. வறுமை நிலையில் உள்ள நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டே இந்த நுண்கடன் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திட்டத்தால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். நுண்கடன் திட்டம் குறித்து கடந்தகால அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள். நுண்கடன் திட்டங்களை முறையாக கண்காணிக்கும் வகையில் தான் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் இருந்து எதிர்க்கட்சியினர் விடுபட வேண்டும். மக்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயற்பட போவதில்லை என்றார். நுண்கடன் பொறியில் சிக்கி 200 பெண்கள் தற்கொலை: லக்ஷமன் நிபுணராச்சி வேதனை! - ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.