All Activity
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய முன்னால் வீரர்கள் இந்தியா இப்போட்டியில் மிக இலகுவாக வென்றுவிடும் என கூறியுள்ளனர், இந்தியணியின் நம்பிக்கை உயர்வாகவுள்ளது. இவ்வாறான கருத்துக்களை பார்க்கும் போது இன்றைய இறுதி போட்டி ஒரு பக்க சார்பான (இந்திய) போட்டியாக மாறவாய்ப்புள்ளது போல காணப்படுகிறது. நியுசிலாந்து பார்வையாளர்களை ஏமாற்றி விடக்கூடாது, ஒரு தரமான கடும் போட்டியினை இந்தியாவிற்கு வழங்கவேண்டும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை. இதோ ஆதாரங்கள் இலங்கை vLexRATNAMMA v. RASIAH. இரெட்ணம்மா எதிர் இராசையா என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு - தாலி கட்டி இந்து முறை படி செய்த திருமணம், பதியப்படாவிடிலும், தம்பதிகள் கணவன்-மனைவியாக ஊரறிய வாழ்ந்திருப்பின் சட்ட வலுவுடையது என்கிறது. ஆனால் பொது விவாக சட்டதின் அடிப்படை கூறுகளான, தகாத உறவு, சிறார் மணம் போன்றவற்றை மீறும் எந்த கலாச்சார திருமணத்துக்கும் நீதி மன்றம் சட்ட வலு கொடுக்காது. மேலதிக தகவல்கள் கீழே. https://www.scribd.com/document/591706099/2-චාරිත-ර-නුකුල-විවාහය இந்தியா “சப்தபடி” எனும் 7 சம்பிரதாயங்களை பூர்த்தி செய்யும் இந்து திருமணம் சட்டபூர்வமானது எனவும், இதை நிரூபிக்க பதிவு தேவையில்லை ஆனால் விரும்பினால் அதையும் செய்யலாம் என இந்திய இந்து திருமண சட்டம் 1955 சொல்கிறது. Bhatt & Joshi AssociatesValidity of Hindu Marriage Customs and Rites Under Indian...Explore the legal validity of Hindu marriage customs under Indian law and the importance of ceremonial compliance.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
நெத்தன்யாகுவின் குடும்பம் புளோரிடாவில் உள்ளதாக கூறுகிறார்கள், உண்மை நிலவரம் தெரியாது. இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றி பற்றிய செய்திகள் பரவலாக ஊடக தரப்பில் வெளிச்சம் போட்டுக்காட்டும் விகிதத்துடன் ஒப்பிடும் போது போர் நீடிக்கும் கால அளவுகளை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே உள்ளது, ஆனால் போர் வெற்றி ஈட்டப்படும் வரை தொடர நினைத்தால் அது அனுமனின் வால் போல நீண்டு போகும் அதனால் எந்த இலாபமு ஏற்படாது நட்டமே ஏற்படும். அதனால் ஈரான் அணுகுண்டு ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது (முன்பும் இவ்வாறே கூறினார்கள்), கமேனி கொல்லப்பட்டுவிட்டார், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டது (ஈரானிடம் தாக்குதலை நிறுத்த சொல்லி விட்டு) என கூறி போரினை முடித்து வைக்கலாம்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நல்லது ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் 😄
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அண்ட புழுகு, ஆகாச புழுகு, இது ஏஐ புழுகு… இந்திய படையை இலங்கையில் இறக்கி இந்திய தூதரகத்துக்கு அல்வா தீத்திய சிறி அண்ணைக்கே வீபூதி அடிச்சிட்டியே பரமா😂. வந்த கையோட, நீலங்கரை வீட்டில் உள்ளே போக விஜை அனுமதி மறுப்பு. அதில் எனக்கு சரிபாதி உண்டு. சென்னையில் இருக்க வீடில்லாமல் தவிக்கிறேன் என ஒரு மேலதிக மனுவை கோர்ட்டுக்கு தட்டி விட்டுள்ளார் சங்கீதா அண்ணி. அண்ணை @குமாரசாமி என்ன சத்தத்த காணோம்?
-
உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
நிதிக்கடத்தலலின் பின்னணியில் முன்னால் புலனாய்வாளர்கள் உள்ளது ஒரு வகை சதித்திட்டத்தின் பங்காக இருக்கலாம், கங்கேரி மீது ஒரு தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் அல்லது அதன் அரச தேர்தலில் செய்யப்படும் இடையூறுகளாகவும் இருக்கலாம். ட்ருஸ்பா எண்ணெய் வழங்கி உக்கிரேன் பிரிவில் எந்த வித சேதமும் காணப்படவில்லை என்பதனை செய்மதி பட மூலம் காட்டுகிறது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறமையினை மீறும் செயல்களில் தொடர்ச்சியாக உக்கிரேன் ஈடுபடுகின்றது, முதலில் இந்த எண்ணெய் வழங்கி மீது தாக்கிய போது செலன்ஸ்கி கருத்துக்கள் என்பன ஒரு திட்டமிடாத எதிர்வினையாற்றும் நடவடிக்கையாகவும், ஒரு நீண்டகால இராஜதந்திர சிக்கலை உருவாக்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது. உலக ஒழுங்கு மாற்றம் இப்போது ஆதரவாக உள்ள சக்திகள் நாளை கை கழுவி விடும் நிலை ஏற்படலாம் எனும் நிலையில், தற்போது நிகழ்த்தும் சில செயல்கள், கருத்துக்கள் நீண்ட கால நோக்கில் உக்கிரேனுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் சில மாற்றங்களை ஐரோப்பாவில் ஏற்படுத்த தொடங்கிவிட்டததிற்கான ஆரம்ப கட்ட மாற்றங்கள் தெரிய தொடங்கி விட்டது, தற்போதய நிலையில் எவ்வளவு காலம் மத்திய கிழக்கு நிலை நீடிக்கும் என தெரியாத நிலையில், சில தடாலடி அரசியல் கொள்கை மாற்றம் ஐரோப்பாவில் நிகழலாம்.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
ஆம். ஒரு ஏவுகணையின் விலை சும்மா இலகுவாக குறிப்பிட்டு இது சாதாரணமானது, இதை விட விலை கூடிய ஆபத்தான ஆயுதம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று கணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அணுஆயுதத்தை பாவிப்போமென மிரட்டுகிறார்கள், பொது மக்களின் உழைப்பில், அந்த மக்களை, அவர்களின் சீவியகால உழைப்பை, கனவை அழிக்கிறார்கள். இதனால் இவர்கள் காணும் பயன் என்ன? உலகம், மக்கள் இருந்தாற்தானே இவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்ட முடியும். அணுகுண்டை பாவிப்போம் என்று எதிரியை மிரட்டுவார்களே அன்றி பாவிக்க மாட்டார்கள். நெதன்யாகு தலைமறைவு என்றும் சொல்கிறார்கள். உலக நாடுகள் சேர்ந்து ட்ரம்ப், நெதன்யாகுவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை ஈரான் தோற்றாலும் ட்ரம்ப் ஈரானால் அழிக்கப்படுவார் அல்லது இந்தப்போரை வலிந்து ஈரான் மீது திணித்ததற்காக வருந்துவார் தவறான முடிவை எடுத்து விட்டொமேயென. மனித குலத்திற்கு எதிரான சாத்தான்கள் களை எடுக்கப்படவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இறுதிப் போட்டி நடைபெறப் போகும் வேளை, களம் இவ்வளவு அமைதியாக் கிடக்கு. ஒருத்தருக்கும் இரண்டு நாடுகளையும் பிடிக்காதோ.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஜனாதிபதி மன்னிப்பு தவறுதலாக கேட்டுள்ளார் - தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது ஈரானிய இராணுவ தலைமை. சுப்ரீம் லீடரும் இல்லை, 88 முல்லாக்களுக்குள் பிடுங்குபாடு, ஜனாதிபதிக்கு ஒரு மதிப்பும் இல்லை, இராஊவ தளபதிகளே நேரடியாக பவரை கையில் எடுத்துள்ளார்கள்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதல்கள் நடத்திய நாடுகளிடம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதால் ஈரானில் உள்ள இலங்கை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போன்ற ஆட்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார். இவரின் வினோதமான மன்னிப்பு பரவலான வருத்தத்தை தூண்டியுள்ளதாகவும் பலவீனத்தை காட்டிவிட்டதாகவும் நாட்டின் தேசிய பெருமையை புண்படுத்துவதாகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டபட்டார். எங்கள் ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் உங்களிடமிருந்து இவ்வளவு அவமானகரமான மன்னிப்புக்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை இந்த இழிவான மன்னிப்பிற்கு ஈரான் ஜனாதிபதி தான் ஈரான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதோடு அந்த நாடுகளின் அடுத்த இலக்கு தமக்கு உதவி செய்வோரே. துரோகியை, உதவி பெற்றவனே நம்பமாட்டான். இன்று இவன் தன் தலைவனுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு, இனத்திற்கு செய்யும் துரோகம் நாளைக்கு தனக்கெதிராக திரும்பாது என்பது என்ன நிட்சயம்?
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான வரலாறு ஈரான் விவகாரத்தில் அமெரிக்க இங்கிலாந்து நாடுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த ஈரான் போரை பெரிதாக பின் தொடரவில்லை, ஆனால் தற்போது அதன் தாக்கம் இரஸ்ஸிய உக்கிரேன் போரினை விட அதிகமாக உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஆரம்பித்த போர் சரியான முறையில் செல்ல்லவில்லை போல உள்ளது, ஈரானில் தரைப்படை இறங்காமல் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியாது, ஆனால் தரைப்படையினை அனுப்ப அமெரிக்கா விரும்பவில்லை போல தெரிகிறது. இந்த போர் அமெரிக்க தரப்பின் பலவீனத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது போல உள்ளது, ஒரு வாரத்திற்கு மேலாகவும் தொடரும் போர் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உலக மனித குலத்திற்கு இன்னொரு சிரமமான போராக மாறியுள்ளது.
-
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல.....உலகில் எல்லா இடங்களிலும் உணவுக்கலப்படம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மேலைத்தேய நாடுகளில் மோசமான கலப்படங்கள் உள்ளது.எது, எப்படி என தெரிந்தால் ஒரு முறடு தண்ணீர் கூட குடிக்க முடியாது.
-
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
இந்தியா எப்போது உண்மையின் பக்கம் நின்றது? அது, தான் ஆசியாவின் வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்கிறது. அதற்காக மேலெழும் நாடுகளை, இயக்கங்களை தடுக்கிறது. அமெரிக்காவை எதிர்த்தால் தனது வல்லரசு கனவு தகர்ந்துவிடுமென தயங்குகிறது. அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்லை இந்தியா. காஷ்மீர், இலங்கைத்தமிழர் மீதான தாக்குதல், துரோகம் அதற்கு சாட்சி! ஆனால் அமெரிக்காவிற்கு, தாக்க நினைத்தால் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, காரணமும் தேவையில்லை, தானே காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கும். ஒசாமா பின் லேடன், லிபியா முன்னாள் தலைவர் கடாபி போன்றவர்கள் அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்கள். தனது லாபத்திற்காகவே உதவி செய்வதாக மாயை காட்டி உள்நுழைப்பவர்கள். அதைத்தான் இந்தியாவும் செய்கிறது.
-
ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
இதுதான் உண்மை! மனித நேயம், அணுகுண்டு தயாரிப்பு குற்றச்சாட்டெல்லாம் சும்மா கூறப்பட்ட காரணங்கள். அந்த கறுப்பாடு பிடிபடாமல் இருந்திருந்தால்; அதுதான் ஈரானின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்.
-
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
துரோகத்தினால் காட்டிக்கொடுப்பில் கொல்லப்பட்டுள்ளார். முக்கிய தளபதி அயத்துல்லா அலி கமெய்னியுடன் கூட இருந்து குழி பறிக்கப்பட்டது. அலி கமெய்னியுடன் நிழலாக தொடர்ந்தானே. எங்களின் தலைவருக்கும் விடுதலைப்போருக்கும் நடந்தது இதே. இந்தப்போர் நமது விடுதலைப்போருடன், தாக்குதலுடன், அழிவுகள், இழப்புடன், காட்டிக்கொடுப்புடன் ஒத்துப்போகிறது. ஒரு பலமான அரசை, விடுதலை இயக்கத்தை அழிக்க ஒரு துரோகி துணைபோவதுடன் அந்த இயக்கமோ, அரசோ மீள எழாது எதிரியின் காலடியில் விழச்செய்துவிடும் என்பதற்கு ஈரான் தலைவரின் மரணத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த துரோகி பழியை சுமந்தவன், அதி உச்ச பாதுகாப்பு தலைவர் என்கிறார்கள், புரட்சிகர காவல் படையின் தளபதி என்கிறார்கள், பெயர் அலி ஷம்கானி என்று கூறப்படுகிறது. அந்தப்பதவிக்கேஅவமானம்! அவனால் தன் தலைவனை காட்டிக்கொடுக்க முடிந்ததென்றால், அவனை எவ்வளவு நம்பியிருந்திருப்பார்கள், அந்த நாட்டின் முதுகெலும்பாய் நினைத்திருந்திருப்பார்கள், தலைவனுக்காய், நாட்டுக்காய் உயிரை கொடுப்பானென எண்ணியிருந்திருப்பார்கள். இவனுக்கு ஏற்படப்போகும் முடிவுக்கு இவனை பயன்படுத்தியவர்கள் வருந்தப்போவதில்லை, மன்னிப்பு கேட்கபோவதுமில்லை.
-
உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
உக்ரேன் போர் ஆரம்பத்ததிலிருந்தே நாம் இதைத்தானே சொல்லிக்கொண்டு வருகின்றோம். ஐரோப்பாவிலேயே ஊழலுக்கும் உதவாத தொழில்களுக்கும் பெயர் போன நாடு. இது எனக்கு 20 வருடங்களுக்கு முன்னரே தெரியும். இவர்களை நம்பி ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேன் எனும் ஆற்றில் இறங்கியது சொந்த செலவில் சூனியம் செய்தற்கு சமன். இன்றைய ஜேர்மன் நாளிதழில் வந்த செய்தி இது.👇 Bild
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத அறையில் என் நண்பர் ஒருவரின் இறந்த உடலை பார்க்க போன போது அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள், இறந்த இளம் மற்றும் நடுத்தர பெண்களின் இறந்த உடலுடன் உறவு கொள்வதற்கு என்றே சிலர் உள்ளதாகவும், அதனால் அதை தடுக்க பல கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் கூறினர். நான் லஞ்சம் கொடுத்து தான் என் நண்பரின் உடலை பார்க்க சென்றேன். பண்டைய காலத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் இறந்த பின் அவ் உடலை காக்க காவலாளிகளை நியமிக்கும் வழக்கம் பல நாடுகளில் வழக்கத்தில் இருந்தன. இங்கு ரொரண்டோவில் பல ஆண்களை ஏமாற்றி (Gays களை) பின் பாலியல் வல்லறவாக்கி கொன்ற சீரியல் கொலையாளி, இறந்த ஆணின் உடலுடன் உறவு கொள்ளும் வழக்கத்தை கொண்டவராக இருந்தார் என அங்கு கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து கண்டு பிடித்தனர்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு. எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மன்னிப்பு கேட்டு விட்டு… சில மணித்தியாலத்துக்கு முன்பு, உலகின் இரண்டாவது பெரிய பயணிகள் விமான நிலையமான… டுபாய் விமான நிலையத்தின் மீது, தாக்குதல் நடத்தி உள்ளார்கள் போலுள்ளது. அல்லது… இஸ்ரேல் கோத்து விட்டு, சந்திலை சிந்து பாடுதோ தெரியவில்லை. 🤣
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிணங்களை, மிருகங்களை புணர்வது கூட… ஒரு வகை நோய் என்கிறார்கள். இந்த நோய்.. சிங்களவர்களில் பரவலாக தொற்று வியாதி போல் தெரிகின்றது. ஒரு சிங்களவர், கழுதையுடன் உறவு வைக்கப் போக… அது, பின்னங்காலால் அடித்து, முழங்கால் சில்லு பெயர்ந்த சம்பவமும் உண்டு. 😂 முன்பெல்லாம்… மனித முகத்துடன் ஆடு, குட்டி போட்டு இறப்பதையும் செய்திகளில் வாசித்து இருப்போம். அது எல்லாம்… இந்த வியாதி பிடித்தவர்களின் வேலையாகத்தான் இருக்கும். 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
உக்ரைன் போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே…. வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் மற்றும் ஆயுத தளபாடங்களில் பெரும் ஊழல் நடப்பதாக செய்திகள் வந்தது. அதில் செலென்ஸ்கி கூட சம்பந்தப் பட்டு இருந்ததாக கூறி இருந்தார்கள். கடந்த நான்கு வருடங்களில்… எவ்வளவு பில்லியன் பணம் திருடப் பட்டிருக்கும் என்று ஊகிப்பது கடினம் அல்ல. போரை… வைத்தே மகிந்த ராஜபக்ச குடும்பம் பணக்காரர் ஆகிய மாதிரி, செலென்ஸ்கியும் அதே… செயலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
உக்ரைன் வாகனத் தொடரணியில் இருந்து மில்லியன் கணக்கான யூரோக்கள் ரொக்கம் மற்றும் தங்கத்தை ஹங்கேரி பறிமுதல் செய்தது கியேவ் மற்றும் புடாபெஸ்ட் இடையேயான சமீபத்திய மோதலில் ஏழு உக்ரேனியர்கள் கைது செய்யப்பட்டு பணமோசடி விசாரணை தொடங்கப்பட்டது. கீவில் ஷான் வாக்கர் மற்றும் புடாபெஸ்டில் ஃப்ளோரா கரம்வோல்கி சனி 7 மார்ச் 2026 03.00 AEDT பகிர் கூகிளில் கார்டியனை விரும்புங்கள் ஹங்கேரிக்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் கடுமையான மோதல் மேலும் அதிகரித்துள்ளது, புடாபெஸ்ட் மில்லியன் கணக்கான யூரோக்கள் பணமும் தங்கக் கட்டிகளும் கொண்ட இரண்டு உக்ரேனிய கவச வங்கி வாகனங்களை பறிமுதல் செய்தது. வாகனத் தொடரணியுடன் வந்த ஏழு உக்ரேனிய குடிமக்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட உக்ரேனியர்களுக்கு உளவுத்துறை தொடர்புகள் இருப்பதாகவும், பணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம் என்றும் ஹங்கேரிய அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி சிபிஹா, புடாபெஸ்ட் "பணயக்கைதிகளை பிடித்து பணத்தை திருடியதாக" குற்றம் சாட்டினார். அடுத்த மாதம் ஹங்கேரிய தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக ரஷ்ய சார்பு ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் இந்த ஊழலை சமைப்பதாகவும் சிபிஹா குற்றம் சாட்டினார் . ஹங்கேரியின் தேசிய வரி மற்றும் சுங்க நிர்வாகம், இந்த கப்பல் போக்குவரத்து தொடர்பாக பணமோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது, அதில் 40 மில்லியன் டாலர்கள் மற்றும் €35 மில்லியன் ரொக்கம், அத்துடன் 9 கிலோ தங்கம் இருந்ததாகக் கூறியது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் "முன்னாள் உக்ரேனிய உளவுத்துறை ஜெனரல்" என்றும் அது கூறியது. உக்ரைனின் அரசு சேமிப்பு வங்கியான ஓஷாட்பேங்க், அதன் ஊழியர்கள் ஆஸ்திரியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் பணம் மற்றும் தங்கத்தை ஒரு "வழக்கமான பயணமாக" கொண்டு செல்வதாகக் கூறியது, இது உக்ரைனில் விமானப் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் தரைவழியாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஓர்பனின் அரசியல் இயக்குனர் பாலாஸ் ஓர்பன், இந்த ஏற்றுமதியில் சந்தேகம் எழுப்பினார்: “ஹங்கேரி முழுவதும் பணம் மற்றும் தங்கத்தால் நிரப்பப்பட்ட கவச வாகனங்கள் வழக்கமாக முறையான நிதி பரிவர்த்தனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது அல்ல,” என்று அவர் X இல் எழுதினார். “உண்மையான கேள்வி எளிது: இந்தப் பணத்திற்குப் பின்னால் யார் நிற்கிறார்கள், அது எதற்கு நிதியளிக்கிறது?” எரிவாயு விநியோகம் தொடர்பான தகராறில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை கியேவ் எண்ணெய் குழாய் பழுதுபார்க்கும் பணியை வேண்டுமென்றே நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டின. ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குழாய் சேதமடைந்ததை அடுத்து, அந்த குழாய் பழுதுபார்க்கும் பணியை வேண்டுமென்றே நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டின. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளையும், உக்ரைனுக்கு கூடுதலாக €90 பில்லியன் கடனையும் ஓர்பன் ரத்து செய்தார். வியாழக்கிழமை கடன் வீட்டோவுக்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஓர்பனுக்கு உடல் ரீதியான அச்சுறுத்தல் போல பதிலளித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒருவர் 90 பில்லியனைத் தடுக்க மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம், இல்லையெனில் இந்த நபரின் முகவரியை எங்கள் ஆயுதப் படைகளுக்கு, எங்கள் ஆட்களுக்குக் கொடுப்போம். அவர்கள் அவரை அழைத்து அவர்களின் சொந்த மொழியில் பேசட்டும், ”என்று அவர் கூறியது புடாபெஸ்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள கடுமையான போட்டித் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் ஆதாயத்திற்காக ஓர்பன் இந்த ஊழலைத் தொடங்கியதாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்திய ஆய்வுகள், அடுத்த மாதம் நடைபெறும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி வேட்பாளர் பீட்டர் மாக்யார் மகத்தான வெற்றியைப் பெறுவார் என்றும், இது 16 ஆண்டுகால ஓர்பனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான சொல்லாட்சியை ஓர்பன் தீவிரப்படுத்தியுள்ளார், மாக்யாரின் வெற்றி ஹங்கேரியை போருக்குள் இழுக்கக்கூடும் என்று கூறியுள்ளார். ஹங்கேரிய ஆய்வாளர்கள், ஜெலென்ஸ்கியின் வார்த்தைகள் ஓர்பனின் கைகளில் விழுந்ததாகவும், வாக்கெடுப்புகளில் அவருக்கு உதவக்கூடும் என்றும் கூறினர். புடாபெஸ்ட் சிந்தனைக் குழுவான அரசியல் மூலதனத்தைச் சேர்ந்த ராபர்ட் லாஸ்லோ, ஜெலென்ஸ்கியின் அச்சுறுத்தல்கள் "ஹங்கேரிய அரசாங்கம் பல மாதங்களாகத் தூண்டி வரும் போர் மனநோயைத்" தூண்டவும், பொதுமக்களின் மனநிலையை மாற்றவும் போதுமானதாக இருக்கும் என்றார். " விக்டர் ஓர்பனை மீண்டும் விளையாட்டுக்குள் கொண்டு வருவது உக்ரேனிய ஜனாதிபதிதான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ," என்று அவர் கூறினார். ஜெர்மன் மார்ஷல் நிதியத்தின் ஆய்வாளரான சுஸ்சன்னா வேக் ஒப்புக்கொண்டார்: “ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் ஓர்பனின் கைகளில் உள்ளன. இதை அவருக்கு எதிரான அச்சுறுத்தலாக அல்லாமல் ஹங்கேரிக்கு எதிரான அச்சுறுத்தலாக அவரால் எளிதாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் அவரது சொந்தக் கதையை வலுப்படுத்த முடிந்தது,” என்று அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் நேரடியாக சர்ச்சையில் சிக்குவதைத் தவிர்க்க முயன்ற மக்யார், ஆர்பனுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இந்தப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை இழந்துவிடுவோமோ என்ற கவலையில் அவர் இருந்தார். "உக்ரைன் ஜனாதிபதி பிரதமர் விக்டர் ஓர்பனை மிரட்டினார். எந்த வெளிநாட்டுத் தலைவரும் ஹங்கேரியரையோ அல்லது வேறு யாரையோ அச்சுறுத்த முடியாது," என்று ஒரு அரசியல் பேரணியின் போது மக்யார் கூறினார், ஜெலென்ஸ்கி தனது உரையை உக்ரைனிய இராணுவத்துடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார். ஜெலென்ஸ்கி தனது அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கும் வரை உக்ரைனுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை மக்யார் கேட்டுக்கொண்டார். கைது செய்யப்பட்ட ஏழு உக்ரேனியர்களும் ஹங்கேரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஹங்கேரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர், ஆனால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்திற்கு என்ன நடக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை. கைதிகளின் வழக்கறிஞர் லோராண்ட் ஹார்வாத், தனது வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் 24.hu செய்தி தளத்திடம் தெரிவித்தார். "இங்கே என்ன நடக்கிறது என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு சாதாரண நடைமுறை அல்ல," என்று அவர் கூறினார். https://www.theguardian.com/world/2026/mar/06/hungary-seizes-millions-euros-cash-gold-ukrainian-convoy உக்கிரேன் முன்னால் புலநாய்வு பிரிவினரை நிதி மற்றும் தங்கத்துடன் கைது செய்துள்ளதாக கங்கேரி கூறியுள்ளது.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
செலென்ஸ்கி Black Mail பண்ணி... 90 பில்லியன் ஐரோ வாங்குகின்ற பிளான் போலுள்ளது. - உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.