அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும். இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
-
- 0 replies
- 756 views
-
-
இந்தியாவின் அதிநவீன செயற்கை கோள் எனக் கருதப்பட்ட 'ஜிசெட்-5 பி' நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்திய ரூபாவில் சுமார் 125 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோளின் நிறை 2,310 கிலோ கிராம்களாகும். இச்சம்பவமானது இந்திய விண்வெளிக்கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று இவ்வருடம் 'ஜிசெட்-4' விண்ணில் ஏவப்பட்டு சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி
-
- 0 replies
- 955 views
-
-
இயற்கை நமக்குத் தந்த செல்வம் சம்பா புல்! சம்பங்கோரை என்று தமிழிலக்கியம் கூறும் இப்புல் ஏரிகளில்தான் வளரும் (விளையும்). இதன் சிறப்பு தீப்பற்றினால் பிறவகை புற்கள், கீற்றுகள் போல் கொழுந்து விட்டெரியாது. வீணர்களாலோ மற்றும் அறியாமலோ பிற வகையான கூரைகள் தீப்பிடித்தால் கூட நீண்ட நேரம் எரியும். ஆனால் சம்பா புல் மட்டும் தீப்பிடித்ல் ஓரிரு அடிகள் கூட பரவாது. கருகி அங்கேயே புகை மண்டும். புகையை நாம் பார்த்தமட்டில் தண்ணீர் விட்டு அணைக்கலாம். கருகிய சிறு பாகத்தை நீக்கிவிட்டு செலவின்றி அப்படியே சரிசெய்துவிடலாம். இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரி…
-
- 1 reply
- 823 views
-
-
இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது. ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
காதல் சடுகுடு.... எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா காளையை அடக்கி, கன்னியின் வளைகரம் பிடித்தல், இள வட்டக் கல்லை தோளில் சுமந்து, தன் பலத்தை நிரூபித்தல், பெண்ணின் தந்தை சம்மதிக்காத போது ,கண் கவர்ந்த கன்னியை அதே தோளில் சுமந்து களவு போதல், சபதம் ஏற்று, பொருள் ஈட்டி, பின் கன்னியை திருமணம் செய்தல் போன்ற "ரொமாண்டிக்" நிகழ்வுகள் மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. "சிக்லிட் " மீன்களிடம் அவ்வகையான குணங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. நீங்கள் உங்கள் காதலர் மேல் வைத்துள்ள அன்பே புனிதமானது , இதய உணர்வின் வெளிப்பாட்டு களஞ்சியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில் மூளையின் சில பாகங்களின் ஒத்துழைப்போடு,இச் செயல்பாட…
-
- 17 replies
- 2.2k views
-
-
மனிதனின் உரிமைகள் என்றால் என்ன?? WHAT ARE HUMAN RIGHTS?
-
- 0 replies
- 988 views
-
-
ரோபோ பெண்ணின் உதவியோடு விளக்கம்.
-
- 0 replies
- 19.4k views
-
-
மனம் என்பது என்ன? முனைவர். க. மணி. அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம். முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உயிர்களின் இன்றியமையாத மூலக்கூற்று வேதிப் பொருட்களாகக் கருதப்படும் ஆறு இரசாயனங்களில் ஒன்றுக்கு மாற்றாக வேறொரு இரசாயனத்தைப் பயன்படுத்தி உயிர்வாழும் முதல் உயிரினம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்திலுள்ள ஒரு ஏரியில் கண்டரியப்பட்டுள்ள இந்த நுண்ணுயிரி, பாஸ்பரஸ் என்ற மூலக்கூறுக்கு பதிலாக நச்சுத்தன்மை கொண்ட ஆர்செனிக்கை தனது உயிரணுக் கட்டமைப்பில் பெற்றுள்ளது. மூற்றிலும் மாறுபட்ட வேதிக்கட்டமைப்பு கொண்ட வேற்று கிரகங்களில் கூட உயிர்கள் தோன்றியிருப்பதற்கும் வாழ்வதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற நெடுங்கால அபிப்பிராயத்துக்கு வலுச்சேர்ப்பதாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும…
-
- 3 replies
- 977 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
வருமானவரி இல்லாத நாடு (புரூனை) Facts About Brunei Darussalam Brunei has no personal income tax. What you earn is all yours. The cost of living is considerably lower than in the UK. Spacious houses are available at a reasonable cost. Here are some pictures of houses in Brunei rented to teachers from overseas. There are no exchange controls. Your cash can be moved in and out of Brunei without restriction. The Brunei Dollar has the same value as the Singapore Dollar. Petrol is remarkably cheap - less than 20 pence per litre for unleaded. Like the UK, driving is on the left side of the road. Car ownership rates are high but driving standards are not.…
-
- 2 replies
- 1.5k views
-
-
லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மிக சிறப்பாக பயன்படும் என்றும் ஆராய்ச்யாளர்கள் தெரிவித்துள்ளனர். கம்யூட்டரில் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து வார்த்தைகளை உள் வாங்கும் சக்தியையும் இந்த வகை ரோபோக்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
-
- 1 reply
- 774 views
-
-
அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிர…
-
- 0 replies
- 1.7k views
-
-
மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசின் காற்று மின்சக்தி தொழில்நுட்ப மையத்தின் சார்பில் 2 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்திதுறை அமைச்சர் பரூக் அப்துல்லா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. மின்உற்பத்தி மூலம்தான் வேலைவாய்ப்பும் உருவாகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கடல், காற்று, புவி வெப்பத்திலிருந்து…
-
- 0 replies
- 898 views
-
-
உலகில் அதிவேக காரை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது. உலகில் அதிவேகமாகச் செல்லக்கூடிய கார் ஒன்றை இங்கிலாந்து உருவாக்கவுள்ளது. உலகிலேயே அதிவேகமாக இயங்கும் புல்லட் ரயிலை விட இது அதி வேகம் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிவேக புல்லட் ரயில் சீனாவில் ஓடுகிறது. இது மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்கிறது. ஆனால் அதைவிட அதிவேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றைத் தயாரிக்கவுஉள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மணிக்கு சுமார் 1600 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்க விதத்தில் இக்காரை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்க உள்ளனர். கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் என்பவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணி எதிர்வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
வான்வெளியில் நமது கதிரவன் குடும்பத்தை தவிர ஏராளமான கதிரவன் குடும்பங்கள் உள்ளன. இதுவரை நமது பால்வழியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கதிரவன் குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது பால்வழிக்கு வெளியே ஒருகோளை கண்டு பிடித்து உள்ளனர். இது பால் வழிக்கு வெளியே உள்ள கதிரவன் குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வழிக்கு வெளியே கோள் கண்டுபிடிக் கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை. சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப்” மூலம் இதை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்கவேண்…
-
- 0 replies
- 814 views
-
-
- அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…
-
- 11 replies
- 1.7k views
-
-
குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய் பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவத…
-
- 5 replies
- 2.3k views
-
-
'இன்னொரு பூமி’ இருக்குமா? வெள்ளி, 12 நவம்பர் 2010 11:06 இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் (Milky way) மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
கடல் வாழ் பாலூட்டி உயிரினங்களில் ஒன்று திமிங்கிலம். இவை தங்கள் குட்டிகளுக்குப் பால் ஊட்டுவது நில வாழ் விலங்குகளைப் போலல்ல. இவை நீரின் அடியில் சென்று பாலை வெளிவிடும். வெளிவிடப்பட்ட பால், நீரின் மேல்மட்டத்திற்கு வரும். அவ்வாறே வந்த பாலையே குட்டிகள் குடித்துப் பசியாறும்.
-
- 67 replies
- 31.9k views
-
-
எதற்கும் இதையும் பார்த்துவிட்டு ஒருதடவை கடைக்கு செல்லுங்கள். இந்த ஆண்டு வந்திருக்கும் செல்லிடப்பேசிகளில் முதலிடத்திற்கு போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் iphone4, N8 (Nokia 8) , Samsung Galaxy s பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவரிசையில் HTC Desire HD'ம் தன்னுடைய பலத்தை காட்ட போட்டியில் குதித்திருக்கின்றது. என்னதான் அப்படி இந்த செல்லிடபேசியில் புதிதாக உள்ளது? இணையத்தளப்பாவனைக்கு ஏற்றவகையில் தெலைபேசியின் 4'3 இஞ்சி அளவு திரை (Super-LCD screen), மின்னல் வேக processor, ஞாபக அட்டை1'5 GB (Memory card), என்று மேலும் பல மெருகூட்டலுடன் களத்தில் குதித்திருக்கின்றது. தற்பேதுள்ள செல்லிடப்பேசிகளில் உள்ள உலாவியில் (web browser) Flash உள்ள இணையத்தை பார்வையிடும்போது ஏற்படும் அச…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது. ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல…
-
- 4 replies
- 997 views
-
-
கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன். அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது. (தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)
-
- 17 replies
- 2.7k views
-
-
தொசிபா அணுத் தொலைக்காட்சி . Toshiba CELL-Tv தொலை இயக்கக்கருவி (remote control) இல்லாமலே, கைகளால் தொலைக்காட்சியை தொடாமல், தொலைக்காட்சியை இயக்கும் காலம் வந்துவிட்டது. தொசீபாவின் (Toshiba) புதியுமுயற்சி விரைவில் உங்கள் வீடுகளில்.. தொலை இயக்கக்கருவிக்குப் பதிலாக உங்கள் கை அசைவின் மூலம் ஒலியை கூட்டலாம், குறைக்கலாம், திரைப்படங்கள் பார்ப்பீர்களாயின் பிடிக்காத காட்சிகளை வெறும் கை அசைவின் மூலமாகவே ஓடவிட்டுவிடலாம். இந்ததொழில்நுட்பம் இப்போது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் விரைவில் தொசீபா (Toshiba) ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தப்போவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறலாம். [காணொளி இணைப்பு]
-
- 0 replies
- 805 views
-