அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள் நாராயணி சுப்ரமணியன் கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. அறிவியல் பின்னணி காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உம…
-
- 0 replies
- 746 views
-
-
எம். மணிகண்டன் பிபிசி தமிழ் முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் என்பது என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது? இப்போது நடக்க…
-
- 0 replies
- 609 views
-
-
உயிர்சத்துக்களுக்கான கடல்வழிச்சாலை நாராயணி சுப்ரமணியன் தகவல்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்கள் கரையொதுங்குவதும், அதையொட்டிய தேடலில் தொடங்கும் பயணம் காதலில் முடிவதாகவும் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட கண்ணாடி பாட்டிலை கரைசேர்ப்பதில் கடல் அலைகளுக்கு மட்டுமல்ல, கடல் நீரோட்டங்களுக்கும் (Ocean currents) பெரும் பங்கு உண்டு. “உள்நாட்டுக் கடல் எல்லைகளில் பிடிக்கப்படுகிற மீன்களில் 90 விழுக்காடு வேறு ஒரு நாட்டிலிருந்து இங்கு வலசை வந்தவை தான்” என்று சமீபத்திய ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன்களின் பயணத்திற்கு நீரோட்டங்களும் துணைபுரிகின்றன. கடல் உயிரினங்களின் வலசைப்பாதையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டங்கள் பெரும…
-
- 0 replies
- 541 views
-
-
250 கிராம் விதை நெல்லில் 1 ஏக்கர் சாகுபடி; 18 ஆண்டுகளாக அசத்தும் விவசாயி! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் நெல் ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர். 250 கிராம் விதை நெல்லைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியை கடந்த 18 ஆண்டுகளாக செய்து சாதனை படைத்துவரும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்து வருகிறார். …
-
- 0 replies
- 429 views
-
-
ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும். சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா. இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும். இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம்…
-
- 0 replies
- 350 views
-
-
Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 இரா.கலைச் செல்வன் Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிற…
-
- 1 reply
- 926 views
-
-
அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்). இப்போது காலம் நெருங்கிவிட்டது. ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன். உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம். ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள். நன்றி.
-
- 18 replies
- 1.9k views
- 1 follower
-
-
வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி.ந டிசம்பர் 12, 2020 உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதிலிருந்து நாம் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். மனிதன் பல உயிரினங்களிலிருந்து மாறுபடுவது அவனது சிந்திக்கும் திறனால்தான். உண்ணும் உணவினுக்காய், உலகத்தின் பூபரப்பை, செந்நெல் கழனிகளாய், செங்கரும்புத் தோட்டங்களாய் மாற்றிய வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில்களை இயந்திர மயமாக்கியதும் இயந்திரப் புரட்சியிலிருந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னேகியதும் அவன் அறிவின் வீச்சிற்குச் சான்று. இவை அனைத்தும் மனித சமுதாயத்திலும் தொழிற்சாலைகள…
-
- 14 replies
- 5.4k views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி…
-
- 0 replies
- 360 views
-
-
தடுப்பூசி அறிவியல்: யாருடைய சொத்து? டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது. அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன. இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை. எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பத…
-
- 0 replies
- 749 views
-
-
வியக்க வைக்கும் மனித உடல் நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. வியக்க வைக்கும் மனித உடல் * மனித உடலின் மூலப் பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை. * மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், …
-
- 0 replies
- 615 views
-
-
முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன் Sponsored content சிகிச்சை மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை. அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும்போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். அவ்வளவுதான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்துபோகிறார். உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்த…
-
- 0 replies
- 469 views
-
-
யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு - மெய்சிலிர்க்கும் தருணங்கள் 12 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யூரி ககாரின் "உலகத்திலிருந்து வெகு தொலைவில், இங்கே நான் ஒரு தகரப் பெட்டியில் அமர்ந்திருக்கிறேன். பூமி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது." டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும்…
-
- 0 replies
- 286 views
-
-
எகிப்தில் 3,400 வருடங்கள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு 16 Views சுமார் 3,400 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில் பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நி…
-
- 0 replies
- 345 views
-
-
-
பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு! 2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி மீது விரைவாக மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்தக் கணிப்பு, பின்னர் 2068இற்குப் பின்தள்ளப்பட்ட நிலையில் தற்போது நாசா, குறைந்தது 100 ஆண்டுகளில் இவ்வாறு மோதல் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சிறு கோளுக்கு பண்டைய எகிப்திய தெய…
-
- 1 reply
- 472 views
-
-
மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பிபிசி நியூஸ் முண்டோ மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன் ஐன்ஸ்டைன் தனது மகனின் மனநல கோளாறுடன் ஈடுகொடுக்க சிரமப்பட்டார் என்று நான் நினைக்கிறேன், "என்று ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டத்தின் ஆசிரியரும் துணை இயக்குநருமான ஃஜீவ் ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார். 'டெட்' என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இளைய குழந்தை. சிறு பையனாக அவனது உடல் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவனது மனநல பிரச்னைகள் அவன் பெரியவனாகும் வரை வெளியே தெரியவில்லை…
-
- 0 replies
- 795 views
-
-
துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டை: விஞ்ஞானிகள் வியப்பு ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. …
-
- 0 replies
- 413 views
-
-
யூதர்களை வெறுத்த காலத்தில் இவர் ஒரு யூத இனத்தில் பிறந்தார் அறிவியல் கண்டுபிடிப்புகளை patent செய்யும் அலுவலகத்தில் சாதாரண எழுத்தாளராக பணியாற்றியவர் அறிவியலை கற்க உந்தப்பட்டு அறிவியலை ஆழமாக கற்றார்... உலகமே ஆங்கிலேயரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவருமான Sir Isaac newton கூறிய ஆய்வுகளே இறுதி என நம்பி கொண்டிருக்க...எதிரி நாடான ஜெர்மனியரும் யூதருமாக இருந்த ஐன்ஸ்டீன் அதையும் கடந்தார்.... இந்த பிரபஞ்சத்தை தனியாக கடவுள் என்ற படைப்பாளி படைத்துள்ளான் என்று நம்பிய உலகை தன்னுடைய e=mc2 என்ற சமன்பாடு மூலம் கடவுள் படைப்பாளி என்ற ஒரு தேவை இல்லை என்று நிருபித்தவர்... மதங்கள் கூறும் மனிதனுக்கு மேலே ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்க வாய்ப்பில்லை, இந்த பிரபஞ்சமே ஒரு கடவுள் தான் …
-
- 0 replies
- 695 views
-
-
செவ்வாயில் ‘பொ்சிவரன்ஸ்’ எடுத்த துல்லியப் படங்களை வெளியிட்ட நாசா
-
- 0 replies
- 367 views
-
-
-
- 0 replies
- 780 views
-
-
19 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,NASA செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும். அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக்…
-
- 4 replies
- 742 views
-
-
முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் அருகி வரும் விலங்கினமான ஃபெர்ரெட்டை, அதேபோன்ற ஒரு விலங்கின் மரபணுவைப் பயன்படுத்தி குளோனிங் (படியெடுத்தல்) முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 1988-ம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட்டை குளோனிங் செய்திருக்கிறார்கள். புதிதாகப் பிறந்திருக்கும் ஃபெர்ரெட்டுக்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் செய்தது இதுவே முதல் முறை. ஒருகட்டத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப…
-
- 0 replies
- 918 views
-
-
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக செவ்வாயில் ஸ்பேஸ் ஹெலிகொப்டரை பறக்கவிடவுள்ள நாசா! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி இன்று (வியாழக்கிழமை) செவ்வாயில் தரையிறங்குகிறது. இந்த நிலையில் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, செவ்வாய் கோளில், ஸ்பேஸ் ஹெலிகொப்டரை நாசா பறக்கவிடவுள்ளது. செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அதற்கான சுவடுகள் அங்கு எஞ்சியுள்ளனவா, எதிர்காலத்தில் உயிரினங்களை அங்கு குடியேறச் செய்யும் சாத்தியங்கள் உள்ளனவா என தொடர்ந்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நாசா ஆவது விண்கலத்தை ஏவியுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்கலம் 300 மில்லியன் மைல்கள் பயணித்து…
-
- 0 replies
- 358 views
-
-
பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு! இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன் பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம் உற்பத்தி பிரீமியம் ஸ்டோரி பூலோகத்தின் ‘கற்பகத்தரு’ என அழைக்கப்படுகிறது பனை. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கிடைப்பதுதான் கருப்பட்டி (பனை வெல்லம்). தமிழகத்தின் சில பகுதிகளில் பனைவெல்ல உற்பத்தி நடந்தாலும் ‘உடன்குடி’தான் கருப்பட்டிக்குச் சிறப்புப் பெற்ற ஊர். மருத்துவ குணமிக்கப் பாரம் பர்யமான முறையில் கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ளது ராமலிங்க…
-
- 1 reply
- 652 views
-