அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரியனுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/87434/மிகச்சிறிய-அளவில்கருந்துளையைக்கண்…
-
- 0 replies
- 268 views
-
-
படத்தின் காப்புரிமை mikiell / getty நிலவின் வளிமண்டலத்தில் 'ஆர்கான்' என்ற வாயுவின் சமதானியை சந்திரயான்-2இன் உட்கருவி ஒன்று கண்டறிந்துள்ளது. இந்தத் தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது நிலவில் கண்டுபிடிக்கட்டுள்ள ஆர்கான்-40 எனப்படுவது ஆர்கான் வாயுவின் சமதானியாகும் ஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான்களையும் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் சமதானி ஆகும். நிலவை சுற்றியுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை 'நிலவின் புறவெளி மண்டலம்' (lunar exosphere) என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்த காற்று மண்டல…
-
- 1 reply
- 462 views
-
-
அமெரிக்க விமானப்படையின் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ரகசிய ஆளில்லா விமானம், 780 நாட்கள் புவிவட்டப்பாதையில் சுற்றி ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறிய விண்கலம் போல் காட்சியளிக்கும் எக்ஸ்-37பி என்ற அந்த ஆளில்லா விமானம்தான், ரகசிய ராணுவ சோதனை திட்டங்களிலேயே மிக நீண்ட நேரம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்னென்ன ஆய்வுகளை மேற்கொண்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விண்கலங்களில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க விமானப்…
-
- 0 replies
- 816 views
-
-
புதிய மின்கருவி கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை! புதிய மின்கருவியினை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். லண்டனிலுள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பொலிமர் பிலிம்கள் மூலம் புதிய டை எலெக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது குறித்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. பொலிமர் பிலிம்கள், டை எலெக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பொலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எலெக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரத்தினை சேமிக்கிறது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க …
-
- 1 reply
- 721 views
-
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறி பழுது பார்த்து திரும்பி இரு பெண் விஞ்ஞானிகள் சரித்திர சாதனை படைத்துள்ளனர். விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் ஆகிய ஜோடி விண்வெளி நடைபயணத்தில் நடந்த முதல் பெண் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் மின்சாரம் வழங்கும் சூரிய ஒளித் தகடுகளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் இந்தப் பெண்கள் ஈடுபட்டிருந்தாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெளியே ஏற்படும் பழுதுகளை இதுவரை ஆண்களே செய்து வந்த நிலையில் முதன் முதலாக விண்வெளியில் நடந்த பெண்கள் என்ற பெருமையை கிறிஸ்டினாவும், ஜெஸிகாவும் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதமே பெ…
-
- 0 replies
- 292 views
-
-
பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந…
-
- 1 reply
- 474 views
-
-
2019-10-17@ 14:15:04 செயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது. சில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியபடி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது. http:…
-
- 0 replies
- 794 views
-
-
ஆளில்லா புதுமை விவசாயம் : அறுவடைக்கு ரோபோக்கள் – ஜப்பானின் சாதனை! ஜப்பானை சேர்ந்த யூச்சி மோரி என்பவர் காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. அதற்கு மாறாக அவர் மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பொலித்தீன் உரைகளை மாத்திரமே பயன்படுத்துகிறார். இந்த விவசாய முறையை மேற்கொள்வதற்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலித்தீன் பைகளின் மீது வளரும் தாவரங்களுக்கு தண்ணீரையும், பிற கனிம சத்துக்களையும் சேர்த்துக் கொள்ள இந்த முறை வசதியாக இருக்கின்றது. பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படுகின்றது. அந்த பொலித்தீன் உறை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் …
-
- 0 replies
- 281 views
-
-
செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரி இருப்பதற்கான சாத்திய கூறுகளை 1970களிலேயே நாசா கண்டுபிடித்ததாக முன்னாள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நாசா வைக்கிங் லேண்டர் என்ற கருவியை அனுப்பியது. அந்த கருவியானது, அதன் முதல் புகைப்படங்களை கடந்த 1976ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி அனுப்பியது. அதன் தரவுகளை ஆய்வு செய்தபோது நுண்ணுயிரி போல் ஏதோ சுவாசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நுண்ணியிரி அல்ல என கூறி நாசா ஆராய்ச்சியாளர்கள் அதனை நிராகரித்தனர். இந்நிலையில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியிட்ட முன்னாள் ஆராய்ச்சியாளரும் வைக்கிங் லேண்டரின் Labeled Release என்ற கருவியை உருவாக்கியவருமான கில்பெர்ட் வி லெவின், செவ்வாய் க…
-
- 0 replies
- 334 views
-
-
லண்டனில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புக்களை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ரிஜென்ட்ஸ் பார்க்கில் நிஜச் சிலைகளோடு ஆங்காங்கே கண்ணுக்குப் புலப்படாத கலை அதிசயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் மக்கள் உற்சாகமடைகின்றனர். ஃபிரீஸ் (Frieze) எனப் பெயரிடப்பட்ட சிலைகளை அக்யூட் ஆர்ட் என்ற ஸ்டூடியோ, தென்கொரிய கலைஞர் கூ ஜியோங்-உடன் இணைந்து வடிவமைத்துள்ளது. இதை ஸ்மார்ட்போன் கேமராக்கள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிடி செயலியின் உதவியோடு மட்டுமே காண முடியும். வெறும் கண்களுக்குப் புலப்படாத சிற்பங்கள், அந்தரத்தில் மிதப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தொட்டுணர முடியாத சிலைகளு…
-
- 1 reply
- 542 views
-
-
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11, எக்ஸிகியூயோபாக்டீரியம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஃபோக்ஸ்வேகனின் போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க விமான உற்பத்தி றிறுவனமான போயிங் வெளியிட்ட அறிவிப்பில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் ரக காரான போர்ஷெவோடு இணைந்து மின்சாரத்தால் இயங்குவதோடு பறக்கவும் திறன்கொண்ட காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனநெருக்கடி அதிகமுள்ள மெட்ரோ நகரங்களுக்கு ஏற்ப வடிவமைப்பதாகவும் கூறியுள்ளது. தானாகவே செங்குத்தாகப் புறப்பட்டு பறந்து தரையிறங்கும் கார்களுக்கான வடிவமைப்பில் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போயிங்கும் ஒரு போட்டியாளராக உள்ளது. தானியங்கி பயணிகள் வாகனத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆடியுடன் இணைந்து ஏர்பஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் …
-
- 1 reply
- 401 views
-
-
உலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. 1957 ஒக்டோபர் 4 அன்று முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் உலகைச் சுற்றி வந்தது. 1967 ஒக்டோபர் 10 அன்று புவிக்கு அப்பால் புற விண்வெளி உடன்படிக்கை உருவானது. அதன்படி சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 4, 10 ஆகிய இரண்டு நாட்களின் இடையே விண்வெளி வார விழா நடைபெற்று வருகிறது. விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைறகளில் கையாள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும்…
-
- 0 replies
- 496 views
-
-
சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்.! நியூயார்க்: சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. விண்வெளியில் பல பால்வெளிகள் இருக்கிறது. இதில் பல சூரிய குடும்பங்கள் உள்ளது. இதில் நம்முடைய சூரிய குடும்பத்திலேயே நிறைய சுவாரசியமான, நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது. நம்முடைய சூரிய குடும்பத்தில் இந்த புதிய விஷயங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது . .யார் என்ன செய்கிறார் ? …
-
- 2 replies
- 455 views
-
-
படத்தின் காப்புரிமை Climeworks Image caption காற்றைப் பிடித்து, கரியமில வாயுவை வடிகட்டி... "இதுதான் விமான போக்குவரத்தின் எதிர்காலம்" என்று கூறுகிறார் காற்றிலுள்ள கரியமில வாயுவை ஜெட் ரக விமானங்களின் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெரிங்க். உலகின் சில விமான நிலையங்களின் நிர்வாகங்களுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி, உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ஜெட் விமான எரிபொருளை தயாரிப்பதற்கு இவரது நிறுவனம் முயன்று வருகிறது. காற்றை உள்ளிழுத்து, அதில் இருந்து பருவநிலை மாற்றத்துக்கு வித்திடும் முக்கிய வாயுவான கரியமில வாயுவை வடிகட்டி, அதிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்தை விமான நிலையங்களில் …
-
- 0 replies
- 302 views
-
-
நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நில…
-
- 0 replies
- 972 views
-
-
நிலவின் தென்துருவ ஒளிப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ! நிலவைச் சுற்றி வட்ட பாதையை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, நிலவின் தென் துருவ பகுதியை ஒளிப்படம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இஸ்ரோ ஆர்பிட்டர் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த ஒளிப்படம் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர கமராவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ, ‘சந்திரனின் மேற்ப…
-
- 0 replies
- 441 views
-
-
கருந்துளையொன்று நட்சத்திரத்தை விழுங்கும் அரிய காட்சி வௌியிடப்பட்டுள்ளது! பாரிய கருந்துளையொன்று நட்சத்திரத்தை அழிக்கும் காட்சியை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். நாசா அமைப்பின் கிரக-வேட்டை தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வு முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 375 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் விரிவான காலவரிசையை TESS எனும் அமெரிக்க விண்வௌி அமைப்பு வெளியிட்டுள்ளது. நட்சத்திரம் ஈர்க்கப்பட்டு கருந்துளையைச் சுற்றி வளைக்கும் காட்சி தொலைநோக்கியில் பதிவுசெய்யப்பட்டது. பெரும்பாலும் சூரியனைப் போன்ற அந்த நட்சத்திரம் கருந்துளையால் உறிஞ்சப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்று கருந்துளைக்கு மிக அருகில் செ…
-
- 0 replies
- 347 views
-
-
சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் வியப்பு மற்றும் பிற செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUNIVERSITY OF BERN Image captionசித்தரிக்கப்பட்ட படம் தற்போதைய வானியல் கோட்பாடுகளின்படி, 'இருக்கக்கூடாது' என்று கருதப்படும் ஒரு பெரிய கோளை வானியலாளர்கள் கண்டு…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …
-
- 1 reply
- 879 views
-
-
ககன்யான் திட்டதிற்கு தீவிராமாக செயற்பட்டு வருகிறோம் – சிவன் பிரதமர் அறிவித்த ககன்யான் திட்டப்படி, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக செயற்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நேற்று (வியாழக்கிழமை) விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மிக நன்றாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரிடம் இருந்து நாங்கள் சமிக்ஞை எதையும் பெறவில்லை. விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த…
-
- 3 replies
- 511 views
-
-
5.3 தொன் பொருட்களுடன் ஜப்பான் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்! ஜப்பானிலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 தொன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் இன்று (புதன்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகின்றன. அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மை…
-
- 0 replies
- 335 views
-
-
Formation of the solar system in Tamil - சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சத மூலக்கூறுகளாலான மேகத்தின் ஒரு சிறு பகுதி ஈர்ப்புக்குரிய மோதல் மூலம் தொடங்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. சூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது.
-
- 3 replies
- 713 views
-
-
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில…
-
- 0 replies
- 373 views
-
-
2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பபோவதாக பாகிஸ்தான் அறிவிப்பு! எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சௌத்ரி நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை இஸ்ரோ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறுகையில் : “பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளி…
-
- 0 replies
- 632 views
-