அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
லண்டனில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புக்களை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ரிஜென்ட்ஸ் பார்க்கில் நிஜச் சிலைகளோடு ஆங்காங்கே கண்ணுக்குப் புலப்படாத கலை அதிசயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் மக்கள் உற்சாகமடைகின்றனர். ஃபிரீஸ் (Frieze) எனப் பெயரிடப்பட்ட சிலைகளை அக்யூட் ஆர்ட் என்ற ஸ்டூடியோ, தென்கொரிய கலைஞர் கூ ஜியோங்-உடன் இணைந்து வடிவமைத்துள்ளது. இதை ஸ்மார்ட்போன் கேமராக்கள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிடி செயலியின் உதவியோடு மட்டுமே காண முடியும். வெறும் கண்களுக்குப் புலப்படாத சிற்பங்கள், அந்தரத்தில் மிதப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தொட்டுணர முடியாத சிலைகளு…
-
- 1 reply
- 535 views
-
-
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11, எக்ஸிகியூயோபாக்டீரியம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஃபோக்ஸ்வேகனின் போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க விமான உற்பத்தி றிறுவனமான போயிங் வெளியிட்ட அறிவிப்பில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் ரக காரான போர்ஷெவோடு இணைந்து மின்சாரத்தால் இயங்குவதோடு பறக்கவும் திறன்கொண்ட காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனநெருக்கடி அதிகமுள்ள மெட்ரோ நகரங்களுக்கு ஏற்ப வடிவமைப்பதாகவும் கூறியுள்ளது. தானாகவே செங்குத்தாகப் புறப்பட்டு பறந்து தரையிறங்கும் கார்களுக்கான வடிவமைப்பில் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போயிங்கும் ஒரு போட்டியாளராக உள்ளது. தானியங்கி பயணிகள் வாகனத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆடியுடன் இணைந்து ஏர்பஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் …
-
- 1 reply
- 397 views
-
-
உலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. 1957 ஒக்டோபர் 4 அன்று முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் உலகைச் சுற்றி வந்தது. 1967 ஒக்டோபர் 10 அன்று புவிக்கு அப்பால் புற விண்வெளி உடன்படிக்கை உருவானது. அதன்படி சந்திரன், செவ்வாய் போன்ற புற விண்வெளியை அமைதிப் பணிக்குப் பயன்படுத்தும் பன்னாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டன. உலகம் முழுவதும் 1982-இல் தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 4, 10 ஆகிய இரண்டு நாட்களின் இடையே விண்வெளி வார விழா நடைபெற்று வருகிறது. விண்வெளி அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைறகளில் கையாள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும்…
-
- 0 replies
- 485 views
-
-
சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்.! நியூயார்க்: சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. விண்வெளியில் பல பால்வெளிகள் இருக்கிறது. இதில் பல சூரிய குடும்பங்கள் உள்ளது. இதில் நம்முடைய சூரிய குடும்பத்திலேயே நிறைய சுவாரசியமான, நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது. நம்முடைய சூரிய குடும்பத்தில் இந்த புதிய விஷயங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது . .யார் என்ன செய்கிறார் ? …
-
- 2 replies
- 449 views
-
-
படத்தின் காப்புரிமை Climeworks Image caption காற்றைப் பிடித்து, கரியமில வாயுவை வடிகட்டி... "இதுதான் விமான போக்குவரத்தின் எதிர்காலம்" என்று கூறுகிறார் காற்றிலுள்ள கரியமில வாயுவை ஜெட் ரக விமானங்களின் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்கர் மீஜெரிங்க். உலகின் சில விமான நிலையங்களின் நிர்வாகங்களுடன் சேர்ந்து, கார்பன்-டை-ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி, உலகின் முதல் வர்த்தக ரீதியிலான ஜெட் விமான எரிபொருளை தயாரிப்பதற்கு இவரது நிறுவனம் முயன்று வருகிறது. காற்றை உள்ளிழுத்து, அதில் இருந்து பருவநிலை மாற்றத்துக்கு வித்திடும் முக்கிய வாயுவான கரியமில வாயுவை வடிகட்டி, அதிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்தை விமான நிலையங்களில் …
-
- 0 replies
- 296 views
-
-
நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நில…
-
- 0 replies
- 964 views
-
-
நிலவின் தென்துருவ ஒளிப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ! நிலவைச் சுற்றி வட்ட பாதையை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, நிலவின் தென் துருவ பகுதியை ஒளிப்படம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இஸ்ரோ ஆர்பிட்டர் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த ஒளிப்படம் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர கமராவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ, ‘சந்திரனின் மேற்ப…
-
- 0 replies
- 433 views
-
-
கருந்துளையொன்று நட்சத்திரத்தை விழுங்கும் அரிய காட்சி வௌியிடப்பட்டுள்ளது! பாரிய கருந்துளையொன்று நட்சத்திரத்தை அழிக்கும் காட்சியை நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். நாசா அமைப்பின் கிரக-வேட்டை தொலைநோக்கி மூலம் இந்த அரிய நிகழ்வு முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 375 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தின் விரிவான காலவரிசையை TESS எனும் அமெரிக்க விண்வௌி அமைப்பு வெளியிட்டுள்ளது. நட்சத்திரம் ஈர்க்கப்பட்டு கருந்துளையைச் சுற்றி வளைக்கும் காட்சி தொலைநோக்கியில் பதிவுசெய்யப்பட்டது. பெரும்பாலும் சூரியனைப் போன்ற அந்த நட்சத்திரம் கருந்துளையால் உறிஞ்சப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திரம் ஒன்று கருந்துளைக்கு மிக அருகில் செ…
-
- 0 replies
- 343 views
-
-
சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் வியப்பு மற்றும் பிற செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUNIVERSITY OF BERN Image captionசித்தரிக்கப்பட்ட படம் தற்போதைய வானியல் கோட்பாடுகளின்படி, 'இருக்கக்கூடாது' என்று கருதப்படும் ஒரு பெரிய கோளை வானியலாளர்கள் கண்டு…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …
-
- 1 reply
- 871 views
-
-
ககன்யான் திட்டதிற்கு தீவிராமாக செயற்பட்டு வருகிறோம் – சிவன் பிரதமர் அறிவித்த ககன்யான் திட்டப்படி, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரமாக செயற்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நேற்று (வியாழக்கிழமை) விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மிக நன்றாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரிடம் இருந்து நாங்கள் சமிக்ஞை எதையும் பெறவில்லை. விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த…
-
- 3 replies
- 507 views
-
-
5.3 தொன் பொருட்களுடன் ஜப்பான் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்! ஜப்பானிலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 தொன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் இன்று (புதன்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகின்றன. அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மை…
-
- 0 replies
- 329 views
-
-
Formation of the solar system in Tamil - சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சத மூலக்கூறுகளாலான மேகத்தின் ஒரு சிறு பகுதி ஈர்ப்புக்குரிய மோதல் மூலம் தொடங்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. சூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது.
-
- 3 replies
- 709 views
-
-
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்தியானின் சுற்று வட்டக்கலன் நன்றாக செயல்பட்டு வருகிறது. என்றும், சுற்று வட்டக்கலனில் உள்ள 8 உபகரணங்களும் அதனதன் வேலையை நன்றாக செய்து வருகிறது என்றும், தங்களின் அடுத்த இலக்கு ககன்யான் என்றும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது. சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டக் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த பிறகு அதில…
-
- 0 replies
- 369 views
-
-
2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பபோவதாக பாகிஸ்தான் அறிவிப்பு! எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சௌத்ரி நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை இஸ்ரோ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறுகையில் : “பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளி…
-
- 0 replies
- 628 views
-
-
விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். Sep 17, 2019 பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிட…
-
- 0 replies
- 555 views
-
-
திருஷ்டி சுற்றிப் போடுவதில் பலன் இருக்கிறதா?
-
- 0 replies
- 459 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகம் என்று பிரிட்டனில் ஆறில் ஒருவர் நம்புவதாக சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அனைவரது கரங்களிலும் இணையம் இருக்கும் இந்தக் காலத்தில், திட்டமிட்ட மோசடியான செயல்கள் என்ற சிந்தனை அதிகமாக இருக்கின்றன. நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது புரளி என்பது அதன் உச்சகட்டமாக இருக்கிறது. நிலவில் தரையிறங்கியது, உண்மையில் நடந்தது என்பதை நிரூபிக்க நிவிடியா போன்ற சில நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முயற்சி செய்துள்ளன. …
-
- 0 replies
- 470 views
-
-
நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம். *நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ. *லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. *பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந…
-
- 3 replies
- 450 views
-
-
நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் உள்ளதாகவும், அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும் என்றும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சம…
-
- 1 reply
- 510 views
-
-
சந்திரயான்- 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லாண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்- 2 லாண்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லாண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஆப்பிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் த…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்…
-
- 24 replies
- 2.3k views
-
-
3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.! குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது. 3.5 மில்லியன் ஆண்டுகள் எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு …
-
- 4 replies
- 1.1k views
-
-
சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளது: இஸ்ரோ சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் திகதி, ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலமானது, கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதியன்று பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், கடந்த ஒகஸ்ட் 20ஆ…
-
- 0 replies
- 870 views
-