அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
இதுவரை பெயர் சூட்டப்படாத, பூமியின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோதனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிமவியல் சங்கத்தின் விதிகளின்படி முறைய…
-
- 0 replies
- 454 views
-
-
நாசாவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர், தான் 35 ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனிதர்கள் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களைக் கண்டதாக ரேடியோ நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சியான Coast to Coast AM என்ற நிகழ்ச்சியில், 35 ஆண்டுகளுக்கு முன் தான் மனிதர்களைப் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களை கண்டதாக ஜாக்கி என்ற முன்னாள் நாஸா ஊழியர் கூறியுள்ளார். ஜேக்கி 1976ல் செவ்வாய்க்கு அமெரிக்கா சார்பில் செலுத்தப்பட்டிருந்த வைக்கிங் லேண்டர் என்ற விண்கலத்தில் இருந்து தகவல்களை டவுன்லோடு செய்வதற்காக சென்ற குழுவில் ஒருவர் ஆவார். அந்த உருவங்களை அவர் மனிதர்கள் என்றே குறிப்பிட்டாலும், அவை பூமியைச் சேர்ந்தவையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த உருவங்களை தான…
-
- 0 replies
- 1.3k views
-
-
நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள…
-
- 0 replies
- 400 views
-
-
ரஷ்யாவின் பிரமிப்பூட்டும் ஒரு சாதனை. https://www.facebook.com/video/video.php?v=510654265710771
-
- 1 reply
- 693 views
-
-
உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறு வெளியாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் சீனாவில் சூ லிஞ்கன் தொழிலதிபர் ஒருவர் இரண்டு சக்கர எலக்ட்ரிக் காரை கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இக்காரில் உள்ள பேட்டரி மூலம் தொடர்ச்சியாக 1000 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட கார்கள் மத்தியில் இந்த புதிய இரண்டு சக்கர கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121182&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 403 views
-
-
தூய்மையான நீர் கிடைப்பது அரிதாகிவருகிறது. பூமியில் உள்ள மொத்த நீரில் 3 சதம் மட்டுமே தூய்மையான நீர். மீதமுள்ளது, உப்பு நீராக கடலில் உள்ளது. மொத்தமுள்ள தூய்மையான நீரில், 11 சதம் பூமியில் உள்ள நிலத்தடி நீர். இவை நாம் பயன்படுத்த, 800 மீட்டர் ஆழம் வரை கிடைக்கிறது. மிதமிஞ்சின நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் உபயோகம் நீர்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. அதோடு, நீரின் அளவு மற்றும் தரம் பாதிப்புள்ளாகிறது. நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள் நகர்புறம் கிராமப்புறம் மேற்கூரையில் விழும் / வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறுவடை செய்தல் ரீசார்ஜ் குழி ரீசார்ஜ் டிரன்ச் குழாய் கிணறுகள் ரீசார்ஜ் கிணறு வழிந்தோடும் மழைநீரை கீழ்கண்ட முறைகளில் அறு…
-
- 2 replies
- 6.8k views
-
-
எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா? டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது …
-
- 0 replies
- 466 views
-
-
பிலே ஆய்வுக்கலன் வால்நட்சத்திரத்தின் மீது இறங்குவதைக் காட்டும் வரைபடம் சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர். இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வ…
-
- 15 replies
- 1.4k views
-
-
சேகர் ராகவன் சென்னையில் ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன. சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும் லாரியும் மட்டுமே. இந்த சூழ்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே. முன்னோடித் திட்டம் 2002-ல் மழைநீர் சேகரிப்பு முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கி, சிறப்பாக அமல்படுத்தியது. ஆயிரக்கணக் கான அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையின்போது, மழைநீர் சேகரிப்பில் தமிழகத்தை நாடு பின்பற்றவேண்டும் …
-
- 0 replies
- 446 views
-
-
உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது. தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர். நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடை களின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமா…
-
- 1 reply
- 509 views
-
-
தமிழில் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கலை இலக்கியம் இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை…
-
- 0 replies
- 14.7k views
-
-
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும். நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும். மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில…
-
- 0 replies
- 931 views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 783 views
-
-
மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம். இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வத…
-
- 0 replies
- 704 views
-
-
எதிர்காலத்தில் பெற்றோலிய, நீர் உற்பத்திகளின் தேவைகளை இயற்கையில் இருந்து இவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று, நீரலைகள் போன்றவதை தான் தீர்க்கப் போகின்றன. அப்படியான சூழலில் எம் மண்ணில் தாரளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களை நம்மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதால் சூரியகலம் பற்றிய அறிவினைப் பகிரும்படி இங்கே கேட்கின்றேன். முக்கியமாக எனக்கும் சூரியகலம் பற்றிய தேடல் இருக்கின்றது. ஆனால் இணையங்களில் எனக்குப் போதுமான வடிவில் கிடைக்கவில்லை. சூரிய ஒளியின் தூண்டுதலால் ஒருபக்கம் நேர், மறுபக்கம் எதிர் மின்னணுக்கள் கிடைக்கின்றன என்ற அடிப்படை அறிவு மட்டும் தான் என்னில் உள்ளது. சூரிய ஒளியை நாம் பாவிக்கின்றபோது, எதிர்காலங்களில் ஊர்ச்சங்கங்களின் வளர்ச்சியால் நம் மக்களி…
-
- 6 replies
- 1.1k views
-
-
குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது …
-
- 2 replies
- 838 views
-
-
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…
-
- 0 replies
- 410 views
-
-
பொதுமக்கள் பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட இ-ரிக்சா டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி கட்காரி கூறும்போது, ‘‘இந்த ஆட்டோக்கள் அறிமுகம் மூலம் மனிதர்களே மனிதர்களை இழுக்கும் என்ற நிலைமை முற்றிலும் மாறும். மேலும், இதனால் கைகளால் ரிக்சாக்களை இழுத்து தொழில் நடத்தியவர்கள் பயன்அடைவார்கள்’’ என்றார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்களால் இழுக்கப்படும் ரிக்சா பயணம் பெயர்போனதாக இருந்தது. இந்த ரிக்சா இழுக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து ரிக்சாக்களும் இ-ரிக்சாவாக மாற்றப்படும் என்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜனதா கூறியது. இதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் சாதாரண ரிக்சாக்கள் அனைத்தும் இ- ரிக்…
-
- 0 replies
- 585 views
-
-
'ஆப்ஸ்' தயாரித்து 'அள்ளு'கிறோம்! ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் விருதுநகரைச் சேர்ந்த தாரணி சண்முகராஜன்: சிறு வயது முதலே எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத்தணும். இதுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்யணும்ன்னு யோசித்துக் கொண்டே இருந்தேன். சமீப காலமாக ஸ்மார்ட் போன் பிரபலமாக இருப்பதால், இதன் மூலம் ஏதாவது செய்யலாம் என, தோன்றியது. அந்த யோசனையில் உருவானது தான், இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும், 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்.எங்களின் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும், மாணவர்களை மையப்படுத்தித் தான் இருக்கும். குறிப்பாக, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நுழைவு…
-
- 0 replies
- 988 views
-
-
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…
-
- 0 replies
- 416 views
-
-
காந்திகிராமம்:பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது. இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்து…
-
- 6 replies
- 880 views
-
-
ஊர்ந்து செல்லும் வண்ணங்கள் Nov 4, 2014 பலரும் பயத்துடனும் அருவருப்பாகவும் நினைக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர் மா. ரமேஸ்வரன். ஒரு பக்கம் இந்திய வனப் பணி அலுவலராகும் முயற்சிகளுடன் மற்றொருபுறம் ஊர்வனவற்றைத் தேடுவது, அவற்றைப் படம் எடுப்பது, ஆராய்ந்து கட்டுரைகளை எழுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கிறார். இதற்காக www.rcind.in என்ற இணையதளத்தையும் உருவாக்கி வருகிறார். ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை எனலாம். தொடர்புக்கு: mrameshwaran@rcind.in கறையான் புற்றுப் பல்லி: இந்தப் பல்லிக்குப் பூச…
-
- 4 replies
- 6.4k views
-
-
சூரியப் புயலால் டிசம்பரில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக சொல்லுவாங்க.. நம்பிராதீங்க (வீடியோ இணைப்பு) நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது டிசம்பரில் ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள். ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது. ஆதாரம்: Lanka Road.net
-
- 0 replies
- 559 views
-
-
“ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. நம் ஒருவருக்கு ஒருவர் இடயிலான தொடர்பு எல்லையில்லாத முறையில் வளர்ந்திருக்கிறது. இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வமுடன் இருங்கள். நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டு பேஸ் புக்கில் தன்னோட 72 வது வயதில் இணைத்துள்ளார் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " என்ற தமிழில் சொல்வதாயின் " காலத்தின் சுருக்கமான வரலாறு " என்ற புத்தகம் மூலம் உலகம் எங்கும் உள்ள சாதாரண விண்வெளி ஆர்வம் உள்ள எல்லாரையும் ஏடு தொடக்கி வைத்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங். சென்ற…
-
- 1 reply
- 3.8k views
-
-
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஓர் தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா…? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்! ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை தீ நுண்மம் (வைரசு, Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும்…
-
- 0 replies
- 784 views
-