அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
Friday the 13th என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகில் பல நாடுகளில் ஓர் அதிர்ஷ்டமில்லாத நாளாகக் கருதப்படுகின்றது. இந்த நாளில் அளவுக்கு மீறிய அச்சம் கொண்டாலும், அது மூடநம்பிக்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பலர் அந்நாளில் ஏதும் தீங்கு நடக்கலாம் என்ற பயத்தில் அவர்களின் வீட்டை விட்டு வெளியே செல்லவே மாட்டார்கள். ஏன், அச்சத்தின் காரணமாகச் சிலர் வேலைக்குப் போகாமல் கூட முழு நாளும் கட்டிலில் படுத்த படுக்கையில் இருப்பார்கள். போதாக் குறைக்கு உலகில் நடந்த சில விபத்துக்கள் கூட 13ம் திகதி வெள்ளிக்கிழமை தான் நடந்துள்ளன. உதாரணமாக: 13.09.1940 இல் இரண்டாம் உலகப்போர் நேரம் பக்கிங்ஹாம் அரண்மனை மீது தாக்குதல் நடை பெற்றது. 13.11.1970 இல் பெரும் புயல் ஒன்றால்…
-
- 3 replies
- 616 views
-
-
2014-10-06 12:20:39 எமது சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் (கிரகங்களில்) ஒன்றாக புளூட்டோ மீண்டும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, 9 கிரங்களில் மிகச் சிறிய கிரகமாக (கோள்) புளூட்டோ கருதப்பட்டது. ஆனால், கிரகங்களுக்கான தன்மையை புளூட்டோ கொண்டிருக்கவில்லை என பலர் விமர்சித்து வந்தனர். அதையடுதது சர்வதேச வானியலாளர்கள் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு புளூட்டோவை கோள் அந்தஸ்திலிருந்து நீக்கியது. சூரியனை சுற்றி வருதல், ஏறத்தாழ கோள வடிவமாக இருத்தல், சூரியனை சுற்றிவரும் தனது பாதையிலுள்ள ஏனைய பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் தன்மை ஆகியன கிரகங்களுக்கு இருக…
-
- 5 replies
- 1.5k views
-
-
ரின்றி உலகு இல்லை. மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்குஏதுவாக நீர் அமைய பெற்றுள்ளது. இந்த நீர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்பட்டு உணவு,பொதுவினியோகம், குடிநீர், தொழிற்சாலை, விடுதிகள், விவசாயம் போன்றவற்றிக்கு பயன்பட்டுவருகிறது. ஆனால், இப்போது நிலவும் சூழ்நிலையில் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகதான்வரும் என எண்ணத் தோன்றுகிறது. நீர், புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி காணப்படுகிறது.மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கிறது. நீரின் அளவு நீர் புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி இருக்கிறது. கடல்கள் -96.5 %, நிலத்தடி 1.7%, பனிப்பாறை 1.7 %, காற்று நீராவி 0.001%, ஆறுகள், ஏரிகள்0.3 % போன்றவை காணப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற…
-
- 0 replies
- 509 views
-
-
இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம். கூடுதல் தகவல்கள் கூடுதல் தகவல்களை், படங்கள் மற்றும் வீடியோவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ஆம்னி பஸ் பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்த…
-
- 0 replies
- 337 views
-
-
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆராய்ச்சியாளர்கள், துறை வல்லுநர்கள், பணியாளர்கள் என சுமார் 60 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் இந்தியாவின் இயற்கையையும் பண்பாட்டையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். நமது தொன்மையையும் பாரம்பரிய பெருமைகளையும் நாம் பாதுகாக்க தவறிவிட்டபோதும் இந்த பிரெஞ்சு நிறுவனம் அதை எல்லாம் போற்றிப் பாதுகாக்கும் முயற்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இங்கு ஓலைச் சுவடிக்கு என்றே ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த நூல…
-
- 1 reply
- 535 views
-
-
மாற்று கர்ப்பப்பை பெற்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணொருவர் பிள்ளை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான். பரிசோதனை முயற்சியாக இப்பெண்ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததுபோன மாதம் அந்தப் ஆண் பிள்ளை சற்றுக் குறைமாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியை நடத்திய கோத்தன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேட்ஸ் பிரன்ஸ்ட்ரோம். கூறுகிறார். ஆய்வுப் பரிசோதனையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒன்பது பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரல்லாது வேறு இரண்டு பெண்களும் கருத்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமலோ, அல்லது புற்றுநோய…
-
- 4 replies
- 654 views
-
-
மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது. நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீத…
-
- 0 replies
- 472 views
-
-
உங்களால் நட்சத்திரம் ஒன்றைத் தொட முடியுமா? நான் சொல்வது சூப்பர் ஸ்டார் அல்லது அல்டிமேட் ஸ்டார் இல்லை! இவர்களைத் தொடுவது மிகவும் கடினம். நான் கேட்பது விண்மீன் மற்றும் நாள்மீன் என்றும் அழைக்கப்படும் விண்வெளியில் காணப்படும் நட்சத்திரத்தைத் தொட முடியுமா? நட்சத்திரம் என்ற உடனே நீங்கள் நமது சூரியனைத் தான் நினைத்து விடுவீர்கள். அந்தச் சூரியனின் வெப்பம் தெரிந்த உங்களுக்கு என் கேள்வி நகைச்சுவையாகத் தான் இருக்கும். இருந்தாலும் எனது கேள்விக்கு ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. ஏன் என்று இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன். நமக்கு மிகவும் பழக்கமான நட்சத்திரம் சூரியக் குடும்பத்தின் மையத்திலுள்ள நமது சூரியன் தான். நமது புவியில் இருந்து 149,6 மில்லியன் km தூரத்தில் இருக்கும் இந்த…
-
- 0 replies
- 660 views
-
-
சில மாதங்களுக்கு முன்னால் நான் ஒரு விடுதியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். காலையில் சிறிது உடற்பயிற்சி. சிறிது நேரம் எழுதுவேன். அதன் பின் குளியல், சந்திப்புகள். மாலை முழுக்க சும்மா இருப்பேன். அப்போது தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். சென்ற பதினைந்து ஆண்டுகளாக நான் வீட்டில் தொலைக்காட்சி வைத்துக்கொள்ளவில்லை. ஆகவே விடுதிகளில்தான் தொலைக்காட்சியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அந்த ஒரு வாரமும் இளவரசன் - திவ்யா காதலைப் பற்றி மட்டும்தான் கேரளத்தின் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சிச் செய்திகளும் பேசிக்கொண்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் பின்னால் சென்று அறிவித்துக்கொண்டிருந்தனர். அந்தச் செ…
-
- 0 replies
- 496 views
-
-
36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான 60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது. குழந்தை சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமன்றி.. இன்னொரு புதிய அத்தியாயமாகவும் நோக்கப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு பிறப்பின் போதான பிறழ்வுகளாலும்.. புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையின் தீவிரத்தாலும்.. கருப்பை இழப்பு அதிகம் ஏற்படுகிறது. …
-
- 1 reply
- 531 views
-
-
நாம் பிராணிகளைக் கவனித்து அவற்றின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக இப்போது அவை நம்மைக் கூர்ந்து கவனித்து நம்மைப்போலவே வாழ முற்படுகின்றன! பரதன் என்கிற யானை, செயலில் மனிதர்களை மிஞ்ச கற்றுக்கொண்டுவிட்டது. யானைகளின் போக்கில் காணப்படும் மாறுதல்களை டார்வினின் கொள்கைப்படி அறிவதைவிட கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும். பரதன் என்பது தந்தமில்லாத ஆண் யானை. மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளிப் பகுதியில் இப்போது அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் முதுமலை காப்புக்காட்டின் ஓரத்தில் இருக்கும் சின்ன கிராமம்தான் தொரப்பள்ளி. பரதனைப் பார்த்தாலே உள்ளுக்குள் உதறல் எடுக்கும் அளவுக்கு பெரிய மேனி. நல்ல புத்திசாலி. தன்னைச் ச…
-
- 18 replies
- 10.4k views
-
-
எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். கின்ஷாஸா நகரம் 1950களில் எடுக்கப்பட்ட படம்ஹெச்.ஐ.வி கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. ஜனத்தொகை பெருக்கம், மக்களின் பாலுறவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற மற்ற இடங்களுக்குப் பரவியதாக இங்கிலாந்தின் ஆஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியுவென் பல்கலைக்…
-
- 0 replies
- 377 views
-
-
மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை மண்புழு மண்பானையில் மண்புழு உற்பத்தி செய்யும் முறை தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி செய்யும் முறை பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியத…
-
- 0 replies
- 1.3k views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் கடல் ஆழ அடிப்பரப்பைப் பற்றி புதிய புரிதலை உருவாக்கும் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் தெரியும் நீளமான சிகப்பு கோடு, 5.5 ரிக்டர் அளவுக்கு மேலான பூகம்பப் பகுதிகளைக் காண்பிக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ். கண்டங்கள் உருவான விதம் பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக கடலின் அடிப் பரப்பு (sea floor)குறித்த புதிய விரிவான வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கடலின் அடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள, இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை ‘கடல்மலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உலகில் சிறியது முதல் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த புதிய கடலடித்தள மலைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பது …
-
- 0 replies
- 767 views
-
-
எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவு காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார். இந்த சந்திரக்கிரணகம் காரணமாக பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் ம…
-
- 1 reply
- 533 views
-
-
உலகளவில் மிகப் பெரிய பிட்காய்ன் வர்த்தக நிறுவனமான எம்டி.காக்ஸ் (எம்டி.ஜிஓக்ஸ்) 25ஆம் நாள் திவால் நடவடிக்கையைத் துவக்கியுள்ளதாக அறிவித்தது. ஜப்பானின் டோக்கியோ நீதிமன்றம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை அது தொடர்பான தீர்ப்பு அளித்துள்ளது. இத்தகவல் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்நிறுவனம், இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் நாள் ஜப்பானில் திவால் பாதுகாப்பு தொடர்பான விண்ணப்பம் வழங்கியுள்ளது. பெருமளவிலான இணைய தாக்குதலை சந்தித்ததால், அதற்குச் சொந்தமான 47 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட்காய்ன் திருடப்பட்டது. அது, திவாலாகி விட்டதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. http://tamil.cri.cn/
-
- 0 replies
- 683 views
-
-
செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது. IMAGE_ALT மேவன் விண்கலம் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் ப…
-
- 0 replies
- 651 views
-
-
நமது பால்வெளி அண்டத்திற்கு (Milky way galaxy) உள்ளே உள்ள வேறு ஏதேனும் பாகத்தில் இருந்து நமது பூமியில் உயிர் வாழ்க்கைக்கான கட்டமைப்புக்கள் வந்திருக்கலாம் என புதிய ஆதாரத்தின் மூலம் ஊகிக்கப் படுகின்றது. நியூயோர்க்கின் கோர்னெல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் நமது அண்டத்தின் நட்சத்திரக் கட்டமைப்புக்களுக்கு இடையே புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றும் பகுதியில் உயிர் வாழ்க்கைக்கான மூலாதாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது நமது பூமியில் இருந்து 27 000 ஒளி வருடங்கள் தொலைவில் பால் வெளி அண்டத்தின் மத்தியில் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் மூலக்கூறுகளான ஐசோப்ரொப்பைல் சையனைட்டு என்ற சிக்கலான மூலகம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மூலக் கூறுகள் பூமிக்கு இத…
-
- 2 replies
- 855 views
-
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம். உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும்…
-
- 0 replies
- 779 views
-
-
அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால், இறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா…? ஒரு விடயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அறிவு டோஸில் அப்படி தற்செயலாகக் கண்டு பிடித்த மிகப் பிரபலமான 5 கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுகின்றேன். 1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்கு பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆ…
-
- 7 replies
- 1.5k views
-
-
உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்! சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான். கடல் மட்டத்தில் இருந்து …
-
- 8 replies
- 4.1k views
-
-
ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் ஒரு நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக முடியுமா? வித்தியாசமாக யோசித்தால் நிச்சயம் ஆகமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜாக் மா. அலிபாபா என்கிற இணையதளத்தின் ஐபிஓவை அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜாக் மா, பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அவர் கடந்துவந்த பாதை இதோ... சீனாவின் ஸீஜியாங்க் பிராந்தியத்தில் உள்ள ஹங்க்சோவ் என்னும் ஊரில் அக்டோபர் 15, 1964-ல் பிறந்தார் ஜாக் மா. தனது 13-வது வயதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். இதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து 45 நிமிட சைக்கிள் பயணம் செய்து, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு…
-
- 1 reply
- 641 views
-
-
செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில் ச.ஸ்ரீராம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங் தொடங்கியது. சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போ…
-
- 0 replies
- 589 views
-
-
உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன்படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும்மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனைநிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ)தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இதுசாத்தியமாகியது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மிக நம்பகமானது என்பது25 தடவைகளுக்கு மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம்உருவாக்கி வரும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் நம்பகத்தன்மைஇனி தான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டினால் பொதுவில் ஒருவிண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில்பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம்பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு செவ்வாய் நோக்கி செல்லவேண்டுமானால் அது மணிக்கு…
-
- 1 reply
- 2.5k views
-
-
அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்பி வைத்த தானியங்கி ரோபோவான கியுரியாசிட்டி (Curiosity) செவ்வாய் மேற்பரப்பில்.. சதுப்பு பாறைகள் நடுவே ஓர் இடத்தில் (Mount Sharp in Gale Crater இன் அடிப்பாகத்தில்) குறிப்பிடத்தக்க ஆழத்திற்கு வெற்றிகரமாக குழிதோண்டி உள்ளது. இது இப்பணியை கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்கள் எடுத்து நிறைவு செய்துள்ளது. [கியுரியாசிட்டி தோண்டிய குழி] இந்தக் குழியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை.. செவ்வாயின் மண் படைகளை.. கியுரியாசிட்டி மூலம் ஆய்வு செய்து.. பெறப்படும் பெறுபேறுகளை வைத்து செவ்வாயின் கடந்த கால சூழலியல் வரலாற்றை எதிர்வுகூற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு தொன் எடையுள்ள கியுரியாசிட்டி நாசாவால் செவ்வாய்க்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்…
-
- 3 replies
- 664 views
-