Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. “எல்லா அறிவியல் பிரிவுகளுக்கும் கணிதமே மகாராணி. ஆனால் எண்கணிதமே கணிதத்தின் மகாராணி” என்று புகழ் பெற்ற கணித மேதை காஸ் (Gauss) கூறியுள்ளார். அப்படிப்பட்ட எண் கணிதத்தில் இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் இந்திய கணித மேதை இராமானுஜன் என்றால் மிகையாகாது. “ஒவ்வொரு நேர்மறையான முழு எண்ணும் (positive integer) இராமானுஜனின் தனிப்பட்ட நண்பர்கள்” என்ற டி.ஜெ. லிட்டில்வூட் (Littlewood) என்ற கணிதவியலாளரின் கூற்றுக்கிணங்க 1919 ஆம் ஆண்டு இராமானுஜன் இயல் எண்களைப் பற்றி எழுதி வைத்துச் சென்ற குறிப்பின் வீச்சும், பொருளும் அறிய ஏறக்குறைய 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதனைக் கண்டறிந்தவர் அமெரிக்காவிலுள்ள எமோரி பல்கழகத்தைச் சேர்ந்த எண்கணித வித்தகர் கென் ஓனோ (Ke…

  2. http://deciwatt.org/installation-guide/ புவியீர்ப்பு விசையிலிருந்து மின்சாரம் 25 நிமிடங்களிற்க்கு மேல்.

  3. அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை ஒன்றை தாங்கள் நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதங்களை கொண்டு அவருக்கு அடுத்ததாக அல்சைமர்ஸ் நோய் தோன்றக்கூடும் என்று கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தொடர்புடைய விடயங்கள் உணவு முறை, உடல்நலம் அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம்…

  4. நமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை. இந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். உலகம் சுற்றும் பிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்…

    • 0 replies
    • 1.2k views
  5. கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்ட…

    • 0 replies
    • 518 views
  6. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கணித மேதை என்பதைக் கேட்டதும் பாமரனுக்கும் நினைவில் வருவது இராமானுஜன் பெயர்தான். இந்தியாவில் எத்தனையோ கணித வித்தகர்கள் இருந்த போதும், இவருடைய கணித ஆராய்ச்சியின் சுவடுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதால்தான் இவருக்கு இந்தப் புகழ். ராமானுஜன் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஈடுபாடும், கடினமான கணிதப் புதிர்களுக்குக் கூட குறுகிய நேரத்தில் தீர்வு காணும் திறமையும் பெற்றிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ராமானுஜன் பள்ளி நாட்களில் லோனியின் “திரிகோணமிதி” புத்தகத்தில் இருந்த கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். அதன் பின் கார் (Carr) என்பாரின் கணிதப் புத்தகம் கிடைக்கப் பெற்றார். அதைப் படித்ததில் ராமானுஜனுக்கு 18-19 ஆம் நூற்றாண்டின் கணிதத்…

    • 0 replies
    • 1.3k views
  7. சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் ஆவுஸ்திரேலியாவில் ஆரம்பகால தொலைகாட்சி ஒளிபரப்பு (broadcast) முறையான ‘அனலாக்' (analogue) ஒளிபரப்பு முற்றாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஆவுஸ்திரேலியாவில் ‘டிஜிட்டல்’ (digital) தொலைக்காட்சி ஒளிபரப்பின் அறிமுகம் பூர்த்திசெய்யப் பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பின் தொழில்நுட்ப பின்னணியையும் டிஜிட்டல் ஒளிபரப்பின் அனுகூலங்களையும் விளக்கும் ஒரு கட்டுரை இது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலி, ஒளி என இரு வேறு சமிஞ்சைகளை (signals) கொண்டுள்ளது. ஒலி அலைகள் ஒலி வாங்கிகள் மூலம் (microphone) பெறப்பட்டு மின்னியல் (electrical) சமிஞ்சைகளாக மாற்றப் படுகிணன்றன. காட்சிகள் ஓளிப்பட கருவிகள் (camera) மூலம் பெறப்பட்டு மின்னியல் சமிஞ்சைகளாக மாற்றப் படுகின்றன. நேர…

  8. பிஸ்கெட் விள்ளலை காப்பியில் ஊறவைத்து சுவைப்பது என் போன்ற ’நோ-பல்’ இளைஞர்களின் கொணஷ்டை (கரும்பை கூட ஜூஸ் செய்தே அருந்துவோம்). அனுபவித்து செய்பவர்களுக்கே இதிலுள்ள சகாயங்களும் சங்கடங்களும் தெரியும். சற்றே மொறுமொறுப்புடன், சூடாய், இதமாய், நாக்கில் பிஸ்கெட் கரைவது சகாயம். சௌக்கியம். குறிப்பிட்ட அவகாசத்திற்குமேல் முக்கியிருந்தால், சங்கடம். சொதசொதத்த பிஸ்கெட், வாயிலிட முனைகையில் ஸ்லோமோஷனில் மடிந்து ‘ஸ்பளச்’ என்று காப்பியினுள் விழுந்துத்தொலைக்கும். ‘முக்கிய’ஸ்தர்கள் கூடியிருக்கும் டிஸ்கஷனில், அல்லது ‘பெண் பார்க்கும்’ வைபவத்தில். பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பது சிலருக்கேனும் ‘முக்கிய’மான மேட்டரே. காபியில் ஊறவைத்த பிஸ்கெட்டிற்கு சுவை அதிகம் என்கிறது இத்தரப்பு. ஆமோதிக்கிறேன். அமெர…

  9. காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …

  10. இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப்பெட்டிகளை சுமந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், இதே போல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில் , திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தொடர்புடைய விடயங்கள் மானுடவியல் 'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது , மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில்…

  11. வணக்கம். இன்றைய கட்டுரையில் நாம் சில பிரபலமான‌ பழைய கருப்பு வெள்ளை நெகட்டிவ் பிலிம் ரோல்கள் உருவாக்கித்தரும் எபக்ட்டுகளை போட்டோஷாப்/கிம்பில் Channel Mixer கொண்டு உருவாக்குவதைகாணலாம். முன்பெல்லாம் பிற்சேர்க்கை என்பது கலர் படங்களாகட்டும், அல்லது கருப்பு வெள்ளைப் படங்களாகட்டும். அவர்களுக்குத் தேவையான எஃபக்டுகளை உருவாக்க அதற்குத் தகுந்தாரற்போலஇருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்ரோல்களை பயன்படுத்தி எடுப்பார்கள், உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை படங்களுக்கென நிறைய ஃபிலிம்ரோல் நெகட்டிவ்கள் பயன்படுத்தப்பட்டன ex : Agfa Pan,Ilford Delta,Kodak tri-x etc…ஒவ்வொரு ஃபிலிம் ரோலுக்கும் ஒவ்வொரு மாதிரியான வெளியீடு இருக்கும். நாம் இப்போது நெகட்டிவ் ரோல் காலங்களிலிருந்து டிஜிட்டல் உலகத்தில் இருக்கி…

  12. டார்வினின் பரிணாம வளர்ச்சித் தேற்றம் - அதுவே முதலும் முடிவும் அல்ல இந்தக் காணொளி ஒரு தேடலில் கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியம் மிகுந்ததாகவும் இருந்தது. அடிப்படை உயிரினங்களின் கட்டமைப்பு (கலங்கள், பக்டீரியா போன்றவை) மிக எளிமையானதாக இருக்கும் என பல காலம் காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் அவற்றின் அமைப்புத்தான் மிகவும் சிக்கலானது என்று இப்போது கண்டறிந்துள்ளது விஞ்ஞானம். இதை டார்வினின் இயற்கைத் தெரிவு கோட்பாட்டினால் விளக்க முடியாமல் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

  13. அறச்சலூர் செல்வம் கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்! இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோ…

  14. அந்த இன்னொரு பழம் எங்கேடா...? ...அதாண்ணே இது...! - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை. இப்படி நகைச்சுவைக் காட்சியின் முக்கிய அம்சமாக இருந்த நம்முடைய வாழைப்பழம், பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகப் போகிறது. எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை. முக்கனிகள…

    • 0 replies
    • 646 views
  15. கடந்த காலங்களில் பல விதமான கம்பனிகள் ஜிபிஎஸ் எனும் பாதை காட்டும் கருவி பயன்பாட்டில் இருக்கிறது. இப்போது WAZE எனும் புதிய APP பாவனையில் வந்திலிருந்து கூடுதலானவர்கள் பாவிக்கும் ஒரு ஜிபிஎஸ் ஆக முன்னணியில் நிற்கிறது.இதற்கென்று புதிதாக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை.உங்கள் கைத்தொலை பேசியிலேயே இலவசமாக தரவேற்றலாம். மற்றைய ஜிபிஎஸ் ஐ விட இதில் உள்ள விசேடம் என்னவென்றால் உங்கள் வாகன வேகத்தை பிடிப்பதற்காக ஒழிந்து நிற்கும் பொலிஸ் அதிகாரிகளை அரை மைல் தொலைவிலேயே எச்சரிக்கை செய்யும்(தானாக எதுவும் செய்வதில்லை முதல் காணும் ஒருவர் report பட்டனை அழுத்தி பொலிஸ் என்ற பட்டனை அழுத்தினால் சரி பின்னால் வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். மிக முக்கிமாக இப்போ சகல இடங்களிலும் சிகப்…

  16. கண்டடைந்த கடவுள் துகள் ப.ரகுமான் “மனித குலத்தின் கடந்த கால அனுபவத்தை அவசியம் நம்ப வேண்டும் என்பதல்லாமல், புதிய நேரடி அனுபவத்தின் மூலம் மீண்டும் சோதித்துப் பார்ப்பது பயனுள்ளது என்ற கண்டுபிடிப்பின் விளைவுதான் அறிவியல்.” ஃபெய்ன்மேன் (1966ம் ஆண்டில் நியூயார்க் நகரில் தேசிய அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...) அறிவியல் என்றால் என்ன? உண்மையில் இதற்கு விளக்கம் தேவையில்லை. அறிவியல் என்ற சொல் அதனளவிலேயே (அறிவு+இயல்) விளக்கத்தைக் கொண்டது. அறிவு என்பது வேறு; அறிவியல் என்பது வேறு. குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடைபோடுகிறது, ஓடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடக்கவும், ஓடவும் மு…

  17. நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதொன்றிலும் இருந்தும், சிறப்பானதைப் பெற முயற்சிக்கிறோம். நமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போதும், ஆண்டுகள் வளர்வதைப் போலவே நாமும் நேர்க்கோட்டில் அபிவிருத்தி அடைவோம் என்று கற்பனை செய்துவிடுகிறோம். ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவத்தை அடைவதற்குக் கடினமாக வேலை செய்தால், மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்புகிறோம். ஆனால், முன்னேற்றம் என்பது பல துறைகளில் நேர்க்கோட்டுத்தன்மையுடையது அல்ல என்று கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் எச்.யங் தனது சமீபத்திய வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஒரு மொழியைக் கற்கும்போதோ, ஓட்டப் பயிற்சி போன்ற முயற்சிகளிலோ வளர்ச்சி என்பது வேறு விதமானது. தொடங்கும்போது வேகமாக வளர்ச்சி இருக்கும். ஆனால், ஒரு கட்டத…

    • 0 replies
    • 399 views
  18. உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பித்து ஆரவாரத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அவரவர் அணிகளின் சீருடைகளை அணிந்து உள்ளூர் பப்புகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கின்றனர். போட்டிகள் பற்றிய தகவல்களையும் ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களில் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புள்ள பல அம்சங்கள் உண்டு. இது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, இந்த பெனால்டி வாய்ப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். இரு அணிகளும் சம வலுவுடன் மோதும்போது - அல்லது மோதாமல் இருக்கும்போது - ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும். அப்போது தற்செயலாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும். ஆனால், இங்கும் எதிர்பா…

    • 0 replies
    • 436 views
  19. நாம் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலுக்கு, மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமாகிறது. மார்க்கெட்டிங் என்றவுடன் நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தையும் பத்திரிக்கை விளம்பரத்தையும் மட்டுமே நினைத்து விடாதீர்கள். அதை தவிர பல மார்க்கெட்டிங் வித்தைகள் இருக்கிறது. அதை உங்கள் தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ளுங்கள். தமிழர்களில் பெரும்பாலானோர்கள் மார்க்கெட்டிங் செய்வதை அல்லது விற்பனை செய்வதை விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடமுள்ள கூச்ச சுபாவம் ஆகும். பள்ளி பருவங்களில் நமது குழந்தைகள், பொருளாதாரத்தில் வளர்ந்தநாட்டு குழந்தைகளைப் போல, வெளியில் சென்று பகுதி நேரம் வேலை பார்ப்பதில்லை; அல்லது விற்பனை செய்வதில்லை. இதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் கூச்ச சுபாவமாக மாறிவிடுகிறத…

    • 0 replies
    • 819 views
  20. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதி யில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான் கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் ம…

    • 0 replies
    • 535 views
  21. பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1 சுந்தர் வேதாந்தம் கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்க…

  22. ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…

    • 1 reply
    • 10.7k views
  23. வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டு…

    • 2 replies
    • 739 views
  24. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…

  25. திரிஷாவும் திவ்யாவும் ராஜ்சிவா நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமை யையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக் குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.