Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…

  2. கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை. இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும். ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான். நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும். சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும். இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும். ”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு …

  3. வலது மூளை இடது மூளை "இடது கையால் தண்ணீர் கொடுப்பது கெட்டப்பழக்கம், வலது கையால கொடுத்துப் பழக்குங்கள்'' என்று வீட்டில் குழந்தைகளை பெரியவர்கள் வலது கையில் கொடுத்து வாங்கப் பழக்குவதாலும் வலது காலை எடுத்து வச்சி உள்ளே செல்லுங்கள் என்றெல்லாம் சொல்வதால் இடது பழக்கம் அருவெறுப்பானதென்றும் அமங்கலம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் பிறிவியிலேயே சிலர் இடதுகைப் பழக்கத்துடன் பிறந்துவிடுகிறார்களே என்ன செய்வது? எத்தனை முயன்றாலும் அவர்களை மாற்றமுடிவதில்லையே. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?. கதவுகளின் கைப்பிடி முதல், கத்திரிக்கோல் வரை வலது கைப்பழக்கக் காரர்களுக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பழக்க முடையவர்கள் உலகில் அரிதாக இருப்பதால் அவர்களை பொதுவழ…

  4. மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புர…

  5. முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுவிவரம் கூறும் காணொளி முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் மற்றும் பாசன நீர் வழங்கி வருகிறது, இந்த அணை நீரை நம்பி ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் உள்ளனர். ஒரு சில அரசியல் மற்றும் கேரளா அரசின் சுய லபத்தினால் இந்த அணையை மூட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெரியாறு அணை மூடப்படுமானால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாக மாறும். ஓர் இந்தியா என்று நம் காதுகளில் பூச்சுற்றும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது.. கீழே உள்ள காணொளி இந்தனை பற்றி மிகவும் விளக்கமாக கூறுகிறது.

    • 0 replies
    • 439 views
  6. ஏன்? எதனால்? அலட்சியம் செய்ய முடியாத சத்தம் குழந்தையின் அழுகுரல் மட்டுமே. 'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளர்ச்சி. காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி. குழந…

  7. சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 1970-ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளை பேராசிரியர் அல்பெர்டோ சால் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.அதில் கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், சந்திரனும் ஒன்றுக்கொன்று மோதின. அப்போது பூமியில் இருந்த தண்ணீர் மற்றும் அதன் துகள்கள் சந்திரனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும். பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் உள்ளன.கடந்த 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பூமியில் உள…

  8. மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் நுளம்பு நுளம்புகளிடத்தில் ஒருவகை பக்டீரியா கிருமிகளை தொற்றச்செய்து, அதன்மூலம் அந்த நுளம்புகளுக்கு மலேரியா -எதிர்ப்புச் சக்தியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இதற்காக கண்டறிந்துள்ள பக்டீரியா வகையொன்றை நுளம்புகளிடத்தில் தொற்றச்செய்த போது, நுளம்புகளிடத்தில் ஏற்கனவே காணப்பட்ட மலேரியா நோய்க்கிருமிகளுக்கு (பராசைட் ஒட்டுண்ணிகள்) உயிர்வாழ முடியாது போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுளம்புகள் மூலமே மலேரியா நோய்க்கிருமிகள் மனிதர்களிடத்தில் பரவுகிறது. இதனால் அந்த நுளம்புகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன்மூலம் மனிதர்களை மலேரியா தாக்குவதை குறைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வால்ப…

    • 2 replies
    • 455 views
  9. கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே அறிமுகங்கள் உள்ளன. பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13 (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும் திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தா…

  10. நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள் By Kavinthan Shanmugarajah 2013-05-09 12:07:59 நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது. இம் மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர். திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர் விஞ்ஞானிகள். சிலர் இது ஆழ் கடல் உயிரினமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். முதலில் இது தொடர்பில் காணொளியொன்றை எலிசபெத் ஹேன் என்ற பெண்ணே யுடியூப்பில் வெளியிட்டார். தற்போது இவ் உயிரினம் …

  11. ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம் மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்…

    • 1 reply
    • 675 views
  12. கடலிலிருக்கும் மீன் போன்ற உயிரினங்களை தின்று வாழும் ஆர்க்டிக் பகுதி நரிகள் , ஆபத்தான அளவுக்கு பாதரசத்தை உட்கொள்ளும் நிலையினை எதிர்கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த நரிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ந்துள்ள ஒரு ரஷ்யத் தீவில் இந்த பாதரசத்தின் அளவு அதிகரித்திருப்பது அவைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கட்னத 100 ஆண்டு காலத்தில் உலகின் கடல் பரப்பில் பாதரச அளவுகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த பாதரசத்தினால் ஏற்படும் விஷத்தன்மை உணவுத் தொடரிலும் அதிகரித்துவருவதாகவும் அது பல உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இதில் ஒன்றுதான் இந்த ஆர்க்டிக் நரி., இந்த நரிகள் உண்டுவந்த கடல் வாழ்…

    • 1 reply
    • 333 views
  13. அமெரிக்காவில் நிஜத் தோட்டாக்களை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பிளாஸ்டிக்கினால் தயார் செய்யப்பட்ட இது, நிஜத் துப்பாக்கியை போல செயல்படக்கூடியதாகும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழு வெற்றிகரமாக பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த துப்பாக்கியில் உண்மையான தோட்டாக்களை போட்டு வெற்றிகரமாக சுட முடியும் என்பதால், இந்த புதுவகை துப்பாக்கி மக்கள் மத்தியில் பிரபலாமகிவருகிறது. முப்பரிமாண அச்சு எந்திரத்தால் உருவாக்கபட்டுள்ள இந்த துப்பாக்கியை எந்த சோதனை கருவியாலும் கண்டறியமுடியாது. இந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை பயன்படுத்தும் விதம், இதனை தயார் செய்த விதம் ஆகிய வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களி…

  14. கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களிடையே பெரிய மாறுதல் ஏற்படக் கூடும் என்று கூறும் அந்த ஆய்வு, ஆனால் அந்த மாறுதல்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் தெளிவாக உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் மேலும் சொல்கிறது. கரியமில வாயுவின் காரணமாக புவி வெப்பமடைகிறது என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு விஷயம் என்றாலும், அ…

  15. மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது. ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் …

  16. 80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது. இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க வி…

  17. சனி கிரகத்தை இன்று வெறும் கண்களால் மிக அருகில் பார்க்க முடியும்! பூமியில் இருந்து வெறும் கண்களாலேயே சனி கிரகத்தை இன்று (28) பார்க்க முடியும். சனி கிரகம் இன்று சூரியனுக்கு நேர் எதிர் திசையில் வரவிருக்கிறது. மேலும் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையிலான தூரமும் இந்த ஆண்டில் இன்று (28) மிகக் குறைவாகவும் இருக்கப் போகிறது. பூமிக்கு ஒரு பக்கத்தில் சூரியனும் நேர் எதிர் திசையில் சனி கிரகமும் இன்று வருகின்றன. இதனால் சூரியனின் ஒளி சந்திரனில் பிரதிபலித்து அதை மிகப் பிரகாசமானதாகக் காட்டும். இதனால் இதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இன்று மாலை சூரியன் அஸ்தமித்த பின் ஒரு மணி நேரத்தில் கிழக்குப் பகுதியில் சனி கிரகத்தை பார்க்க முடியும். மற்ற விண்மீன்கள் போல் அல்லா…

  18. Started by priya123,

    எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும். இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வா…

    • 0 replies
    • 749 views
  19. ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் முதல் தடவையாக தமது இலாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் அது 9.5 பில்லியன் டாலர்கள் இலாபம் பெற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.1 பில்லியன் டாலர்கள் குறைவாகும். ஆனால், சீனாவில் நடக்கின்ற பலமான விற்பனை காரணமாக தனது வருமானத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் டாலர்கள் கணக்கிலான பங்குகளை திரும்ப வாங்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. உலகின் மிகவும் பெறுமதியான நிறுவனம் என்ற பெயரை அது அண்மையில் இழந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தொடராது என்ற அச்சமு…

    • 1 reply
    • 468 views
  20. இதுவரை நமது அறிவுக்கு எட்டிய தகவல்களின் படி நாம் வாழும் இந்தப் பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள் என்ற தற்போதைய மனிதன் உள்ளிட்ட பல மில்லியன் உயிரிகள்,தாவர வகைகள் வாழ்கின்றன. நம்மைச் சூழவுள்ள பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்பது இன்றும் நமக்கு உறுதியாகத் தெரியாது. இது தொடர்பான தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,இது பற்றி அவ்வப்போது சில பல தகவல்கள் வெளிவந்தாலும் பெரும்பாலும் அவை ஆதாரபூர்வமாக அல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் தான் வெளிவந்திருக்கின்றன. பூமியில் வாழும் உயிரின‌ங்களில் இயற்கை வென்று அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஹோமோ சேஃபியன்கள் என்னும் நவீன மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக கருதப் படுகிறது. இன்றைய ஹோமோ சேஃபியன்கள்…

  21. மின்னணு பொருள் (இலக்ட்ரோனிக்ஸ்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டிள் முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் 6 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 40 வீத வருமான அதிகரிப்பு. வருமானத்தில் வளர்ச்சியைக் காட்டும் சாம்சங் நிறுவனத்தின் 6வது தொடர்ச்சியான காலாண்டு இது. ஸ்மாட்ஃபோன்ஸ் எனப்படும் நவீனரக கைத்தொலைபேசி விற்பனையில் ஏற்பட்டுள்ள அதீத அதிகரிப்பும் குறைந்த சந்தைப்படுத்தல் செலவுமே இதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் கடந்த …

  22. ரோமில் இருக்கும் போது ரோமனை போல் நட/இரு (when in Rome, do as the Romans do) இப்படி ஒரு சொல்லாடலை எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எம்மில் பலர் எம்முடன் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளை, பழக்கங்களை, தெரிந்தோ தெரியாமலோ பின் பற்ற தொடங்குவோம். சில நேரம் அவை படு முட்டாள் தனமாக இருக்கும். அதே போல பாடசாலை காலத்தில் நண்பர்களின் அழுத்தத்துக்கு (peer pressure) பணிந்து, அல்லது ஊரோடு ஒத்தோட சில நேரம் எமது நடைமுறைகளை மற்ற, சில தகாத பழக்கங்களை கைகொள்ள தொடங்குவதும் உண்டு. இது மனிதன் போன்ற சமூக விலங்குக்கு மட்டும் பொதுவானதல்ல, ஏனைய சமூக விலங்குகளுக்கும் பொருந்தும் என அறியப்பட்டுள்ளது. அண்மையில் குரங்குகளிலும், திமிங்கிலங்களிலும் செய்யப்பட்ட ஆய்வில் இரண்டு விலங்கு கு…

    • 0 replies
    • 458 views
  23. பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எழும்புக்கூடு எச்சம் மனிதனுடையது சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது. அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொ…

  24. எல்.ஜி. ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தை விட இவ்வருடம் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. " காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்ற பழமொழிக்கேற்ப விற்பனை வளர்ச்சியடைந்து வருகின்றமையை கருத்தில் கொண்டு புது உற்பத்திகளை அறிமுகப்படுத்தி சந்தையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றது எல்.ஜி. . இதன் ஒரு அங்கமாக மடிக்கக் கூடிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை எல்.ஜி இவ்வருட இறுதியில் அறிமுகப்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கென மடியக்கூடிய OLED (organic light-emitting diode) திரையை எல்.ஜி. தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளைந்துகொடுக்கக்கூடிய சிப் மற்றும் பெட்டரியை…

  25. இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4187

    • 17 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.