செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 330 views
-
-
'SEX' தேடலில் இலங்கை தொடர்ந்து முதலிடம் இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மாகாணத்தில் ஹோமாகம நகரத்தில் இருந்தே இந்த சொல் அதிகளவில் தேடப்பட்டுள்ளது. அதிலும், பாடசாலை விடுமுறை காலங்களான ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களிலேயே SEX என்ற வார்த்தை அதிகளவில் தேடப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/187688/-SEX…
-
- 10 replies
- 2.5k views
- 1 follower
-
-
மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? – (காணொளி இணைப்பு) கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 446 views
-
-
ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…
-
- 0 replies
- 333 views
-
-
நபா சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்டு 900 லைக் வாங்கிய பயங்கரவாதி சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெ…
-
- 0 replies
- 291 views
-
-
வறுமை எனக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்வது மூடத்தனமாகும் - அச்சாறு விற்கும் மொஹமட் சாஜகான் சிலாபம் திண்ணனூரான் பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத்தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது. இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்…
-
- 0 replies
- 470 views
-
-
பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம் அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சேனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிருடங்களை வெட்டும் பித்தன் பிடிபட்டான் மஹரகம நகரத்தில், பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் பெண்களின் பிருடத்தை பிளேடால் வெட்டிப் பதம்பார்க்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 119 ஆம் இலக்க பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஆறு மாத கர்ப்பிணியின் பிருடத்தை (பின்பகுதி) வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றச் ஒருவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை காலைவேளையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கர்ப்பிணிப் பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய பின்பக்கத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தெஹிவளையில் உள்ள நிறுவன…
-
- 4 replies
- 637 views
-
-
திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத…
-
- 5 replies
- 1.6k views
-
-
650 கோடி செலவில் இந்திய தொழிலதிபர் மகளின் திருமணம்; திருமண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழிலதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் நேற்று பெங்களூரில் மிக பிரமாண்டமான முறையில், 650 கோடி இந்திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999ஆம் ஆண்டு தான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்களான கருணாகர ர…
-
- 2 replies
- 665 views
-
-
பிள்ளையாராக உருமாறிய கண்ணாடி போத்தல் ; மட்டக்களப்பில் அதிசயம் (சசி) மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் கிராமவாசியொருவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தலே பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது. இச் சம்பவம் பற்றி வீட்டின் உரிமையாளர் க.யோகராணிதெரிவிக்கையில், கடந்த 27 வருடங்களாக கேராத கௌரி விரதம் அனுஷ்டித்துவருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தி…
-
- 1 reply
- 425 views
-
-
'இப்போதைக்கு இதுதான் மொய்!' திருமண விழா சுவாரஸ்யங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண நிகழ்ச்சிகளில் 'ஸ்வைப் மிஷின்' மூலம் அன்பளிப்பு (மொய்) பெறும் நடைமுறை வந்துள்ளது. கரூரில் நடந்த திருமண விழாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த முறையை திருமண வீட்டினர் பின்பற்றி வருகின்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். பணத்தேவையை சந்திக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இந்த மாதத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழா ஆகியவ…
-
- 0 replies
- 432 views
-
-
நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி; அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் !! 2016-11-14 11:58:39 பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிக…
-
- 0 replies
- 213 views
-
-
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மீள பெறப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். வங்கிகளிலிருந்து பொதுமக்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் நிதியின் தொகையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோன்று நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவை கட்டணம், வரிகள், எரிப்பொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய நாணய தாளை பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென நாணயத்தாள்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதிலும்…
-
- 0 replies
- 261 views
-
-
68 வருடங்களின் பின்னர் சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார். இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது. இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும். இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த சந்…
-
- 0 replies
- 460 views
-
-
காலத்தால் அழியாத காதல் 65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. 65 ஆண்டுகளாக பிரிந்திருந்த பிறகு வெள்ளிக்கிழமை திருமணத்தில் இணைந்த ஜோடி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று. அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது. அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜ…
-
- 1 reply
- 463 views
-
-
"டிரம்ப் ஒரு முஸ்லீம்" (video) நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப…
-
- 2 replies
- 513 views
-
-
யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம் 2 days agoஅமெரிக்கா 6.4k SHARES விளம்பரம் Topics : #Donald Trump#Hillary Clinton உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும். அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த ம…
-
- 1 reply
- 433 views
-
-
கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …
-
- 9 replies
- 742 views
-
-
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் ; ஆச்சிரியத்தில் விவசாயி மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை. திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது. குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பய…
-
- 1 reply
- 301 views
-
-
ஜனாதிபதியின் எளிமை மீண்டும் நிரூபணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றவர் அதனை உறுதிபடுத்தும் மற்றொரு நிகழ்வு இன்றும் இடம்பெற்றது. நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். நாடாளுமன்றத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டிச் சாலையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே மதிய நேர உணவாக நாடாளுமன்றத்தில் அருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக…
-
- 4 replies
- 330 views
-
-
சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…
-
- 0 replies
- 277 views
-
-
தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…
-
- 2 replies
- 680 views
-
-
ஆகாயத்தில் இருந்து, சத்தத்துடன் விழுந்த மர்ம பொருள்! இது. என்னவாக இருக்கும்?
-
- 0 replies
- 407 views
-
-
மைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் பாணியில், டுபாயில் வைத்து முன்னாள் காதலியின் காதை இலங்கையர் ஒருவர் கடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 34 வயதான இலங்கையர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி அல் சல்வா பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த குறித்த இலங்கையர் தம்மை பிடித்து கொண்டதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். நபரின் பிடியிலிருந்து தம்மை விடுவித்த…
-
- 0 replies
- 267 views
-