செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7129 topics in this forum
-
“17 வயது யுவதி சகிதம் மூவராக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே தனது கணவரை கொலை செய்தார் இலங்கையரான டாக்டர் சமரி லியனகே - அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி வாதம் 2016-02-03 08:57:41 அவுஸ்திரேலியாவில் மருத்துவரான தனது கணவரை படுக்கையில் வைத்து கொலை செய்த இலங்கையரான பெண் மருத்துவர், தானும் தனது கணவரும் யுவதியொருவருடன் இணைந்து கூட்டாக பாலியல் உறவில் ஈடுபட்டதை மறைப்பதற்காகவே இக் கொலையைச் செய்தார் என அவுஸ்திரேலிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சமரி லியனகே (35)எனும் இப் பெண், தனது கணவரான டாக்டர் தினேந்திர அத்துகோரளவை (34) 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்தாரெ…
-
- 11 replies
- 601 views
-
-
சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…
-
- 24 replies
- 6.5k views
-
-
உலகின் மூப்புற்ற பெண்ணாக கனடியர் ஒருவர். Mohanay February 02, 2016 Canada கனடா- தங்கள் பிள்ளைகளிற்கு முன்னர் தாங்கள் இறப்பதை பெற்றோர்கள் விரும்புவது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.ஆனால் குறிப்பிட்ட காலத்தையும் மிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சிசிலியா லொறென்ட் இது கடினமானதென நிரூபித்துள்ளார். லோறன்ட் கடந்த ஞாயிற்றுகிழமை தனது 120வது வயதை அடைந்துள்ளார். இவர்தான் உலகில் மிகவும் பழமையானவர் என கருதப்படுகின்றது. லோறன்டின் 12பிள்ளைகளில் மூவர் மட்டுமே உயிருடன் இருப்பதாக லோறன்டடின் 28வயதுடைய கொள்ளுபேரன் றொனால்ட் செறி தெரிவித்துள்ளார். மூத்த பிள்ளைக்கு 80வயது. றோறன்ட் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. 2010ல் ஹெயிட்டியில் ஏற்பட…
-
- 0 replies
- 391 views
-
-
விருந்தில் ரசம் இல்லாததால் ரசாபசம்: திருமணத்தை நிறுத்திய மணமகன்! பெங்களூர்: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன் ஒருவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர். திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்பத்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். த…
-
- 2 replies
- 513 views
-
-
கூகுள் உரிமையாளராக ஒரு நிமிடம் இருந்த இந்தியருக்கு ரூ.8 லட்சம் பரிசு வழங்கிய கூகுள் கூகுள்.காம் இணையதளத்தை இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்துள்ளார். அவருக்கு பரிசாக ரூ.8 லட்சத்தை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மந்த்வி பகுதியை சேர்ந்தவர் சான்மே வேத். இவர் தற்போது அமெரிக்காவில் எம்பிஏ படித்து வருகிறார். இவருக்கு இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் உள்ளது. ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார் வேத். அதனால், கூகுள் டொமைன்ஸ் மூலம் இணைதள முகவரிகளை அவ்வப்போது வாங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் டொமைன்ஸ் சென்று புதிதாக …
-
- 0 replies
- 369 views
-
-
ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார் : ஃபேஸ்புக் 'மகன் 'திருமணத்துக்கு இந்தியா வந்த அமெரிக்க பெண்! உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர், கிருஷ்ண மோகன் பாரதி. தற்போது 28 வயது நிரம்பிய திரிபாதி கடந்த 4 வருடங்களுக்கு முன், பேஸ்புக் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேப் மில்லர் என்வருடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார். டெப் மில்லர் 60 வயது நிரம்பியவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே திரிபாதியின் தாயார் மரணம் அடைந்தார். தாயின் மறைவு குறித்து திரிபாதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த சமயததில் திரிபாதிக்கு டெப் மில்லர் அறுதல் அளித்தத்தோடு, ''உனக்கு தாயாக நான் இருக்கிறேன் கவலைப்படாதே'' என்று பரிவுடன் கூறியிருக்கிற…
-
- 2 replies
- 350 views
-
-
ஒய்யாரமாக மணமேடைக்கு புல்லட்டில் வந்த மணப்பெண்... ஷாக்கான உறவினர்கள்! ஆமதாபாத்: குஜராத்தில் திருமணத்தின் போது மணமேடைக்கு புல்லட் பைக்கில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் மணப்பெண் ஒருவர். வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக புல்லட் ராணியாக மணமேடைக்கு வந்து சேர்ந்துள்ளார் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா உபாத்பாய் என்ற 26 வயது பெண். பேராசிரியை... கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. மணமகள் …
-
- 6 replies
- 542 views
-
-
ஒரேயொரு கிராமத்தில் 122 இரட்டையர்கள் 122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட வெலிகயா கொபன்யா என்ற மேற்படி கிராமம் ஏற்கனவே 61 இரட்டையர்களை உள்ளடக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது அந்தத் தொகை இரு மடங்காகி தன்னால் நிறைவேற்றப்பட்ட முந்திய சாதனையை அந்தக் கிராமம் முறியடித்துள்ளது. அந்தக் கிராமத்தில் அளவுக்கதிகமான இரட்டையர்கள் பிறப்பதற்கு அங்குள்ள நீரில் காணப்படும் விசேட மர…
-
- 0 replies
- 346 views
-
-
தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை…
-
- 0 replies
- 381 views
-
-
வீதியில் டெக்ஸி சாரதியை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட டாக்டர் இடைநிறுத்தம் அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இவர் அண்மையில், டெக்ஸி ஒன்றில் முன்பதிவு செய்யாமல் ஏறிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்குமாறு சாரதியிடம் கூறினார். ஆனால், முன்பதிவு செய்யாததால் அவரை டெக்ஸியில் இருந்து இறங்குமாறு சாரதி அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரம டைந்த அஞ்சலி, டெக்ஸ…
-
- 3 replies
- 471 views
-
-
உகண்டாவில் பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட டொமினிக் உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச விசாரணையாளர் கள் வியாழக்கிழமை தெரி வித்தனர். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முதலாவது உறுப்பினர் என்ற பெயரை பெறுகிறார். அவர் மீது சிறுவர்க ளைப் பாலி யல் அடி மைகளாக வும் படைவீரர்களாகவும் மாற்ற பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாகப் பயன்படுத்…
-
- 0 replies
- 261 views
-
-
சுற்றுலா பயணியாக இலங்கை வந்த பிரித்தானிய யுவதி ஆட்டோவில் நாடு முழுவதிலும் வலம் வருகிறார் (ஆர்.கிறிஷ்ணகாந்) பிரித்தானிய யுவதி முச்சக்கர வண்டியொன்றை செலுத்திக் கொண்டு இலங்கையில் பல இடங்களுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். கெஸீ ட்ரேவிஸ் எனும் இந்த யுவதி முச்சக்கர வாகனங்கள் மீது அதீத ஆசையை கொண்டவராக் காணப்படுகிறார். சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த இவர், இங்குள்ள ஆட்டோ எனும் முச்சக்கரவாகனங்களை பார்த்ததன் பின்னர் அவற்றின் மீதிருந்த அளவு கடந்த ஆசையினால் தனக்கென ஒரு முச்சக்கர வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாராம். அதையடுத்து, முச்சக்கர வாகனம் …
-
- 12 replies
- 568 views
-
-
பாலியல் தாக்குதல்களுக்கு பெண்கள் பூசியிருந்த நறுமணத் தைலங்களே காரணம் ஜேர்மனிய கோலொன் பிராந்தியத்தில் கடந்த புது வருட தினத்தில் குழுவொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்தப் பெண்கள் நறுமணத்தைலங்களை பூசியிருந்தமையே காரணம் எனத் தெரிவித்து அந்தப் பிராந்திய இமாம் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர். அன்றைய தினம் மட்டும் அந்நகரில் 3 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் உட்பட 521 பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து…
-
- 0 replies
- 251 views
-
-
#இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது. வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார். #நான்_களவாடியது_உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால்வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.. "என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்…
-
- 1 reply
- 448 views
-
-
வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர் பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில் ஊசயபை யுவமiளெழn (36) என்ற வீடு இல்லாத நபர் அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த பகுதியில் பிச்சை எடுப்பது பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளதால், நகர நிர்வாகம் பிச்சை எடுப்பவர்களை கைது செய்து வந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் பிச்சை எடுத்த கிரெய்க்கை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த …
-
- 2 replies
- 457 views
-
-
தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு தீயணைப்புத் துறையினரிடம் உதவி கோரிய இத்தாலிய பெண் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கற்புக் கவசத்தை திறப்பதற்கு உதவுமாறு தீயணைப்புத் துறையினரை கோரியதன் மூலம் அதிர்ச்சியடையச் செய்துள்ளார். இத்தாலியின் பதுவா எனும் நகரைச் சேர்ந்த நடுத்தர வயதான பெண்ணொருவரே அந்நாட்டு தீயணைப்புத் துறையினரிடம் இக்கோரிக்கையை விடுத்தார். தீயணைப்புத்துறை நிலையத்துக்குச் சென்ற மேற்படி பெண், தனது கற்புக் கவசப் பட்டியின் (chastity belt) சாவிகளை தான் தொலைத்துவிட்டதாகவும் அதனால் மேற்படி கவசத்தை தன்னால் திறக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தாராம். அப்பெண் கூறுவதை தீயணைப்புத்…
-
- 9 replies
- 462 views
-
-
சவப்பெட்டிகளில் அமர்ந்து விநோத பிரார்த்தனை தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள் இறந்து பின்னர் மீள உயிர்த்தெழுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர்கள் படுத்திருந்த சவப்பெட்டிகள் மீது மதகுருமார் போர்வையைப் போர்த்தி அகற்றும் சடங்கொன்றை மேற்கொள்கின்றனர். இந்த பிரார்தனை மக்கள் தமது தீய கர்ம வினைகள் அகன்று பரிசுத்தவான்களாக மீள வாழ்க்கையை ஆரம்பிக்க வழிசெய்யும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேற்ப…
-
- 3 replies
- 609 views
-
-
-
- 0 replies
- 356 views
-
-
பிரேசில் அரசு ஊழியர் ஒருவர் உலகிலேயே அதிக வயதுடன் வாழும் மனிதரை உயிருடன் கண்டு பிடித்து உள்ளார். அவரது வயது 131 அவர் தனது 69 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் ஜோவா கொயிலோவை டி சூசா அவர எஸ்டிரோ டு அல்சாண்ட்ரா என்ற ஒரு தொலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அவருடன் அவரது 69 வயது மனைவியும் 16 வயது பேத்தியும் உள்ளனர். தெற்கு பிரேசிலின் சமூக பாதுகாப்பு ஊழியர் இவரை கண்டு பிடித்து உள்ளார். அவரது பிறந்த நாள் சான்றிதழை வைத்து அவர் 1884 ஆம் ஆண்டு மார்ச் 10 ந்தேதி பிறந்ததாக கண்டறியபட்டு உள்ளது. அவரது வயது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதை அடுத்து உலகிலேயே அதிக வயதுடன் வாழும் நபர் அவர்தான் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. உலகிலேயே உயிருடன் வாழும் அதிக வயதான நபர் ஜப…
-
- 2 replies
- 336 views
-
-
கனடாவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படும் என்றும் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படியும் கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வான்கூவர் மாகாணத்தில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த பேரிடரில் 11,000 பேர் வரை இறக்கவும், 1,28,000 பேர் வரை காயமடையும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பேசிய கனடாவின் புவியியல் ஆய்வு மைய அதிகாரியான ஹோன் கவோ, பூகம்பம் ஏற்படுவதற்கு முன்ன…
-
- 2 replies
- 674 views
-
-
50 கிலோ மீற்றர் நீளமான வீதி “திருடப்பட்டது” - ரஷ்ய சிறைச்சாலை சேவை உயர் அதிகாரி கைது! ரஷ்யாவில் ஐம்பது கிலோமீற்றர் (31 மைல்) நீளமான வீதியை திருடிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அலெக்ஸாண்டர் புரோடோபொபோவ் எனும் இந்த அதிகாரி, கொங்கிறீட்டினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையொன்றின் கொங்கிறீட் பாலங்களை அகழ்ந்து விற்பனை செய்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் வடக்கிலுள்ள கோமி பிராந்தியத்தில் இக்குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2015 வரையான ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 7,000 கொங்கிறீட் பாலங்களை த…
-
- 1 reply
- 849 views
-
-
அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு 2 மணித்தியாலம் 14 நிமிடங்களில் வந்தடைந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. புராதன காலத்தில் பறவைகள் மூலம் தூதனுப்பும் நடைமுறை பற்றி பாடசாலை மாணவர்களுக்குத் தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை அநுராதபுரம் டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் வந்தளை ‑ ஹெந்தல சந்தியில் உள்ள புறா வளர்ப்பு நிலையத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்துகொண்டிருந்ததோடு 12 புறாக்களையும் இதில் ஈடுபடுத்தினா…
-
- 0 replies
- 601 views
-
-
அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர். அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லா மரினாவில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லூயிசா பெர்ணான்டா உர்ரியா. அண்மையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையை எடினோரா ஜிமெனெஸ்(59) என்பவர் கண்டுபிடித்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த லூயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார். குழந்தையை தனது மார்போடு அணைத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர்…
-
- 2 replies
- 413 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் பிக் அப் வாகனமொன்றை தனியாக தூக்கி, அதன் அடியில் சிக்கியிருந்த தனது தந்தையை காப்பாற்றியதுடன் 3 சக்கரங்களை மாத்திரம் கொண்டிருந்த வாகனத்தை செலுத்திச் சென்று பெரும் தீ விபத்தையும் தவிர்த்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த சார்லட் ஹஃபெல்மீர் எனும் இந்த யுவதி கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இந்த சாகசத்தைப் புரிந்தார். அன்றைய தினம் சார்லட்டின் தந்தையான எரிச் ஹஃபெல்மீர் தனது வீட்டிலுள்ள கராஜில் பிக் அப் ட்ரக் ஒன்றை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாகனம் திடீரென ஒரு புறமாக சரிந்தது. எரிபொருள் கசிந்துகொண்டிருந்ததால் கராஜில் தீ பரவ ஆரம்…
-
- 2 replies
- 631 views
-
-
84 வயதில் 4வது முறையாக மாடல் அழகியை மணந்த இங்கிலாந்து பத்திரிகை அதிபர் இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார். இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத்திரிகையின் அதிபர் ரூபெர்ட் முர்டோக். இவருக்கு வயது 84. இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இவரது 3-வது மனைவி வெண்டி டெங் (46). இவர் மூலம் கிரேஸ் (14), சொலோக் (12) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவரை கடந்த 2013-ம் ஆண்டு முர்டோக் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் முர்டோக் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது நடிகையும், முன்னாள் மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்தார். ஜெர்ரியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன…
-
- 4 replies
- 565 views
-