Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மும்பையில் விநாயகர் சதூர்த்திக்காக அமைக்கப்பட்ட பந்தலில் இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மும்பையின் கொலபா நகரில் உள்ள மசூதி ஒன்றில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு வந்ததால், ஏராளமானோர் மசூதியின் வாயிலில் நின்று கொண்ட படி தொழுகையில் ஈடுபட்டனர். மசூதியின் அருகே விநாயகர் சதூர்த்திக்காக பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இடப்பற்றாக்குறை குறித்து அறிந்த இந்து அமைப்பாளர்கள், விநாயகர் சதூர்த்திக்காக அமைக்கப்பட்ட பந்தலை பயன்படுத்துமாறு இஸ்லாமியர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பந்தலில் அமர்ந்து இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு…

  2. சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு முன்பு இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாக கதறி அழுத காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள இரண்டு கிராமங்களை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது. அதற்காக தங்கள் அமைப்பில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜாஃபர் அல் தையர் என்ற இளைஞரை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஜாஃபர் அல் தையருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரியாவிடை அளித்தனர். அந்த இளைஞரை கட்டிப்பிடித்து தாக்குதல் வெற்றி பெற…

  3. ( எம். செல்வராஜா ) நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வ…

  4. வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நக­ரி­லுள்ள வீதி­யொன்­றி­னு­டாக தனது விசேட வாக­னத்தில் புதன்­கி­ழமை பய­ணித்த போது, 5 வயது சிறு­மி­யொ­ருவர் ஒரு­வாறு பாது­காப்பு தடையைத் தாண்டி வந்து பாப்­ப­ர­ச­ரிடம் தனிப்­பட்ட கடி­த­மொன்றை கைய­ளித்து பாப்­ப­ர­ச­ரது மட்­டு­மல்­லாது அங்கு கூடி­யி­ருந்த அனை­வ­ரதும் கவ­னத்தையும் ஈர்த்­துள்ளார். கொன்ஸ்­ரி­ரி­யூஷன் வீதியின் இரு மருங்­கிலும் அமைக்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்புத் தடை­க­ளுக்கு அப்பால் பாப்­ப­ர­சரை காணும் முக­மாக கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களில் சோபி குரூஸ் என்ற மேற்­படி சிறு­மியும் ஒரு­வ…

  5. ரஷ்யாவில் நள்ளிரவில் பேய் வேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் விளாடிமர் டசபாவ் சொந்தமாக நகைச்சுவை இணையதளத்தை நடத்தி வருகிறார். இந்த இணையதளத்தில் அவர் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளார். இந்நிலையில் புதிய நகைச்சுவை காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்ட விளாடிமர், நள்ளிரவில் பேய் வேடமிட்டு, ஏமாளிகளுக்காக காத்திருந்தார். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு இளைஞர் வருவதை அறிந்த விளாடிமர் அவரை நோக்கி நடந்து சென்றார். ஆனால் பேய் வேடமணிந்த விளாடிமரைக் கண்டு சிறிதும் பயப்படாத அந்த இளைஞன், அவரை சரமாரியாக தாக்கினார். கிழே விழுந்த விளாடிமரை நோக்கி அந்த இளைஞ…

  6. ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் பட த்தை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டு­வ­தாகத் தெரி­வித்தி­ருந்த யுவதி ஒருவர் அவ்­வாறே செய்­துள்ளார். இதன்­படி அவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை தற்­போது அவ­ரது முகநூலில் வெளி­யிட்­டுள்ளார். கடந்த நாடா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் தனது நிர்­வாணப் படத்தை வெளி­யி­டுவேன் என இந்த யுவதி தனது பேஸ­புக்கில் பதிவு ஒன்­றினைச் செய்­தி­ருந்தார். தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பெற்­ற­த­னை­ய­டுத்து இவர் தனது நிர்­வா­ணப்­ப­டத்தை கடந்த மாதம் 18 ஆம் திகதி வெளி­யிட்டு தான் சொன்­னதை செயலில் காட்­டி­யுள்ளர். தற்­போது இந்­தப புகைப்­படம் முக­நூல்­களில் மட்­டு­மின்றி இணை­யங்­க­ளிலும் வெள…

  7. மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ) திருமணம் முடிந்த கையோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரை, மணப்பெண் கோலத்தில் இருந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது சீனாவை சேர்ந்த கு யங்குவான் என்ற 25 வயதுடைய இளம்பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இதயநோய் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது கணவரோடு சீனாவின் டாலியான் கடற்கரையில், அழகிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மூச்சடைத்த நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கூட்டமாக கூட…

  8. ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது bbc ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறி…

  9. செக். குடியரசு ஜனாதிபதியின் கொடிக்குப் பதிலாக பாரிய உள்ளாடையை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் செக். குடியரசின் ஜனாதிபதி மாளிகையின் கூரையிலுள்ள கொடிகம்பத்தில் அந்நாட்டு ஜனாதிபதியின் கொடிக்கு பதிலாக பாரிய உள்ளாடையொன்று அண்மையில் பறக்கவிடப்பட்டிருந்தது. செக். குடியரசு ஜனாதிபதி மிலோஸ் ஸெமேனுக்கு எதிரான கலைஞர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இந்த உள்ளாடையை பறக்க விட்டிருந்தனர். ஜனாதிபதி மிலோஸ் ஸெமன், சீனா, ரஷ்யா நாடுகளுடன் ஆரோக்கி யமற்ற வகையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக மேற்படி கலைஞர்கள் குழு குற்றம் சுமத்துகின்றனர். மேற்படி பாரிய உள்ளாடையின் சிவப்பு நிறமானது இந்த தொடர்புகளை பிரதிலிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசின் தலைநகர் பிரேக்க…

  10. டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர். பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான். அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது. தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோஙளில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால…

  11. விதவிதமான பொம்மைகளால் நிறைந்த விநோத தீவு! மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் விதவிதமான பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. பெரேரா என்ற நபர் எஸ்ஸோ சிமில்கோ-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது. பெரேரா அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து, பெரேரா அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார். 50 ஆண்டுகளில் தொடர்ந்து சைனாம்பஸ் என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகள…

  12. பெண்களின் கண்ணீரைத் துடைக்க வாடகை ஆண்கள் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஆண்களை வாடகைக்கு விடும் ஒரு புதிய வர்த்தகத்தை ஜப்பானிய நிறுவனமொன்று தொடங்கியுள்ளது. ஐக்கேம்மேசோ டான்ஷி என்ற நிறுவனம் பெண்களுக்கு சேவை செய்வதற்காக அழகான ஆண்களை பணிக்கமர்த்தியுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளவர்கள், தங்கள் துன்பங்களை பகிரக்கூட ஒரு ஆண் துணை இல்லாதவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு பிடித்தமானவர்களை தெரிவுசெய்து கொள்ளலாம். ஆணாதிக்கமுள்ள சூழ்நிலையில், வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஆண்கள் உதவி செய்வார்கள். அந்தப் பெண்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது, அவர்கள் அழுதால் அவர்களின் கண்ணீரை துடைப்பது, அவர்களின் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்வது என இவர…

  13. ஈபிள் டவரில் பயங்கரவாதி? பாரீஸ்: பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் டவரில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபர் பயங்கரவாதி என சந்தேகம் அடைந்துள்ள போலீசார், ஈபிள் டவரை மூடியுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1346344

  14. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளியில் 9-வது வகுப்பில் படிக்கும் மாணவன் அஹமட்மொஹமட் (14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கட்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அம் மாணவன் செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவனுக்கு ஆதரவாக சமூகவலையமைப்புகளிலும் ஆதரவு பொங்கியது. …

  15. ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர். ‘மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் …

  16. ஒரு சாண்ட்விச் தயாரிக்க 6 மாதம்... அப்படி என்ன ஸ்பெஷல்? யூடியூப் நட்சத்திரமான ஆண்டி ஜார்ஜ், நம்மூர் உணவான இட்லியோ, தோசையோ செய்ய முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.ஜார்ஜ் நிச்சயம் இதற்கு மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்.ஆயிரக்கணக்கில் பணத்தை செலவிடுவார்.அதைவிட முக்கியமாக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வயலில் இறங்கி உழைப்பார். இப்படி எல்லாம் யாராவது உணவை தயார் செய்வார்களா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆண்டி ஜார்ஜ் நிச்சயம் இப்படிதான் செயல்படுவார். அதற்கு அவர் உருவாக்கியுள்ள சாண்ட்விச் உணவே சாட்சி! இந்த சாண்ட்விச்சை தயார் செய்ய அவருக்கு தேவைப்பட்ட காலம் ஆறு மாதம். ஆன செலவு 1500 டாலர்கள்- நம்மூர் கணக்குபடி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். என…

  17. அமெரிக்காவை சேர்ந்த பிரபல மெஜிக் கலைஞர் டேவிட் பிளேய்ன் தனது வித்தை மூலம், ஹொலிவூட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித், அவரது மனைவி மற்றும் அமெரிக்க இசைக் கலைஞர், பாடலாசிரியர் கென்யே ஆகியோரை அலறவைத்துள்ளார். டேவிட் பிளேய்ன் ஒரு கூர்மையான பொருளை தனது கையில் செலுத்துகிறார். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட வரவில்லை. வலியால் துடிக்கவும் இல்லை. ஆனால் அதை பார்ப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதற்காக அந்த மெஜிக் கலைஞர் 13 ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://newsfirst.lk/tamil/2015/09/வில்-ஸ்மித்தை-பிரம்மிக்க/

  18. பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …

  19. பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்தால் அவர்களுடன் இளவரசிக்கு ரகசிய தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கவே பெண் பாதுகாவலர்களை மட்டும் நியமித்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரி Express என்ற ஊடகத்திற்கு ரகசிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், இளவரசர் வில்லியமிற்கும் இளவரசி கேட் மிடில்டன்னிற்கும் திருமணம் நிச்சயம் ஆன நாள் முதல் இளவரசியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் வில்லியமின் தந்தையான இளவரசர் சார்லஸ் தான் முடிவெடுத்து வருகிறார். இருவருக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆன பின்னர், கேட் மிடில்டன்னின் தலைமை பாதுகாவலராக 43 வயதான Emma Pro…

  20. கூகுளில் எதையோ தேடினேன் எதுவோ வந்தது. வந்தது இதுதான். வாழ்க்கையின் பாதையில் இருக்கும் முட்களை முன்பே அறிந்துகொண்டால் சற்றேனும் அவதானமாக நடக்க இயலும் என்பதால் பதிகிறேன். கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? மக்களின் எவ்வாறு வாழ்வார்கள், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்.. இதை பற்றி நம் வேதங்களிலும் புராணங்களிலும் இப்படியாக குறிப்பிடபட்டுள்ளன.! ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க மாட்டார்கள்.. வரி வசீலித்து மக்களை கொடுமை படுத்துவதில் குறியாய் இருப்பார். ஆட்சியாளர்களிடம் நல்லவர் மேன்மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. வெறும் திருடர்களே அவர்களிடம் இருப்பார்.. ஆட்சியாளர்களும் திருடர்களாகவே இருப்பார். அனைவரும், பணம் ச…

  21. நிலா லோக­நாதன் தமி­ழ­ரிடம் இருக்கும் பண்­பு­களில் முக்­கி­ய­மா­னது, தமி­ழச்­சிடா... தமி­ழண்டா... உடல் மண்­ணுக்கு, உயிர் தமி­ழுக்கு போன்ற “க்ளிஷேக்கள்”. கல்லும் மண்ணும் தோன்­றாத காலத்தில் தோன்­றின மொழி­யா­ததால் இந்தப் பெருமை இருக்­கலாம். இருக்­காதா பின்ன? நுண்­ணங்­கி­க­ளெல்லாம் தமிழ் தான் கதைச்­சி­ருக்­கு­துகள். சரி இருக்­கட்டும். ஏனைய நாடுகள், மொழிகள், கலா­சா­ரங்­களைச் சேர்ந்­த­வர்கள் தம்மைப் பற்றி எவ்­வாறு மதிப்­பி­டு­கி­றார்கள்? இலங்கை ஆதர் சி கிளார்க் ஆராய்ச்சி கூடத்தில், எந்­திரப் (ரோபோட்டிக்) பொறி­யியல் ஆராய்ச்­சித்­து­றையில், எங்­க­ளோடு கடைசி வரு­டத்தில் ஒரு ஆபி­ரிக்க இளைஞன் படித்தான். மேற்கு ஆபி­ரிக்­காவின் நைஜீ­ரி­யா­வி­லி­ருந் வந்­தி­ருந்து அவனின் பி…

  22. விமானத்தில் இருக்கும் நாயைக் காப்பாற்றுவதற்காக அந்த விமானத்தையே திசை திருப்பிய விமானியை பிராணிகள் நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து கனடாவின் டொரண்டோ நகருக்கு 200 பயணிகளுடன் ஏர் கனடா விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் நிலவிய அதிகபட்ச குளிரால் அந்த விமானத்தில் இருந்த புல்டாக் இனத்தைச் சேர்ந்த 4 வயது நாயான சிம்பாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. விமானத்தில் இருக்கும் வெப்பமூட்டும் அமைப்பு செயல்படாததால் நாயின் நிலை மோசமானது. இந்த விவகாரம் பைலட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த பைலட் விமானத்தை ஜெர்மனிக்கு திசை திருப்பி அந்த நாயை வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். விமானியின் இந்த செய்கையால் விமானம் 1 மணி நேரம் தாமதமானது. இர…

  23. ஜெர்மனியில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற.. பஸ் ரயில்வே கேட்டை கடக்கும் பொழுது எதிர்பாரவிதமாக ரயில் வரும் பாதையிலையே நின்றது. ரயில் வருவதற்கு 1 நிமிடம் முன் அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பேருந்தில் பயணம் செய்த 60 குழந்தைகளையும் இறக்கிவிட்டு அவரும் உயுருடன் தப்பினார்

  24. என்னை போன்று பிடிவாதம் பிடிக்காதே: செல்லமகளுக்கு ஒபாமாவின் அட்வைஸ்[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 05:35.02 மு.ப GMT ] பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப்படிப்பை தொடரவிருக்குக்கும் தனது மகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை தொடரவிருக்கிறார். இந்நிலையில் ஒபாமா தனது மகளுக்கு வழங்கிய அறிவுரையில், பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாயோ, அதே அனுபவத்தோடு கல்லூரி வாழ்க்கையை தொடராதே. ஏனெனில் கல்லூரியில் நீ புதுவித அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கல்லூரி செல்லும் நீ, புதிய மனிதர்களை சந்தித்துப்பேசி அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாத விடயங்களை கற்றுக்கொள். மேலும், பள்ளி நண்பர்கள் சேரு…

  25. ஈழத்து குட்டிச் சுட்டீஸ் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவோம் என்று கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை குறித்து குழந்தைப்பிள்ளைத்தனமாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொருவிதமான கருத்துகளை கூறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். தமிழ்மக்களின் தலைமை தாங்களே என கூறிக்கொள்ளும் இவர்களால்; தமிழ் மக்களின் முக்கியமான இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. தமிழக சட்டசபையில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஜெயா அம்மையார் தீர்;மானம் நிறைவேற்றுகிறார். கலைஞர் கருணாநிதி சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார். தமிழகத்தில் பல்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.