Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்: இந்து அமைப்புகள் முடிவு! சென்னை: தி.க. சார்பில் நடக்கவிருக்கும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. அம்பேத்கர் பிறந்த நாளான 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார். இதில் கலந்து கொண்டு தாலியை அகற்ற விரும்பும் பெண்கள் செல்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செல்போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள…

  2. தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார். இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை க…

  3. நிலத்தடி நீரில் கலந்திருப்பது.... இயற்கை எண்ணை. அமெரிக்க நிபுணர் அறிவிப்பு. யாழ். குடாநாட்டில்.... அண்மையில் நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டதாகவும், அதில்... சுன்னாகம் மின் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றப் பட்ட கழிவு எண்ணை, கிணற்று நீருடன் கலந்து விட்டதாகவும் வந்த செய்திகளை... நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இதனை பரிசோதிப்பதற்காக... அமெரிக்க, நோர்வே... நிபுணர்கள் சென்ற மாதம் யாழ். குடாநாட்டிற்கு வந்து.... யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கிணற்று நீரின் மாதிரிகளை.... சேகரித்து, அமேரிக்கா கொண்டு சென்று ஆராய்ச்சி செய்ததில், அதில் கழிவு எண்ணை இல்லை என்றும்.... நிலத்தடி நீரில் கலந்திருப்பது, இயற்கையாக நிலத்தில் இருந்து அமுக்கத்தால் வெளியெ வரும் எண்ணை என்றும் அமெரிக்க, …

    • 27 replies
    • 1.9k views
  4. கடலில் மிதந்து வந்த ரதம்: அச்சத்தில் உறைந்த மக்கள் ராமநாதபுர மாவட்டத்தில் ரதம் ஒன்று கடலில் மிதந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள கடலில் மிதந்து வந்த சுமார் 3 அடி உயர ரதம் ஒன்று கரை ஒதுங்கியது. பட்டுத் துணிகளால் சுற்றப்பட்ட ரதத்தில், மண்பானை ஒன்றும், ஜாக்கெட் ஒன்றும் இருந்தன. பார்ப்பதற்கு பில்லி சூனிய விவகாரம் போல இருந்ததால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கடற்கரையில் கூடிவிட்டனர். ரதத்தில் ‘நாகம்மா ரதம், புங்குடுதீவு’ என தமிழில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அதில் ஒரு கைப்பேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. அந்த நம்பரை தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர், …

    • 7 replies
    • 917 views
  5. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம்: பயத்தில் தலைதெறிக்க ஓடிய மக்கள் (வீடியோ இணைப்பு) நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கு வளர்க்கப்படும் காண்டாமிருகங்களில் ஒன்று அங்கிருந்து வெளியேறி தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள் புகுந்தது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். ஆனால், காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடி சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். கா…

  6. தப்பான இடத்தில், துப்பாக்கியை வைத்து "சூடு" வாங்கும் அமெரிக்கர்! நி்யூயார்க்: அமெரிக்கர்களுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வருகிறது பாருங்கள். அங்கு துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகம். ஆளாளுக்கு துப்பாக்கியுடன் திரிவது அங்கு சகஜமானது. ஆனால் இதனால் எதிர்பாராத சில புதிய விபரீதங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து அமெரிக்கர்கள், பேன்ட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தபோது, வைத்தபோது எதிர்பாராதவிதமாக அது சுட்டு தங்களது ஆணுறுப்பை இழந்துள்ளனராம். இப்படிப்பட்ட விபத்துகள் அதிகரிப்பது ஆண்களுக்கும், அரசு நிர்வாகத்தினுக்கும், மருத்துவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,18 வயதான மைக்கேல…

  7. அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்தார் கோஹ்லி.... ! மும்பை: உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் மும்பை வந்து சேர்ந்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வந்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதனால், போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் கோஹ்லி விளையாடுவதை நேரில் காண அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஒரே ரன்னில்... எதிர்பாராத விதமாக இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்து ஷாக் கொடுத்தார் கோஹ்லி. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களின் கோஹ்லிக்கு பதிலாக அவரது காதலி அனுஷ்கா …

  8. முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது உலகறிந்த ரகசியம். இருப்பினும், உலகின் விலையுயர்ந்த கார்களை சேகரிப்பதிலும் இவர் அதிக ஆர்வம் உடையவர் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, அதிநவீனமானதும் விலையுயர்ந்ததுமாக 37 கார்களை தனது அரண்மனை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இளவரசர் அல்வாலித் இன் டலால், 38-வதாக ஒரு சொகுசுக்காரை வாங்க விரும்பினார். சொகுசுக் கார் என்றாலே, அனைவரின் நினைவிலும் நிழலாடும் ’மெர்ஸடிஸ் பென்ஸ்’…

  9. தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்த நபர், 6-வது மாடியில் மாட்டிக்கொண்டு தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் நகரை சேர்ந்த யுவான் (Yuvan age - 44) என்ற நபர் வாழ்க்கையை வெறுத்த காரணத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்காக 11 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால் அவர் கீழே விழுவதற்கு முன் 6-வது மாடியில் உள்ள ஏசி மிஷினின் கம்பியில் அவரது கால்சட்டை மாட்டி கொண்டது. அதனால் அவர் அங்கு தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அவரிடம் கயிறு கொடுகப்பட்டு அவரை கீழே இறக்க …

    • 3 replies
    • 1.3k views
  10. பிரேசிலில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாய் உயிர் தப்பியுள்ளனர். பிரேசிலின் பாரா(Para) மாகாணத்தில் வெள்ளத்தால் திடீரென ஏற்பட்ட பள்ளம் ஒன்றில், அவ்வழியே சென்ற பேருந்து மாட்டிக்கொண்டுள்ளது. பேருந்தின் பின்புற சக்கரம் மண்ணில் புதையத் தொடங்கியதும், சுதாகரித்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகளை கீழே இறங்க செய்துள்ளார். இந்நிலையில் பயணிகள் இறங்கிய சில நொடிகளில் பேருந்து பள்ளத்தில் விழுந்து பின் சாலையின் மறுபுறத்தில் இருந்த கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamilwin.com

  11. எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவைச் சேர்ந்த 25 வயதுயை அடினா அல்பு என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரபரப்பான பதிவேற்றத்தை பதிவு செய்துள்ளார். தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அடினா, ஆண்கள் அனைவரும் மனதளவில் முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை எப்போதும் சந்திப்பது ஒரு பெரிய விடயம் இல்லை. ஆனால் தமக்கு ஒரு குழுந்தை தேவைப்படும் போது ஆண் ஒருவரை சந்திப்பதான பெரிய பிரச்சினையாகும். குழந்தைக்காக எவ்வித பயனும் இல்லாத உறவில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே எனக்கு குழந்தை த…

  12. பிஹார்: வெளிப்படையாக பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது. 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்கள் பலர் உள்ளடங்கலாக 300 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பெருமளவிலான மாணவர்கள் பள்ளி இறுதி-வகுப்புப் பரீட்சையில் வெளிப்படையாக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகின்ற படங்களும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து, 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நான்கு நிலையங்களில் பரீட்சைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பலமாடி பரீட்சை நிலையம் ஒன்றுக்கு வெளியே சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் ந…

  13. அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொல்ல முயன்ற 12 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை எதார்த்தமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடிநீரில் விஷம் கலந்த அந்த சிறுமி மீண்டும் தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது. இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில்…

  14. நண்பன்’ பட க்ளைமாக்ஸில் அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்க்க... வெற்றிகரமாகப் பிறக்கும் குழந்தை! சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல…

    • 1 reply
    • 312 views
  15. எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். கணவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது. அவரது குல வழக்கப்படி கணவனை இழந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது. அடுத்தவரை நம்பி அதாவது பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலை இருந்தது. அதற்கு சிசா அபுவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தனது சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என விரும்பினார். இந்த நிலையில் அவருக்கு ‘ஹுடா’ என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது மகளை கவுரமாகவும் அருமை பெருமையாகவும் வளர்க்க விரும்பினார். பெண்ணான தான் வேலைக்கு செல்ல விரும்பினார். ஆனால் ஆண்களின் கழுகு பார்வையில் இருந்து தப்ப ஒரு தீ…

    • 2 replies
    • 508 views
  16. பாங்காக்: பெண்கள் மார்புப் பகுதி இறக்கமாக தெரியும் படி செல்ஃபி எடுக்கக் கூடாது என தாய்லாந்து அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனில் கேமரா கிடைத்த பிறகு, தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்ளும் செல்ஃபிக்கு மோகம் மக்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. அவ்வாறு விதவிதமாய் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு எடுக்கப் படும் செல்ஃப்பிக்களில் சிலர் ஆபாசமாக எடுக்கின்றனர். அவை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் படும் போது, அவற்றை சிலர் மேலு…

  17. 65 ஆண்டுகளின் பின் வெளியாகிய இரகசியம் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெண்களை பரீட்சார்த்த நடிப்புகளில் ஈடுபடுத்தும்போது இயக்குநர் ஒருவர் நடந்துகொண்டுள்ள விதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் 65 ஆண்டுகளின் பின்னர் வெளியாகியுள்ளன. 1950 ஆம் ஆண்டுகளில் லைஃப் சஞ்சிகையின் ஜேம்ஸ் பர்க் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படங்களே தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. டிலாகி (1949), துலாரி (1949), டில் தியா டார்ட் லியா (1966) போன்ற பிரபல ஹிந்தித் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர். காதர் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார். பரீட்சார்த்த நடிப்புக்காக வரும் பெண்களை ஒவ்வொரு கோணத்தில் நிற்கச் சொல்லியும் மேலாடைகளை அகற்றியும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி…

  18. தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எரியும் தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து …

  19. மைசூரில் யானைகள் சண்டையை தடுக்க முயன்ற பாகனும், அவர் வளர்த்த யானையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் சாம்ராஜ்நகரில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு, கஜோந்திரா, ஸ்ரீராமா என்ற இரு யானைகளும் உள்ளன. நேற்று இந்த இரு யானைகளும் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டன. இரண்டும் ஒன்றையொன்று தந்தத்தால் குத்திக் கொண்டன. சண்டையை பார்த்த ஸ்ரீராமா யானையின் பாகன் கணபதி, சண்டையை விலக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், கடும் ஆத்திரமடைந்த கஜேந்திரா யானை, பாகன் கணபதியை தந்தத்தால் ஆவேசத்துடன் குத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கணபதி பலியானார். தொடர்ந்து ஆத்திரம் தணியான கஜேந்திரா யானை, ஸ்ரீராமா யானையை மேலும் த…

  20. அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…

    • 1 reply
    • 386 views
  21. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …

    • 4 replies
    • 698 views
  22. யுஎஸ்.சில் ரென்னிசி என்ற இடத்தில் பணிப்பெண் ஒருவருக்கு பெருந்தன்மையான அன்பளிப்பு தொகையும் விலைமதிப்பற்ற ஒரு குறிப்பும் ஒரு, பெரிய மற்றும் துக்கத்தினால் ஒடுங்கிப்போன ஒரு வாடிக்கை யாளரிடமிருந்து கிடைத்துள்ளது. இதனை பெற்ற பெண் கண்ணீர் சிந்தினார். கிளெய்ரி ஹட்சன் என்ற 25-வயது பெண் ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில் உள்ள மக்ஸ் கிரப் சாக் ( Mac’s Grub Shak என்ற உணவகத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த தம்பதியர் ஒருவர் பியர், ஒரு பேர்கர் மற்றும் ஹொட் டோக்ஸ் என்பனவற்றை ஆர்டர் செய்தனர். இவற்றிற்கான கட்டணம் டொலர்கள் 28.12 வந்துள்ளது. தம்பதியர் கட்டணத்துடன் மேலதிகமாக 36-டொலர்களையும் அதாவது 130-சதவிகிதம் ரிப்சையும் விட்டுச்சென்றது மட்டுமன்றி பணத்தை விட மிக முக்கியமான ஒரு …

    • 1 reply
    • 381 views
  23. டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்…

  24. இன்று அதிகாலை 3மணியளவில் கோத்தபாயவும் அவருடைய சகாக்கள் பதினைந்து பேரும் காலியில் இருந்து மாலைதீவை நோக்கி அதிவேகபடகில் தப்ப ஆயத்தமான நிலையில் இலங்கை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் இம் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. காலிக்கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேக படகு ஒன்று நடமாடியதை அவதானித்த பொலிசார் அந்த படகை அண்மித்த சமயம் படகு வேகமாக கடலுக்குள் சென்றுள்ளது. இதை பொலிசார் கடற்படைக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடற்படையின் உதவியால் அந்தப்படகினை இடைமறித்து சோதனையிட்டவேளை அதற்குள் உணவுப்பொதிகள் ,மதுபானங்கள் மற்றும் உடைகள் இருந்ததாகவும் அந் நபரின் தொலைபேசியை எடுத்து பார்த்தபோது கோத்தபாயவுடன் நிமிடங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்துள…

    • 3 replies
    • 681 views
  25. திருட்டி வி.சி.டி. புழக்கத்தை ஒழிக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ‘சண்முகா’ திரையரங்க நிர்வாகம் புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி ஒரு முறை ரூ.1000 கொடுத்து டிக்கெட் வாங்கினால், அந்த ஒரு வருடம் முழுவதும் அத்தியேட்டரில் ரிலீஸாகும் ஒவ்வொரு படங்களையும் ஒரு முறை பார்க்கலாம்.பார்க்க விரும்பவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறொருவருக்குக் கொடுத்து அந்தப் படத்தை ஒருமுறை பார்க்க சொல்லலாம். இந்தப் புதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.இதன்மூலம் இதுவரை 2000 த்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.மேலும் 10,000 வரை டிக்கெட்டுகள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் தொகையிலிருந்து புதிய படங்களை வாங்கி திரையிடவும்,இந்த முன்பதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.