செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf
-
- 1 reply
- 724 views
-
-
அமெரிக்கா- ஐந்து வருடங்களின் பின்னர் 5-வயது சிறுவன் பிட்சாவை விரும்பி சாப்பிட தனது மூத்தசகோதரர்களுடன் விளையாட கூடிய நிலைமைக்கு திரும்பியுள்ளான். கதைக்கும் போது அவனது சொற்கள் தடிப்பானதாகவும் இயந்திரமயமானதாகவும் தெரிகின்றது. ஒரு சிறிய துண்டு பிட்சா சாப்பிடுவதும் கூட ஒரு சவாலாக உள்ளது. அரிசோனாவைச் சேர்ந்து எமெற் றோச் என்ற இச்சிறுவன் 2010-ல் ஒரு பொத்தான் பட்டரியை—கனடிய 5சத நாணயம் அளவிலான டிவிடி ரிமோட் கொன்ட்ரோல்-விழுங்கியுள்ளான். இந்த சம்பவம் முதலில் கவனிக்கப்படவில்லை. இவனின் தாயாரும் அவதானிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் சிறுவன் இருமும் போது இரத்தவாந்தி எடுத்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எக்ஸ்-ரே எடுத்த போது பொத்தான் பட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுகதிர்வீச்சிய…
-
- 0 replies
- 339 views
-
-
7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது. இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார். இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலை…
-
- 0 replies
- 369 views
-
-
13 January | வினோதம் | adatamil செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்! மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஆண்டு புதிதாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என சீன அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது. தற்போது 2–வது குழந்தை பெற 10 லட்சம் தம்பதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு செம்மறி ஆடு ஆண்டே காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் வருகி…
-
- 3 replies
- 725 views
-
-
அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை. அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் ப…
-
- 4 replies
- 714 views
-
-
நித்யானந்தா ஆண்மை கடந்த 2012-ம் ஆண்டு நித் யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார், ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப் டம்பர் 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்…
-
- 2 replies
- 672 views
-
-
கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார். கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே-அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார். சரமா்ரியாக வெட்டப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி தங்கராஜை தாக்கிய…
-
- 9 replies
- 1.1k views
-
-
யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…
-
- 0 replies
- 398 views
-
-
Posted Date : 10:35 (13/01/2015)Last updated : 11:01 (13/01/2015) கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது. இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தை…
-
- 2 replies
- 629 views
-
-
தூங்கினால் படித்தது நினைவில் நிற்கும் --ஆராய்ச்சி முடிவுவாழ்க்கையின் மிக இளம் பிராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகிறது. 12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தூ…
-
- 0 replies
- 396 views
-
-
பணத்தை காட்டி, கோமாவில் உள்ளவரை... எழுப்பிய மருத்துவர்கள். பெய்ஜிங்: கோமாவில் இருந்த நபரை சீன மருத்துவர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கிறார்கள். பணம் என்ற தாளிற்கு கிடைக்கும் மதிப்பு, பெரும்பாலான இடங்களில் மக்களுக்குக் கூட கிடைப்பதில்லை. அதனால் தான் நம் முன்னோர்கள் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனச் சொல்லி வைத்தார்கள் போலும். பணத்தைக் காட்டினால் பிணமே வாயைத் திறக்கும் என்றால் நோயாளிகள் மட்டும் விதிவிலக்கா. சீனாவில் கோமாவில் போராடிய நோயாளி ஒருவரை பணத்தின் உதவியால் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர். அதிக பணம் செலவழித்து பிழைக்க வைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. வெறும் 100 யென் நோட்டால் கோமாவிலிரு…
-
- 4 replies
- 886 views
-
-
துபாய் நகை வியாபாரிகள் தயாரித்த ஐந்தரை கிலோ மீட்டர் நீளமும், 256 கிலோ எடையும் கொண்ட தங்கச் சங்கிலி புதிய உலக சாதனை படைத்துள்ளது. துபாயில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை அந்நாட்டின் 20-வது ஷாப்பிங் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் நூற்றுக்கணக்கான தங்க நகை வியாபாரிகள் ஸ்டால்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர். இந்த திருவிழாவோடு பெரும் விழாவாக மேலும் ஒரு சாதனையை படைக்க துபாய் தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 22 கேரட் தங்கத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை கையினால் தயாரிக்கும் பணியில் ஏராளமான பொற்கொல்லர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் 1999-ம் ஆண்டில் 4.382 கிலோ…
-
- 7 replies
- 993 views
-
-
திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…
-
- 0 replies
- 463 views
-
-
அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 1…
-
- 1 reply
- 571 views
-
-
யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…
-
- 1 reply
- 624 views
-
-
சீனாவில் சான்ஸி மாகாணத்தில் நடந்த செக்ஸ் ஊழல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதகமாக செய்து முடிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு பரிசாக பள்ளி மாணவிகளை தொழில் அதிபர்கள் விருந்தாக்கி உள்ளது தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. இது குறித்து தொழில் அதிபர்கள் மீதும், அரசு உயர் அதிகாரிகள் மீதும், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 11–ம் வகுப்பு மாணவிகள் மூலமாக 10–ம் வகுப்பு மாணவிகளை அழைத்து வரச்செய்து, அரசு அதிகாரிகளுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள செய்துள்ளனர். இந்த தொழில் அதிபர்கள் அதை மறுக்கும் மாணவிகளை அடித்தும் துன்புறுத்தியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10–ம் வகுப்பு மாணவிகளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்கா…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…
-
- 3 replies
- 823 views
-
-
கனடா-ஒரு செட் இறந்த பற்றறிகள் கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கிறிஸ்ரின் ஹவ்லி அவரது மகனிற்கு ஒரு பொம்மை வாங்கியுள்ளார். ஆனால் அதன் பற்றறிகள் பழுதடைந்து விட்டன. அதனால் அவர் அருகில் உள்ள வீட்டுப்பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்று பற்றறிகள் வாங்க சென்றார். அவரிடம் கடை சொந்காரர் சுரண்டும் ரிக்கெட் ஒன்றை கிறிஸ்மஸ் ஈவ் தினமான இன்று வாங்க போகின்றீர்களா என கேட்டதுடன் இவை அதிஷ்டமானதென தான் கேள்விப் பட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்ரினும் சரியென்று 20-டொலர்களிற்கு 200-மில்லியன் டொலர்கள் பரிசிற்கான வியக்கத்தகு சுரண்டல் சீட்டை வாங்கினார். வீட்டிற்கு சென்ற அவர் ரிக்கெட்டை சுரண்ட அவர் 2-மில்லியன் ட…
-
- 0 replies
- 794 views
-
-
இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது. குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராம…
-
- 0 replies
- 907 views
-
-
செல்ஃபி எடுப்பதற்கான தனி வகுப்புகள் லண்டனில் உள்ள சிட்டி லிட் கல்லூரி விரைவில் ஆரம்பிக்க உள்ளது. புதிதாகத் தொடங்கப்போகும் வகுப்புகள் மூலம், மாணவர்களை செல்ஃபி எடுக்க முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வகுப்புகள் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது. உலகிலேயே முதன் முதலில் செல்ஃபி எடுக்க பயிற்சி அளிக்கும் முதல் கல்லூரி இதுவாகும். The art of photographic self-portraiture என்ற இதை படிக்க சுமார் ரூ. 8400 பயிச்சிக் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வளர்ந்து வரும் புகைப்பட கலைஞர்களுக்கு, செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கத் தோதான இடம், சூழ்நிலை, வெளிச்சம், சுற்றுப்புறம் போன்ற விஷயங்களும், அவர்களின் வேலை தொடர்பான கு…
-
- 0 replies
- 363 views
-
-
சர்வதேச அளவில் GFK என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர். இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தி…
-
- 0 replies
- 783 views
-
-
கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெண் கரடி ஒன்று புகுந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெருப்பை காட்டி கூச்சலிட்டு கரடியை விரட்டினர். இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் வந்த கரடி மக்களை தாக்கத் தொடங்கியது, இதில் நபர் ஒருவர் பலியானார். எனவே வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர், அங்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்டனர், அவரையும் கரடி குதறி கொன்றுவிட்டது. செல்போனில் படமெடுக்கப்பட்ட இக்…
-
- 0 replies
- 548 views
-
-
திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…
-
- 0 replies
- 625 views
-
-
தென்னஞ்சோலைகளிற்கு உள்ளேயே வாழும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து உண்ணுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில், இயற்கை சம்பந்தமான ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்து வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது போலவே இன்னொரு நண்டு மனிதனின் உயிர்காக்க இன்று வரை உதவி வருகிறது. கனடா போன்ற நாடுகளில் பெரும் பணமீட்டும் நடவடிக்கையாக snow crab எனப்படும் ஒரு நண்டின் வியாபாரமே மீன்பிடித்துறையில் திகழ்கிறது. அதே போன்று குதிரைலாட (horse shoe) நண்டின் இரத்தம் இன்றுவரை மனிதனின் காயங்களிற்கான, சத்திரசிகிச்சைக்கான தொற்றுநீக்கியாக பாவிக்கப்பட்டு வருவதோடு, ஒரு கலன் நண்டு ரத்தம் 60 ஆயிரம் அமெரிக்க டொலருக…
-
- 0 replies
- 558 views
-
-
கனடா- ஒன்ராறியோவில் பார்ரி என்ற இடத்தில் மதுபான அருந்தகம் ஒன்றில் வாடிக்கையாளர் பணிப்பெண் ஒருவருக்கு விட்டுச்சென்ற 99,000.00 டொலர்கள் அவருக்கு கிடைக்க மாட்டாதென பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமை இரவு அருந்தகம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் கட்டணம் செலுத்தக் கஸ்டப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மனிதன் சான்விச் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான 7-டொலர்களை செலுத்தி விட்டு பணிப்பெண்ணிற்காக 98,931.87-டொலர்களை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் போதையில் சட்டத்தை மீறியதாக கண்டுபிடிக்கப் பட்டது. துரதிஸ்டவசமாக மனிதனின் கடன் அட்டை மறுக்கப்பட்டதால் பணிப்பெண்ணிற்கு அன்பளிப்பு கிடைக்கவில்லை. - See more at: http://www.canadamirror.com/canada/36346.h…
-
- 0 replies
- 770 views
-