Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நீச்ச்சலுடையில் இளம்பெண்களுக்கு பாதுகாவலர் பயிற்சி. சீனாவில் எதிர்ப்பு வலுக்கிறது. சீனாவில் உள்ள தியாஞ்சியோ சிறப்பு பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு தனியார் நிறுவனம் பெண் பாதுகாவலர்களை நியமித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி மாணவிகள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. http://www.youtube.com/watch?v=30yiG9fkR8A&feature=player_embedded தற்போது, இந்த பெண்களுக்கு நீச்சல் உடையில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கிளுகிளுப்பான நீச்சல் உடையில் அவர்கள் எடுக்கும் பயிற்சி போட்டோக்கள் இண்டர்நெட்டில் உலா வருகின்றன. இது சீனாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத…

  2. நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள. வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை. …

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ப்ரியங்கா ஜக்தப் பிபிசி மராத்திக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் *எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பத்ரி - செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை. குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேர…

  4. பழுதடைந்த அப்பிள் ஐபாட்டினை காட்டி இழப்பீட்டு காசு வாங்கினேன்! Dec 30, 2025 - 02:55 PM - 0 நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை வாங்கியேள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி வாங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (30) காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது டித்வா புயலால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதற்கான நட்ட ஈடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்…

  5. பிரிட்டனில் வருங்கால கணவரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண், அதிலிருந்து போராடி மீண்டு வந்தது தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.வருங்கால கணவரால் உயிருடன் புதைக்கப்பட்டு போராடி மீண்ட பெண்பிரிட்டனின் வேல்ஸ் நாட்டின் கோவர் தீபகற்பத்தில் உள்ள காஸ்வெல் கடற்கரை பகுதியில் ஸ்டேசி ஜில்லியம் (34) என்ற பெண் தனது வருங்கால கணவர் கீத் ஹக்சுடன் நடந்து சென்றபோது அவர்களுக்கிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண்ணை ஹக்ஸ் அடித்து கழுத்தை நெரித்துள்ளார். இதனால், அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இறந்துவிட்டதாக கருதிய ஹக்ஸ், ஆழமில்லாத புதைக்குழியில் தள்ளி, புதர்ச்செடிகளை கொண்டு முடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் ச…

  6. கிழக்கில் மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அதிலும் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 13வயது முதல் 17வயதினர் தான் போதிய விழிப்புனர்வு மற்றும் பெற்றோரின் கண்கானிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01…

  7. பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது. 100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள…

  8. 2017ல் பூனையாகிய டொனால்ட் டிரம்ப் 2018ல் நாயாக வடிவமைக்கப்பட்டு உள்ளார்.. சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் உள்ள வியாபார கடைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது டிரம்ப் போன்று இடது கை விரலை மேலே தூக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நாய் புத்தாண்டு வருகிறது. அதை வரவேற்கும் வகையில் டிரம்ப் உருவத்தில் நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் கண் இமைகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் சிவப்பு …

  9. 28 OCT, 2023 | 09:46 AM யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (27) முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார…

  10. கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது: மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 …

  11. திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிலிப்பைன்ஸ் கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் டேவோ நகரில் கிழக்குப் பகுதியில் இருந்து வாத…

  12. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…

  13. மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…

  14. இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி! வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிரு…

  15. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை இயக்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃபரான்சிஸ்கோ வரை சென்ற இந்த நீண்ட தூர விமான சேவையின் பயண நேரம் 17 மணி நேரம், அதாவது சுமார் 14500 கி.மீ. இந்த சாதனைக்காக விரைவில் கின்னஸுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது ஏர் இந்தியா. இந்த விமானத்தில் காக்பிட்டில் இருக்கும் விமான ஓட்டுநர்கள் ,கேபின் ஊழியர்கள், மருத்துவர், தரையிலிருந்து விமானத்தை வழி நடத்தும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் மற்றும் இதர ஊழியர்கள் அனைவருமே பெண்கள். இந்த விமானத்தை கமாண்ட் செய்வது க்‌ஷம்தா பானர்ஜி , சுபாங்கி சிங் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபீஸர்கள் ரம்யா கீர்த்தி குப்தா மற்றும் அம்ரித் நம்தாரி. …

  16. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார். இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன. லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gold-car-saudi-arabia-rich-prince-turki-bin-abdullah-…

  17. உலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111 பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆகும். பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார். ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார். 1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தா…

  18. ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது. மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெரிவித்தார். ""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப…

  19. எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் பூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட்டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...நாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்ச…

  20. இந்தியாவிலேயே நேர்மை தவறாத மக்கள் கோயம்புத்தூர் காரர்களா? உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன?

    • 0 replies
    • 381 views
  21. உயிரிழந்த நாய்க்கு மரணச்சடங்கு : களனியில் சம்பவம் களனிப்பகுதியில் உயிரிழந்த நாயொன்றுக்கு மரணச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் மரணச் சடங்கு போன்று, குறித்த நாய்க்கும் மரணச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. இளைஞர் பாராளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரின் செல்லப்பிராணியான மிஷெல் என்ற நாய்க்கே இவ்வாறு மரணச் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நிரம்பிய மிஷெல் என்ற நாய் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் மரணச் சடங்கு உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளமை குறி…

  22. செக்கோஸ்லோவேக்கியா நாட்டிற்கான பாலஸ்தீன தூதராக ஜமீல் அல் ஜமால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தூதரக அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=100487&category=WorldNews&language=tamil

  23. ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்சுக்கும் காதல்! – பரபரப்பைப் கிளப்பியுள்ள பிரெஞ்ச் பத்திரிகை. [Tuesday, 2014-02-11 18:11:50] அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிரபல பொப் பாடகி பியான்சுக்கும் இடையே காதல் இருப்பதாக பிரெஞ்ச் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் ஆபத்தான காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.அதிபர் ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்ஸ்சுக்கும் இடையே காதல் இருப்பதாக அமெரிக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.