செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பாராமதி, மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில், 66 வயதுப் பெண் ஒருவர் சேலையுடன், மராத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். அந்தப் பாட்டியின் பெயர் லதா பகவான் கரே. இவர் பாராமதியில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். மூத்த குடிமக்களுக்கான 3 கிலோமீட்டர் மராத்தான் பிரிவில் கலந்து கொண்டு ஓடினார். அதை விட முக்கியமானது இவர் வெற்றி பெற்றதுதான். 66 வயதில் பலரும் வேகமாக நடக்கவே பயப்படுவார்கள். பொடி நடையாக வாக்கிங் மட்டுமே போவார்கள். ஆனால் இந்தப் பாட்டியோ மின்னல் வேகத்தில் புடவையுடன் ஓடியதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர். இவர் பிம்பிளி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட இளைஞர்களுக்குப் போட்டியைக் கொடுக்கும் வகையில்…
-
- 2 replies
- 541 views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சாமர்த்தியமாக திருடிய நாய் ஒன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் கைது செய்யப் பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ளது கிளிண்டன் சூப்பர் மார்க்கெட். சமீபகாலமாக அங்கு சில நாய் உணவுப் பொருட்கள் மாயமாகி வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்துப் பார்த்துள்ளனர். கேமராவில் பதிவாகியிருந்தக் காட்சிகளைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூப்பர் மார்க்கெட்டு வாசலில் நிற்கும் வளர்ப்பு நாய் ஒன்று கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்…
-
- 0 replies
- 1k views
-
-
பயந்த பெண் நடுவர் ஓடினார்...! https://www.facebook.com/photo.php?v=251499421679095
-
- 1 reply
- 604 views
-
-
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான். இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல் உலகிலுள்ள நாடுகளின் பெயர்களை கற்றுக்கொண்டான். பின்பு உடலில் எல்லா பாகங்களும் அவற்றின் வேலைபாடுகளையும் மிகச் சரியாக கூற தொடங்கினான். இதனை தொடர்ந்து எரிமலையையும், எரியும் நட்சத்திரங்களை பற்றிய தகவல்களையும் நன்கு விளக்குகிறான் மற்றும் கணிதத்தில் வெகு விரைவாக செயல்படுகிறான். இச்சிறுவன் தன் 3 வயதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளியில் சிறந்த மாணவன் திகழ்வதுடன், 4 வயதில் IQ தேர்வில் 160 மதிபெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளான். இதுகுறித்து இவன் தாயார் கூறுகைய…
-
- 2 replies
- 900 views
-
-
லண்டனில் வசித்துவரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் எஃகு இரும்புத் தொழிலில் முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் வருடம் தனது மகள் வனிஷாவிற்கும், இந்திய கோடீஸ்வரர் அமித் பாட்டியாவிற்கும் நடத்திய திருமணத்தில் 46 மில்லியன் யூரோக்கள் செலவழித்தார். உலகமே அந்தத் திருமணத்தை வியந்து பாராட்டியது. இப்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் (26) திருமணத்தை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில் இந்திய மதிப்பில் 500 கோடி செலவழித்து நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூன்று நாள் திருமண கோலாகலங்களில் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்தது. திருமண விருந்து நிகழ்ச்சியை மிச்சலின் நட்சத்திர சமையல் கலைஞர் செர்கி அரோலா பொறுப்பே…
-
- 0 replies
- 408 views
-
-
புத்திசாலி பூனை.! https://www.facebook.com/photo.php?v=252384521590585
-
- 1 reply
- 562 views
-
-
அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனது 13 வயது மகளை பந்தயம் வைத்துத் தோற்றுப்போனதால் அச்சிறுமியை திருமணம் செய்துகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ள சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, அக்கிராமத்தில் வசிக்கும் சுகுமார் என்பவர் தனது அயல்வீட்டுக்காரருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகையில் இழந்தவற்றை மீளப் பெற வேண்டும் என எண்ணி 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் தன் மகளை பந்தயம் வைத்துள்ளார். அத்துடன் தன் மகளை வயது கூடிய அந்த வீட்டுக…
-
- 1 reply
- 499 views
-
-
நாய்... வாலை, வெட்டிய 4 பேர் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது. சென்னை: வாலை வெட்டினால் நாய் வளரும் என்ற நம்பிக்கையில் நாயின் வாலை வெட்டிய 4 பேர் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே கஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சோமு, ஹரி, அசோக் குமார் மற்றும் பேச்சிமுத்து என்ற 4 பேர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த நாய் சரியாக வளரவில்லையாம். இது குறித்து தங்களது கவலையை நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டுள்ளனர் அவர்கள். அதனைத் தொடர்ந்து, நாய் வாலை வெட்டி விட்டால் நாய் நன்றாக வளரும் எ…
-
- 7 replies
- 912 views
-
-
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…
-
- 0 replies
- 478 views
-
-
முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/
-
- 4 replies
- 1.1k views
-
-
தனது காதலியுடன் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்காக ஆடை வாங்குவதற்கு ஆடையகமொன்றுக்கு சென்ற காதலர் ஒருவர், காதலி பிறிதொரு ஆடைக் கடைக்கு செல்வதற்கு அடம் பிடித்ததால் சினமடைந்து ஆடையகம் அமைந்திருந்த 7 மாடிக் கட்டிடத் தொகுதியில் இருந்து குதித்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு சீனாவிலுள்ள ஜியாங்ஸு மாகாணத்தைச் சேர்ந்தத வோ ஹஸியவோ (38 வயது) என்ற காதலனே சம்பவ தினம் ஸுஸொயு நகரிலுள்ள ஆடையகத்துக்கு தனது காதலியுடன் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த ஆடையகத்தில் 5 மணித்தியாலங்களை காதலி செலவிட்டு ஆடைகளை கொள்வனவு செய்ததையடுத்து, தவோ ஹஸியவோ வீடு திரும்புவதற்கு காதலியை கோரியுள்ளார். இந்நிலைய…
-
- 19 replies
- 1.1k views
-
-
ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த மேற்படி ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் இன்ஜின் சாரதியும் அவரது உதவியாளரும் உடனட…
-
- 11 replies
- 833 views
-
-
மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது. சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும். இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம். ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி …
-
- 14 replies
- 900 views
-
-
அண்மையில் பிரிட்டனை தாக்கிய கடற்பெருக்கம் மற்றும் சூறாவளி காரணமாக தாய்மாரைப் பிரிய நேரிட்டு இறந்தவர்கள் போக மிஞ்சியுள்ள கடற்சிங்கக் குட்டிகளின் பரிதவிப்பு.. இதயத்தின் நெகிழ்வுப் பக்கத்தை மீண்டும்.. கிளறிவிடுகிறது. இப்போது இந்தக் குட்டிகள் பராமரிப்பு நிலையத்தை அடைந்திருந்தாலும் தாயை தேடும் அவலம்.. தொடர்கிறது. http://www.bbc.co.uk/news/uk-25313572
-
- 0 replies
- 526 views
-
-
4,500 வருடங்கள் பழைமையான நியோலித்திக் யுக நகரொன்றை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நகர் சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அனுஹி மாகாணத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரபெஷொய்டல் நகர சுவர், நன்சென்ங்ஷி இடிபாடுகள் அவற்றுடன் சேர்த்து சில வீடுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக வுஹான் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2000 வருடங்களுக்கு முற்பட்ட மான் தலைகள், கொம்புகள், ஆமை ஓடுகள், கோதுமை மற்றும் நெல் விதைகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து வுஹான் பல்கலைக்கழக பேராசிரியல் ஹி ஷியோலின் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு வரலாற்று, சமூக ம…
-
- 0 replies
- 514 views
-
-
India Could Be Kicked Out Of Olympics For Keeping Corruption-Tainted Officials, Says IOC President By STEPHEN WILSON 12/07/13 10:04 AM ET EST 15 0 0 GET SPORTS NEWSLETTERS: SUBSCRIBE FOLLOW: International Olympic Committee, Olympics, India Ioc, India Olympics, Indian Kicked Out Of Olympics, Olympics Corruption, Sports Fails, Sports News LAUSANNE, Switzerland (AP) — India faces the ultimate sanction of expulsion from the Olympics unless it keeps corruption-tainted officials out of its ranks, IOC President Thomas Bach said in an interview with The Associated Press. Bach said the IOC is prepared to withdraw recognition of the Indian Olym…
-
- 1 reply
- 1.2k views
-
-
நியூயார்க்: அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டன. இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. http://tamil.oneindia.in/news/international/upset-hindus-urge-withdrawal-lord-shiva-beer-188989.html காளிமா முன்னதாக அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்த பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர…
-
- 1 reply
- 653 views
-
-
வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்தார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கணவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வவுனியாவில் இருந்து வந்து தங்கியிருந்த யுவதி ஒருவர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்…
-
- 1 reply
- 688 views
-
-
மன அழுத்தத்தை கண்டுபிடித்து எச்சரிக்கக்கூடிய மார்புக்கச்சையொன்றை அமெரிக்க வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பல்தேசிய தொழில்நுட்பக் கம்பனியான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இருதய மற்றும் தோல் செயற்பாடுகளை கண்காணிக்கும் அகற்றக்கூடிய உணர்கருவிகளைக் கொண்ட இந்த மார்புக்கச்சை பயன்பாட்டாளரது மன நிலையில் ஏற்படும் மாற்றங்களை சுட்டிக் காட்டுகிறது. மன அழுத்தத்துடன் தொடர்புடைய அளவுக்கதிகமாக உண்ணும் பழக்கத்தை குணப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த அணியக்கூடிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்கருவிகள் இருதயத்துக்கு நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்து…
-
- 0 replies
- 473 views
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அவரது புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலாடையின்றிய (டொப்லெஸ்) ஆர்ப்பாட்டங்களுக்கு பெயர் போன் பிமென் (குநஅநn) பெண்ணியவாத குழுவைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு ஆர்ர்ப்பாட்டம் செய்துள்ளனார். வழக்கமாக மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் இக்குழுவினர் இம்முறை வி;ததியாசமாக கீழாழையின்றியும் (பொட்டம்லெஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள யுக்ரைன் நாட்டு தூதுவராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. யனுகோவிச் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபாரம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தினை நிராகரித்திருந்தார். …
-
- 7 replies
- 578 views
-
-
2014 புது வருட பட்டாசு வான வேடிக்கை: துபை உலக சாதனை? இந்த புது வருடத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதில், துபை கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. துபை, பாம்(Palm Islands) தீவுகளின் மீதும், உலகத்(World Islands) தீவுகளின் மீதும் தொடர்ந்து கொளுத்தப்படபோகும் மிகப் பிரமாண்டமான பட்டாசு வான வேடிக்கைகள், சென்ற வருடம் குவைத் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடிய வான வேடிக்கை திருவிழாவை விட அதிக நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வானில் வெடிக்கப் போகிறது. குவைத் தனது வான வேடிக்கையில், 77,282 பட்டாசு வகைகளை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மணி நான்கு நிமிடம் வரை தொடர்ச்சியாக வெடித்து ரசிகர்களை மகிழ்வித்து கின்னஸ் சாதனை நிகழ்த்திக் காட்டியது.…
-
- 3 replies
- 668 views
-
-
'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் வாகன விபத்துக்குள்ளாகி திடீர் மரணமடைந்தமையால் அவரின் காதலியான ஜெஸ்மின் இதயம் நொருங்கிப்போனவராக காணப்படுகிறார் என ஜெஸ்மினின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை (இலங்கை நேரப்படி ஞாயிறு அதிகாலை) ஆடம்பர போர்ஸ்ச் காரில் பயணம் செய்த நடிகர் போல் வோகரும் காரை செலுத்திய அவரின் நண்பர் ரோஜர் ரொடாஸும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகியமை குறிப்பிடத்தக்கது. போல் வோகருக்கு 40 வயது. ஆனால் அவரின் காதலி ஜெஸ்;மின் பில்சார்ட் கொஸ்னலுக்கு 23 வயதுத்தான் ஆகிறது. இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தபோது, 16 வயது சிறுமியாக…
-
- 0 replies
- 425 views
-
-
2009 ஆம் ஆண்டு தனது 15 வயதிலேயே டைவிங் போட்டியில் உலக சம்பியன் பட்டம் வென்றவர் டொம் டேலி. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெண்கலப்பதக்கத்கத்தை வென்றார். தற்போது 19 வயதான டொம் டேலி, தான் ஆண் ஒருவரை காதலிப்பதை யூரியூப் மூலம் தனது தனது ரசிகர்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனாலும் யுவதிகள் மீதும் தான் இன்னும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே, அமெரிக்க டைவிங் (கரணமடித்தல்) வீராங்கனையான காஸிடி குக் என்பவரை காதலித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் சில மாதங்காக ஓர் ஆணை காதலிப்பதாகவும் முன்னரைவிட மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறியுள்ளார். டொம் டேலிக்கு அவரின் தாயார் ஆதரவாக உள்ளாராம். ஆனால், அவரின் குடும்பத்தில் ஏனையோ…
-
- 0 replies
- 333 views
-
-
சீனாவைச் சேர்ந்த பெண்; ஒருவர் தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட இளமையாக தோற்றமளிப்பதால் இப்பெண் மிகவும் பொறாமைக்கொண்டிருந்தாராம். இவர்கள் இருவரும் சீனாவில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டபோது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 42 லட்சம் பெறுமதியான காரின் மேற்பரப்பை திடீரென உராய்ந்து சேதப்படுத்தத் தொடங்கினார். காரை சேதப்படுத்திவிட்டால் அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தனது கணவர் நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதே இப்பெண்ணின் நோக்கம். 'திருமணத்தின்பின் நான் வயதான தோற்றத்துக்கு மாறிக்கொண…
-
- 0 replies
- 280 views
-
-
டொரண்டோ: கனடாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக இணைய தளத்தில் ஒளிபரப்பினார். இதனை 200க்கும் மேற்பட்டோர் பார்த்து 'ரசித்ததாகவும்' கூறப்படுகிறது. கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்' செய்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் வோட்கா மதுவை குடி…
-
- 2 replies
- 803 views
-