செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
நீர்கொழும்பில் களவாக... தேங்காய் பறித்தவர் மீது, துப்பாக்கிப் பிரயோகம்! நபர் மரணம். நீர்கொழும்பு, கொச்சிக்கடை – ஏத்கால – கேரம் தோட்டப் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் பறித்த நபரொருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 203 views
-
-
தேளின் விஷம் ஒரு லிட்டர் ரூ.80 கோடி - இதை வாங்கி என்ன செய்கிறார்கள் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேள் விஷமுள்ள உயிரிகள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் தேளுக்கு அதில் தவிர்க்க முடியாத இடமுண்டு என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தேளின் விஷம் கோடிகளில் விலைபோகும் விற்பனைப் பொருளாக இருக்கிறது என்பது தெரியுமா? துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது. தேள்களை பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்த பிறகு, சிறு துளி நஞ்சை அவை வெளியிடும் வரை ஆய்வக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். பிறகு, …
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
சரக்கு வாங்க காத்திருக்க சொன்னதால், 4 பேரின் கன்னத்தைக் கடித்த வாலிபர்! மதுரையில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க அதிக நேரம் ஆன காரணத்தால் வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களைப் பிடித்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே பயனாளிகள் சரக்கு வாங்க காத்திருந்தனர். நச்சரித்த குடிமகன்கள்: காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார். ஒரே கல்ப்தான்: இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேய…
-
- 0 replies
- 303 views
-
-
டெல்லி: மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி. இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான். அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 201…
-
- 0 replies
- 486 views
-
-
இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தயாரித்துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு (?) ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ளதாகவும் இந்த சாஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இணையத்திலும் இந்த மாதம் 9 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் …
-
- 0 replies
- 315 views
-
-
பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்! காதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?காதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு? அதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா? நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்ற…
-
- 0 replies
- 789 views
-
-
31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையைக் கடத்தியவர் கைது! 31 வருடங்களுக்கு முன்னர் குழந்தையொன்றைக் கடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், பொலிஸ் படையினர் மீது பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது காவல் துறை மீது நம்பிக்கை கொண்டு தங்கள் குழந்தைகளை கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்வரென கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேர்மின் என்ற குழந்தையைக் கடத்திய நபர் அலன் மேன், கனடாவின் வேர்நோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடா, கானா நாடுகளின் பிரஜையாவார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் ஆண்டு 21 மாதக்குழந்தையை ரொறன்ர…
-
- 0 replies
- 267 views
-
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக தேன் சேகரித்து விற்பனை செய்து வறுமையில் இருந்துள்ளனர் இந்த குடும்பத்தினர். இந்நிலையில் மூன்று இளைஞர்களும் திடீரென்று வசதி வாய்ப்புகளுடன் சுற்ற தொடங்கினர். இதனால் கிராம மக்க…
-
- 0 replies
- 461 views
-
-
மும்பை, மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு கடலில் விழுந்த கல்லூரி மாணவியை காப்பாற்ற முயன்ற வாலிபரையும் அலை இழுத்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் பேண்ட்ஸ்டாண்ட் என்ற பகுதியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க பின்னால் சென்ற கோவந்தி என்ற மாணவி கால் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்டு மாணவியை காப்பாற்ற ரமேஷ் என்பவர் கடலில் குதித்துள்ளார்.அவரையும் கடல் அலை இழுத்து சென்றது, கடலில் விழுந்த இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dailythanthi.com/News/India/2016/01/09162713/Mumbai…
-
- 0 replies
- 157 views
-
-
பேரின வாதத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது அந்த இனத்தின் அடையாளங்களை அழிப்பதைப் பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. வரலாற்று உண்மைகள், தடையங்களை அழித்தும் அவற்றைப் பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் இனச்சுத்திகரிப்பின் அடிப்படைகளாக அமைகின்றன. அழிக்கப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்தல் என்பது பேரினவாதத்திற்கு எதிரான அரசியலின் முக்கிய கூறாக அமைகிறது. ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை அழித்து அதனை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்ச்சிப் போக்கிற்கு எமது கண்முன்னே காணக்கிடைக்கும் உதாரணம் திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளாயார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது.. கடந…
-
- 0 replies
- 506 views
-
-
Published:Today at 3 AMUpdated:Today at 3 AM பிரியங்கா - நிகில் டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர். அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்ப…
-
- 0 replies
- 94 views
-
-
ஆலங்குடி: பசுவுக்கு நாளை, வளைகாப்பு நடத்துவதாக அச்சிட்டப்பட்ட அழைப்பிதழால், புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர், சன்னாசி. இவர், ஸ்ரீகோமாதா எனும் செல்லப்பொண்ணு என்ற பெயருடைய தன் பசுவுக்கு, நாளை, மழை மாரியம்மன் கோவிலில், வளைகாப்பு நடத்த இருப்பதாகவும், அதற்கு அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என, அழைப்பிதழ் தயாரித்துள்ளார்.மொத்தம், 500 பத்திரிக்கைகள் அச்சிட்டு, தன் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வி.ஐ.பி.,க்களுக்கும் வழங்கியிருக்கிறார். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும், அறந்தாங்கி யூனியன் தலைவர் மெய்யநாதன் கூறியதாவது:வளைகாப்பு நடத்த இருக்கும் சன்னாசி மீது, கடும் கோபமாகத்தான் இருந்தேன். அழைப்பிதழைப்…
-
- 0 replies
- 560 views
-
-
சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…
-
- 0 replies
- 275 views
-
-
சிகரெட் குப்பைகளை தடுக்க லண்டன் மாநகராட்சியின் அட்டகாச ஐடியா! சிகரெட் குடித்துவிட்டு கண்டபடி ரோட்டில் வீசுவதை தடுக்க, லண்டன் மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எந்த நடவடிக்கைக்கும் புகைப்பவர்கள் மசியவில்லை. ரோட்டில் சிகரெட் துண்டுகள் வீசப்படுவதை தடுக்க முடியவில்லை. லண்டன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கால்பந்து ரசிகர்கள். இதனால் கால்பந்தை மையமாக வைத்து ஏதாவது செய்தால்தான் சிகரெட் குப்பைகளை தடுக்க முடியும் என்று ஆலோசித்தது மாநகராட்சி நிர்வாகம். அந்த கண நேரத்தில் உதித்ததுதான் இந்த ஐடியா. அதாவது லண்டன் நகரத் தெருக்களில், முக்கியமாக பாதாள ரயில் நிலையங்களின் அருகில், சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோவா? மெஸ்சியா? என்று எழுதி, இரு குப்பை டப்பாக்களை வைத…
-
- 0 replies
- 312 views
-
-
வீதியில் சென்ற வாகனங்களுக்கு சில யார்கள் உயரத்தில் விமானம் பறந்து சென்றதால் பரபரப்பு கொஸ்தாரிக்காவில் பயணிகள் விமானமொன்று வீதியொன்றில் சென்ற வாகனங்களுக்கு சில யார் கள் உயரத்தில் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினின் மட்றித் நகரிலிருந்து கொஸ்தா ரிக்காவிலுள்ள சான் ஜோஸ் நகருக்கு பயணித்த எயார்பஸ் 340 விமானமே இவ்வாறு பறந்துள்ளது. இந்த விமானம் சான் ஜோஸ் நகரிலுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் கடும் காற்று காரணமாக அந்த விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/10/வீதியில்-சென்ற-…
-
- 0 replies
- 364 views
-
-
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. நடந்தது என்ன? யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது. இந்த மீன், அதன்வேகம், வலிமை ம…
-
- 0 replies
- 132 views
-
-
விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…
-
- 0 replies
- 293 views
-
-
மதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின் பெரியமேட்டில் கைது சென்னை மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரவாயலில் மகன், மகளுடன் தனித்து வசித்த வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு தனது மகன், மகளைக் கொன்று தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் சென்னையில் சிக்கினார். சென்னை மதுரவாயல் காவல் எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (56). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவரும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13) என்ற மகளும், ஜெயகிருஷ்ணன் பிரபு (…
-
- 0 replies
- 332 views
-
-
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண் உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும். உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார். இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார். பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 189…
-
- 0 replies
- 390 views
-
-
தூங்கினால் படித்தது நினைவில் நிற்கும் --ஆராய்ச்சி முடிவுவாழ்க்கையின் மிக இளம் பிராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகிறது. 12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தூ…
-
- 0 replies
- 394 views
-
-
June 14, 2024 01:10 pm கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு 8.00 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைத…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களு…
-
- 0 replies
- 172 views
-
-
சூரிய கிரகணத்தின்போது தரையில் ஒருபக்கமாக சாயாமல் கோழி முட்டை நின்றதாக மலேசியா, இந்தோனேசியா சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சூரிய கிரகணம் நேற்று தெரிந்த நிலையில், அந்த 2 நாடுகளைச் சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் விநோத வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் கிரகணத்தின்போது மட்டும் முட்டை இப்படி நிற்காது, அனைத்து நேரத்திலும் இவ்வாறுதான் நிற்கும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/94514/சூரிய-கிரகணத்தின்போதுதரையில்-சாயாமல்-நின்ற-முட்டை..-சமூகவலைதளங்களில்வீடியோ-பகிர்வு
-
- 0 replies
- 230 views
-
-
எல்சல்வடோரின் கடும் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கு முன்னால் பெண்களின் நிர்வாண நடனம் 2016-03-04 12:36:49 தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளை மகிழ்விப்பதற்காக 3 நடன மங்கைகளின் நிர்வாண நடன விருந்து நடத்திய அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இஸால்கோ சிறைச்சாலையிலேயே இந்த நிர்வாண நடன விருந்து நடத்தப்பட்டுள்ளது. 2012 செப்டெம்பரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 438 views
-
-
சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் உயிர்போகும்வரை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனா ஹூவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹூவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் செயற்பட்டு வருகின்றது. இதன் முன்னாள் அதிகாரியான பாய் தியான்ஹய் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபவிருத்தி திட்டங்களின்போது, சுமார் 15.6 கோடி டெலர் மதிப்பிலான நிதியை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழி…
-
- 0 replies
- 48 views
-