Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த 'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் தரும் விருது இது. சாந்குமார் விருதை வென்றதையடுத்து, இந்த ஆண்டுக்கான அட்கீன்ஸ் சுற…

  2. போர்த்துகல் நாட்டில் முகம் இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 7 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த குழந்தை முகம் இல்லாமல் பிறந்திருந்தது. அதாவது, கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது. குழந்தை சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என அதன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் 2 வாரங்களுக்க…

    • 0 replies
    • 304 views
  3. டுவிட்டரில் பாப்பரசர்: வத்திக்கான் அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012 07:43 0 COMMENTS ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் செய்திகளைப் பரப்பும் நோக்குடன் பாப்பரசர் பெனடிக்ட்,@pontifexஎன்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் டுவிட்டர் கணக்கொன்றை தொடங்கியுள்ளார். பாப்பரசரிடம் கேட்கப்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கான பதில்களை அவரே டிசெம்பர் 12 ஆம் திகதி முதல் டிவிட் தகவல்களாக வெளியிடத் தொடங்குவார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆங்கிலத்திலும் அரபு உள்ளிட்ட ஏனைய 7 மொழிகளிலும் பாப்பரசர் பதில்களை அளிப்பார் என்றும் அந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,…

  4. மும்பை: பிரபலமான பெண்மணிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையும், பணியையும் எப்படி பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பது பலரது கேள்வி. அரசியலாகட்டும், விளையாட்டு, கார்ப்பரேட் துறை, சினிமா என பல துறைகளிலும் இவ்வாறு வெற்றி பெற்ற பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரபல பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைவரையும் கவர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையும் அவர் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பிரபல பெண்மணிகள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் 5100 பெண்களிடம் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. திருமணத் தகவல் இணையத்தளம் பிரபல பெண்மணிகள் பற்றி கேள்வி கேட்டது. அதில் சுவாரஸ்…

  5. யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…

  6. பெரமுனவின் ஆதரவாளர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு! வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டிருந்தார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையென தேடிய போது சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ஜனக்க நந்தகுமாரவின் ஆதரவாளரான சுந்தரபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் (34-வயது) என்ற நபராவார். https://newuthayan.com/பெரமுனவின்-ஆதரவாளர்-கிணற/

  7. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால் காட்டு விலங்குகள் ஊர்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி திடீரென ஊருக்குள் வரும் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் சுற்றுலா…

  8. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 23 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடாலியா என்ற பெண் சிம்பன்சி குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை. ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான 'பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடை…

  9. பெண்களுடனான உல்லாசத்திலும் வேகத்தை வெளிப்படுத்தும் யூசெய்ன் போல்ட் 2016-08-29 14:41:46 ஜெமெய்க்கா குறுந்தூர ஓட்ட வீரர் யூசெய்ன் போல்ட், 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டி களில் உலக சாதனையாளர். இப் போட்டிகளில் தற்போது அவரை மிஞ்ச ஆளில்லை. குறுந்தூர ஓட்டத்தில் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் தலா 3 தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தவர் யூசெய்ன் போல்ட். அதேவேளை, பெண்கள் விசயத்திலும் யூசெய்ன் போல்ட்டின் வேகம் பலரையும் வியக்க வைத்துள்ளது. பிரேஸிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் இறுதி நாளான கடந்த 21 ஆம் திகதி தனது 30 ஆவது ப…

  10. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. அப்போது, விராட் கோலியின் 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும், கொல்கத்தா பொலிஸ் துறையை சேர்ந்த குதிரை ஒன்று மிரண்டு போனது. அது பந்தய குதிரை வகையை சேர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா பொலிஸ் துறையில் சேர்க்கப்பட்டது. 5 வயது கொண்ட அந்த குதிரை, அதிர்ச்சியில் முழு வேகத்தில் பிளாசி சாலையில் ஓடியுள்ளது. வழியில் 2 அல்லது 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது. இதன்பின் சாலையில் சரிந்து விழுந்தது. எனினும், மாரடைப…

  11. ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான் செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அண்மைகாலம…

  12. ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைது…

      • Haha
    • 2 replies
    • 303 views
  13. பொய்யான விளம்பரத்திற்காக மைக்டோனால்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது! Published on December 6, 2012-8:19 pm · சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல உணவு நிறுவனமான மைக்டோனால்ட் விளம்பரம் ஒன்றில் பொய்யான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் விளம்பரத்தை திருத்தி அமைத்துள்ளது. மைக்டொனால்ட் நிறுவனத்தில் வழங்கப்படும் பூர்கர் என்ற உணவிற்கு பயன்படுத்தப்படும் சீஸ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து பெறப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பபட்டு வந்தது. ஆனால் சுவிஸ் விவசாய திணைக்கள தகவல் பிரிவு இது பொய்யான தகவல்களை கொண்ட விளம்பரம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும் சுவிஸ் அல்ப்ஸ…

  14. சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்­வ­ர­ரான வர்த்­தகர் இஷான் அப்­துல்­ அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…

  15. நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரத்தில் வைர வியாபாரி ஒருவர் பாதுகாப்பு பெட்டகத்தில் எடுத்து கொண்டு போன வைர பைகளில் ஒன்று சாலையில் விழுந்துவிட்டது. அந்தப் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் விஷாலின் கைகளில் தவறி விழுந்த வைரப் பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த விஷால் தன் தந்தையிடம் அதனை ஒப்படைத்துள்ளார். வைரத்தின் …

  16. யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. …

  17. உலகின் மிக உயரமான ஆணும், மிகவும் குள்ளமான பெண்ணும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் இர்வினில் நேரடியாக சந்தித்து அளவளாவி இருக்கின்றனர். உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர். மேலும், புகைப்படங்களுக்காக அணுகிய கேமராக்களுக்கு இருவரும் அலுக்காது போஸ் தந்துள்ளனர். இருவருக்கும் இது முதல் சந்திப்பல்ல. 6 ஆண்டு…

  18. அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…

  19. 915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது. அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை வீசு­வது தமக்கு அதிஷ்­டத்தை ஏற்­ப­டுத்தும் என அங்­குள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். இவ்­வாறு வீசப்­படும் நாண­யங்­களை மேற்­படி ஆமை விழுங்கி வந்­ததால் அதற்குப் பாதிப்பு ஏற்­பட்­டது. தாய்­லாந்தின் சூலா­லோங்கோர்ன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மிருக வைத்­தி­யர்­களால் இம்­ மாத முற்­ப­கு­தியில் மேற்­படி ஆமை சத்…

  20. மட்டக்களப்பில்.... இரு குழுக்களுக்கிடையில், மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை! மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நிகழ்ந்தமைக்கு தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப…

  21. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பின்னர், மோடியின் குழுவில் தோனி இணைவார் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த சஞ்சய் பஸ்வான் தனது நண்பரான தோனியை கட்சியில் இணைப்பது குறித்து பல நாட்களாக பேசி வருவதாக கூறியுள்ளார். தோனியின் சொந்த மாநிலமான ராஞ்சியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் வேட்பாளராக தோனியை பாஜக முன்னிறுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோனி கட்சியில் இணைவதன் மூலம் இளைஞர்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு…

    • 0 replies
    • 302 views
  22. பயணிகள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பு அவசியம்: ரஷ்ய விமானப் பணிப்பெண்கள் வழக்கு தள்ளுபடி! ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃப்ளொட் மீது விமானப் பணிப்பெண்கள் சிலர் தொடுத்த வழக்கை மொஸ்கோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகளை வழங்கும் ஏரோஃப்ளொட், கடந்த ஆண்டு மத்தியில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்தது. அதில், குறிப்பிட்ட உயரம் மற்றும் உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் மட்டுமே சர்வதேச விமான சேவைகளில் பணியாற்றத் தகுதிபெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் தகுதிகள் இல்லாத பெண்கள் குறைந்த சம்பளத்துடன் உள்ளூர் விமான சேவைகளில் மட்டுமே பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த முடிவை எதிர்த்து ஏரோஃப்ளொட்டின் விம…

  23. லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139

  24. ஷெரீ எச்செசன் 26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்தார் இலங்கையிலுள்ள தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட ஷெரீ எச்செசனின் கோரிக்கையை நியூஸ்பெஸ்ட் இன்று நிறைவேற்றியது. 26 வருடங்களின் பின்னர் தனது உண்மையான தாயை ஷெரீ எச்செசன் இன்று (14) சந்தித்தார். இலங்கையிலுள்ள தமது தாயை கண்டுபிடுத்துத் தருமாறு, சில வாரங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டுக்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய நாம் முன்னெடுத்த உறவுத் தேடல் பயணத்தில கண்டறியப்பட்டவர், ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என…

  25. 2,500 ஆண்டுகள் பழமையான மனித மூளை ஒன்று இங்கிலாந்தில், கடந்த 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தலை வெட்டப்பட்ட நிலையில் சேற்றுக்குள் புதைந்தவாறு கண்டெடுக்கப்பட்ட, ஒரு மனித மண்டை ஓட்டுக்குள் மூளை சேதம் அடையாமல் கிடைத்தது. அவரது மூளை சிதையாமல் இருக்கக் காரணம் என்ன வென்றும், அதற்கு சேறு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை ஆராய்ச்சி செய்து வரும் 34 பேர் கொண்ட விஞ்ஞானிகள், இது சுமாராக 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரின் மூளையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த மனிதர் கொல்லப்பட்ட போது, அவருக்கு 26 முதல் 45 வயது இருக்கலாம் என்று பற்களை கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.