Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139

  2. பொலியாவில் கரடு முரடான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஆண்டஸ்(Andes) மலைத்தொடரில் வளைவு நெளிவான பாதையில் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. மழை, மூடுபனி, கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்த இந்த மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் 70 வயது மூதாட்டி மிர்தா முனோஸ் பங்கேற்றார். தனது மகன் திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்காக சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள மிர்தா முனோஸ், தனது 6 பேரக்குழந்தைகளுடன் சைக்கிள் பந்தயம் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார். https://w…

    • 0 replies
    • 316 views
  3. கனடா- லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவர் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனத்தின் வாழ்க்கைக்கு வாரம் ஒன்றிற்கு 1,000 டொலர்கள் பணம் லாட்டரியில் பரிசு பெற்றுள்ளார். 4 டொலர்கள் பெறுமதி உள்ள இந்த லாட்டரி சீட்டு இவரது பிறந்த நாளன்று கிடைக்கப்பெற்றது. எதிர்பாராத பிறந்த நாள் பரிசு இவருக்கு கிடைத்துள்ளது. இந்த பணத்தில் தனது வீட்டில் சில திருத்த வேலைகள் செய்யவும் தனது மகள்களுடன் உல்லாச கடல் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாக மேரி எல்றிட்ஜ் என்ற இப்பெண் தெரிவித்துள்ளார்.இந்த பரிசுத்தொகையை ஒரு ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும் சலுகையையும் லாட்டரி வழங்குகின்றது. இவருக்கு கிடைத்த மொத்த தொகை டொலர்கள் 675,000.00 . - See more at: http://www.canadamirror.com/canad…

    • 0 replies
    • 316 views
  4. யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து... வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்! யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்…

  5. Elephant Rampage: கடந்த சில நாட்களாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. யானைகள் பொதுவாக அமைதியான விலங்குகள். ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். ஆக்ரோஷமான யானையின் மீது சுமார் ஐந்து மணி நேரம் தாக்குப்பிடித்துள்ளனர் இந்த சிறுமிகள்.

  6. பெண் வாடிக்கையாளர்களுக்கு மார்க் போட்ட ஆப்பிள் ஊழியர்கள் நீக்கம் ஆப்பிள் ஸ்டோரில், பெண் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ரகசியமாக பகிர்ந்து, அவர்கள் புகைப்படத்திற்கு மார்க் போட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்று ’Courier-Mail’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அவர்களை வேறு காரணத்திற்காக நீக்கினோம் என்று மறுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், மொபைல் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களை அவர்களின் அனுமதியில்லாமல் ரகசியமாக படம்பிடித்து அதை நண்பர்களுடன் பகிர்ந்து தவறாக கமெண்ட் செய்து வந்துள்ளனர். பிடிப்பட்ட ஊழியர்கள் மொபைலில் நூற்றுக்கணக்கான பெண் வாடிக்கையாளர்களின் க்ளோசப் புகைப்படங்கள…

  7. அரை கிலோ எடையில் 5வது மாதத்திலேயே பிறந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி? பட மூலாதாரம்,RACHEL STONEHOUSE 24 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எங்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கு 10சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள்தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் எங்களது மகள் அவர்களின் கணிப்பை பொய்யாக்கிவிட்டள் என்று கூறுகின்றனர் ரேச்சல், கோரே தம்பதியினர். கடந்தாண்டு செப்டெம்பர் 6ஆம் தேதி, வேல்ஸ் நாட்டின் பிரிட்ஜெண்ட் (Bridgend) பகுதியில், ஒரு மாலை பொழுதில் சுவான்சீஸ் சிங்கிள்டன்(Swansea's Singleton) மருத்துவமனையில் வெறும் 515 கிராம் எடையில் இமோகின் என்னும் பெண் குழ…

  8. 17 வருடங்கள் குகையில் மறைந்திருந்த குற்றவாளியை கண்டுபிடித்த ஆளில்லா விமானம்! சீனாவில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொலிஸாரிடமிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த ஒருவரை ஆளில்லா விமானத்தின் காணொளிகளைக் கொண்டு சீன பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சீனா பொலிஸாரின் இந்த சாதுர்யமான நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள 63 வயதான சாங் ஜியாங் என்பவர், 2002 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் ஜியாங் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்…

  9. அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…

  10. யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்! வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavann…

  11. உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புது…

  12. கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’ 22 Views கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது. உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்ச…

  13. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…

  14. காதலியை காண பெண்ணாடையில் வந்த காதலன் கைது கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை காண பெண்ணாடையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த காதலனை விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இன்று காலை 11 மணிக்கு கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த தனது காதலியை காணவே வந்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/9330

  15. மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…

  16. சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…

    • 0 replies
    • 314 views
  17. துப்பறியும் மோப்ப நாய், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்! வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் மோப்பநாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கூப்பர் என அழைக்கப்படும் குறித்த மோப்பநாய் இன்று (புதன்கிழமை) காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போதே மின்சாரம் தாக்கியுள்ளதுடன், மோப்பநாயை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குற்றத்தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை இலகுவில் இனங்கண்டு துப்பறியும் நடவடிக்கைகளில் குறித்த மோப்பநாய் ஈடுபட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை …

  18. இப்படியும் அச்சுறுத்தலா ? எச்சரிக்கை !! அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்­ப­கு­திக்கு உட்­பட்ட ஒரு நாள். மாலை­தீவின் பிர­பல கோடீஸ்­வரர் ஹசீம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) இலங்­கையின் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின் அழைப்­புக்கு பதி­ல­ளித்­துள்ள பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தொலை­பேசி அலு­வ­லர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்­களம்" என தம்மை அறி­முகம் செய்­யவே ஹசீமும் பதி­லுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்­சி­னையை கூறியுள்ளார். ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்­பா­ட­ளிக்­கவே தடு­மா­று­கிறார் என்­பதை புரிந்­து­கொண்ட பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தொலை­பேசி அலு­வலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உத­விப்­…

  19. ஜேர்மனியில் 5 குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு: குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி! மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27 வயதான தாய் குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாமல், சில விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நகரின் ஹாசெல்டெல் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி சுமா…

  20. ஆஸ்திரியாவில் ஒரு ஜோடி, கடந்த 43 ஆண்டுகளில், 12 முறை திருமணம் செய்து கொண்டு 12 முறை விவாகரத்து செய்து கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அத்தம்பதி உதவித்தொகை வாங்கி பயனடைந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… ஆஸ்திரிய பெண் ஒருவர் 1981ல் தனது முதல் கணவர் இறந்ததற்கு பிறகு, ஆஸ்திரிய அரசாங்க சட்டத்தின்படி கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்திருக்கிறார். அதன் பிறகு 1982ல் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அரசாங்கம் கொடுத்து வந்த கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார். ஆனால் இந்த மறுமணம் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அரசாங்கம் அந்த கைம்பெண் ஓய்வூதியத்தை நிறுத்தியது. இதனால் கைம…

  21. காதலனின் மனைவி திடீரென வீட்டுக்குள் வந்தமையால் பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம் காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்தில் தொங்கிய காட்சி சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தமையால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற பெண்தோழி யன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் யன்னல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற பெண்தோழி எதிர்பாராத விதமாக வீதியில் போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அரைகுறை ஆடையுடன் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியுள்ளார். …

    • 1 reply
    • 314 views
  22. மன்னாரில் கடும் மழை- மக்களின் இயல்புநிலை பாதிப்பு. October 4, 2021 மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலையும் கடும் மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. https://globaltamilnews.net/2021/166795

  23. தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன், ஒரு நாள் மனைவியுடன் நடந்த சண்டையில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார். இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் நொறுக்குதீனியாக குர்குரே(கார முறுக்கு) உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக இது தயாராகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் அதிகமானோர் இதை விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் கார முறுக்கு வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு க…

  24. சென்னையில் உள்ள ரயில்வே காவல்துறை தலைவர் அலுவலக காவலராக பணியாற்றி வந்தவர் கிருபாகரன். இவர் தனக்கு சொந்தமான காட்டுப்பாக்கத்தில் உள்ள மாந்தோப்பில் வளர்த்து வந்த நாய்க்கு இரவு 8 மணிக்கு மாமிச உணவுகளை சமைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இனப்பெருக்கத்திற்காக நண்பரின் நாயை வாங்கி, தனது நாயுடன் மாந்தோப்பில் வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சற்று தாமதமாக நாய்களுக்கு மாமிச உணவை எடுத்துச் சென்றபோது, எதிர்பாரத விதமாக நாய்கள் அவரை கடித்து குதறியது. அவரது அலறல குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.