செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாழ்.பொலிஸ் நிலையமருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் இன்று வீடு சென்றுள்ளது. அதன் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியதையடுத்தே மோட்டார் சைக்கிள் வீடு சென்றுள்ளது. நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரம் காற்று போயுள்ளது. அதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டுவிட்டு சில்லினை கழற்றி காற்று அடிப்பதற்கு கடைக்கு சென்றுள்ளார். அவ் வேளையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 130 பேர் கைதாகியிருந்த நிலையினில் அவர்களுடன் மோட்டார் சைக்கிள் சி…
-
- 0 replies
- 299 views
-
-
விளையாட்டு வினையானது- கழுத்து பட்டி இறுகி சிறுமி உயிரிழப்பு 57 Views யன்னல் கதவின் பிணைச்சலில் விளையாட்டாக பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று(30) முற்பகல் இடம்பெற்றது. சிறுமி தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பி…
-
- 0 replies
- 299 views
-
-
மன்னாரில்... கரடி கடிக்கு, இலக்காகி... பலர் காயம், ஒருவர் வைத்தியசாலையில்! மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக குறித்த கரடியின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சனை காரணமாக கரடியை பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அதிகாலை நேரங்களில் நடமாடும் மக்களை தாக்குவதாகும் பாதிக…
-
- 2 replies
- 299 views
-
-
உறவுகளே! உண்மையைக் காக்க – உரிமையை வென்றெடுக்க ஒன்றாகி உடன் செயற்படுவோம் வாரீர்! உறவுகளே– உண்மையைக் காக்க – உரிமையைப் வென்றெடுக்க – ஒன்றுபட்டு செயற்படுவோம் -சிறிலங்கா அரசுகளின் – ஈழத் தமிழினத்துக்கு எதிரான உண்மை நிலை தெரியாதவர்கள் -அரசியல் வரலாறு புரியாதவர்கள் - தமிழ் இனத்திற்குக் – களங்கத்தை – பங்கத்தை –மக்கள் மத்தியில் குளப்பத்தை – ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்துமாறு வேண்டுகின்றோம் - தலைவர்களே! தமிழ் மக்களின் உரிமைக்காக உழைப்பவர்கள்தானே நீங்கள்? நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எந்த அமைப்பிலிருந்தாலும் – தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க – எமது விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக ஒன்றுபடுவோம் - எமது உரிமைபெற்ற – பாதுகாப்பான – வாழ்வுக்காக- அ…
-
- 0 replies
- 299 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிவாஜிலிங்கம் கொண்டாடினார் கே.மகா மறைந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் 69ஆவது பிறந்தநாளை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமராட்சியில் உள்ள தனது அலுவலகத்தில் கொண்டாடினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதை, படத்தில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/192171/ஜ-யலல-த-வ-ன-ப-றந-தந-ள-ச-வ-ஜ-ல-ங-கம-க-ண-ட-ட-ன-ர-#sthash.XaGRRDXM.dpuf
-
- 0 replies
- 299 views
-
-
உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 299 views
-
-
பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த குண்டு மனிதர் மரணம்![Wednesday 2015-06-24 20:00] பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தாம்சன் உயிரிழந்தார். பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தாம்சன். 33 வயதான அவரின் எடை 412 கிலோ. அளவுக்கு அதிக மான உடல் எடையால் அவரால் நடக்க முடியாது. அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர். பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்ட மனிதராக அவர் கருதப்பட்டார். தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது. அதன்பி…
-
- 0 replies
- 299 views
-
-
தேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர் இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.நேற்றைய தினம்(23) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். மேற்படி லொத்தர் டிக்கெட் கண்டி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும் https://newuthayan.com/தேசிய-லொத்தர்-சபை-வரலாற்/
-
- 0 replies
- 298 views
-
-
புத்தளம் கொட்டுக்கச்சி தங்கஸ்வெவ பகுதியில் விகாரையொன்றில் அரியவகை உயிரினமான தேவாங்கு குட்டியொன்று உயிருடன் மீட்டு புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகத்தில் விகாராதிபதியினால் ஒப்படைக்கப்பட்டது. குறித்த உயிரினமான தேவாங்கு நிகாவெரெட்டிய கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ் உயிரினம் அடர்ந்த காடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் குறித்த உயிரினத்தை மக்களுக்கு எழிதில் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லையெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அழிவடைந்து வருகின்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர…
-
- 0 replies
- 298 views
-
-
பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் GASTON BRITO கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக …
-
- 0 replies
- 298 views
-
-
சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அகில உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ், எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது. இந்த நிலையில், ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அந…
-
- 0 replies
- 298 views
-
-
குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவரை கைது…
-
- 0 replies
- 298 views
-
-
உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புது…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
வெலிஓயா – நிக்கவெவ தெற்கு பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்த, பிள்ளையார் சிலையொன்று, காணாமல் போயுள்ளதென, வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே காணாமல் போயுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிஓயா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நெல் அருவடையின் பின்னர், பெறப்படும் முதலாது அரிசியை குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்…
-
- 0 replies
- 298 views
-
-
பசறை 13 ஆவது மைல் கல்லருகே கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் தத்தெடுக்க வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார். அம்பாறை அரசினர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்சவே, பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தாம் பொறுப்பேற்பதற்கு முன்வந்துள்ள நிலையில், சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த வைத்தியர் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வைத்தியரின் கோரிக்கையை பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளார். விபத்து இடம்பெற்ற தினமான கடந்த 20 ஆம் திகதி, லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா தமக்கான கண் சிகிச்சையை மேற்க…
-
- 0 replies
- 297 views
-
-
மகிந்த பிரஜாவுரிமைக்கு சிக்கலா…?? July 20, 20151:16 am முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளுக்கு பணம் கொடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டால் அவருடைய பிரஜாவுரிமையை இல்லாமல் செய்ய முடியும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுனாமியால் வீடுகளை இழந்த வடபகுதி மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது என்ற போர்வையில் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணம் வழங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். கிரிபத்கொடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்குப் பணம் வழங்கினார். முதலில் மு…
-
- 0 replies
- 297 views
-
-
நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்துகொண்ட நபர் ஒருவர் அரைமணி போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் நகரில் இடம்பெற்றுள்ளது. காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே மேற்படி நபர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துகொண்டுள்ளார். இதன்போது சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட இந்நபர் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். முயற்சி தோல்வியடையவே தீயணைப்பு பிரிவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர் மீது ஒலிவ் எண்ணெயை தடவி அரை மணி போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இதேபோல், அண்மையில் அமெர…
-
- 1 reply
- 297 views
-
-
உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. சீனாவில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது. சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12) சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது அந்த நேரத்தில் அவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே, சார்ஜர் ஆப் செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத …
-
- 2 replies
- 297 views
-
-
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு…
-
- 0 replies
- 297 views
-
-
இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பி…
-
- 0 replies
- 297 views
-
-
ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவு வருமா என அச்சம் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் குவிந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏதேனும் இயற்கை பேரழிவு வருகிறதென்றால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு பயணிக்கும். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போதும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டடங்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு சில காகங்கள் கூட்டம் கூட…
-
- 1 reply
- 296 views
-
-
72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப்பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும். தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர். இத்தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனரா…
-
- 0 replies
- 296 views
-
-
கிளிநொச்சி – பரந்தனில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி சடலங்களாக மீட்பு Sep 10, 20200 கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்த…
-
- 1 reply
- 296 views
-
-
இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' (FIT INDIA MOVEMENT) எனும் பிரசாரத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதன் நோக்கம் என்ன? இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டு மக்களின் தினசரி செயல்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை இணைப்பதற்கு ஊக்குவிக்கும் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' எனும் பிரசாரத்தின் தொடக்க விழ…
-
- 0 replies
- 296 views
-