செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
மனைவி மற்றும் அவரது கைக்குழந்தையை கொன்று புதைப்பதற்காக வீட்டுக்குள் புதைக்குழியை வெட்டிய மில்லனிய பெல்லன்குடாவைச்சேர்ந்த பீ.ஜி ரவிந்திர பெரேரா(42) என்பவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஜகத் கஹதகம உத்தரவிட்டுள்ளார். வேலையற்றிருக்கும் சந்தேகநபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மனநலவைத்திய அதிகாரியான நீல் பெர்னண்டோவிடம் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108578-2014-04-29-07-07-53.html
-
- 0 replies
- 351 views
-
-
விலைமாதர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! Vhg ஜூன் 29, 2022 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங…
-
- 0 replies
- 321 views
-
-
மைத்திரி அரசு பதவி ஏற்றதும்நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்த பட்டு வருகிறது அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள் .சரத் பொன்சேக அவ்விதம் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது . இரண்டு நாட்டு உளவுஅமைப்பு போடு கொடுத்த மகா திட்டமே இது என்பது தான்…
-
- 0 replies
- 408 views
-
-
Published By: SETHU 11 JUL, 2023 | 11:25 AM 'தம்ஸ் அப்' இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் இத்தீர்ப்பபை அளித்துள்ளது. 2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார். இது தொடர்பாக கிறிஸ் ஆச்சர் எனும் விவசாயியடன் மிகில்பரோ தொலைபேசியில் உரையாடினார். அதன்பின் ஒரு புசல் 17 டொலர்கள் வீதம் நவம்பர் மாதம் ஆ…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
கொழும்பு புளூமெண்டால் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமெண்டால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டால் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்தக் கைத்தொலைபேசியை திருடியவர் இதுவரை சிக்காத நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லங்காதீப https://thinakkural.lk/article/275642
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
பேஸ்புக் மூலம் செல்போனில் பேசும் வசதி விரைவில் அறிமுகம் பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு பேஸ்புக்கில் இருக்கின்றீர்களா, என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாற்றங்கண்டுள்ளது. பேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர். இந்நிலையில், பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களை அவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் செல்போனில் குறிப்பிட்ட பேஸ்புக் நண்பரின் செல்போன் எண் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அந்நபர் பேஸ்புக்கில் செல்போன் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால் ஹலோ அப்ளிகேஷன் அங்கிருந்து எண்ணை எடுத்…
-
- 0 replies
- 463 views
-
-
கனடாவில் கார் ஒன்று அந்தரத்தில் பறந்தபடி சென்று கடையில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.கனடாவின் டொரொன்டோ நகரில் உள்ள நோர்த் யோர்க்(North York) பகுதியில் கார் ஒன்று வேகமாக அந்தரத்தில் பறந்தபடி அங்கிருந்த ஒரு வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மோதியது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த காரின் ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த மற்ற காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை, இந்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டுனர் ப்ரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கலாம் என்று தெரி…
-
- 0 replies
- 347 views
-
-
துருக்கியில் உலகின் மிகவும் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சேதமடைந்த அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடுப்பின் அருகில், உலகின் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தாவது: பழங்கால மண் வீடுகள் நிறைந்த “மேகன் 66″ என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்…
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை விட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சிறப்பானது! கர்தினால் மல்கம் ரஞ்சித் [ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 07:25.26 AM GMT ] ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரது இலங்கை தொடர்பிலான அறிக்கையை விட, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பொதுமக்கள் பிரச்சினை குறித்து சீராக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து, இந்த அறிக்கை சிறப்பாக ஆராய்ந்துள்ளது. இந்த முயற்சி இ…
-
- 0 replies
- 581 views
-
-
நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத த…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
PM notes first Buddhist majority State in India Prime Minister Ranil Wickremesinghe, in a twitter message, noted the creation of the first Indian state with a Buddhist majority by way of enacting a Bill. The Indian government led by Prime Minister Narendra Modi on Monday changed the terms of engagement with Jammu and Kashmir by amending the law. It will split the region into two union territories - ‘J&K and Ladakh’- instead of the status of a state given to it so far. Ladhak is a 70 per cent Buddhist majority area. The Prime Minister tweeted that Ladakh would be the first Indian state with a Buddhist majority. “I understand Ladakh will finally becom…
-
- 0 replies
- 466 views
-
-
யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார்.யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அவர் சர்ச்சைகளி…
-
- 0 replies
- 588 views
-
-
சீனாவைச் சேர்ந்த சிறுமியொருவரின் உடலில் பெரும்பகுதி அடர்த்தியான உரோமங்களால் சூழப்பட்டுள்ளது. லியூ மிங்குயுங் எனும் 6 வயதான சிறுமியே இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவள் பிறக்கும்போதே அவளின் உடலில் 60 சதவீமான பகுதியில் இவ்வாறான உரோமங்கள் காணப்பட்டன. இச்சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது சிறுமியின் தாய் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இச்சிறுமியை பாலர் பாடசாலையில் சேர்த்த அவளது தந்தையும் திரும்பிவரவில்லை. பெற்றோர்களால் கைவிடப்பட்ட லியூ மிங்குயுங் குறித்து பத்திரிகையில் விளம்பரமொன்றை பிரசுரித்த பாலர் பாடசாலை நிர்வாகம், சிறுமியின் உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்புகொள்ளுமாறு கோரியிருந்தது. ஆறுமாதம் கழித்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரரின் தாத்தா ஒருவர…
-
- 0 replies
- 357 views
-
-
10 APR, 2025 | 12:49 PM புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211693
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
குழந்தையின் தலையுடன் வீதியில் வலம் வந்த பெண்ணால் பரபரப்பு மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார். குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியு…
-
- 0 replies
- 353 views
-
-
படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு செல்வதற்காக தமிழகம் தூத்துக்குடி பகுதியில் தங்கி இருந்த ஈழத்தமிழ் அகதிகள் 60பேர் கைது! திருச்சி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில் தொடர்ந்து இரு தினங்களாக தங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எட்டையபுரம் தாசில்தார் அம்புரோஸ் மேரி ஈழத்தமிழ் அகதிகளிடம் விசாரணை நடத்தினார். தப்பி செல்ல முயன்றவர்களில் ஆண்கள் 21 பேர் பெண்கள் 19 சிறுவர்கள் 7 சிறுமியர்கள் 8 பேர் அடங்குவர். இதில் அகதிகள் குழுவை சேர்ந்த ஐந்து பேர் காவல்துறை விசாரணையில் தப்ப…
-
- 0 replies
- 426 views
-
-
160 கி.மீ. தூரம் காரை செலுத்திச் சென்ற 12 வயது சிறுவன் 2016-09-15 12:21:55 12 வயதான சிறுவன் ஒருவன் சுமார் 160 கிலோமீற்றர் தூரம் காரை செலுத்திச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் லிம்பபாச் ஃப்ரோஹ்னோ ( Limbach-Frohnau ) நகரில் வசிக்கும் இச் சிறுவனையும் 13 வயதான அவனின் நண்பனையும் காணவில்லை என பொலிஸாரிடம் இச் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். அதன்பின் மேற்கொண்ட விசாரணையின்போது, தனது தாத்தா, பாட்டியின் வீட்டை அச் சிறுவனும் அவனின் நண்பனும் சென்றடைந்தமை தெரியவந்தது. 12 வயதான இச் சிறுவன் ஒருவரிடமும் கூறாமல் தன…
-
- 0 replies
- 363 views
-
-
யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…
-
- 0 replies
- 454 views
-
-
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் என வர்ணிக்கப்படும் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜோகின் எல் சபோ கூஸ்மன் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வதான ஜோகின் கூஸ்மன் கடந்த 13 வருடங்களாக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தவர். இதனால் ஏறுத்தாழ ஒரு மர்ம நபராக அவர் கருதப்பட்டார். அமெரிக்க கண்டத்தின் பல நாடுகளில் ஹெரோயின், கனபீஸ், கொக்கேய்ன் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஜோகின் கஸ்மன், பலநூறு கோடி டொலர்களை சம்பாதித்தவர். கூஸ்மன் தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மெக்ஸிகோ வீதிகளில் தலையற்ற மனித சடலங்கள் காணப்படுவது வழக…
-
- 0 replies
- 807 views
-
-
சொர்க்கத்தை நோக்கிய பாதையில் திருமணம் செய்தால் என்ன என்ற யோசனை தமிழ்நாட்டில் ஒரு ஜோடிக்கு வர, தங்கள் திருமணத்தின் ஒரு பகுதி சடங்கை அவர்கள் ஹாட் ஏர் பலூன் என்ற உஷ்ணக் காற்று அடைக்கப்பட்ட பலூனில் பறந்து செய்திருக்கிறார்கள். விநோத முறைகளில் திருமண வைபவத்தை நடத்தி அதனை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனவா? இது போன்ற திருமணம் மற்றும் பிற சமூக வைபவங்களை நடத்த ஏற்பாடு செய்யும் ஐஸ் இவெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மேலாளர் அருண் செல்வராஜன் தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140428_baloonwedding.shtml
-
- 0 replies
- 863 views
-
-
பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…
-
- 0 replies
- 601 views
-
-
அமெரிக்காவில், தினமும், இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கொல்லப்படுவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்ட விவரம்: இந்தாண்டு, அமெரிக்க போலீசாரால், 385 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு, இரண்டுக்கு மேற்பட்டோர், போலீசாரால் உயிரிழக்கின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு வெளியிட்ட இறப்பு விகிதத்தை விட, பல மடங்கு அதிகம். அமெரிக்காவில், மாகாண அரசுகள், போலீசாரால் உயிரிழப்போர் குறித்த புள்ளி விவரங்களை, தேசிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் தரலாம் என்பதால், தேசிய அரசிடம், மாகாண அளவில் போலீசாரால் கொல்லப்பட்டோர் குறித்த விவரங் கள் சரிவர இல்லை. அமெரிக்க போலீசா…
-
- 0 replies
- 251 views
-
-
தமிழ்த் தேசிய தளத்தின் கள நிலமை, அமைவிட பிராந்திய நிலமை, நாடுகளது நலன்சார் நிலமை குறித்த புரிந்துணர்வுக் குறைபாட்டுடனேயே பலர் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசி வருகின்றார்கள். எழுதியும் வருகின்றார்கள். விடுதலைப் புலிகளது போர்க் களம் மௌனிக்க வைக்கப்பட்டதன் பின்னர், விடுதலைப் புலிகளது வெற்றிக்குப் பின்னே அணி வகுத்த பலரும், இப்போது சர்வதேச அரசியல் குறித்து சோதிடம் சொல்லும் ஆசான்களாக மாற்றமெடுத்து வருகின்றனர். தமக்குத் தெரிந்த ஒற்றைப் பாதையிலேயே தமிழீழத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளர்கள். சிங்கள தேசத்தை அனுசரித்துப் போவதன் மூலம் ஈழத் தமிழர் நலனைப் பேணுவது என்று ஒரு சாராரும், இந்தியாவைத் தழுவுவதன் மூலம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கலாம் என்று ஒரு ச…
-
- 0 replies
- 445 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …
-
- 0 replies
- 290 views
-
-
எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி 20 September 2025 மனிதர்களைக் கடந்து ஐந்தறிவு ஜீவன்களுக்கும் கருணை உண்டு என்பதை நிருபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று யாழ். மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் சென்று பார்வையிடுவது வழக்கமானதொன்றாகும். அந்த வரிசையில் தனது எஜமானை பார்க்க நாய் ஒன்று சென்றுள்ள சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ். மருத்துவமனையின் 24 ஆம் இலக்க விடுதியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பதிவானதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைக்குள் எவ்வித குழப்பமும் விளைவிக்காமல் குறித்த ந…
-
- 0 replies
- 184 views
-