செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7126 topics in this forum
-
அத்திலாந்திக் மாகடலை எல்லையாகக் கொண்ட ஐரோப்பிய நாடு போத்துக்கல் கி.பி 1143ல் நிறுவப்பட்டது. 15ம் நூற்றாண்டில் நீண்ட தூரக் கடற்பயணங்களை ஆரம்பித்த போத்துக்கல் மாலுமிகள் புதிய நிலப்பரப்புக்களின் கண்டுபிடிப்புக் காலத்தைத் (Age of discovery) தொடங்கினர். அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு போத்துக்கல் நாட்டுக் கப்பல்கள் சென்றன. போத்துக்கலுக்கும் பிறேசில், ஆபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான். தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றிற்கும் இடையில் வர்த்தகக் கடற்பாதையை அமைத்தனர். போத்துக்கல் ஒரு பாரிய கடல் கடந்த சாம்ராச்சியத்தை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டு வரையில் போத்துக்கல் சாம்ராச்சியத்தின் சிறிய எச்சங்கள் இந்தியாவில் கோவா, இந்தோனேசியாவில் கிழக்கு திமோர், சீனாவில் மக்கங் மாத்தி…
-
- 4 replies
- 806 views
-
-
பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…
-
- 0 replies
- 390 views
-
-
-
உலகப்புகழ்பெற்ற குரூஸ்ஸுக்கு அடுத்தபடியாக ஒபாமாவின் அழுத்தத்தால்(உள்ளூர்தயாரிப்புகளுக்கு முன்னுரிமை)சவரலே வழங்கும் 100 வீதம் மின்சாரத்தில் இயங்கும் கார் http://www.insideline.com/chevrolet/volt/2011/long-term-test-2011-chevrolet-volt.html http://www.chevrolet.com/volt/
-
- 0 replies
- 571 views
-
-
http://www.youtube.com/watch?v=GgNCW_hJgro மேலேயுள்ள காணொளியில், அமீரகத்திலுள்ள துபாய் மால்(Dubai Mall) அண்மித்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' (Burj Khalifa) வின் உச்சிக்கு (உயரம் : 828 Metres) ஏறும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ஆலன் ராபர்ட்' உலகின் பல கட்டிடங்களில் எந்தவித உதவிப் பொருட்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர். துபாயின் இக்கட்டிடத்தில், இம்மாதம் 28ந் தேதி அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் சில இடங்களில் கயிற்றின் உதவியுடன் மேலே எறி கட்டிடதின் உச்சியை எட்டினார்.
-
- 8 replies
- 782 views
-
-
Shot in the early thirties, a man with a rifle tests an early version of bullet proof glass by having his wife hold the glass to her face ...
-
- 20 replies
- 1.6k views
-
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவல நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு 3 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும், 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் சகோதரரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வாக்குமூலம் அளிக்குமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் போது இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும் கடுவல நீதிமன்ற நீதவான் இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்குவி…
-
- 0 replies
- 554 views
-
-
ஜப்பான் ஆசியக் கண்டத்தில் 6,852 தீவுகளை கொண்ட வளர்ச்சியடைந்த நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது நிலநடுக்கம், சுனாமி தாக்கிய ஒன்சூதீவு (Honshu ) ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக பரப்பளவின்படி ஏழாவது மிகப்பெரிய தீவு. இந்த தீவின் கடலில்தான் மார்ச் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டார் ஸ்கேல் அளவில் 8.9. ஆக பதிவானது. 1900 ஆண்டிலிருந்து ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இது மிக பெரியது. இதனை அமெரிக்க ஜியாலிஜிகள் சர்வே ரிக்டார் ஸ்கேலில் 9 என அளவிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கீழ் அமிழ்கிற எல்லை பகுதி (Subduction Zone) வகையை சேர்ந்ததாகும். கீழ் அமிழ்கிற எல்லை பகுதி என்பது இரண்…
-
- 0 replies
- 708 views
-
-
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் வீரகேசரி இணையம் 4/5/2011 3:49:05 PM 14Share இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர். அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு ச…
-
- 0 replies
- 467 views
-
-
2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கேப்படன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கேப்படன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்ற…
-
- 0 replies
- 574 views
-
-
எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலொஸ் சார்கோசியின் மெய்ப்பாதுகாவல் படையினர் அவரின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத குடைகளை உபயோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குடையொன்றின் பெறுமதி 10,000 பவுண்கள் ஆகும். இது கெவ்லர் இழைகளால் ஆனதாகும். இது மிக உறுதியானவை என்பதுடன் வாகனங்கள், மற்றும் தலைக் கவசம் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவை குண்டு துளைக்க முடியாதவை மட்டுமன்றி ஆயுத தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது. அந்நாட்டில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றின் படி சார்கோஸி அண்மைய வரலாற்றில் பிரான்ஸின் பிரபலமில்லாத தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே இப் புதிய முடிவினை அவர் எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் …
-
- 0 replies
- 564 views
-
-
-
- 2 replies
- 630 views
-
-
-
- 2 replies
- 622 views
-
-
இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html
-
- 0 replies
- 636 views
-
-
இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு உலகம் இருளுக்குள்.... 128 நாடுகளில் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு (பிரெஞ்சு நேரம்) விளக்குகள் அணைக்கப்படவுள்ளன. பிரான்சில் ஈபிள் கோபுரம் உட்பட இருளில் மூழ்க இருக்கிறது. This Earth Hour 2011: 8.30pm, Saturday 26 March, celebrate your action for the planet with the people of world, and add more to your Earth Hour. From its inception as a single-city initiative -- Sydney, Australia - in 2007, Earth Hour has grown into a global symbol of hope and movement for change. Earth Hour 2010 created history as the world's largest ever voluntary action with people, businesses and governments in 128 countries across every conti…
-
- 4 replies
- 1.2k views
-
-
திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே, முருகன் கோவில் வேலில் வைத்திருந்த ஒரு எலுமிச்சை பழம் 3,500 ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு, வேல் மட்டுமே கருவறையில் உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்கள் ரத்தினவேல் முருகன் என பெயரிட்டுள்ளனர். இக்கோவிலில், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், (20ம் தேதி) இரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இப்பூஜையில், ஒன்பது நாள் உற்சவத்தின் போது வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன் திருமணத் தடைகள், நோய்கள் நீங்கும்…
-
- 9 replies
- 1.2k views
-
-
ரஷ்ய பாராளுமன்றத்தில் குட்டைப் பாவாடைக்குத் தடை _ வீரகேசரி இணையம் 3/26/2011 10:21:03 AM Share ரஷ்ய பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பாராளுமன்றத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் சமூகமளிப்பது தடை செய்யப்படவுள்ளது. குட்டைப் பாவாடை அணிவது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்யும் வகையில் அமைவதாலேயே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. .
-
- 1 reply
- 798 views
-
-
தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம் Thursday, 24 March 2011 17:57 தென்பிராந்திய நிருபர் : தனது நரைத்த தலை முடிக்கு கறுப்பு நிற "டை' பூசி வந்த ஆசிரியை மரணமான சம்பவம் மாத்தறை ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. தெலிஜ்ஜவிலைகருக்களையைச் சேர்ந்த வீ.ஜி.இந்திராணி (56 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணமானார். இவர் தனது நரைத்த முடிக்கு சில காலம் கறுப்பு நிற "டை' பூசி வந்துள்ளார் எனவும் அதனால் தலைவலி மற்றும் நோய்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் எனவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் "டை' பூசுவதையும் சில காலம் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நிகழ்வு ஒன்றிற்காக தன்னை அழகுபடுத்த மீண்டும் தலை முடிக்கு கறுப்பு நிற …
-
- 12 replies
- 748 views
-
-
இதில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு: 1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே 1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலக…
-
- 9 replies
- 668 views
-
-
நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மகளாக பிறந்தவர் எலிசபெத் டெய்லர். 1942ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய எலிசபெத், "நேஷனல் வெல்வெட்", "கிளியோபேட்ரா", "பட்டர்பீல்ட் 8" உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 வயதில் அவர் நடித்த நேஷனல் வெல்வெட் என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது. கிளியோபாட்ரா படம் எலிசபெத்தை புகழேணியின் உச்சியில் அமர வைத்தது. ஹாலிவுட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் …
-
- 10 replies
- 1.3k views
-
-
அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…
-
- 2 replies
- 1k views
-
-
தாம் எந்த மதத்திடனும் இணைந்தவர்கள் இல்லை என அடையாளப்படுத்துபவர்கள் மூலம் ஒன்பது நாடுகளில் மதம் இல்லாமல் போய்விடும், இவ்வாறு ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள், கூறியுள்ளார்கள். இந்த ஒன்பது நாடுகளிலும் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட "கணித எதிர்வுகூறல்" (mathematical model) மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த நாடுகளில் மக்கள் தாம் எந்த மதத்திடனும் தம்மை இணைத்தவர்கள் அல்ல என சனத்தொகை கணிப்பில் கூறுவார்கள் என்பதே இந்த எதிர்வுகூறலாகின்றது. கீழ்வரும் நாடுகளே அவை: அவுஸ்திரேலியா ஆஸ்திரியா கனடா செக் குடியரசு பின்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நியூசிலாந்து சுவிற்சலாந்து Religion may…
-
- 0 replies
- 538 views
-
-
இங்கிலாந்துநாட்டில் கல்வி பயிலவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைய கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்…
-
- 0 replies
- 461 views
-