செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.! சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது தெரியவந்தது . சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உட…
-
- 0 replies
- 359 views
-
-
இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் – முன்னாள் வைத்தியருக்கு எதிராக குற்றச்சாட்டு! இங்கிலாந்தில் 38 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் மருத்துவர் (Nathaniel Spencer ) நதானியேல் ஸ்பென்சர் மீது அவர் கவனித்துக் கொண்ட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்களில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் தாக்குதல் மற்றும் ஊடுருவல் மூலம் தாக்குதல் என மொத்தம் 45க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந…
-
- 0 replies
- 50 views
-
-
பெண்களுடனான உல்லாசத்திலும் வேகத்தை வெளிப்படுத்தும் யூசெய்ன் போல்ட் 2016-08-29 14:41:46 ஜெமெய்க்கா குறுந்தூர ஓட்ட வீரர் யூசெய்ன் போல்ட், 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டி களில் உலக சாதனையாளர். இப் போட்டிகளில் தற்போது அவரை மிஞ்ச ஆளில்லை. குறுந்தூர ஓட்டத்தில் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் தலா 3 தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தவர் யூசெய்ன் போல்ட். அதேவேளை, பெண்கள் விசயத்திலும் யூசெய்ன் போல்ட்டின் வேகம் பலரையும் வியக்க வைத்துள்ளது. பிரேஸிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் இறுதி நாளான கடந்த 21 ஆம் திகதி தனது 30 ஆவது ப…
-
- 0 replies
- 302 views
-
-
ஆமையுடன் கைது December 12, 2021 சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப காவல்துறைப் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது https://globaltamilnews.net/2021/170274
-
- 0 replies
- 510 views
-
-
அதிக நேரம் விளையாடிய கணவன் ; ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய மனைவி தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும், கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது கோபமடைந்த 54 வயதுடைய பெண் அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேளையில் அவரின் ஆண்குறியை வெட்டி கழிவறையில் வீசியுள்ளார். மேலும், வலியால் துடித்த குறித்த கணவர…
-
- 0 replies
- 166 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 05:03 PM தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இரண்டு வயது ஜேர்மன் ஷெப்பர்ட் “கமாண்டர்” என்ற நாயை என்ன செய்வது என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் தகவல் தொடர்பு பணிப்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதி…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
சிரியாவில் ராணுவ வீரரின் தலையை சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. தனி நாடு அமைப்பதற்காக இவர்கள் பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக பல்வேறு படுகொலை சம்பவங்களை சிறுவர்கள் மூலம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் சிரியா ராணுவ வீரர் ஒருவரின் தலையை பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன் ஒருவன் துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முகமூடி அணியாத சிறுவன் ஒருவன் ராணுவ வீரரின் தலையை துண்டித்து பின்னர் இறந்தபோன ராணுவ வீரரின் முதுகில் வைப்பது போல் உள்ளது. மேலும் அந்த வீடியோவின் …
-
- 0 replies
- 182 views
-
-
தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் காலப்ந்து வீரர்கள் விளையாடி விட்டு ஓய்வுக்கு என்று விட்டனர் அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் அங்கு விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட்டின் வலையில் சிக்கி இறந்து விட்டது. இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியிடபட்டுஉள்ளது ஆள் இல்லாத காலபந்தாட்ட மைதானத்தில் பக்கத்து மலையில் இருந்து வந்த குரங்குகள் ஓடுவதும் குதிப்பதுமாக விளையாடி உள்ளன. இதில் ஒரு குரங்கு கோல் போஸ்ட் வலையில் சிக்கி கொண்டது இதில் கழுத்து இறுகி அந்த குரங்கு பலியானது. அந்த குரங்கின் படம் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/48408.html#sthash.ZBo4mfXU.dpuf
-
- 0 replies
- 384 views
-
-
மர்ம ஓவியர் புது முயற்சி . Friday, 07 March, 2008 11:07 AM . லண்டன், மார்ச். 7: லண்டனில் யாருக்கும் தெரியாமல் ஓவியங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் மர்ம ஓவியர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறாராம். . லண்டனில் உள்ள கட்டிடம் ஒன்றின் சுவரில் கொடிக் கம்பத்தில் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கேரி பேக் பறப்பது போலவும், அதற்கு முன் இரண்டு சிறுவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது போலவும் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியம் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி சிந்திக்க வைப்பதாகவும் அமைந் துள்ளதாம். malaisudar.com
-
- 0 replies
- 771 views
-
-
ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள், விடுதிகளில் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும். ஆனால், பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்தார். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பு இதை ரூ.2.58 லட்சம் கொடுத்து அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறது. இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்…
-
- 0 replies
- 656 views
-
-
விமானத்தில் வெடிகுண்டுப் புரளி – விமானியின் தவறால் பயணிகள் அவஸ்தை! விமானத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக எழுந்த சந்தேகம் காரணமாக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் நெதர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாமிலிருந்து ஸ்பெயினின் மட்ரிட் நகருக்கு புறப்பட்ட விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக குறித்த விமானம் அம்ஸ்ரர்டாம் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் ராணுவத்தினர் விமானத்திற்குள் நுழைந்து வெடிகுண்டு போன்ற ஆபத்தான பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையிட்டிருந்தனர். இது குறித்து எயார்-எத்தியோப்பியா விமான நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானி சந்தேகத்திற்குர…
-
- 0 replies
- 548 views
-
-
போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…
-
- 0 replies
- 374 views
-
-
கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவா…
-
- 0 replies
- 227 views
-
-
இறந்தவரின் கழுத்தில், கயிற்றைக் கட்டி... தரதரவென இழுத்துப் போன போலீஸ்! வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது…
-
- 0 replies
- 265 views
-
-
ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம். http://www.usetamil.net/t34821-topic#axzz2UPPmmgPT
-
- 0 replies
- 556 views
-
-
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்பயிற்சி நிலையமொன்றிலிருந்து தீயணைப்புப் பிரிவினருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பளுவில் நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிக்குண்ட நிலையில் தீயணைப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்படி நபர் 2.5 கிலோகிராம் எடையுள்ள இரும்புப் பளுவுக்குள்ளிலிருந்து தனது ஆணுறுப்பை …
-
- 0 replies
- 2k views
-
-
மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…
-
- 0 replies
- 630 views
-
-
இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி ‘இஞ்சி இடுப்பழகி’ ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், எல்லா …
-
- 0 replies
- 342 views
-
-
அரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. பரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த புரட்சிகர துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெறும் விழாவில் உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெர…
-
- 0 replies
- 508 views
-
-
இணையத்தில் வைரலாகும் மெலனியா ட்ரூடோ புகைப்படம் ஜி 7 உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மெலனியா டிரம்ப் ஆசையோடு உற்றுநோக்கிய புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான G7 உச்சிமாநாடு பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் சனிக்கிழமை (24.08.2019) குறித்த மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள கொண்டனர். கடந்த ஞாயிற்றுகிழமை மாலை உச்சிமாநாட்டில் ஐரோப்பிய பத்திரிகை ஏஜென்சி புகைப்படக் கலைஞரால் உலகத் தலைவர்களும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் “குடும்ப புகைப்படம்” எடுக்க வந்தனர். அப்போது தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில்…
-
- 0 replies
- 264 views
-
-
கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் கைது வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது குத்திக் கொல்லப்பட்ட பி.சி. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் எசெக்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்…
-
- 0 replies
- 216 views
-
-
கண்முன்னே திடீரென மயங்கிய நபர்; ஓடோடி வந்த Doctor.
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!! ஈரோடு: பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள். ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது. ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார். தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர். சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மக…
-
- 0 replies
- 827 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …
-
- 0 replies
- 378 views
-